WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

     காசியின் கதைக்களம் 

  விடியலில் மலரும் பூக்கள் 

பண்ணாகம் இணையப்பக்கத்தில் பதிவில் உள்ள

கதைப் பகுதிகள் 

கண்ணீர் அஞ்சலி


பண்ணாகம் ..யேர்மனி... பிரான்ஸ்


திரு.கந்தசாமி பேரின்பநாதன் 

(தம்பி, CTB முன்னைனாள் சாரதி) 
இறுதிக்கிரிகை 29.3.2021

தாயின்மடியில் 14.1.1955 

பண்ணாகம் ,சுழிபுரம்

காலனின்பிடியில் 14.03.2021 

லாக்குறுன ,பிரான்ஸ் 

மனம்நெகிழ்ந்த மலர் அஞ்சலி

பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும் யேர்மனி , மற்றும் பிரான்ஸ் லாக்குறுனவை  வசிப்பிடமாகவும் கொண்ட 
கந்தசாமி  பேரின்பநாதன் அர்களின் இழப்பு எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர் நல்ல உறவினராய் மட்டுமல்லாது அவருடன் நான்  நண்பனாகவே பழகிய நாட்கள் மறக்கமுடியாது. ஊரில் இவரை உறவினராய் தம்பி அண்ணா என்ற வார்த்தையுடன் நின்று விடுவேன் அதிகம் எதையும் பேசும் சந்தர்ப்பங்கள் கிடைப்பது  குறைவு 1990 இல் தாய்லந்து நாட்டில் பலமாதங்கள் ஒன்றாய்  இருந்து பழகும் வாய்ப்பு கிடைத்தது. அன்றிலிருந்து ஒரு நல்ல நண்பனாக ,நல்ல நலன்விரும்பியாக என்னுடன் பழகினார்.  தம்பி அண்ணை அங்கு எம்முடன் இருந்த மற்றைய நன்பர்களுடன் நாம் செய்யும் குறும்புகளைக் கண்டு கோபப்படுவதும், கண்டிப்பதும் அடுத்த நிமிடம் எல்லாம் மறந்து நண்பனாகவும் மாறி அன்பு பாராட்டும் நல்ல மனிதரை இழந்தது  மிக்க மனவலியாக உள்ளது. 1991 இல் இவருடன் யேர்மனியில் மீண்டும் ஒன்றாகத் தங்கி சிலவருடங்கள் எம்முடன் இருந்த அனைத்து நண்பர்களின் மனதையும் கொள்ளைகொண்ட மனிதராக இன்றும் அவர்நினைவைப் பகிரும் நண்பர்களைக் காணும்போது தம்பி அண்ணை என் உறவினர் என்று பெருமை கொண்டதும். பிரான்சிலிருந்து யேர்மனி வந்து செல்லும்போது எல்லோரிடமும் சென்று தனது அன்பைப்பகிர்ந்து செல்வதும் அவர்வழக்கம். அவரது இழப்பு அறிந்து என்னுடன் பலர் தொலைபேசியில் அவரின் கதைகள்பலகூறிய அன்பர்கள், நண்பர்கள் சார்பாகவும், பண்ணாகம்.கொம் இணையம் சார்பாகவும் , கண்ணா என என்னை அழைத்து கதைபல கூறிய தம்பி அண்ணா ஆன்மா இறைபதம் அடைந்து ஆறுதல் பெறவேண்டும் என பண்ணாகம் விசவத்தனை முருகனை வேண்டுகின்றேன்.

ஓம் சாந்தி!                             ஓம் சாந்தி!!                            ஓம் சாந்தி!!!

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும்,அனுதாபங்களையும் தெரியப்படுத்துகின்றோம்.

பண்ணாகம்.கொம் நிர்வாகத்தினரும் ,EKகண்ணன் குடும்பத்தினரும்.  
யேர்மனி . 29.3.2021


வாசக நண்பர்களே!
பண்ணாகம்.கொம் இணையத்தில்
,,விடியலில் மலரும் பூக்கள்,, 
5.01.2020
 பகுதி . – 33
நீங்கள் ஆவலுடன் வாசித்து வந்த 'விடியலில் மலரும் பூக்கள்' கதை இத்துடன் நிறைவடைகின்றது. இதனை வாசித்த அன்பு வாசகர்களே! .
இக்கதை பற்றிய உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பண்ணாகம் இணையத்தளத்துக்கு அனுப்பிவையுங்கள். 
மீண்டும் மற்றொரு கதையில் சந்திக்கும் வரை என் மனமார்ந்த நன்றிகளைக் கூறி.அன்புடன் விடைபெறுவது காசி(எழுத்தாளர்)

` விடியலில் மலரும் பூக்கள்  ` நிறைவுப்பகுதி 

1.5.2019 இல் தொடர்ந்த கதை 5.1.2020 இல் நிறைவாகிறது. இதுவரை பல வாசகர்கள் வாசித்து மகிழ்ந்த இக்கதையை எழுதிய திரு .காசி எழுத்தாளர் அவர்களுக்கு வாசகர்கள் சார்பாக பண்ணாகம் இணையத்தின் நன்றிகள்





` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 33

5.01.2020



பங்குபற்றும் பாத்திரங்கள்
ஜானகி
பரதன்
ஈஸ்வரி  - பரதனின் முன்னாள் மனைவி
சந்திரன் - பரதன் ஈஸ்வரி பிரிவுக்குக் காரணமானவன்
கோகுலன்   
யசோ
வேணி
கண்ணன் 

இவர்கள் மனிதர்களா அல்லது ஞானிகளா   
'நான் ஒண்டுக்கும் போகேல்லை.... உந்தக்கதையை விடு!' என்று இராகுலன் சொல்ல, அதற்குக் கமலம் ஜானகியும் பரதனும் திருமணம் செய்யவிருப்பதைத் தெரிவித்து, அவள் வீட்டுக்குப் போகவோ, ரெலிபோன் எடுத்துத் தொல்லை கொடுக்கவோ வேண்டாமென்று கண்டித்தாள்.

'பிள்ளையள் வளந்திட்டுதுகளப்பா! சொல்லுறன் எண்டு கோவிக்காதேங்கோ.... இனிமேல் குடிக்கிறதை விடுங்கோ! குடிச்சிட்டு ஆரோடை என்ன கதைக்கிறதெண்டு தெரியாமல் கதைப்பீங்கள்!' என்று கமலம் சொல்ல,

'என்னைக் கொஞ்சம் சும்மா விடு!' என்று இராகுலன் சலிப்புடன் சோபாவில் சாய்ந்து கண்களை மூடி


ஜானகியும் பரதனும் நண்பர்கள் சிலருடன் கோவிலில் திருமணம் புரிந்து கொண்டனர். சிலநாட்கள் கழித்து ஈஸ்வரி, பிள்ளைகள்சாந்தையும் சுகந்தியையும் கூட்டிக்கொண்டு வந்து பரதனுடன் இருக்கவிட்டாள்.

பரதன் மேல் வீட்டிலும் ஜானகி கீழ் வீட்டிலும் தனித்தனி இருப்பது கண்டு ஈஸ்வரி பிரமித்துப் போனாள்.

'ஏன் இப்பிடி....!' கேட்டாள் அவள்.

'வெளியுலகத்துக்கு நாங்கள் கணவன் மனைவி. வீட்டுக்குள் அவள் ஜானகி. நான் பரதன்.'

ஈஸ்வரிக்கு வார்த்தைகள் வரவில்லை.... உணர்வுகளைக் கட்டுப்படுத்தி இலட்சியவாழ்வு வாழும் பரதனையும்  ஜானகியையும் காண, இவர்கள் மனிதர்களா அல்லது ஞானிகளா என்று நினைக்கத்  தோன்றியது.

'இன்னொரு பிறவி எனக்கு வேணும்!' என்றாள் ஈஸ்வரி.

'ஏன் ஈஸ்வரி?'

'உங்களைக் கலியாணம் செய்து வாழ்நாள் பூராகவும் உங்கடை அன்புக்குப் பாத்திரமான மனையாளாய் வாழவேணும். அதுக்காக அடுத்தபிறவி வேணும்' என்று மனதுக்குள் நினைத்தவள், சொல்லவில்லை. மௌனமாக அவனைப் பார்த்தாள்.

'பிள்ளையள் சந்தோசமா இருக்கிறாங்கள்.' என்றான் பரதன்.

'என்னை மன்னிச்சிடுங்கோ... நான் ஏன் அண்டைக்கு உங்களை விட்டிட்டுப் போனன் எண்டு எனக்கே தெரியேல்லை.... சந்திரன்ரை பேச்சைக் கேட்டுத் தலைகீழா நடந்திட்டன்......!'

'அது கிடக்கட்டும் பழசுகளை நினைச்சு நீ ஏன் அழுகிறாய்....? இப்ப சந்திரன் எங்கை...?'

'அவனுக்கென்ன...! லண்டனிலை வேறை ஒருத்தியைக் கட்டியிருக்கிறான். துரோகி...!' என்று கோபத்தைக் கொட்டினாள்.

'இனி என்ன செய்ய முடியும்...? நடந்தது நடந்து போச்சு!' என்று ஆறுதல் சொன்னான் பரதன்.

'கடவுள் எனக்கு நல்ல தண்டனை தந்திட்டார். அந்தாள் உழைப்பும் செலவும்.... 
என்னை ஒரு இடமும் கூட்டிக்கொண்டு போகார். தான் மட்டும்தான் எங்கையும் போவார். எல்லாம் இருக்கு. என்னவும் செய்யலாம்... ஆனால் வீட்டுக்கை மாமி எண்ட பெயரிலை ஒரு இராட்சகி! எப்பிடிக் கடவுள் என்னைத் தண்டிக்கிறார் பாருங்கோ!'
பாவங்களுக்குத் தண்டனை உண்டு பரதன்!' என்றாள்  ஈஸ்வரி, தன் தவறைப் புரிந்து கொண்ட உணர்வடன்.

கீழே இறங்கி ஜானகி வீட்டுக்கு இருவரும் போனார்கள்.

லவன், குசன், சாந்தன், சுகந்தி யாவரும் விளையாட்டுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் மனம் விட்டுச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஹோலிற்குள் ஜானகி, யசோ, கோகுலன், வேணி, கண்ணன் யாவரும் ஒன்றாக இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

உள்ளே வந்து அமர்ந்த பின்,
'நாங்கள் ஐவரும் சாதாரண வாழ்க்கையிலிருந்து விதி வசத்தால் தடம்பிரண்டவர்கள்!' என்று தங்களுடன் ஜானகியையும்  யசோவையும் கோகுலனையும்  சேர்த்துச் சொன்னாள் ஈஸ்வரி.

'ஏனக்கா...!' என்று கேட்டாள் வேணி.

'ஜானகிக்கு இளம் வயதிலேயே 'ராம் விட்டிட்டுப் போயிட்டார். நான் மதியிழந்து, பண்பாட்டை மறந்து வழி தவறிப் போனன். என்னாலை பரதன் தனிமையிலை வெறுவிலியாய்த் தவிக்க வேண்டி வந்தது. யசோ நம்பி ஏமாந்து போனவள்! கோகுலனுக்குக் கலியாணப்பேச்சுக் குழம்பிப் போய் நின்றிருந்தான்......!' என்று கூறி நிறுத்தினாள்.

அப்போ வேணி சொன்னாள்,
'அக்கா எங்களைப் பற்றிச்  சொல்லேல்லை!'

'நீங்கள் எல்லாரையும் போலை ஒழுங்காக் கலியாணம் கட்டிச் சந்தோசமா இருக்கிறீங்கள். உங்களைப் பற்றி என்ன சொல்ல...?' என்றாள் ஈஸ்வரி.

'நானும் உங்களை மாதிரித் திசை மாற... வீட்டுக்கை ஆள் வந்து கூட்டிக்கொண்டு ஓட வரேக்கை,  வந்தவனுக்கு ஒரு அறை குடுத்து, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்... இது
எனக்கு அம்மா ஊட்டி வளர்த்த பாடம் எண்டு சொல்லி அவனை விரட்டிப் போட்டன்!' என்றாள் வேணி.

விஜய் நடந்துகொண்ட முறையை வைத்து இவ்வாறு சொல்ல, அனைவரும் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

'எனக்குச் சுதந்திரம் இருக்கு எண்டதுக்காக அதைப் பறக்கவிட்டு என்னையும் அழித்து, கூடஇருப்பவர்களையும் வருத்தக்கூடாது.!

'நல்லாச் சொன்னாய்!' என்று அவளைப் பாராட்டினாள் ஜானகி.

'எங்கடை கலாச்சாரங்களை நாங்கள்தானே கட்டிக்காக்க வேணும்!' என்றாள் யசோ.

'சில தவறுகளை நாங்கள் விட்டால் திருத்தலாம்.. சிலதுகள் திருத்த முடியாதவை. அதுதான் வாழ்க்கைக்குப் பொறுமை தேவை எண்டிறது!' என்றாள் ஈஸ்வரி.

அப்போ கண்ணன் மெதுவாக ஆரம்பித்தான்.

'நானும் திருத்த முடியாத ஒரு தவறைச்செய்து, என்னையும் குழப்பி....' என்று ஆரம்பிக்க,

யசோ வேண்டாமென்ற பாணியில் தலையையாட்டி, அவன் வாயை மூடப் பார்த்தாள்.

அதற்குள் வேணி குறுக்கிட்டு,
'தெரியும்... நீங்கள் யசோவை ஏமாத்தினனீங்கள். கடவுள் அவவைக் கைவிடேல்லை.' என்றாள்.

கண்ணனின் நெஞ்சு படபடவென அடித்தது.
'இவளுக்கு எப்பிடித் தெரிய வந்தது...?' என்ற வினாவெழ, ஒரு யுத்தம் வெடிக்கப்போகுது என்ற பதட்டத்துடன் இருந்தான் அவன்.

ஜானகி ஏதும் விளங்காமல் விழித்தாள்.
'யசோவைக் கண்ணன் ஏமாற்றினானா...!' அவளால் நம்பமுடிய வில்லை.

விஜய் இதைத்  தனக்குச் சொல்லி, தன் மனதைக் குழப்ப முனைந்ததையும், தான் முதலில் அதிர்ச்சிக்குள்ளாகி, கண்ணன் மேல் பெருங்கோபம் வந்ததையும் சொன்னவள் யசோவை கோகுலன் கலியாணம் செய்யும் இவ்வேளை, தான் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது என்று மனதையடக்கிக் கொண்டிருந்ததையும் வெளியிட்டாள்.

கண்ணனின் முகம் வெட்கத்தாலும்  அவமானத்தாலும் சுருங்கிக் கறுத்தது. இதனைக் கவனித்த கோகுலன், வேணியிடம் அமைதியாக இருக்கும்படி சொல்ல,
'ஈஸ்வரியக்கா இப்பிடியொரு கதையைச் சொன்னதாலை தான் நானும் இதைச் சொன்னனான். அவரவர் செய்யிறது அவரவருக்கு!' என்றாள்.

அப்போ பரதன்,
'நாங்கள் எல்லாரும் விதியினால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப் பட்டிருக்கிறம்! இண்டைக்குக் கடவுள் செயலாலை ஒன்றுகூடி இருக்கிறம். இந்த இரண்டாயிரமாமாண்டு எங்களுக்கு மட்டுமில்லை எங்கடை இனத்துக்கே ஒரு விடியலாக அமைய வேணும்!' என்றான்.

