
சிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழில்
ஐரோப்பா இணைய சந்திப்பு
01.11.2020 மாலை 16.00 மணிக்கு ஆரம்பித்து 19.00 மணிக்கு நிறைவுபெற்றது. மூன்று மணித்தியாலங்கள் பாடல்,ஆடல்,கவிதை,உரைகள் என தொய்வின்றி மிக விறுவிறுபப்பாக முதலாவது சந்திப்பு நடைபெற்றது இதில் 50 மேற்பட்டவர்கள் பல நாடுகளிலிருந்து கலந்து சிறப்பித்தார்கள் இதில் பல சிறுவர்கள் இளையோர்கள் என பலரும் கலந்திருந்தது மிக ஆரோக்கியமானதாக இருந்தது. இந்த நிகழ்வை இலக்கியப் பொழில் நிறுவனர் திரு. பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒழுங்கமைத்திருந்தார்.
பண்ணாகம் இணைய பிரதம ஆசிரியருக்கு
``வாழ்நாள் சாதனையாளர் விருது``
யேர்மனியில் 2.3.2019ல் யேர்மனி நகரமேயரால் வழங்கப்பட்டது.
இந்த விருதை பரிந்துரை செய்த யேர்மன் எசன் நகர அறநெறிப்பாடசாலைக்கு பண்ணாம் இணையத்தின் நன்றிகள். இவருடன் மேலும் 6 சாதனையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
1.3.2019 பண்ணாகம் இணையத்தின் 13 வது ஆண்டு நிறைவில் 14வது ஆண்டு ஆரம்பத்தில் உற்சாகம் ஊட்டும் வகையில் வாழ்நாள் சாதனையாளர்விருது கிடைத்தது மிக மிழ்வானதாகும். தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் செய்து வரும் பொதுசேவைகளை மேலும் உற்சாகப்படுத்தும் நல்நோக்கில் வாழ்நாள் சாதனையாளர்கள் 7 பொயர்களைத் தெரிவுசெய்து நல்ல சமூக அக்கறையுடன் செயற்பட்ட திரு நயினை விஜயன் சசிகலா தம்பதிகளையும் அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படும் சமூக சேவையாளர்களையும் வாழ்த்துவதில் பண்ணாகம்.கொம் இணையம் பெருமகிழ்வுடன் நன்றிகளை கூறுகிறது.
அன்றைய நிகழ்வின் விபரமும் படங்களும்
எசன் அறநெறித்தமிழ் பாடசாலையின் 15வது ஆண்டு விழா 2019.அமரர் சங்கீத பூஷணம் செல்வ சீராளன் அரங்கில் .!!.
ஒரு கண்ணோட்டம்..!!!!
எசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றத்தின் ஒருஅங்கமான அறநெறிப்பாடசாலையின் 15வது நிறைவு ஆண்டு விழா எசன் நகரில் வெகு சிறப்பாக 2ம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பி.ப 2மணிக்கு மங்கல விளக்கினை ஏற்றியதோடு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.அறநெறிப்பாடசாலையின் நடன ஆசிரியை நாட்டியமணி திருமதி.நிஷா தர்சன் அவர்களின் மாணவிகள் வரவேற்பு நடனத்தை அளிக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.மாணவர்களின் ஆடல்பாடல் பேச்சு என விழா களை கட்டி நின்றது. பாடசாலையின் சின்னஞ்சிறார்கள் அளித்த பாடல்கள் நடனங்கள் காவடி.நாடகம் , என அனைத்தும் ரசிக்கக்கூடியவையாக இருந்தன இவர்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.நுண்கலைவகுப்புக்களில் பயிலும் மாணவர்களும் தங்கள் திறமையை வெளிக்காட்டத் தவறவில்லை தபேலா மிருதங்க ஆசிரியர்கள்நகுசாந், அனுசாந் நயினை விஜயன் ஆகியோரின் மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டுஅளித்த மிருதங்க வாத்திய இசை விருந்து மிகச் சிறப்பாக அமைந்திருந்தது .
கலந்து கொண்டிருந்த பார்வையாளர்கள் ரசித்து பாராட்டிக் கொண்டிருந்ததை என் செவிகளால் கேட்க முடிந்தது. அறநெறிப்பாடசாலையின் நடன ஆசிரியை நாட்டியமணி திருமதி.நிஷா தர்சன் அவர்களின் மாணவிகளின் பாம்பு நடனம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டது.