நீங்கள் ஆவலுடன் வாசித்து வந்த 'விடியலில் மலரும் பூக்கள்' கதை இத்துடன் நிறைவடைகின்றது. இதனை வாசித்த அன்பு வாசகர்களே! .
இக்கதை பற்றிய உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பண்ணாகம் இணையத்தளத்துக்கு அனுப்பிவையுங்கள். 
மீண்டும் மற்றொரு கதையில் சந்திக்கும் வரை என் மனமார்ந்த நன்றிகளைக் கூறி.அன்புடன் விடைபெறுவது காசி(எழுத்தாளர்)

                     சுபம்.          

` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 32

27.12.2019




கைகூடிய காதலும் பறிபோன பதவியும்

பங்குபற்றும் பாத்திரங்கள்
கோகுலன்   
யசோ. 
இராகுலன்
கமலம்

அக்கா சொல்லேல்லையோ...?'

யசோ சிரித்தாள்.... கண்களை இமைத்து, அவனை அன்பொழுகக்  கனிவோடு பார்த்தவள். அவனுக்கு மேலும் இரண்டு இட்டலிகளைப் போட்டுக் கறியும் விட்டபின்,
'நான் உங்களுக்கு எட்டியதூரத்தில் தானே இருக்கிறன், எங்கும் போய்விடவில்லையே!' என்றாள்.

'நேரடியாகச் சொல்லுமன்! மனதுக்குச் சந்தோசமாக இருக்கும்.' என்றான்.

'இப்ப என்ன அவசரம்... அக்கான்ரை கலியாணம் முடியவிட்டிக்கு யோசிப்பமே.' என்று அவன் தலையைத் தடவி ஆறுதற்படுத்தினாள்;.

அவன் சாப்பிடுவதை நிறுத்தி, அவளைப் பார்த்து,
'எனக்கு ஒரு பதில் வேணும்!' என்றான்.

'பிரச்சனையள் கொஞ்சம் முடியட்டன்!' என்றாள்.

'ஒரு பிரச்சனையுமில்லை.' என்றான் கோகுலன்.

'சாப்பிடுங்கோ!' என்றாள் யசோ.

'காணும்!' என்ற எழுந்திருக்க முயன்றான் அவன்.

அவன்  தோளைத் தொட்டு,
'அதுக்குள்ளை கோபம் வந்திட்டுது!' என்று அவனை இருத்தி, மிகுதியையும் சாப்பிட வைத்தவள்,

'நீங்கள் வேறை எங்கையாவது கலியாணம் செய்தால் நிறையச் சீதனம் வாங்கிச் செய்யலாம். உங்கடை பணக்கஸ்டமும் போயிடும்.' என்று சொன்னாள்.

'எனக்கொரு பணக்கஸ்டமும் இல்லை.... ஒரு பெண்ணிட்டைச் சீதனம் வேண்டி என்ரை பணக்கஸ்டத்தைப் போக்குமளவுக்கு நான் ஒண்டும் கையாலாகாதவனும் இல்லை.
'தெரியும்!'

'பிறகேன் அப்பிடிச் சொன்னனீர்....?'

'உங்கடை தங்கச்சி சொல்லுவா. அவ எங்கடை கலியாணத்துக்குச் சம்மதிக்க மாட்டா!'

'நான் உம்மைக் கேட்டது... உமக்கு என்னைச் செய்ய விருப்பமோ எண்டதுதான். மற்றதெல்லாம் நான் பாத்துக்கொள்ளுவன்!'

'எனக்கு விருப்பமோ இல்லையோ எண்டது உங்களுக்குத் தெரியாதே...? படங்களிலை மாதிரி நேரையே சொல்ல வேணும்!'

கோகுலனின் நெஞ்சம் மகிழ்ச்சியால் நிரம்பியது.

சாப்பிட்டுக் கையைக் கழுவ எழுந்தவனிடமிருந்து கோப்பையை வாங்கிக் கழுவினாள் யசோ.

'அக்கா கலியாணத்துக்குச் சம்மதித்துச் செய்யுமட்டும் இதைப்பற்றி ஒருத்தருக்கும் சொல்லாதேங்கோ!' என்றாள்.

அவன், அவளைக் கைகளால் தன்னோடு அணைத்து, அவள் கண்களை அன்பொழுகப் பார்த்தான். அவளும் அவனை ஒருகணம் பார்த்துவிட்டு, காற்றில் ஆடியசைந்த கொடி ஒன்று தனக்கென்று துணை வழங்க பக்கத்தில் நிற்கும் ஆதாரத்தில் மகிழ்வோடு பற்றிக்கொள்வதுபோல்  அவன் தோளில் சாய்ந்தாள்.

அவளின் நம்பிக்கையுடன் கூடிய மூச்சு அவன் கழுத்தை இதமாகத் தழுவியது. அவன் கரங்கள் அவள் முதுகை ஆதரவோடு தடவின.

அன்று பொதுக்கூட்டம் நடந்திருந்தது.

இராகுலன் தலையைத் தொங்கவிட்டபடி வீட்டுக்கு வந்தான். அவனைப் பார்த்துக் கமலம்,
'என்னப்பா கப்பல் கவுண்டது போலை வாறீங்கள்....?' என்று கேட்டாள்.

'ஒண்டுமில்லை. தேத்தண்ணி கொஞ்சம் போடு!'

'போடுறன் என்ன நடந்ததெண்டு சொல்லுங்கோவன்.'
'அதைவிடு! இனிமேல் ஒண்டும் வேண்டாம்.'

'ஏன் ஏதும் பிரச்சனையே...?'

'பிரச்சனை ஒண்டுமில்லை. கொமிற்றியாலை விலத்திப் போட்டாங்கள்.'

கமலம் வியப்புடன் பார்த்தாள். இப்படிச் சோகமாக அவன் இருந்ததை அவள் காணவில்லை.

'உங்களுக்கு நான் எத்தினைதரம் சொல்லியிருப்பன், மற்றச்சனங்கள் மாதிரி ஒழுங்கா எங்கடையெங்கடை அலுவலைப் பாத்துக்கொண்டிருந்தா இப்பிடிப் பிரச்சினை ஏன் வரப்போகுது? சொன்னாள் கமலம்.

'ஒரு பொம்பிளை சொன்னாள்; நான் ஒரு பொறுக்கியாம். அத்தனை பேருக்கு முன்னுக்குச் சொல்லிப்போட்டாள்.' என்ற இராகுலனின் குரலில் ஆத்திரமும் இயலாமையும் பின்னியொலித்தது.

'ஆர் அவள் அப்பிடிச் சொன்னவள்? நாக்கைப் பிடிக்கிறமாதிரி நாலு குடுக்கிறது... இஞ்சை வந்து சொல்லிக்கொண்டு நிக்கிறீங்கள்.'

அதற்கு இராகுலன் அங்க நடந்ததைச் சுருக்கமாகக் கமலத்துக்குச் சொன்னான்.

அவனது ஒழுக்கமின்னையைப் பலரும் சுட்டிக்காட்டியதாகவும் பெயருக்கு இப்படியொன்று தேவையில்லை. இன்று தமிழ்மக்களுக்கு தேவையான படைப்புக்களையும் தாயகத்தின் முன்னேற்றத்துக்குக் கைகொடுக்கும் வகையிலான செயற்பாடுகளையும் தரவேண்டுமென்றும் ஒருமித்த குரல் அந்தக் கூட்டத்தில் ஒலித்திருந்தது.
... அரட்டையடித்து வேடிக்கை, கேளிக்கை நடாத்தும் நேரம் இதுவல்ல. தமிழ்ப்பற்றும் சுதந்திர உணர்வும் உள்ளவர்கள்...... தீவிரமாகச் செயற்பட வல்லவர்கள் தான் தலைவர், செயலாளர் என்று இருக்கவேண்டும் என்று பலரும் வாதாடியதாயும் இராகுலன் சொல்ல, கமலம் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றாள். அதில் நியாயம் இருப்பதை அவள் உணர்ந்தாள்.

'ஆர் எண்டாலென்ன வரட்டும்... நீங்கள் இனி ஒண்டுக்கும் போகாதேங்கோ!'



` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 31

16.12.2019




வேணியின் பித்தலாட்டம்
பங்குபற்றும் பாத்திரங்கள்
தாமோதரன்  
கோகுலன்   
யசோ. 

தாமோதரன் தொலைபேசியில் கடைக்கு வரச் சொல்லியிருந்தார். சனி பின்னேரம் வேலை முடிந்து போயிருந்தான் கோகுலன். கடையைப் பூட்டிவிட்டு, கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தார் தாமோதரன். கடை நிறையச் சாமான்களைப் போட்டு, கண்ணைக் கவரும் விதத்தில் ஒழுங்காக அடுக்கி ஜேர்மன்கடைகளைப் போலக் கவர்ச்சியாக வைத்திருந்தார்.

கோகுலன் உள்ளே வர, தாமோதரன் அவனை வரவேற்றார். முகத்தில் வழமையாக வரவேற்கும் சந்தோசம் இல்லாததை அவன் கவனித்தான்.

'வா கோகுலன் வா!' என்றவர்,
'வேணி கடையைப் பற்றி என்ன சொல்லுறாள்!' என்று கேட்டார்.

'ஏனண்ணை கேக்கிறீங்கள்..!'

'உன்ரை தங்கச்சியைக் குறை சொல்ல என்னாலை முடியேல்லை. ஆனால் வியாபாரம் நல்லா நடக்கவேணும்! உனக்குத் தெரியும்தானே...' என்று ஆரம்பித்தார்.

'வேணியாலை ஏதும் பிரச்சனையே...? அவளுக்கு வாய் சும்மா கிடக்காது... எனக்கு அவளை இங்கை விடுகிறது மனமில்லை. ஒரே பிடியா அண்ணை... அண்ணை எண்டு ஆய்க்கினைப்படுத்தினாள். நீங்களும் ஓமெண்டீங்கள்... ஏதும் பிரச்சனையெண்டா அவள் வீட்டிலை நிக்கட்டும் அண்ணை!'

'சீ... அதுக்கு நான் சொல்லேல்லையடா...!'

'அப்ப என்னண்ணை...?'

யோசித்துவிட்டு, கணக்குக்  கொப்பியை மூடியபடி அவனைப் பார்த்தார்.

'எனக்கு உன்னைப் பற்றித் தெரியும். உன்ரை தங்கச்சி வேறை மாதிரி... விளங்குதே! சொல்லுறன் எண்டு கோவிக்காதை... ஆனா உனக்குச் சொல்லத்தான் வேணும்!'

கோகுலன் அவர் சொல்வதை அவதானித்து கேட்டபடி நின்றான். கை மேசையிலிருந்த வீடியோக் கசற்றுக்களை அரக்குவதும் அடுக்குவதுமாக இருந்தது.

'புடவைக்கடையை நீ எடுத்துக்கொள்! வேணியும் கண்ணனும்  நீயும் மாறிமாறிப் பாருங்கோ!'

'என்னண்ணை கதைக்கிறீங்கள்....! எப்பாலும் உங்களிட்டை வந்து கடைக்கணக்குக் கேட்டனானே அண்ணை! நீங்கள்தானே என்னையும் பாட்னரா இருக்கச் சொன்னனீங்கள்! எனக்கு பிஸ்னஸ் பற்றி என்ன தெரியும்? நீங்கள் மனதிலை ஏதோ நினைச்சுக் கொண்டு இப்பிடிச் சொல்லுறீங்கள்... தாமோதரமண்ணை! உங்களுக்;கு என்னைத் தெரியும் தானே. எனக்குக் காசு பெரிசில்லை... மனிசர்தான் வேணும்.'

'கோகுலன்! நாங்கள் அன்பா இருப்பம். சொல்லுறதைக் கேள்!'

'அண்ணை! என்ன சொல்லுறீங்கள்...!'

'கடையை எடுத்து நடத்து!'

'என்னாலை முடியாது!'

'வேணிக்கு அதுதான் விருப்பம்!'

'வேணிக்கும் இதுக்கும் என்னண்ணை சம்பந்தம்...!'

'உன்ரை தங்கச்சி...'

'அண்ணை! எங்கடை குடுக்கல் வாங்கல் உங்களுக்கும் எனக்கும் தான். வேணிக்கோ கண்ணனுக்கோ இதுக்கை இடமில்லை.'

'அப்ப என்ன சொல்லுறாய்...? வேணி தினமும் கணக்குக்கொப்பி எடுக்கிறதும் கூட்டுறதும் கழிக்கிறதும்... இதென்ன கணக்கு அதென்ன கணக்கு.... எங்கை காசு எண்டு  அடிக்கடி என்னையும் நீலாவையும் கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

பத்தாததுக்கு கண்ணன்ரை பிறன்ட் விஜய் வந்து மணித்தியாலக்கணக்கா வேணியோடை கதைச்சுக்கொண்டிருக்கிறான்.

வியாபாரத்துக்குக் கஸ்டமா இருக்கடா.... நாலு சனம் வாற இடம்.'

கோகுலன் வேணியின் செய்கைகளை அறிந்து சினம் முகத்தில் படர, பொறுமையை இழந்து அங்குமிங்கும் நடந்தான்.

'மற்றது, இராகுலன் வீட்டை கண்ணனையும் வேணியையும் போக வேண்டாமெண்டு சொல்லடாப்பா! அவன் ஒரு குரங்கன்... உனக்குத் தெரியும். கொக்காவை அவன் நிம்மதியா இருக்கவிடாமல் அழவைச்சுக் கொண்டிருக்கிறான். அப்பிடியான போக்கிரி வீட்டை வேணிக்கென்ன அலுவல்....?' கேட்டார் கோபமாக.

'அவள் என்ரை சொல்லுக் கேக்கமாட்டாள். அக்கா சொல்லி அலுத்துப்போனா... கண்ணனுக்கே தாறுமாறா ஏசுறாள் அண்ணை!'

'உது கூடாது. உன்ரை தங்கச்சியெல்லே. கன்னத்திலை நாலு குடுத்து அடக்கமா இருக்கச்சொல்லு!'

'சரி அண்ணை! அவளை நான் பாக்கிறன். கடைக்கு இனிமேல் ஆள்வராது. பாவம் பாக்கப் போனா தோளிலை ஏறிச் செவியைக் கடிக்கிறாள்.... வேண்டாம்!'

'விஜய் அடிக்கடி வீட்டுக்குப் போறவனாம், கண்ணனிட்டைச்சொல்லிவை! காலம் கெட்டுப்போய்க் கிடக்கு! எந்தப்புற்றுக்கை எந்தப் பாம்பு இருக்குமெண்டு ஆருக்குத் தெரியும்!'

'அவன் இவளோடை படிச்சவன்.... வேறை பழக்கம் இல்லை. இஞ்சை கண்ணன்ரை சிநேகிதத்திலை வந்து போறான்.'

'அதிலை பிழையில்லை.... எதுக்கும் அளவு வேணும்.'
'எல்லாம் ஒரே தலையிடியாக் கிடக்கு!' என்ற கோகுலனின் வார்த்தையில் கோபமும் கவலையும் கலந்து ஒலித்தது.

அப்போ கோப்பிமெசினிலிருந்து கோப்பி எடுத்து அவனுக்கும் கொடுத்துத் தானும் குடித்தார் தாமோதரன்.

'யசோ என்ன செய்யிறாள்...?'

'இருக்கிறா! கின்டர்காடினில் றெயினிங்... பிரச்சனையில்லை.'

'அவளுக்கு எங்கையேன் மாப்பிளை பாப்பமே? வேறை ஆர் இருக்கினம்! கொக்காவும் நீயும் அவளோடை கதைச்சுப் பாராதேங்கோவன்.'

'அக்கா கதைச்சவ!'

'என்ன சொன்னவளாம்....?'

'தான் வருத்தக்காரியாம்.'

'அவள் அப்பிடித்தான்சொல்லுவாள், நானும் கதைக்கிறன். ஆரும் ஒரு பெடியன் அவளுக்கெண்டு பிறக்காமலே இருக்கிறானா...?'

'ஏனண்ணை... முதல் எனக்கொரு பொம்பிளை பாருங்கோவன். குடிகாரன் எண்டு ஒருத்தியும் வரமாட்டன் எண்டுறாளவை!'
மனதுக்குள் உள்ளதை நேரடியாகக் கூறாமல் சுற்றி வளைத்தான் கோகுலன்.
தாமோதரன் என்ன சாமானியமானவரா....! எத்தனை பேரைக் கண்டவர்.... எள்ளைக் காட்ட எண்ணெய் கொடுப்பவர். புரிந்து கொண்டார்.

'டேய்! டேய்! என்னடா சொல்லுறாய்...! ஒரு சொல்லுச் சொல்லியிருந்தால் எப்பவோ கலியாணத்தை முடிச்சு வைச்சிருப்பன்!' என்றார்.

'அக்காவின் விடயமும் முடியட்டும்.' என்றான் அவன்.

'கொக்கா ஒண்டுக்கும் சம்மதிக்கமாட்டா... நீ பார்த்துச் செய்! நான் கதைக்கிறன்.'
'இல்லை அண்ணை... இராகுலன்ரை பிரச்சனையளுக்குப் பிறகு அக்கா கொஞ்சம் மனம் மாறின மாதிரித் தெரியுது. இல்லாட்டிப் பரதனண்ணைக்கு வீடு குடுத்திருக்கமாட்டா!'

'உண்மையாத்தான் சொல்லுறியே...! டேய்! பாவங்களடா இரண்டும்.! சந்தோசமா இருக்கிற வயசிலை எல்லாத்தையும் இழந்துபோட்டு நிக்குதுகள்! சேர்த்து வைத்தால் போற வழிக்குப் புண்ணியம் கிடைக்கும்;!'

'உங்களுக்குத் தெரியும்தானே அவை இரண்டுபேரும் கொள்கை... பண்பாடு கலாச்சாரம் எண்டு ஒழுங்கா இருக்கிறவை... அதுதான் எல்லாப்பக்கத்தாலும் யோசிச்சு ஒண்டும் செய்ய மனமில்லாமல் இருந்தவை! இப்ப பல நெருக்குவாரங்கள் இறுக்க, பிள்ளையளின்ரை எதிர்காலத்தை யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கினம் போலைக் கிடக்கு... இன்னும் சரியாத் தெரியாது.' என்றான் கோகுலன்.

'கோப்பியைக் குடியடா!'

வேணியின் தில்லுமுல்லுகளால் மனம் குழம்பிப்போய் மனமின்றி இருந்தவனை யசோ பற்றிய உரையாடல்.. நெஞ்சைச் சீர் பண்ணிப் பொறுமையைக் கொடுக்க, மனம் ஆறிக் கொப்பியை எடுத்துக் குடித்தான்.

'வேணிக்கு நான் கதைச்சதெண்டு சொல்லாதை! வழக்கம் போலக் கடைக்கு வரட்டும்... விடு பாப்பம்.'

'வேண்டாமண்ணை! வேறை எங்கையேன் பாக்கட்டும். மக்டொனல்ஸிலை கேட்டு எடுத்துக் குடுக்கிறன்! கடைக்கு வேண்டாம். அவள் எங்கடை நட்புக்கே கொள்ளி வைச்சுப் போடுவள்!' என்று சொல்லிவிட்டு ஜானகி வீட்டுக்குக் கிளம்பினான்.

வழியிலே நண்பன் ஒருவனைச் சந்திக்க, அவன் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல, அங்கிருந்து கதைத்துவிட்டுத் திரும்ப நேரம் போய்விட்டது.

ஜானகி அவனுக்காகப் பார்த்துக்கொண்டிருந்து விட்டுப் படுத்து விட்டாள். யசோ அவன் வருவானென்று படுக்காமல் காத்திருந்தாள்.

'அக்காவுக்கு விடிய வேலையே...?' என்று கேட்டுக்கொண்டு உள்ளே வந்தவன்,
'நீங்கள் படுக்கேல்லையோ...?' என்றான்.

'றேடியோ கேட்டுக்கொண்டிருக்கிறன். வாங்கோ!' என்று வரவேற்றாள். அவன் எப்ப வருவானெண்டு ஆவலோடு வழியைவழியைக் காத்துக் கொண்டிருந்த உண்மையை அவள் மறைக்க முனைந்தாலும் கண்கள் காட்டிக் கொடுத்துவிட்டன.

'நான் வருவன் தானே...... உமக்கு ஏலாது... படுத்திருக்கலாமெல்லே! கடைக்குப் போன இடத்திலை நேரம் போட்டுது... வேணியாலை ஒரே பிரச்சனை!'

யசோ சாப்பாட்டைச் சூடாக்கியபடி, 'என்ன...?' என்று அவனைப் பார்த்தாள்.

கோகுலன் கையைக் கழுவிவிட்டு மேசைக்கு வந்து சாப்பிட உட்கார்ந்தவாறு,
'தாமோதரமண்ணையிட்டைக் கணக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இவளுக்கு ஏன் இந்தத் தேவையில்லாத வேலை....?'

'இதுக்கு வேணி மட்டும் காரணமில்லை, பின்னாலை இராகுலனும் மனிசியும் எண்டுதான் நினைக்கிறன். அங்கை தினமும் வேணி போய் வாறா.... இராகுலன் அக்காவிலை வைச்சிருக்கிற கறள்ளை இப்பிடிப் பங்குப்பிரச்சினையைக் கிளப்பி, உங்களையும் தாமோதரனண்ணையையும் பிரிக்கலாமெண்டு பாக்கிறான் போலை!' என்று யசோ ஊகத்தடன் சொன்னாள்.

'தன்னுடைய வேலையைக் கெடுத்தவனுக்கு இதைத் தூண்டி விடுவதற்கு ஒரு நேரமா வேணும்...' என்று அவளுக்குப்பட்டது.

கோகுலனும் யோசனையுடன்,
'இவளோடை பெரிய அரியண்டமாப் போச்சு! அந்த விஜய்யோடை இவளுக்குத் தொடர்பெண்டு சனம் வேறை கதைக்குதாம்...!' என்றான் கவலை தொனிக்க.

'எந்த விஜய்...!'

'கண்ணன்ரை பிறன்ட்... இவளோடை கூடப் படிச்சவன்.'

'சனம் எலும்பில்லாத நாக்காலை எத்தினையைச்சொல்லும்! வேணி அப்பிடிப் போகமாட்டாள். சும்மா வஞ்சகமில்லாமல் கதைக்கிறதைச் சனம் திரிச்சு ஒண்டாக்கிக் கதை கட்டியிருக்கும்!' என்று கோகுலனின் மனதைச் சமாதானப்படுத்தினாள் யசோ.

இட்டலியை கோப்பையில் எடுத்துவைத்து சூடான சாம்பாற்றை ஊற்றினாள் யசோ.

'நீர் சாப்பிட்டீரே...!'

'அக்காவும் நானும் அப்போதையே சாப்பிட்டம். லேற்றானால் எனக்குச் சமிக்காது. பிறகு நெஞ்செரிக்கும்.' என்று அவனை விட்டுச் சாப்பிட்டதற்கு விளக்கம் கொடுத்தாள்  அவள்.

அவன் சாப்பிடத் தொடங்க தானும் ஒரு கதிரையில் உட்கார்ந்தாள்.
'எத்தினை பிரச்சனையளுக்குத் தான் இவன் முகம் கொடுக்க வேண்டிக்கிடக்கு!' என்று அவள் மனம் இரங்கியது.

'யசோ!' என்று ஏதோ சொல்ல நினைத்தவனாய் அவளைப் பார்த்தான் கோகுலன்.

'என்ன...!' என்று கேட்ட அவள், 'சாம்பாறு போடட்டா..?' என்றாள்.

'அக்கா பரதனண்ணையைக் கலியாணம் செய்யச் சம்மதிப்பா போலைக் கிடக்கு!'

'ம்...' தனக்கும் தெரியும் என்ற வகையில் தலையாட்டினாள் அவள்.

'அதுக்குப் பிறகு...'

'சொல்லுங்கோவன்...!'
கோகுலன் வார்த்தைகளைக் கோர்த்தபடி அவளைப் பார்த்தான். அவள் தன்னைத் தவறாக நினைத்தவிடக்கூடாத வகையில் பக்குவமாகச் சொல்வதெப்படி...? என்று தயங்கினான்.

'என்ன...!' என்று அவனைத் தூண்டினாள் யசோ.

` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 30

9.12.2019





எதிரொலி

பங்குபற்றும் பாத்திரங்கள்

பரதன்
ஈஸ்வரி(பரதனின் முன்னாள் மனைவி)
சாந்தன்
சுகந்தி

பரதன் கடையில் சாமான் வாங்கிக்கொண்டிருக்கையில் 'அப்பா!' என்று கையை யாரோ பிடிக்கத் திடுக்கிட்டுத் திரும்பினான்.

சாந்தன் கையைப் பிடித்தபடி நின்றான். சற்றுத் தள்ளி ஈஸ்வரியுடன் சுகந்தியும் இன்னொரு பிள்ளையும் நின்றனர்.

பரதன் எதிர்பாராத சந்திப்பால் தடுமாறிப் போனான்.
மகன் வந்து கையைப் பிடிக்கிறான். அவனைக் கட்டிக் கொஞ்சாமல் அவனால் இருக்க முடியவில்லை. சுகந்தியும் வந்து அவன் கைக்குள் புகுந்துவிட்டாள். தாங்கள் நிற்பது கடை என்பதுகூட அந்தக்கணம் அவர்களுக்கு மறந்து போனது.

கண்ணீர் சொட்ட நின்ற ஈஸ்வரி,
'சுகமா இருக்கிறீங்களா...?' என்று கேட்டாள்.
'பறவாயில்லை ஏதோ இருக்கிறன். நீ எப்பிடி இருக்கிறாய்? ஏன் இங்கை....! கடை பார்க்க வந்தனீங்களா?' என்றவன் அக்கம் பக்கம் கண்களை சுழட்டி அவள் கணவனைத் தேடினாள்.

'ஆரைத் தேடுறீங்கள்..!'

'தனியவே வந்தனீங்கள்..!'

'அவர் வேலைக்குப் போட்டார். ஞாயிறு இரவு வேலைக்குப் போனால் வெள்ளிக்கிழமை பின்னேரம்;தான் வீட்டுக்கு வருவார்.'

'இப்ப எங்கை இருக்கிறீங்கள்?'

'இங்கைதான் இவற்றை அம்மாவோடை.'

'பழையவீடு வித்தாச்சு! இங்கை மாமாவீடு பெரிசு.... இவற்றை பேரிலைதான் எழுதிக்கிடக்கு. அதிலை வந்திருக்கிறம். ஆனால்;....' வார்த்ததையை முடிக்காமல் விழுங்கிவிட்ட ஈஸ்வரியைப் பரதன் பார்த்தான்.

ஈஸ்வரி நிறைய மாறிப் போயிருந்தாள். களையாக இருந்த அவள் முகத்தில் கவலைக் கோடுகள் தெரிந்தன.

'வாங்கோ!' என்று இரண்டு கடைகள் தள்ளியிருந்த மக்டோனல்ஸிற்கு அவர்களை அழைத்துச் சென்று பிள்ளைகளுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்து, தாங்களும் சாப்பிட்டனர். அப்போ பரதன் கேட்டான். 'மாமா, மாமி வீடு சரியில்லையே?'

'பறவாயில்லை!' எண்டவள் நீங்கள் சுகமா இருக்கிறீங்களா? அந்த நேரம் ஏன் நான் உங்களை விட்டிட்டுப் போனனோ தெரியாது... என்ரை மதியைச் சனியன் மறைச்சுப் போட்டுது! இப்ப நினைச்சு நினைச்;சு நெஞ்சுக்குள்ளை அழுகிறன்.'
அவள் வார்த்;தைகள்; அவன் நெஞ்சை இடித்தன.
'ஏன் அவர் உன்னோடை நல்ல அன்பாய்த்தானே இருந்தவர்;!'

'அவர் இப்பவும் நல்லாத்தான் இருக்கிறார். நாங்கள் பழையவீட்டில்  இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காது! இப்ப மாமிதான் வீட்டிலை முதலாளி! தினமும் என்னை வைச்செடுக்கிறதே அவவுக்கு வேலையாப் போச்சு... அதோடை பிள்ளையளையும் அடிமையள் மாதிரி நடத்திறா. பிள்ளையளுக்கை பேதம் பாராட்டுறா... எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.'

'அவருக்குச் சொல்லாதையன்.'

'அவருக்குச் சொல்லுற நேரம் ஆடு மாடுகளுக்குச் சொல்லலாம்.'

'என் அப்பிடிச் சொல்லுறாய்!'

'அவருக்கு அம்மா எண்டாக் காணும்! அவ என்ன சொன்னாலும் ஓணான் தலையாட்டுறமாதிரி ஆட்டுவார். என்னைக் கண்டும் காணாத மாதிரி இருக்கட்டாம் எண்டுறார். கிழமையிலை மனிசன் இரண்டு நாள்தான் வீட்டிலை இருப்பர். மிச்சம் ஐந்துநாளும் அவருக்கு வீட்டிலை என்ன நடக்குதெண்டே தெரியாது.'

அவள் அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வராமல் தடுமாறினான் பரதன்.

கண்ணீரைத் துடைத்தபடி,
'ஏன் நீங்கள் இன்னும் கலியாணம் செய்யேல்லை...?'

'எனக்கு என்ரை பிள்ளையளின்ரை எண்ணம்தான்!'

'ஜானகி தனியாத்தானே இருக்கிறாள்! பாவம்... உங்களுக்கும் அவளுக்கும் நல்ல பொருத்தம்... கேட்டுச் செய்யுங்கோவன்!'

அவன் பதில் பேசாமலிருந்தான். ஜானகியைக் கலியாணம் செய்ய தான் கேட்டு அவள் மறுத்ததைச் சொல்லவா என்று நினைத்தவன்... சொல்லாமலே விட்டுவிட்டான்.

'கலியாணம் ஒன்றைச் செய்திட்டு பிள்ளையள் இரண்டையும் கூட்டிக் கொண்டு போய் வைச்சிருங்கோ! உங்கடை விருப்பப்படி அவங்களை வளர்த்து ஆளாக்குங்கோ!'

'என்ன திடீரென்று இப்பிடிச் சொல்லுறாய்?' ஆச்சரியமும் குழப்பமும் நிறைந்த முகத்தடன் ஈஸ்வரியைப் பார்த்தான் அவன்.

'நான் செய்த பிழைக்கு பிள்ளையள் தண்டனை அனுபவிக்கவேணுமெண்டில்லை.'

'பிள்ளையளுக்கு என்ன பிரச்சனை...?' கேட்டான் பரதன் துடிப்புடன்.

ஈஸ்வரி மீண்டும் விக்கிவிக்கி அழுதாள்.