சுரத்தட்டு வாத்திய இசை வழங்கிய மாணவர்களும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என இனிமையான இசை வழங்கி நின்றார்கள். அவர்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள். தனியொருவராக சுரத்தட்டு இசை வழங்கிய யோசுவா அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை அவரது இசையில் காணக்கூடியதாக இருந்தது. விழாவில் முத்தாய்ப்பு வைத்தநிகழ்ச்சியாக அமைந்தது பல்வேறு துறை சார்ந்த கலைஞர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டதாகும்.
எழுத்தாளர் பூவரசு ஆசிரியர் இந்துமகேஸ் .
கலைவிளக்கு பாக்கியநாதன்
அறிவிப்பாளர் பாலா
நகைச்சுவை நடிகர்,கல்வியாளர் ,திரு. தர்மசோதிராஐன்
ஜெயந்தி நாதக்குருக்கள் சிவசாமிக்குருக்கள்,
விமர்சகர், ஊடகவித்தகர், பண்ணாகம் கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி ,
ஆசிரியை திருமதி இந்து தெய்வேந்திரம்
ஆகியோர் இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த எசன் நகர பிதா திரு Thomas Kufen அவர்கள் அனைவருக்கும் பொன்னாடைப் போர்த்தி பாராட்டுப் பத்திரம் வழங்கி கெளரவித்தார்.பெர்லினிலிருந்து வருகைதந்த சிவச்செல்வர் சின்னையா சிவஞனசுந்தரம் அவ்ர்களின் வாழ்வியல்வழிகாட்டி நூல் அறிமுகமும் மதிப்பளிப்பும் சிறப்பாக நடைபெற்றது. .திருவாளர்கள் வாரித்தம்பி நவரட்ணம், நாகலிங்கம் ஷண்முகலிங்கம்,திருமதி.சரோஜினிதேவி தங்கரட்ணம் ஆகியோர் சமூக சாதனைப் பணியாளர்களாகப் பாராட்டப்பட்டனர்.ஆன்மீகச் சிந்தனைச் சொற்பொழிவாளர்கள் ,சிவவினோபன் ,ஹரிணி, ஹம் காட்சியம்பாள் ஆலயகுரு ,கவிமணி குகதாஸ், அகரம் ரவி, வெற்றிமணி ஆசிரியர் சிவகுமாரன்,தமிழர் அரங்கம் சபேசன் , ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.முன்னாள் ஆசிரியை நவநிதி குணபாலசிங்கம், மற்றும் இநாள் ஆசிரியைகள் கலையரசி ரவீந்திரசிவம், மாணவ ஆசிரியிகள் செல்விகள் தாருண்ஜா தர்மகுலசிங்கம், ஆர்த்திகா ராஜேந்திரன், கலைவாணி ரவீந்திரசிவம், அகிஷா வேலுப்பிள்ளை,ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.எல்லாப்புகழும் நடன குழுவின் பவிரா,வினுஜா,தாரணி ,பிரகாஸ் தில்லையம்பலம் ஆகியோரின் துள்ளிசை நடனம் பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது. வாழும்போதே கலைஞர்கள் கெளரவிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் கொண்ட திரு.திருமதி . நயினை விஐயன் அவர்களின் சிந்தனையில் உதித்ததே இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது இவர் போன்றவர்கள் உள்ளவரை எமது கலையும் கலாச்சாரங்களும் கலைஞர்களும் வாழ்ந்து கொண்டே யிருபார்கள். வயலின் வீணை இசை வழங்கிய கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்களே.இவர்கள் வயலின் வீணை இசைக்கலாஜோதி செல்வி.சஜினி நயினை விஜயன் அவர்களின் மாணவ மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. காவடிச்சிந்து நடனத்தை கனகசபை நடனப்பள்ளி நடன ஆசிரியை திருமதி.சாந்ஜி துரையரங்கன் அவர்களின் மாணவிகள் சிறப்பாக வழங்கியிருந்தனர்.இனிமையான இசை வழங்கிசிந்தையை குளிர வைத்தாரகள் .சலங்கை ஒலி நாட்டியாலயத்தின் நடனமணிகள் ஆடிய நர்த்தனம் சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்தது .35நடனக்கலைஞர்கள் இணைந்து சிறப்பித்த இந்நிகழ்வு பார்வையாளர்களின் அமோக கரகோசத்தைப் பெற்றது.நிகழ்ச்சிகள் அனைத்தையும் திரு.திருமதி,நயினை விஐயனோடு இணைந்து கேதாரணி பாலா .கார்த்திகா சிவபாதம் கலையரசி ரவீந்திரசிவம் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.விழா அனுசரணையாளர் அமிர்தானந்தசுரபி நந்தீஸ் உணவகத்தினரின் சுவையான உணவுகள் பார்வையாளர்களின் பசியைத் தணித்துக்கொண்டிருந்தன.அபிடெக்கோ அலங்காரம்,அசோகன் ஒலியமைப்பு, ஐரிஎன் படப்பிடிப்பு,ராம்ஜித் போட்டோ என அனைவரும் விழாவுக்கு வலுச்சேர்த்தனர். திரு.நயினைவிஜயன் அவர்களின் நன்றியுரையோடு விழா இனிதே நிறைவுற்றது.வாழ்க வளர்க எசன் அறநெறிப்பாடசாலை.