பிள்ளைகள் வெளியே சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

'அங்கை அதுகள் அடிமைக்கும் அடிமையா வாழுதுகள்! பாத்துக்கொண்;டிருக்க வயிறெரியுது!'

'என்ன செய்யலாம் சொல்லு!' என்றான் பரதன் யோசனையுடன்.

'உங்கடை விருப்பப்படி செய்யுங்கோ! உங்கடை வீட்டிலை கூட்டிக்கொண்டு போய் வைச்சிருங்கோ! நான் நேரம் கிடக்கேக்கை வந்து பாக்கிறன்.'

ஈஸ்வரி தானா இப்பிடிச் சொல்லுறாள் என்று நம்பமுடியாமல் நின்றான் பரதன். பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போகச் சொன்னது நெஞ்சைப் பெரும் சந்தோசத்தில் ஆழ்த்திவிட, சிறிதுநேரம் அந்த மகிழ்வில் தடுமாறிப் போய்விட்டான்.

எனினும் பிள்ளைகளைப் பிரிந்து அவள் கவலைப்படுவாளே என்று தயங்கினான்.

'பிள்ளைகளை என்னட்டை விட்டிட்டு நீ யோசிச்சுக் கொண்டெல்லே இருப்பாய்!'

'நான் கவலைப்படுகிறது ஒருபக்கம் இருக்கட்டும்... ஆனால் இந்தக் கிழவியிட்டை எங்கடை பிள்ளையளை அடிமைப்படவிட வேண்டாம். பிளீஸ் பரது..!' என்று ஈஸ்வரி மாமியாரின் கொடுமைகளை எடுத்துக் கூறினாள். அவளின் மாற்றம் பரதனுக்கு அதிசயமாக இருந்தது.

'நீங்கள் அண்டைக்கு பிள்ளையளின் வாழ்க்கைக்காக நாங்கள் ஒண்டா இருப்பம் எண்டு திருப்பித் திருப்பி என்னிடம் கேட்டும் நான் மாட்டன் எண்டு மறுத்திட்டன்.

எனக்கு அப்ப அது விளங்கேல்லை. மற்றப் பொம்பிளையள் மாதிரிப் பொறுமையா இருந்து ஒழுங்காகக் குடும்பம் நடத்தாமல் குரங்கு மாதிரி மனம்போன போக்கில் அலைந்து உங்கடை வாழ்க்கையையும் கெடுத்து சீர்குலைந்து போய் நிக்கிறன்.'

அவள் பழைய சம்பவங்களைச் சொல்லித் தன் தவறுகளை எடுத்துரைத்து அழ, பரதன் மனமிளகி என்ன செய்வதென்று அறியாமல் அக்கம்பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டு தமாஸாகக் கதைத்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தான்.

மைக்டொனசில் கூட்டம் நிரம்பியிருந்தது. பிள்ளைகளை அழைத்து வீட்டுக்குப்  போகலாம் என்று இருவருக்கும் தோன்ற,

'நீ பிள்ளைகளை என்னோடு விடுவதுபற்றி உன்னுடைய கணவனோடும் மாமியாரோடும் கதைத்துவிட்டுச் சொல்லு! அதற்குள் நான் ஒரு வசதியான வீடு பார்த்து மாறிப் போட்டுப் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போறன்!' என்றான் பரதன்.

சாந்தும் சுகந்தியும் வந்து அவனைக் கட்டிக் கொஞ்சி விடைபெற்றார்கள்.

வீட்டுக்குச் சென்ற பரதனுக்கு அன்று மாலை நினைவுகள் கண்களை விட்டகலாமல் நெஞ்சிலே மாறிமாறி உருண்டன. நீண்டநேரம் யோசித்தவன் ஜானகியுடன் கதைத்தால் நல்லது போலத் தோன்ற தொலைபேசியை எடுத்தான்.

ஜானகி கதைத்தாள். ஈஸ்வரியைச் சந்தித்த விபரத்தையும் அவள் கவலையையும் பரதன் சொல்ல, அவள் அவதானமாகக் கேட்டாள்.

'என்ன செய்யலாம்... ஈஸ்வரி நல்லா மாறிவிட்டாள்... பிள்ளையள் அந்த வீட்டுக்கை கிடந்து இடிபடுவதைப் பார்த்துப் பொறுக்க மாட்டாமல் என்னிடம், கூட்டிக்கொண்டு போங்கோ! என்று கெஞ்சிறாள்.'

ஜானகிக்கும் அது கவலையாக இருந்தது. பெரியவர்கள் இழைத்த குற்றத்துக்குக் குழந்தைகள்  அல்லற்படுவது வேதனையளித்தது. வெளிநாட்டில் அதுவும் ஜேர்மன்காரர் மத்தியில் இத்தகைய நிகழ்வுகள் அதிகமாக இருந்தாலும் நம்மவர் மத்தியில் எங்கள் பண்பாடு, கலாச்சாரங்களின் கட்டுப்பாட்டால் மிகவும் குறைவாகவே நிகழ்ந்திருக்கின்றன. இனிவரும் காலங்களில் வெளிநாட்டுக் கலாச்சாரங்கள் நம்மவரிடையே புகுந்து இத்தகைய அசம்பாவிதங்கள் பரவிவிடக்கூடாது என்று நினைத்தாள். மேலும் பரதனின் நிலைமையை ஒருகணம் மீட்டவள், அவனுக்குப் பதில் சொன்னாள்.

'எங்கடை மேல்வீட்டை அறையாக்கித் தாறன் அங்கை வந்து இருங்கோ. பிள்ளையளையும் கூட்;டிக்கொண்டு வாங்கோ!' என்றாள். இந்த நினைப்;பு அவளுக்கு நீண்ட நாட்களாக நெஞ்சின் ஒரு மூலையிலில் இருந்தது. ஊர் ஏதாவது சொல்லுமே என்று இன்றுவரை அதை வெளியிடாமல்  இருந்தாள். இப்போ பிள்ளைகளைப் பரதனுடன் விட ஈஸ்வரி இணங்கியது அறிந்து அடங்கியிருந்த உணர்வுகள் வார்த்தைகளாக வெளிவந்தன.

'மாட்டன் எண்டு சொல்லாதேங்கோ பரதன்!' என்றாள்.

'ஈஸ்வரியிடம் பிள்ளைகளை என்னுடன் விடுவதுபற்றி அவள் கணவனுடன் கதைக்கும்படி சொன்னனான். பாப்பம், ஒரு முடிவை அறிஞ்சு செய்வம்!' என்று தயங்கினான்.

'எங்கடை மேல்வீட்டைத் தனிவீடாக வாடகைக்கு விடத்தக்கதாகச் செய்யப் போறன்! நீங்கள் அந்த வீட்டிலை வந்திருக்கவேணும். இது என்ரை விருப்பம்.' என்று அறுத்துறுத்துத் தன் அடிமனத்தின் ஆவலை வெளியிட்டாள்.

'நீங்கள் வீடுதிருத்திறதெண்டால் நான் வந்து கெல்ப் பண்ணுவன்! நல்லாச் செய்யக்கூடிய இரண்டுபேரையும் எனக்குத்தெரியும். அவங்களைப் பிடிச்சு மலிவா முடிக்கலாம்.'

'செய்யுங்கோ! காசு தாறன். பாங்கிலை லோன் எடுக்கலாம்.' என்ற அவள்; வார்த்தைகளில் திருப்தி தெரிந்தது.

ஒரு மாலைநேரம். ஜானகி வீட்டுக்குக் கோகுலன் வந்தான். அவனிடம் பரதன் சொன்னதைக் கூறினாள் ஜானகி.

ங்குபற்றும் பாத்திரங்கள்
ஜானகி.  
கோகுலன்  

மேல்வீடு இதுவரை பழைய தளபாடங்கள் வைக்கும் இடமாகக் காலியாக இருந்தது. மூன்று அறைகளும் ஒரு குளியலறையும் அமைக்க முடியும். இடையில் சுவர்கள் எழுப்பி, பூச்சுவேலை, கல்லுப் பதித்தல், தண்ணீர், வெப்பமாக்கி போன்றவற்றிற்குக் குழாய்த் தொடர்புகள், மின்னிணைப்பு போன்ற வேலைகள் செய்தால் ஒரு குடும்பம் இருக்கக்கூடிய வீடு அமையும். இதுபற்றிக் கோகுலனுடன் கலந்து ஆலோசித்தாள் அவள்.

பரதனுக்கு அதைக் கொடுப்பதில் கோகுலன் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. வங்கியில் கடன் எடுக்கலாம் பணத்துக்குப் பிரச்சனையில்லை. அக்காவுக்கு விருப்பம், வசதியும் இருக்கு. செய்வதில் எந்த இழப்புமில்லை. பதிலுக்கு வீட்டின் பெறுமதி அதிகரிக்கும். பிள்ளைகளுக்கும் பிற்காலத்தில் தனித்தனி இருக்க விரும்பினால் அதுக்கும் வசதி என்று  அவனுக்கு மனதிற்பட்டது.

'திருத்திப்போட்டு பரதனண்ணைக்குக் குடுப்பம்!' என்றான்.

'சனங்கள் அப்பிடியும் இப்பிடியும் கதைக்குமெண்டுதான் யோசிச்சனான்.' என்று தன் மனப்பயத்தைக் கூறினாள்.

'வாடைக்கு வேறை ஆரும் இருந்தால்.... அதுக்கும் கதை சொல்ல நினைச்சால் சொல்லலாம் தானே. உங்கை வாடை வீடுகளிலை  இருக்கிற சனங்கள், முன்வீட்டிலை ஆம்பிளையள் இருந்தால் வீட்டைக் காலியே பண்ணமுடியும்!' என்றவன்,

'அக்கா ஏன் கனக்க யோசிக்கிறாய்? உன்ரை மனதுக்கு எது சரியோ அதைச் செய்! பரதனண்ணையைக் கலியாணம் செய்தால் இரண்டு பேருக்குமே நல்லதெண்டது என்ரை நினைப்பு. ஆனால் நீ அத்தானையே நினைச்சுக்கொண்டிருக்கிறாய்! நினைப்புகள் நெஞ்சிலே இருப்பதில் பிழையில்லை. ஆனால் இந்த வெளிநாட்டுச் சூழலை நினைச்சு பிள்ளையளின் சந்தோசத்துக்காக நீ கொஞ்சம் மனதைத் தளர்த்தினால் நல்லது.' என்று தன் உள்ளக்கிடக்கைகளை வெளியிட்டான் கோகுலன்.

வீட்டுவேலைகள் நடந்தன. பரதன் லீவு எடுத்து முழுநேரமும் அங்கு நின்று வேலைகளைக் கவனித்தான். இரண்டு கிழமைகளில் எல்லா வேலைகளும் முடிந்து அழகான அறைகள் உருவாகிவிட்டன.

பங்குபற்றும் பாத்திரங்கள்
இராகுலன்  
ஜானகி 
பரதன்  

ஜானகிக்கு அன்று பின்னேரவேலை. யசோ சிறுவர் பாடசாலைப் பயிற்சிக்கும் லவனும் குசனும் பள்ளிக்கும் சென்றுவிட்டார்கள். இரவு நேரம் செல்லப் படுத்ததாலோ என்னவோ லேசான தலைவலியாக இருக்க, விக்ஸ் கொஞ்சம் எடுத்துத் தடவிவிட்டு வீட்டுவேலைகளைக் கவனித்தாள்.

வீட்டுமணி அடித்தது.

ஜானகி கதவைத் திறக்க, இராகுலன் அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டான்.

'என்ன...! எனக்கு உங்களோடை கதைக்க விருப்பமில்லை. வெளியே போங்கோ!' என்று கோபமாகச் சொன்னாள்.

அவன் எதையும் பொருட்படுத்தாமல் படியேறி உள்ளே சென்றான். ஜானகிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

'இண்டைக்கு இரண்டிலை ஒண்டு தெரியாமற் போகமாட்டன்.'

'என்னை ஏன் அழவைக்கிறீங்கள்? தேவையில்லாத பிரச்சனையளை ஏன் கொண்டு வாறீங்கள்? நான்தானே ஒரே பதில் சொல்லிப்போட்டன்.'

'நீ சும்மா பயப்பிடுகிறாய்!'

'நாங்கள் ஒழுங்கா, தமிழராப் பண்பாடோடை வாழ்ந்து கொண்டிருக்கிறம். பயபக்தி எல்லாம் எங்கடை இரத்தத்தோடை கூடப் பிறந்தது.'

'சும்மா உளறாதை! எல்லாம் இரகசியமா இருக்கும். நீ ஒருத்தருக்கும் பயப்பிடத் தேவையில்லை.'

'என்ன கதைக்கிறீங்கள்! சொந்தக்காரன் எண்டு இவ்வளவு நாளும் பாத்துக்கொண்டிருந்தனான். இண்டைக்குப் பொலிசுக்கு ரெலிபோன் எடுப்பன்... என்னாலை இனியும் பொறுக்க முடியாது.' என்றாள் ஆற்றாமல்.

'பொலிஸ் வந்தால் எனக்கென்ன...! அதோடை உன்னை ரெலிபோன் எடுக்க நான் விடுவனே...!' என்று அவள் கையைப் பிடிக்கப் போனான்.

அப்போ கதவைத் திறந்து கையில் சில சாமான்களுடன் உள்ளே வந்தான் பரதன். ஜானகிக்குக் கடவுள் வந்ததுபோல்  துணிவு பிறந்தது.

அவள் கையைப் பிடித்த இராகுலன் பரதன் வருவதைக் கண்டு உதறிவிட்டு, சினத்துடன்
'ஓகோ! கள்ளக்காதலன் வாறானா... நல்லது! நல்லது! இதை முதலே சொல்லியிருக்கலாமே!' என்று தன் எண்ணம் தடைப்படக் கேட்டான்.

'இராகுலன்! வார்த்தையை அடக்கி வாசி! கலை கலாச்சாரம் எண்டு மேடையிலை முழங்கிக்கொண்டு பதவிக்காக அலைஞ்சு திரியிறதோடை நிறுத்திக்கொள்! போ!' என்று அருகே இருந்த மேசையில் கையிலிருந்த பொருட்களை வைத்துவிட்டு, தேவைப்பட்டால் அவனின் பல்லைப் பெயர்க்கத் தயாராக நின்றான் பரதன்.

'இவள் என் மச்சாள்! நான் வருவன் போவன்... நீ ஏன் இஞ்சை வந்தனீ...? உனக்கு என்ன அலுவல்... எடேய்! நானும் ஆம்பிளையடா! உன்ரை பம்மாத்து எனக்குத் தெரியுமடா!' என்றான் நளினமாக.

'பம்மாத்து எனக்குத் தெரியாது... அது எனக்குத் தேவையுமில்லை. உன்னை மாதிரி  ஊரை ஏமாத்த வேணுமெண்டுமில்லை.'

அப்போ ஜானகி,
'போங்கோ இராகுலன்! எங்களுக்கு வேலை கிடக்கு. அநாவசியமான விவாதம் வேண்டாம். எங்களை நிம்மதியா இருக்க விடுங்கோ!' என்றாள்.

அவளுக்குப் பரதனின் குணம் தெரியும். இராகுலன் இரண்டு சொல்லு கோபமூட்டக்கூடியதாகச் சொன்னால்  அவன் அடிப்பான். இது தேவையா...! என்று தகராறை வளர்க்க விரும்பாதவளாய் அவள் சொன்னாள்.

அதற்கு இராகுலன்,
'நீங்கள் என்னெண்டான்ன செய்யுங்கோ! உங்களை நிம்மதியா இருக்க விடமாட்டன்.' என்று உறுமிவிட்டு வெளியே போனான்.

கதவைச் சாத்தி ஜானகி ஒரு பெருமூச்சு விட்டாள்.

'விசரன் மாதிரி திடீரெண்டு வந்து நிப்பான்... எத்தினை தரம் சொல்லிப் பாத்தாச்சு மனிசிக்காரிக்கு இதைப் பற்றி அக்கறையில்லை. கேட்பாரில்லை, தனியத்தானே இருக்கிறன். என்னெண்டாலும் செய்யலாமெண்ட நினைப்பு...!' முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதாள் அவள்.
'ஜானகி! பிளீஸ்! இனிமேல் இப்பிடி நடக்காமல்;  நான் பாக்கிறன்!' என்று பரதன் சொல்ல, அவள் அவனை நெருங்கி வந்து அருகில் நின்றாள்.

'கவலைப்படாதேங்கோ! நீங்கள் 'ராமை நினைச்சுக்கொண்டு பிள்ளையளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறீங்கள். இது தெய்வத்துக்குத் தெரியும்;... ஊருக்குத் தெரியும். இராகுலன் மாதிரியான ஒரு சிலருக்கு இதை விளங்க வைக்கவேணும் எண்டில்லை.'

அப்போ அவள் அவன் இருகைகளையும் பிடித்தபடி,
'என்னாலை இனித் தனியா இருக்க முடியாது!' என்று அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

இந்த உலகத்திலை ஒரு பெண் தனியாக, ஒழுக்கமாக இருக்க முடியும், உலகமும் ஒழுங்காக இருந்தால். இராகுலன் மாதிரியான காமுகர்களும் கமலம் போன்ற பித்தலாட்டக்காரர்களும் இருக்கும் போது ஆதரவின்றி பெண்கள் வாழ்வது கல்லில் நார் உரிப்பது போன்று கடினமானது என்று அவளால் உணர முடிந்தது.

'உன்னைக் கலியாணம் செய்யும்படி அன்றொரு நாள் ஏன் கேட்டேன் தெரியுமா....? இப்பிடியான அயோக்கியர்களிடமிருந்து உன்னைப் பாதுகாக்கலாமெண்டுதான். ஒரு ஆணும் பெண்ணும் பழகுவதற்குக் கட்டில் தான் காரணமெண்டு கணக்குப் போடும் மனிதர்கள் நிறையவே இருக்கிறார்கள்!
நானும் நீயும் பழகினால்.... நீ தாலியை இழந்தவள்... நான் மனிசியை ஓடவிட்டவன்... சேர்த்து வைத்து  வாயவிய ஆயிரம் கதை கதைப்பார்கள். இந்த வாயளை மூட இதுதான் வழி! எண்டு எனக்குத் தெரிஞ்சது... கேட்டன்! வேறை எண்ணம் எனக்கில்லை... உன்னிலை எனக்கு நிறைய அன்பு இருக்கு, ஆனால் இராகுலன் மாதிரி வெறி அணுவளவுகூட இல்லை. என்னுடன் உயிராகப் பழகிய 'ராமின் மனைவி.... அவள் கலங்கக்கூடாது. இது என் நினைப்பு. இதுக்காக இந்த உயிரையும் குடுப்பன் தெரியுமா...!
நட்பெல்லாம் நட்பாகாது.... ஆனால் நட்புக்குள் சில நட்புக்கள் இருக்கத்தான் செய்யிறது... அந்த நட்புக்கள் உயிர் கொடுக்கும்!' என்ற பரதனின் வார்த்தைகள் அவள் நெஞ்சுக்குப் பெரும் ஆதரவாக இருந்தன. தன்னையும் மறந்து அவனோடு அவள் ஒன்றிப் போனாள்.

'சில மன உறுதிகளைக் காலம் கரைத்து உடைத்து விடுகிறது. நானா இப்பிடி இன்னொரு கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவித்தேன்....! என்று நம்பமுடியவில்லை. ஆனால் குசன் அண்டைக்குப் போய், கிடங்குக்கை விழுந்து... அப்பிடி மண்டையிலை அடிபடுகிறான். சொந்தக்காரன் இவன் என்னைத் தெருவுக்கு இழுக்க அலையிறான்... இதெல்லாத்தையும் நினைச்சா... என் கடமையை நான் செய்ய நீங்கள் துணையாக வந்துதானாக வேணுமெண்டு என்ரை மனம் சொல்லுது!' என்று நிறுத்தினாள்.

பரதன் அவள் கன்னங்களில் தன்னிரு கைகளையும் வைத்து, அவள் கண்களைக் கனிவோடு பார்த்தான்.

வீர்! என்று ஓயாது வீசும் காற்றில் ஆடியலைந்தவிட்ட மலர் போல அவள் மனம் துவண்டு நின்றதை அந்தக் கண்கள் அறிவித்தன.

'ஒரு நல்ல நாளைப் பாத்திட்டுச் சொல்லுறன். நெருங்கின நண்பர்களை மட்டும் கூப்பிட்டு கோயில்லை தாலியைக் கட்டுவம்!'

'நாங்கள் இந்த முடிவுக்கு வாறது தப்பா பரதன்...!'

'என்ரை மனசுக்கு நூற்றுக்கு நூறு சரியெனப் படுகுது. ஆருக்கும் துரோகம் செய்யேல்லை... எவர் கண்ணிலும் குத்தேல்லை.. வாழ்க்கை எண்ட பாதையைத் தடுத்து நிற்கும் இடர்களைக் கடந்து செல்ல ஒருத்தருக்கொருத்தர் துணை நிற்க இப்பிடியொரு ஒப்பந்தம் செய்து இணைகிறோம். இதில் தடுமாறுவதுக்கு ஒரு காரணமுமில்லை.'

அவன் கூறிய காரணங்கள் அவளுக்கும் ஏற்கனவே நெஞ்சில் பட்டவையாக இருக்க, அவள் மனந்தெளிந்தவளாய்,
'கோகுலன், யசோ இருவரும் தெரிந்தால் சந்தோசப்படுவினம்!' என்றாள்.

'ஈஸ்வரிகூடச் சந்தோசப்படுவாள்!' என்றான் பரதன்.

'அதோடை லவன், குசன், சாந், சுகந்தி... எங்கடை பிள்ளைய ளின்ரை எதிர்காலம் உறுதியாக அமைய வழி வகுக்குமெண்டதாலை என்ரை மனதைச் சாந்திப்படுத்தக்கூடியதா இருக்கு!' என்றாள் ஜானகி.

கலைந்து கிடந்த கூந்தலைச் சீராகத் தன் கைகளினால் கோதி ஆதரவுடன் தடவிய பரதன், தான் வாங்கி வந்த பொருட்களை மேசையிலிருந்து எடுத்துக்கொண்டு மேல்வீட்டுப் படியேறிச் சென்றான்.

` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 29

21.11.2019




கோகுலனின் காதலி 

பங்குபற்றும் பாத்திரங்கள்
வேணி
கண்ணன்
விஜேய்
ஜானகி
யசோ
கோகுலன்


வேணியும் கண்ணனும் ஜானகி வீட்டிற்கு வந்திருந்தனர்.
கோகுலனிடம் வேணி கேட்டாள்.
„அண்ணை சுந்தரத்துக்குக் காசு அனுப்பினனியோ?'
கோகுலன் திகைத்துப்போய் அவளைப் பார்த்தான்.
அங்கே உட்கார்ந்திருந்த யசோவும் கண்ணனும் இவள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தப்போறாள் என்ற பயம் முகத்தில் படர, மௌனமாக இருந்தனர்.
ஜானகி ஏதும் விளங்காதவளாய், கோகுலனையும் வேணியையும் பார்த்தாள்.
„என்ன பேசாமல் இருக்கிறாய்? இவர் தம்பியாருக்குக் காசு அனுப்பிப்போட்டு,
உன்னைச் சாட்டுகிறாரடா!'
சுந்தரம் காசு கேட்ட விடயம் ஜானகிக்குத் தேரியும். அனுப்பின விடயம் தெரியாது. இதனால் பேசாமல் இருந்தவள், வேணியின் செய்கையை ஏற்றக் கொள்ளாமல் தலையை ஆட்டினாள்.
„நான்தான் அனுப்பினனான்.' பதில் பகர்ந்தான் கோகிலன்.
„ஏன் அனுப்பினனீ...? அடிப்பது போலக் கேட்டாள் வேணி.          
„அத்தானை அனுப்ப நீ விடேல்லை, அதுதான் அனுப்பினனான். அவசரம் எண்டதிலை தானே கேட்டவன்.'  
அவைக்கு எப்பவும் காசு அவசரம். இவ்வளவுநாளும் இவர் கொட்டினது பத்தாதெண்டு இப்ப உன்னட்டையும் கேக்கத் தொடங்கியிட்டினம்.'

'அவன் என்னட்டைக் கேக்கேல்லை, அவசரத்துக்கு உதவவெண்டு அனுப்பினனான். வாயை மூடிக்கொண்டிரு!' என்று உறுமினான் கோகுலன்.

'ஏன் நான் வாயை மூடிக்கொண்டிருக்கவேணும்? ஊருக்குக் குடுக்கிறதை எனக்குத் தரலாம்தானே!'

'வேணி!' என்று அதட்டினாள் ஜானகி.

'என்ன...!'

'அவையின்ரை குடும்பவிசயத்திலை நீ  ஏன் தலையிடுகிறாய்..? உன்ரை வேலையைப் பாத்துக்கொண்டு அடக்கமா இருக்கப் பார்!'

'இவருக்கு அடக்கமா இருக்கட்டோ..! ஏன் இவருக்கு இருக்கிற உரிமை தானே எனக்கும் இருக்கு!'

'இல்லையெண்டு ஆரோ சொன்னவையோ....! சும்மா வாயைக் காட்டிக்கொண்டு நிக்கிறாய்!' என்று கண்டித்தாள் ஜானகி.

'உண்மையைச் சொன்னா வாய் காட்டுறன் எண்டுறியள்! எனக்கென்ன ஆரெண்டாலும் என்னெண்டாலும் செய்யட்டும்.' என்று முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள் வேணி.



ஜானகி வீட்டுக்கு வந்த கோகுலன், யசோ வீட்டில் இல்லையென்று தெரிந்து கொண்டு ஜானகியிடம்,
'அக்கா!' என்று கூப்பிட்டுவிட்டு தயங்கினான்.

'என்னடா...!' என்றாள் ஜானகி.

'இனி எனக்குக் கலியாணம் பேச வேண்டாம்.'

'ஏன்...? டேய்! கோகுலன் பேசிற கலியாணம் குழம்பிக் குழம்பிக் கொண்டு போகுதெண்டு யோசிக்காதை! உனக்கெண்டு ஒருத்தி இல்லாமலே போவாள்.'

'அக்கா....!'

'ஜானகி அவன் ஏதோ சொல்லத் தயங்குகிறான் என்பதை விளங்கிக்கொண்டு பொறுமையாக அவனைப் பார்த்தாள்.
'அக்கா! யசோவைக் கேக்கிறியே!'

ஜானகி உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு அவனருகில் வந்து முதுகைத் தடவியபடி,

'அவளுக்;கு உன்னிலை நல்ல விருப்பம். கேக்கிறன், ஆனால் அவளைப் பற்றி உனக்கு முழுசாத் தெரியும்தானே!'

'தெரியும்... உன்னைவிட கொஞ்சம் அதிகமாகத் தெரியும்.'

'வரட்டும் நான் கேக்கிறன்!' என்றாள் ஜானகி சந்தோசம் கண்களில் விரிய.

'நான் போயிட்டுப் பேந்து வாறன்... நீ வேலையைச் செய். நான் டிஸ்ரேப் பண்ணேல்லை!' என்று சொல்லி வெளியே நடந்தான் கோகுலன்.



கோகுலன் தங்கை வேணி வீட்டுக்குப் போனான். கண்ணன், விஜய், வேணி மூவரும் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
'ரீ குடியன் அண்ணை!' என்றாள் வேணி.

'தாவன்! உன்ரை கையாலை ரீ குடிச்சா அம்மான்ரை  கையாலை குடிச்ச மாதிரி இருக்கும்!' என்றான் கோகுலன் சிரிப்போடு.

'எப்ப பாத்தாலும் உனக்கொரு நக்கல்... என்ன?' என்றபடி தேநீரை ஊற்றிக் கொடுத்தாள்.

'வேலையெல்லாம் எப்பிடி...?' கண்ணனைப் பார்த்து விசாரித்தான்.

'பறவாயில்லை. எண்டாலும் முந்தினமாதிரியில்லை. முன்னும் பின்னும் மைஸ்ரார் திரியிறதிலை ஐஸ் அடிக்கேலாது.' என்று பதில் சொன்னான் கண்ணன்.

விஜய் பக்கத்தில் இருந்தான். அவனையும் ஏதாவது விசாரிக்க வேணுமே என்று,
'பழைய வீட்டிலைதானே  இருக்கிறீர்!' என்று கேட்டான்.

'அதுக்குக் கிட்டத்தான்  வேறை வீடு மாறியிருக்கிறன்!' என்றான் விஜய்.

'இஞ்சை! தாமோதரன் காசடிக்கிறார்... அவரோடை பங்காச் செய்யிறதை விடப்பார்! என்றாள் வேணி.

கோபம் கண்களில் தெறிக்க அவளைப் பார்த்தான் கோகுலன்.

'ஏன் கோவிக்கிறாய்... உண்மையைத்தான் சொல்லுறன். ஒவ்வொரு நாளும் நூறு, இருநூறு மார்க் குறையுது!'

'நீ வேலைக்குப் போனால் உன்ரை வேலையைப் பாத்திட்டு வா! அந்தாள் பதினைஞ்சு வருசமாக் கடை நடத்துறார். அவரிலை பிழை பிடிக்காதை!' என்று அவள் வாயை மூடப் பார்த்தான் கோகுலன்.

'அவர் தன்ரை கடையைப் பாக்கட்டுமன் அண்ணை! நாங்கள் எங்கடை கடைஅலுவல்களைப் பாப்பம்.' என்று அவள் கேட்டாள்.

'நாங்கள் எண்டால்...! வேணி, அது தாமோதரமண்ணையின்ரை கடை, சிநேகிதத்துக்காக என்னை அவர் பங்காச் சேர்த்திருக்கிறாரே தவிர அந்தக் கடைக்கு நான் போனதுமில்லை பிஸ்னஸ் செய்ததும் இல்லை. நீ அண்ணை அண்ணையெண்டு முன்னும் பின்னும் திரிஞ்சு கேட்டதிலை பாவம் எண்டு உனக்கு அங்கை வேலை எடுத்துத் தந்திருக்கிறன். போனா அந்த அலுவலைப் பார்த்திட்டு வா! இல்லாட்டிப் பேசாமல் வீட்டிலை இரு!'

கண்ணனோ விஜயோ அண்ணன் தங்கச்சியின் இந்த உரையாடலில் கலந்து கொள்ளவில்லை. அவர்களே கதைத்துத் தீர்க்கட்டும் என்று இருந்தனர்.

அப்போ வேணி சொன்னாள்.
'நீ இப்பிடியே பாராமுகமா இரு! அவை இலாபத்தை எல்லாம் சுருட்டிக்கொண்டு போகட்டும்.'