செய்தி -வாழ்நாள் சாதனையாளர் பாலா எசன்.
பண்ணாகம் இணையம் நன்றி பகிர்வதில்
பெருமகிழ்வடைகின்றது.
எமது பண்ணாகம் இணையத்தின் பிரதம ஆசிரியர் திரு.இக.கிருஷ்ணமூா்த்தி அவர்களுக்கு யேர்மனி நுண்கலைக் கல்லுாரியால் `` ஊடக வித்தகர்`` என்னும் உயரிய விருதை வழங்கி கெளரவித்த வேளையில் பல இணைய அபிமானிகளும், நண்பர்களும் முகநுாலிலும், மின்னஞ்சலிலும், தமது தகவல் பக்த்திலும், தொலைபேசியிலும், நேரடியாகவும், வைபரிலும் உலகம் எங்குமிருந்து வாழ்த்துக்களை கூறிய வண்ணம் இருக்கின்றார்கள். பலர் தமது முகநுாலின் முன் பதிவில் பதிவிட்டும் மதிப்பளித்திருந்தார்கள் மற்றும் இவ்விருதை வழங்க தெரிவு செய்தவர்களுக்கும் வழங்கிய நயினை விஜயன் தமிழருவி நிர்வாகத்தினருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றியுடன்
பண்ணாகம் இணைய நிர்வாகத்தினர்.
நேரடியாக தமது Facebook பக்கத்தில் அன்புள்ளங்களின் பதிவுகள் சில .......
இவர்களுக்கும் நன்றிகள் பல
யேர்மனி நுண்கலைக் கல்லுரி மற்றும் எசன் தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தினரால் 30. 9.2017 இல் 32 வது ஆண்டு வாணிவிழா கலைமாலை நிகழ்வில் பண்ணாகம்.கொம் இணைய பிரதம ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தியும் அவர்பாரியாரும் சிறப்புப்பாக தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தி ஷதிருனரால் கௌரவிக்கப்பட்டு ஊடகவித்தகர் என்ற கௌரவும் திரு நயினை விஐயனால் மக்கள் சார்பாக வழக்கப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குரியது, இதேபோன்று எஸ்.ரிஎஸ் இணைய ஆசிரியரும் இசைஅமைப்பாளருமான திரு தேவராசா அவர்கட்கு ஊடகத்தென்றல் என்ற கௌரவும் திரு நயினை விஐயனால் மக்கள் சார்பாக வழக்கப்பட்டுள்ளது என்பதும் சிறப்புக்குரியது.
விழா அரங்கில் பல்சுவை நிகழ்வுகள்தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தில் கலைகளை கற்றவர்கள் மேடைநிகழ்வுகளை வழங்க தாளவாத்தியங்கள் வீணை, வயலின், சுரத்தட்டு என்று கற்றதை சிறப்புற இளம் கலைஞர்கள் பார்வையாளருக்கு நிகழ்வாக்கியது மிகச்சிறப்பு இதனுடன் நடனங்கள் இளையோர் நடிப்பில் இருநாடகங்கள் என வந்தோர் சிறப்பு எனச்சொல்லும் அளவுக்கு நிகழ்வுகள் அமைந்திருந்தது
இதில் இந்தியாவில் வந்திருந்தவரும் எமது பக்கவாத்தியத்தில் சங்கீத கச்சேரிஎமது சிறார்களின் வாய்ப்பாட்டு என சிறப்புற மேடையில் இடம்பெற்றது,
இதைஎல்லாம் செயல்வடிவமாக்கிய நயினை விஐன் குடும்பத்தாரின் கலையார்வம் அவர்களின் அற்றலின் சிறப்பால் இன்நிகழ்வு சிறப்புக்கண்டது
இறுதி நிகழ்வாக பட்டிமன்றம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர்களால் மாணவர்களுக்கான பரீட்சை சித்திச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 2.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சிகள் இரவு 23 மணியளவில் நிறைவுகண்டது.
எமக்கு கிடைத்த விழாவின் சில காட்சிகள்