'எனக்குத் தாமோதரன் அண்ணையைத் தெரியும். நேற்றோ இண்டைக்கோ அவர் எனக்குப் பழக்கமானவரில்லை. அத்தான் அக்காவையின்ரை பழைய பிரண்ட்... ஆபத்துக்கு உயிரையும் குடுக்கக்கூடிய மனிசன்.'

'அவர் அப்பிடியிருக்கலாம். முழுநேரமும் அவரே கடையிலை நிக்கிறார்...? மகள் நிக்கிறா... மனிசிக்காரி நிக்கிறா... ஐம்பது, நூறு எண்டு மடியிக்கை செருகினால் தெரியவே போகுது?'

'ஏன் இப்பிடி நினைக்கிறாய்? நம்பிக்கைதான் வாழ்க்கை. ஒருதனை ஒருதன் நம்பித்தான் உலகமே ஓடுது! நம்பிக்கை இல்லாட்டி ஒண்டுமே செய்யேலாது.'

'நான் கண்ணாலை கண்டதைச் சொல்லுறன். அதை நம்பாமல் சும்மா தத்துவம் சொல்லிக்கொண்டு நிக்கிறாய். உனக்கு மண்டைக்கை யசோவின்ரையும் தண்ணிக்கூட்டத்தின்ரையும் எண்ணம்தான் ஒழிய கடையைப் பற்றிக் கடுகளவு நினைப்பும் இல்லை.'

கோகுலனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
'உன்ரை வாயிலை ஒரு நாளும் நல்ல வார்த்தையே வராதா? தங்கச்சியெண்டு வந்து எங்களுக்குப் பிறந்தாய்!' என்று உறுமிவிட்டு வெளியேறினான்.

கண்ணனுக்கு மறிக்க மனம் உந்தியபோதும் வேணி கதைத்த கதைக்கு ஆருக்குத்தான் கோபம் வராது என்று நினைத்தவனாய், 'இப்ப போகட்டும் ஆத்திரம் தணிய ரெலிபோனில் கதைக்கலாம்' என்று மௌனமாக நின்றான்.

ஜானகி வீட்டில் யசோ வேலையால் வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். ஜானகி அவளுக்கு வேண்டாம்... வேண்டாமென்று சொல்லக் கறிகளைப் போட்டாள்.

'என்னக்கா நீங்கள்... இவ்வளவும் ஆர் சாப்பிடுகிறது?'
'சாப்பிடு! சாப்பிடு!' என்ற ஜானகி,
'கோகுலன் தனக்கு இனிமேல் கலியாணம் பேச வேண்டாமாம்!'
'ஏன்...!'

'அவன் ஒரு பிள்ளையை விரும்புறானாம்.'

யசோ பதில் பேசாமல் ஜானகியைப் பார்த்தாள்.

'உன்னைக் கேட்கச் சொன்னவன்!' என்றாள் ஜானகி மொட்டையாக.

கண்களில் ஒளி மிளிர, மீண்டும் அவள் ஜானகியை நோக்கி விளங்காதவள் போல 'ம்' என்றாள்.

'உன்னை விரும்புறானாம், கேட்கச் சொன்னவன்.... என்னடி!' என்றாள் ஜானகி.
யசோ ஒருகணம் திகைத்துப் போய் நின்றாள். அவள் நெஞ்சு மகிழ்ச்சியில் படபடத்தது.

'இரவைக்கு வந்து கேட்கப்போறான். யோசிச்சுச் சொல்லு!'

'அக்கா! கோகுலனுக்கு நான் எப்பிடிப் பொருத்தம்... அவருக்கு... எத்தினை நல்ல பிள்ளையள் இருக்கினம்.... ஒருத்தியைப் பார்த்துச் செய்து வைக்கிறதுக்கு... நான் வருத்தக்காரி... இன்னொருத்த னுக்குக் கலியாணம் பேசி வந்தவள்... என்னைப் போய் அவருக்கு...!'

'அதொண்டும் பிரச்சனையில்லை. உன்னை மனைவியா அடைய கோகுலன்  குடுத்து வைக்கவேணும்.'

'ஏனக்கா அப்பிடிச் சொல்லுறீங்கள்? செல்லமாகக் கோபித்தாள்.

'உன்னை மாதிரி வடிவான, ஒழுக்கமான பொம்பிளை கிடைக்க கோகுலன் மட்டுமில்லை ஆரெண்டாலென்ன குடுத்து வைக்க வேணும்.'

'அதில்லை அக்கா...!'

'அக்கா... அக்கா எண்டு சொல்லுறதை விட்டிட்டு இனி மச்சாள் எண்டு சொல்லப் பழகிக்கொள்!'

'எப்பிடியெண்டாலென்ன எனக்கு நீங்கள் தெய்வம்! இல்லாட்டி நான் இண்டைக்கு இருந்த இடமும் தெரியாமல் போயிருக்கலாம்.'

'ஏன்டி அப்பிடிச் சொல்லுறாய்? கடவுள் கை கட்டிக்கொண்டு சும்மா இருக்கப் போறாரே.... எல்லாம் அவன் அருள்!'

'ஆனால் அக்கா வேறை ஆரையும் செய்து குடுங்கோ!'

'ஏன்...? அவனுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. உனக்கும் அவனைப் பிடிக்காமலில்லை... பிறகேன்...!'

'பிடிச்சிருந்தால் மட்டும் போதுமா... அக்கா நல்ல மனைவியாவும் இருக்க வேண்டாமே?'

'ஏன்... நீ நல்ல மனைவியா இருக்கமாட்டியோ! ஏனடி யசோ உன்னைப்பற்றித் தேவையில்லாமல் நீயே குறைவா நினைச்சுக் கொண்டிருக்கிறாய்? இனி என்னண்டாலென்ன அவனோடை கதைச்சுக் கொள்!'

'அவரோடை கதைக்க முடியாது.'

'ஏன்....!'

'கதைக்க விடமாட்டார்... ஏதாவது சொல்லி என்ரை வாயை மூடி விடுவார். அக்கா பிளீஸ் ஏதாவது சாட்டுச்சொல்லி... இல்லாட்டி உள்ளதைச் சொல்லுங்கோவன்! அக்கா எண்டு இருக்கிற நீங்கள் உங்கள் தம்பிக்கு ஒரு வருத்தக்காரியை எப்பிடியக்கா கட்டிக் குடுக்க நினைப்பீங்கள்?'

'இப்ப நீ என்னட்டை அடிவேண்டப்போறாய்! என் திரும்பத் திரும்ப வருத்தக்காரி எண்டுகொண்டு இருக்கிறாய்.'
'உண்மையைத் தானே சொல்லுறன்!'

'என்ன உண்மை...? வருத்தம் வாறது மாறுறது எல்லாருக்கும் பொதுவானது. நீ மட்டும்தான் இந்த உலகத்திலை ஒரு வருத்தக்காரியெண்டு சொல்லிக்கொண்டு நிக்கிறாய்!'

'அக்கா! வருத்தம் மட்டுமே? ஏமாற்றப்பட்டு தெருவில் விடப்பட்டவளும் எல்லே! என்னைப் போய் நீங்கள்... என்னக்கா!' என்று மறுத்துரைத்தாள் யசோ.

'அதுதான் சொல்லுறன், அவனோடை கதைச்சுக்கொள்ளெண்டு!' என்று பதில் கொடுத்தாள் ஜானகி.


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 28

13.11.2019


கோபத்தில் அறிவிழந்து நிற்கும் வேணி
பங்குபற்றும் பாத்திரங்கள்        

ஜானகி  
யசோ
கோகுலன்
வேணி
கண்ணன்  
விஜய் (வேணியின் பள்ளிக்கூட நண்பன்)
சுந்தரம் (கண்ணனின் தம்பி)


ஜானகி வீட்டில் தொலைபேசி மணி ஒலித்தது.
பக்கத்திலிருந்த கோகுலன் எடுத்துக் கதைத்துவிட்டு றிசீவரைப் பொத்தியபடி,
'பாதர்!' என்று மெதுவாக உச்சரித்தவாறு யசோவிடம் கொடுத்தான்.

யசோ ரெலிபோனை வாங்கிக் கதைத்தாள். அவள் ஜேர்மன்மொழி பயின்று கொண்டிருப்பதால் நன்றாகக் கதைக்குமளவுக்கு முன்னேறி இருந்தாள். ரெலிபோன் உரையாடலை முடித்துவிட்டு,
'கின்டர்காடின் ரீச்சருக்குப் படிக்கிறதுக்கு இடம் இருக்காம் விருப்பமோ என்று பாதர் கேட்டவர்!' என்றாள் யசோ.

அவள் பாதருடன் கதைத்ததையும் "ஜா" என்று சம்மதம் சொன்னதையும் கேட்டுக்கொண்டிருந்த ஜானகியும் கோகுலனும் சந்தோசத்தால் முகம் மலர, அவளுக்குக் கை கொடுத்து, முதல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

'நேர்ஸிங்கை விட இது உனக்கு நல்லது. வேலையும் கஸ்டமில்லை. பிள்ளையளோடை பழகிற ரெக்னிக் உனக்கு நிறையத் தெரியும்தானே!' என்றாள் ஜானகி.

'எல்லாம் நன்மைக்குத்தான். இராகுலனுக்கும் எடுத்துத் தாங்ஸ் பண்ணிவிடும்.' என்று கோகுலன் தமாஸாகச் சொன்னான்.



                       கண்ணனின் தம்பி சுந்தரத்துக்குப் பணம் அனுப்பிய விடயத்தை கண்ணனுக்குத் தெரிவித்தால் நல்லது என்று யசோ கருதினாள். சுந்தரம் காசு கிடைத்தும் ரெலிபோன் எடுத்து கண்ணனுக்கு அல்லது வேணிக்குச் சொன்னால் குழப்பம் ஏற்படலாம் என்று நினைத்தவளாய் கண்ணனுக்கு விடயத்தைத் தெரிவிக்க ரெலிபோன் எடுத்தாள் யசோ.

மத்தியானம் சாப்பிட்டு கண்ணன் ரிவி பார்த்தபடி அரைத் தூக்கத்தில் இருந்தான். விஜய்யும் வேணியும் சமையலறைக்குள் பாத்திரங்கள் கழுவியபடி கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

ரெலிபோன் மணி கேட்டு, வேணி வந்து எடுத்தாள்.

'நான் யசோ கதைக்கிறன்!'

'என்ன...?' ஒற்றைச் சொல்லில் கேட்டாள் வேணி.

'சுகமா இருக்கிறீங்களே...!'

'சுகமில்லாட்டி மருந்து தரப்போறீரே?' குதர்க்கமாகக் கேட்டாள் வேணி.

சிரிச்சுச் சமாளிக்க முயன்றவாறு வேணியின் குணம் அறிந்த யசோ 'கண்ணன் நிக்கிறாரே?' என்று கேட்டாள்.

'இல்லை, ஏன்!'

'கண்ணனிட்டை கோகுலன் ஒரு விசயம் சொல்லச் சொன்னவர், அப்ப பிறகு எடுக்கிறன்.'

'ஏன் அண்ணை எடுத்துச்சொல்லக்கூடாதோ? அதுக்கு உங்களிட்டைச் சொல்லி நீங்கள் எங்களுக்குச் சொல்லவேணுமே!'

'ஏன் ரெலிபோன் எடுத்தன்' என்னுமளவுக்கு யசோவுக்குக் கசப்புக் கொட்டியது. மெதுவா சமாளித்து வைக்கலாமென்ற முடிவுடன்
'சரி, அப்ப வைக்கிறன்!' என்றாள்.

'என்னெண்டு சொல்லுங்கோவன்! நான் கண்ணனுக்குச் சொல்லுறன்.'

யசோ பதில் சொல்வதற்கிடையில் தூக்கம் கலைந்த கண்ணன், எழும்பி வந்து, 'ரெலிபோனை இஞ்சை தா!' என்று வாங்கி,
'ஹலோ!' என்றான்.

'கண்ணன் வந்திட்டீங்களா...!' ஆச்சரியத்தடன் கேட்டாள் யசோ.

'இஞ்சைதான் ரிவி பாத்துக்கொண்டு இருந்தனான்.' என்றான்.

வேணி தனக்குப் பொய் சொல்லியிருக்கிறாள் என்று தெரிந்தும் அதைப் பெரிது படுத்தாது நேரடியா விசயத்தை அவனுக்குச் சொன்னாள்.

'இஞ்சை! சுந்தரத்துக்குக் காசு அனுப்பியிருக்கிறன்.'

'எந்தச் சுந்தரத்துக்கு...?' கேட்டான் கண்ணன். அவன் மூளை இன்னும் அசதிக்குள் இருந்து விடுபடவில்லை.

'உங்கடை தம்பிக்குத்தான். மில் வாங்கக்காசு கேட்டவனெல்லே!' என்று விளக்கமாகப் பதில் கொடுத்தாள் யசோ.

அப்போ,
'உவளோடை உங்களுக்கு என்னப்பா கதை... ரெலிபோனை வைச்சிட்டு வாங்கோ!' என்று வேணி கத்துவது யசோவின் காதில் விழுந்தது.

'விளங்கேல்லை. என்ன... மில் வாங்கவோ?' கண்ணன் திருப்பிக் கேட்டான்.

அவனுக்கு அரைத்தூக்கத்திலிருந்து வந்த குழப்பமும் வேணியின் ஆணையிடுவது போன்ற சொற்களின் அதிரடியும் தொலைபேசி உரையாடலில் சரியாகக் கவனம் செலுத்தமுடியாமல் இருந்தது.

அப்போ யசோ சொன்னாள்,
'கண்ணன்! நான் ரெலிபோன் எடுத்தது வேணிக்குப் பிடிக்கேல்லை  போலைக் கிடக்கு! நான் வைக்கிறன், நீங்கள் ஒருக்கா கோகுலனுக்கு ரெலிபோன் எடுங்கோ!' என்று உரையாடலை அரையும் குறையுமாக முடித்துக் கொண்டாள்.

தொலைபேசியை வைத்த கண்ணன் முகத்தைக் கழுவிவிட்டு மீண்டும் ஹோலுக்குள் வந்தான்.

ரிவி ஓடிக் கொண்டிருந்தது.
வேணியும்  விஜயும் பாத்திரங்கள் கழுவி முடித்தும் அங்கேயே நின்றபடி ஊரில் பாடசாலையிலே நடந்த ஏதோ சம்பவம் ஒன்றை சுவாரஸ்யமாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

'கோகுலன்ரை கார் ஏதோ சரியில்லையாம் எங்கையோ அவசரம் போகவேணுமாம் அதுதான் நேரமிருக்கோ எண்டு யசோ கேட்கிறா, நான்  போட்டு வாறன்!' என்று வேணியைப் பார்த்துக் கூறியவன் விஜயிடம், 'வாவன் போட்டு வருவம்!' என்று கேட்டான்.

'ம்...ம்...! எனக்குப் பஞ்சியாக் கிடக்கு, நீ போட்டு வா!' என்று மறுத்து விட்டான் அவன்.

'நீங்கள் போறதெண்டாப் போங்கோவன் அவரை ஏன் இழுக்கிறீங்கள்!' என்று உறுக்கினாள் வேணி.

'சரி. அப்ப என்னெண்டு பார்த்துக்கொண்டு வாறன்.' என்று வெளிக்கிட்டான் கண்ணன்.

கண்ணன் புறப்பட்டு சிறிது நேரத்தில் தொலைபேசியடித்தது.

வேணி எடுத்தாள்.
மறுமுனையிலிருந்து சுந்தரத்தின் குரல் ஒலித்தது.
'கொழும்பிலையிருந்து சுந்தரம் கதைக்கிறன். ஆர்... அண்ணியே! அண்ணி, காசு கிடைச்சிட்டுது. இப்பதான் உண்டியல்காரர் கொண்டு வந்து தந்திட்டுப் போறார். உடனை எடுக்கிறன். அண்ணைக்குச் சொல்லுங்கோ! சுகமா இருக்கிறீங்களே...!'

வேணியின் பதிலை எதிர்பாராமலே மளமளவென்று சுந்தரம் சொல்ல,
'என்ன விசயம்... என்ன காசு கிடைச்சது... நாங்கள் அனுப்பேல்லையே... பிறகென்னண்டு இரண்டு இலட்சம் அவனுக்கு உண்டியல்லை போய்க் கிடைக்கும்!' என்று குழம்பிப் போய் நின்றவள், சுகமா இருக்கிறீங்களா என்று கேட்டதற்கு மட்டும் பட்டும் படாமலும் 'ஓ இருக்கிறம்!' என்று பதில் சொன்னாள்.

'அண்ணை இல்லையோ...? நாளைக்கப்பிடி வசதி வந்தவுடனை யாழ்ப்பாணம் போடுவன்... காசை வைச்சுக்கொண்டு இங்கை இருக்கிறதும் கஸ்டம். மற்றது அங்கை போனால் உடனை அலுவல் பார்த்திடுவன்! அண்ணையும் நீங்களும் எங்களுக்குத் தெய்வம் மாதிரி. இந்த உதவியை ஒருநாளும் மறக்கமாட்டன்.' அவள் பதிலை எதிர்பாராமலே, 'சரி அண்ணி வைக்கிறன்!' என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தான்.

அவன் சொன்ன அன்பான வார்த்தைகள் எதுவும் வேணியின் காதில் விழவில்லை. இரண்டுலட்சம் காசு அனுப்பிய விடயம் மட்டும் தேள் கொட்டியது போல மனதில் அரித்துக் கொண்டிருந்தது.

ரெலிபோனை வைத்துவிட்டு வர, 'என்ன பிரச்சனை?' என்று  கேட்டான் விஜய்.

'எங்கடை வீட்டிலை ஒவ்வொருநாளும் தான் பிரச்சனை... ஏன் மரி பண்ணினன் எண்டு கிடக்கு!'

'சின்னச்சின்ன விசயங்களுக்கெல்லாம் ஏன் பெரிசா ரென்ஸன் ஆகிறீங்கள்...?'

'சின்ன விசயமில்லை விஜய்! இரண்டுலட்சம் ரூபாய் எனக்குத் தெரியாமல் தன்ரை அருமைத்தம்பிக்கு அனுப்பியிருக்கிறார். பாரும்.... ஒரு சொல்லுச் சொல்லேல்லை.' என்று கண்கள் கலங்கினாள் வேணி.

விஜய் அவளருகில் வந்து இருந்து கையைப் பிடித்து,
'என்ன வேணி.... அழாதையும். கண்ணன் வரவிட்டிக்குக் கேளும்... ஏசும்... இப்ப ஏன் அழுகிறீர்....!' என்றான். அவள் கை அவன் கைக்குள் இருந்தது.

'என்னெண்டு இவர் தம்பியாருக்குக் காசு அனுப்புவர்...! இப்பிடி ஒழிச்சு மறைச்சுத்தான் இவ்வளவுநாளும் எல்லாம் நடக்குது.' என்றாள் வேணி மற்றக்கையால் கண்ணீரைத் துடைத்தபடி.

'உங்களுக்கும் கண்ணனுக்கும் பெரிசா ஒத்துப்போகாது போலைக் கிடக்கு!' என்றான் விஜய்.

'கலியாணம் கட்டின அண்டையிலிருந்து சண்டை தான் விஜய். நான் எதிர்பார்த்த மாதிரி ஒண்டும் இங்கையில்லை. ஏமாந்து போனன்.'

'பிடிக்காட்டி பிறகேன்... இது வெளிநாடு. எத்தினையோ வழியிருக்கு... சிலோன் மாதிரியில்லை.'
'என்ன சொல்லுறீர் விஜய்!'

'நீங்களும் கண்ணனும் பாக்கிற நேரமெல்லாம் சண்டை பிடிக்கிறீங்கள். உங்களுக்குப்; பொருத்தமேயில்லையெண்டு நீங்களே சொல்லுறீங்கள்... கலியாணம் செய்து ஒரு வருசம்கூட ஆகேல்லை... பேசாமல் விட்டிட்டு புதுவாழ்க்கை அமைக்கலாமே எண்டு சொல்லுறன்.'

'எங்கடை கலாச்சாரம் உமக்குத் தெரியும்தானே! கலியாணம் கட்ட முந்தி யோசிக்க வேணும். கட்டின பிறகு கட்டினதுதான். பிறகு விடமுடியாது.'

'என்ன வேணி! இரண்டாயிரமாம் ஆண்டும் பிறந்திட்டுது. பழைய பண்பாடுகளை நினைச்சுப் பயந்து கொண்டிருக்கிறீர்!'

அப்போ கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அவசரமாக வேணியின் கையை விட்டுவிட்டு தள்ளியிருந்தான் விஜய்.
கண்ணன் உள்ளே வந்தான்.

விஜய் இருப்பதைக் கூட எண்ணாமல், பாய்ந்துபோய் அவன் சேட் கொலரில் பிடித்து,
'என்ன துணிவு உங்களுக்கு...! ஏன் இப்பிடிச் செய்தனீங்கள்?' என்று முகமெல்லாம் கோபம் கொப்பளிக்க ஆர்ப்பரித்தாள்.

கண்ணன் திகைத்துப் போய் நின்றான்.
ஜானகி வீட்டுக்குப் போய் யசோ ரெலிபோனில் கதைத்த விசயத்தைத் தெரிந்து கொண்டு வந்தவன், அவளைக் காணப் போனதுக்குத்தான் கோபாவேசமாக இருக்கிறாள் என்று நினைத்தான்.

'விடும்! சேட்டை விட்டிட்டுக் கதையும்!' என்று தணிவாகச் சொன்னான்.

'செய்யிறதையும் செய்திட்டு நல்லபிள்ளைக்கு நடிக்கிறீங்களோ...' என்று ஆவேசமாக நின்றாள்.

விஜய் கண்டும் காணாமலும் ரிவியைப் பார்ப்பதுபோல அவர்கள் சண்டையை இரசித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு வேணியில் ஒரு கண் இருந்தது. அவளும் இவனுடன் விழுந்து விழுந்து கதைப்பாள். ரெலிபோனில்கூட தினமும் கதைப்பார்கள். இருவரும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இதனால் முன்பே அறிமுகமானவர்கள். இங்கே சந்தித்ததும் ஊர்க்கதை கதைத்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

கண்ணனிடம் வேணி மனம்விட்டுக் கதைப்பதில்லை.  அதற்குச் சந்தர்ப்பமும் வரவில்லை. ஒரு வீட்டில் கணவன் மனைவியாக இருந்தாலும் கீரியும் பாம்புமாக இருந்தார்கள். இருவருக்கும் பொறுமை எண்டது மருந்துக்குமில்லை. இந்த வெறுமை விஜயுக்குச் சாதகமாக அமைந்தது.

இந்த இடைவெளியைப் பயன்படுத்திய விஜய் வேணியின் இதயத்தில் இடம் பிடிக்க நின்றான். கண்ணனுக்கும் இவனுக்கும் முதலே பழக்கம் இருந்தது. வேணியைக்  கண்ணன் கல்யாணம் செய்தபின் அடிக்கடி வந்து போனான். அவர்கள் வீட்டில் நடக்கும் அத்தனை தில்லுமுல்லும் அவனுக்குத் தெரியும்.

சேட் கொலரை இறுக்கிப் பற்றியிருந்த வேணியின் கையை விடுத்து, அவளைத் தள்ளிப் பின்னால் விட்டவனாய்
'அப்பிடி என்ன செய்து போட்டன்! கதைக்கிறதெண்டா மெதுவாக்கதை! சண்டைக்காரியள் மாதிரி ஏன் நிக்கிறாய்!'

'சண்டைக்காரியோ...!'
'வேறை என்னண்டு உன்னைச் சொல்லுறது...!'

'சொல்லத்தெரியாட்டி வாயை மூடிக்கொண்டிருங்கோ!'

'முதல் நீ உன்ரை வாயை மூடு! என்ன நடந்ததெண்டு கேட்டிட்டு விளங்கிக்கொண்டு கதை!'

'என்ன நடந்தது... உங்கடை செல்லத்தம்பிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் அனுப்பியிருக்கிறீங்கள்! ஆரைக்கேட்டு அனுப்பினனீங்கள்?'

'நான் அனுப்பேல்லையே!'
'முழுப்பூசனிக்காயைச் சோத்துக்கை புதைக்கப் பாக்கிறீங்கள்!'

'இங்கை ஒருத்தரும் ஒண்டையும் மறைக்கேல்லை. நீதான் ஏதும் காரணமொண்டைத் தூக்கிக் கொண்டு அலையிறாய்.'

'என்னப்பா கதைக்கிறீங்கள் உங்கடை தம்பி எடுத்துத் தன்ரை வாயாலை சொல்லுறான். நீங்கள் அனுப்பின காசு கிடைச்சது, ஊருக்குப் போய் மில் வாங்கப்போறன் எண்டு... நான் கேட்டது பொய்யே...?'

'நீ கேட்டது பொய்யில்லை. காசு தம்பிக்குக் கிடைச்சது உண்மை, ஆனால் நான் காசு அனுப்பேல்லை. கோகுலன் அனுப்பியிருக்கிறான்.'
'அவன் ஏன் அனுப்பப்போறான்...? சும்மா ஏன் அவனைச் சாட்டுறீங்கள்! இல்லாட்டி நீங்கள் அவனிட்டைக் காசைக் குடுத்து அனுப்பச் சொல்லியிருப்பீங்கள்!'

'இதுக்கு மேலை என்னாலை பதில் சொல்ல முடியாது. நீ என்னெண்டாலும் செய்!' என்ற கண்ணன்  சமையலறைக்குள் போய் யூஸ் எடுத்து ஊற்றியவாறு விஜயைப் பார்த்து, 'யூஸ் குடிக்கப்போறியே?' என்றான்.

'வேண்டாம் கண்ணன்!' என்று விஜய் மறுத்துவிட்டான்.

'அண்ணையைக் கேட்டிட்டுத்ததான் மிச்சம்!' என்று கண்ணனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தொலைக்காட்சியில் கண்களைச் செலுத்தினாள் வேணி.


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 27

06.11.2019



இராகுலனா இராவணனா

பங்குபற்றும் பாத்திரங்கள்        

ஜானகி
இராகுலன்


வீட்டுக்கதவு மணியடித்தது.

ஜானகி கதவைத் திறந்தாள்.

இராகுலன் விசமச் சிரிப்புடன் நின்றான்.

'என்ன...!' என்றாள் சினத்துடன் ஜானகி.

'யசோ எங்கை...? றெயினிங் முடிஞ்சுதே...? அவளுக்கெல்லாம்  ஏன் நேர்ஸ் வேலை... இப்ப சொல்லு... என்ன செய்யப்போறாய்... அத்தானை நேசிக்கிறியோ...?' என்று நஞ்சாக வார்த்தைகளைக் கொட்டினான் இராகுலன்.

'போடா வெளியே!' என்று கதவைச் சாத்த நினைத்தவள் சற்றுப்  பொறுமையை வரவழைத்துக்கொண்டு அவனை உள்ளே வரவிட்டு,
'என்னண்டு இப்பிடியொரு அநியாயம் செய்ய உங்களுக்கு மனம் வந்தது? வருத்தக்காரப்பிள்ளை யசோவுக்கு கடவுள் கொடுத்த கஞ்சியைத் தட்டி ஊத்திப் போட்டீங்களே! இந்தப் பழி உங்களைச் சும்மா விடுமா...?'  என்று கேட்டாள்.

'பழி பாவம் இருக்கட்டும் ஜானகி. அதைப் பிறகு பாக்கலாம். நீ என்ன சொல்லுறாய்? என்ரை பவறைப் பாத்தியா! றெயினிங்கொலிச் என்ன ஹொஸ்பிற்றல் என்ன மினிஸ்ரிவரை எனக்குப் பவர் இருக்கு!'

'உங்களுக்குப் பவர் இருக்கெண்டு இப்பிடியே காட்டுறது...! எங்கடை சனங்கள் எவ்வளவு பேர் விசாப்பிரச்சனையாலை கஸ்டப் படுகுதுகள், அதுகளுக்கு ஒரு வழி காட்ட உங்கடை பவரைக்  காட்டியிருந்தா இல்லாட்டி எங்கடை நாட்டுப்பிரச்சனையை விளங்க வைத்து தமிழ்மக்களுக்கு சாதகமா ஒரு அரசியல்தீர்வு காண வழி வகுத்திருந்தால் எங்கடை சொந்தக்காரன் இராகுலன் இப்பிடி எல்லாம் செய்யிறாரே எண்டு பெருமைப்படலாம். இப்ப நீங்கள் செய்திருக்கிற நரித்தனத்துக்கு உங்களை எங்கடை சொந்தக்காரன் எண்டு சொல்லவே நாக் கூசுது'

'போடி! போடி! சும்மா கனக்கக் கதைக்காதை! இறங்கி வழிக்கு வா! சமாதானமாகப் போவம். இல்லாட்டி உன்ரை குடும்பத்திலை நிம்மதி கிடைக்காது... இருக்க விடமாட்டான் இராகுலன்.'

'உங்களுக்கு நாங்கள் என்ன செய்தனாங்களெண்டு எங்களோடை இப்பிடி  எதிரிகட்டுறீங்கள்! குடும்பம் பிள்ளை குட்டி எண்டு வசதியா இருக்கிறீங்கள். சமூகத்திலையும்  மதிப்பா இருக்கிறீங்கள்.... நாங்கள் சும்மாவே கடவுளாலை சோதிக்கப்பட்டு மாறிமாறிப் பிரச்சனையளுக்கை எதிர்நீச்சல் போடுறம்! பிளீஸ் தயவுசெய்து எங்களை விட்டிடுங்கோ!  உங்களைக் கையெடுத்துக் கும்பிடுவன். இனிமேல் எங்கடை பாதையிலை வராதேங்கோ!'

இராகுலன் சிரித்தான்.

'நான் என்ன காதிலை பூவே வைச்சிருக்கிறன்;.... நினைச்சாச் செய்வன். அப்ப நான் நினைக்கேல்லை, 'ராம் முந்திக் கொண்டான். இப்ப அவன் இல்லை. இரண்டாந்தாரமா பப்ளிக்கிலை தாலி கட்டுறன் வா!'

'நீ இராகுலனா...? இராவணனா...? என்னண்டு இப்பிடியெல்லாம் பேச மனம் வருகுது...'

'எப்பிடிவேணுமெண்டாலும் வைச்சுக்கொள்! பதிலைச் சொல்லு! ஓமெண்டா இதோடை முடிஞ்சிடும். இல்லாட்டி தினமும் ஒரு பிரச்சனை உன்ரை வீட்டிலை முளைக்கும். யோசி! நல்லா யோசி! இன்னும் ஒண்டு தெரியுமே... வேணி.. உன்ரை தங்கச்சி, அவளை விஜய் சுத்திக்கொண்டு திரியிறான். பரதன்ரை மனிசியைச் சந்திரன் கௌவிக்கொண்டு போனமாதிரி அவன் அள்ளிக்கொண்டு போகப்போறான்... இதெப்பிடி..?' என்று அக்கினிக்;குண்டொன்றைத்; தூக்கிப் போட்டான்.

ஜானகி விழி பிதுங்க வாயடைத்துப் போய் நின்றாள்.

'என்ன பேச்சைக்காணம்...! வேணி கமலத்தோடை அந்தமாதிரி ஒட்டு. அவள் தன்ரை வீட்டுச்சமாச்சாரத்தையும் உன்ரை வீட்டுச்சமாச்சாரத்தையும் அப்பிடியே மெல்லச் சொல்லிப் போடுவாள்! அப்பாவிப்பிள்ளை. உன்னை மாதிரிப் பிடிவாதக்காரியில்லை.  கண்ணனும்  வேணியும் எங்கடை வீட்டை அடிக்கடி குடும்பமா வந்து போயினம். விஜயை வீட்டுக்கை அடுக்கி வைச்சிருக்கினம் கவனம்!'

'அது அவையின்ரை பிரச்சினை... எல்லாப்பெடியளும் சந்திரன் மாதிரியும் எல்லாப் பொம்பிளையளும் ஈஸ்வரி மாதிரியும் இருக்க வேணுமெண்டில்லை. எங்கடை வீட்டுப் பிரச்சனையை நாங்கள் பாக்கிறம். நீங்கள் போங்கோ! எனக்குப் பின்னேரம் வேலை. அதுக்குள்ளை கடையளுக்குப் போட்டு வந்து சமைக்க வேணும்.' என்று தன் அவசரத்தைக் காட்டினாள்.
'நான் என்ன இஞ்சை இருந்து சாப்பிட்டுப் படுக்கவா போறன்! அதுக்கு உன்ரை சம்மதம் வேணும். இராவணன் மாதிரி எனக்கும் பொறுமை இருக்கு. ஆனால் இராவணனிட்டையிருந்து சீதையை மீட்க இராமன் வந்தான். இங்கை இராகுலனிட்டையிருந்து உன்னை மீட்க 'ராம் வரமாட்டான். அவன் இந்த உலகத்திலை இல்லை.'

ஜானகி அவனை எரித்துவிடுவது போலப் பார்த்தாள்.

'அப்பிடிப் பாக்காதை. பார்த்தால்போலை நான் பயந்து ஓடியிடமாட்டன். இங்கை பார் ஜானகி, நீ தனியத் தானே இருக்கிறாய்... இப்ப ஆரையாவது கலியாணம் செய்து குடும்பமா இருந்தா நான் ஏன் இப்பிடிக் கூத்தாடப்போறன்....! அப்பிடிக் கெட்டவனில்லை. நீ பாவம்! சொந்த மச்சாள்... ஒரு இரக்கத்திலை கேக்கிறன்!'

'என்னை நீங்கள் பாவம் பாக்க வேண்டாம். நிம்மதியா எங்களை இருக்க விடுங்கோ! உங்கடை அட்டுழியம் தாங்க முடியேல்லை.'

'இதையெல்லாம் அட்டுழியமெண்டே நினைக்கிறாய்...! சீ...சீ.. அன்பு.. ஜானகி... அதோடை இன்னொண்டு தாமோதரனையும் உன்ரை தம்பியையும் கொழுவிவிடப் போறன். இதெப்பிடி....!' என்று நளினமாகச் சிரித்தபடி அவள் தோளில் தட்டிவிட்டு வெளியே நடந்தான்.

ஜானகிக்குத் தலையே சுற்றியது. அருகே இருந்த கதிரையிலிருந்து முகத்தைப் பொத்திக்கொண்டு வாய்விட்டே அழுதாள். வானொலியில் காலைப்பூந்தென்றல் நிகழ்ச்சியில் 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே....' என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. ஜானகியின் மனோநிலையில் இப்பாடலைக் கேட்டதும் இன்னும் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.


இளகிய மனசு

பங்குபற்றும் பாத்திரங்கள்

கோகுலன்
யசோ

அன்றொருநாள் கண்ணன் ஜானகியிடம் சொல்லிக் கவலைப்பட்டதை நினைத்துப் பார்த்த யசோ கோகுலனுடன் இதுபற்றிக் கதைத்தாள்.

'கோகுலன் ஒருக்கா பாங்குக்குப் போகவேணும்  வாறீங்களே...?'

'காசு வேணுமெண்டால் கேளுமன்! ஏன் பாங்குக்கு...?'

'இல்லை. ஒரு உதவி செய்யவேணும்...!'

'என்ன.... காசு தானே தாறன்!'
'சுந்தரம் மில் வாங்கக் காசு கேக்கேக்கை, வேணி வேண்டாமெண்டு கண்ணனை மறிச்சுப் போட்டா! நான் அந்தக் காசை அனுப்பப் போறன். இது வேணிக்குத் தெரியவந்தால்  நீங்கள் அனுப்பினதாச் சொல்லவேணும்!' என்றாள் யசோ.

குழம்பிப்போய் நின்ற கோகுலன்,
'நீங்கள் ஏன் சுந்தரத்துக்குக் காசு அனுப்பவேணும்?' என்று கேட்டான்.

'தமயனிட்டை மில் வாங்கவேணுமெண்டு சுந்தரம்  கேட்டவன். கண்ணனும் ஓமெண்டு சொல்லிப்போட்டுச் செய்யேல்லை. பாவம்தானே! என்னட்டைச் சேவிங்கிலை கிடக்கு! எடுத்து அனுப்பப்போறன்! இதை ஜானகியக்காவுக்குக்கூடச் சொல்லவேண்டாம்.' என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் யசோ.

'நீங்கள் உங்கடை வீட்டுக்கு அனுப்பவெண்டு சேர்த்து வைச்ச காசை அங்கை அனுப்பிப் போட்டு என்ன செய்யப்போறீங்கள்.?'

'முதல் மில்லை வாங்கட்டும் பிறகு பாப்பம்!'

'நீங்கள் நல்லாயிருப்பீங்கள். ஆரோ செய்ய வேண்டியதை நீங்கள்  செய்யிறீங்கள்... பிறகு உங்களுக்குத் தேவையெண்டால் நான் தாறன்!'

இருவரும் வங்கிக்குச் சென்றார்கள்.

வேலைக்குப் போகப் போகிறாளாம் வேணி

பங்குபற்றும் பாத்திரங்கள்

கோகுலன்
வேணி  

கோகுலன் ஜானகி வீட்டில் இருக்கும்போது வேணி வந்தாள்.

'கடை எப்பிடியண்ணை...?'

'பறவாயில்லை போகுது!' என்றான் கோகுலன்.

'நான் சும்மாதானே இருக்கிறன். போய்க்கடையிலை நிக்கட்டே..! ஆருக்காவது குடுக்கிற சம்பளத்தை எனக்குத் தாவன்!'

'சீ.. சீ.. அதொண்டும் வேண்டாம். உறவு உறவா இருக்கட்டும். கடை கடையா நடக்கட்டும்.'

'தாமோதரமண்ணையிட்டை எல்லாத்தையும் விட்டிட்டு நீ சும்மா திரியிறாய். அதிலை உன்ரை பங்கும் தானே கிடக்கு!'

'ஓ! அதுக்கு...!'

'நீயும் போய் இடைக்கிடை நிக்கலாம்தானே!'

'நான் நிற்க இருக்க நேரமில்லாமல் இருக்கிறன். என்னைப்போய்க் கடையிலை நிக்கச் சொல்லுறாய்.'

'உன்னைப் போகச் சொல்லேல்லை. நான் போய்ச் சாமான் அடுக்கி விற்கலாம்தானே... ஏன் செய்யமாட்டனே!'

'செய்யமாட்டாயெண்டு சொல்லேல்லை. நிர்வாகம் முழுக்க தாமோதரமண்ணை தான் கவனிக்கிறார். நான் அதுக்கை தலையிடுகிறேல்லை.'

'அது பிரச்சனையில்லைத்தானே. பிஸியான நாளிலை நான் போய்
கெல்ப் பண்ணுறன். சம்பளம் தராட்டாலும் பறவாயில்லை.'

'வேலை செய்தா சம்பளம் தரலாம்தானே அதிலை பிரச்சனை இல்லை.' யோசித்தான் கோகுலன்.

'இதுக்குப் போய் ஏனண்ணை பெரிசா யோசிக்கிறாய்...?'

'நான் யோசிக்கேல்லை. தாமோதரமண்ணையோடை ஒருக்காக் கதைச்சுப்போட்டுச் சொல்லுறன்!'
'ரெலிபோனிலை கேளன்!'

'சீ... நான் ஒருக்காக் கடைக்குப் போகவேணும். நேரை கதைச்சால் நல்லது.'
'சரி! கேட்டுச்சொல் மறந்து போகாதை!'

நட்பு உடையுமா                          

பங்குபற்றும் பாத்திரங்கள்

வேணி
இராகுலன்
கமலம்

இராகுலன் வீட்டுக்கு வேணி சென்றாள்.
'வாரும்! வாரும்!' வரவேற்றாள் கமலம்.
'எங்கை கண்ணன்....?'

'வேலைக்குப் போயிட்டார்.'

'என்ன கண்டறியாத வேலை... கடையைக்கிடையைப் போட்டிட்டுக் காலாட்டிக்கொண்டிருக்கிறதை விட்டிட்டு சும்மா சம்பளத்துக்கு மனிசன் போவானே.....?'

'எல்லாரும் கடை போடேலுமே அண்ணை! அனுபவம் வேணும் ஆட்துணை வேணும் அதோடை காசு வேணுமே!'

'கோகுலனிட்டைத்தானே தேவையான காசு கிடக்கு! தாமோதரனிட்டைத் தொகையாக் குடுத்து வைச்சிருக்கிறான். அந்தக் காசுகளை வாங்கி நீங்கள் முன்னேறப் பாக்கலாம்தானே! பக்றியிலை இரண்டாயிரம் மூவாயிரம் சம்பளம் என்னத்தைச் செய்யப் போறீங்கள்?'

'அண்ணையிட்டை காசு எங்காலை? சீட்டு முறிஞ்சு அவர் சரியான கஸ்டத்திலை இருக்கிறார். நீங்கள் தெரியாமல் சொல்லுறீங்கள்.'
சீ... வேணி! கொண்ணை தாமோதரனிட்டைக் குடுத்து வைச்சிருக்கிறான். எழுத்துக்கணக்கு ஒண்டுமில்லை. தாமோதரன் சுத்தினாலும் சுத்திப்போடுவார்.' என்றாள் கமலம்.

'நான் அண்ணையிட்டைக் கேட்டு இப்ப கடையிலை போய் நிக்கிறனான்.'

'பிறகென்ன...! ஏன் எங்களுக்கு முதலே சொல்லேல்லை...?' என்றாள் கமலம்.

'தாமோதரன் பொல்லாத ஆள். காசு விசயத்திலை பொல்லாத நஞ்சன். பாத்து நட!'

'அது அண்ணையும் அவரும் பட்டபாடு. எனக்கு அண்ணை சம்பளம் தருவார்.'

'ஓ! அதுசரி. எண்டாலும் ஏன் வேணி மூண்டாம் ஆளிட்டை காசு போக விடுவான். நீங்கள் அந்தக் கடையை வடிவா நடத்தலாமே!'  மனதுக்குள் வேணியைக் குழப்பும் எண்ணத்துடன் கேட்டான்.

'அண்ணையும் அவரும் நல்ல பிறன்ட்ஸ்...... செய்யினம். நாங்கள் அதுக்கை ஏன் குறுக்கை போவான்!'

'சீ! என்ன இப்பிடிச் சொல்லுறாய்! கோகுலன் ஒரு பேய்வெட்டி கணக்குவழக்கொண்டும் பாக்கமாட்டான். எல்லாம் தாமோதரனும் மனிசியும்தான் செய்யிறது!' என்றான் இராகுலன்.

'அதுக்கு நான் என்ன செய்யிறது...? அண்ணையெல்லோ கவனிக்க வேணும்.'

'கொண்ணை வெளுத்ததெல்லாம் பால் எண்டு நினைக்கிறவன். அவனுக்கும் பிஸ்னெஸ்க்கும் ஒத்து வராது. நீ இல்லாட்டி கண்ணன் தான் இதுக்குச் சரி. கோகுலனோடை இதைப்பற்றிக் கதைச்சு தாமோதரனிட்டையிருந்து கடையைப் பறிக்கப் பாருங்கோ!'

'ஏனண்ணை நீங்கள் இப்பிடிச் சொல்லுறீங்கள்?'

'உள்ளதைத்தானே அவர் சொல்லுறார். உப்பிடியே விட்டீங்கள் எண்டால் வெறும் கடைதான் மிஞ்சும்.' என்றாள் கமலம்.

'நீங்கள் இப்பிடிச் சொல்லுறீங்கள் அக்கா!..... அண்ணை தாமோதரமண்ணையை உயிரா நம்பியிருக்கிறார். எனக்கெண்டால் என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.'

'உலகத்திலை நடக்கிறது கேள்விப்படேல்லையே! இலட்சக்கணக்கா சுருட்டிக்கொண்டு எத்தினையோ பேர் மாறியிருக்கிறாங்கள்.'

'நீங்கள் சொல்லுறது விளங்குது. ஆனால் அண்ணைக்கு என்னெண்டு இதை நான் சொல்லுறது!' என்று தயங்கினாள் வேணி.

'மெதுமெதுவாத் தான் சொல்லுறது!' என்ற கமலம்,
'இவ்வளவு நாளும் கேப்பாரில்லாமல் கோகுலன் இருந்தவன். கொக்காவுக்கு அக்கறையேயில்லை. இப்ப நீ தங்கச்சி வந்திட்டாய் சொல்லித்திருத்து!' என்றாள்.


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 26

01.11.2019




வெறுப்பூட்டும் இராகுலன்

பங்குபற்றும் பாத்திரங்கள்        

கோகுலன்
தாமோதரன்  
யசோ  
பரதன்

தாமோதரனின் கடைக்குக் கோகுலன் வந்தான்.
'என்ன மாதிரி சிலோன்.... நீங்களெல்லாம் பெரியாக்கள். ரெலிபோன் எடுத்தாக் குறைஞ்சு போவீங்கள்.' கிண்டலாகக் கேட்டார் தாமோதரன்.
'என்னண்ணை நீங்கள்.... அங்கை போய் ஒரே விசிற்றேஸ். பாக்க வந்த சொந்தக்காரச்சனமெல்லாம் சாப்பிட வரச்சொல்லி ஒரே ஆக்கினை. அம்மாவுக்குக் கொஞ்சம் ஏலாது. டொக்டரிடம் போய் வந்தது ஒருபக்கம்... பொம்பிளை வீட்டுக்காரர் இண்டைக்கு வருவினம் நாளைக்கு வருவினமெண்டு அது பெரும் இழுபாடு! கோவிக்காதேங்கோ அண்ணை!' என்று சமாளித்தான் கோகுலன்.

'அதில்லை கோகுலன், கொஞ்சம் உடுப்பு எடுத்திருக்கலாமெல்லே!'

'கொஞ்சமெண்டு... இரண்டு சூட்கேஸ் கொண்டு வந்தனான்... காருக்குள்ளை இருக்கு. பாருங்கோவன்!'

'போடா! நீயாவது... சூட்கேஸாவது....' என்று நம்ப மறுத்தார் தாமோதரன்.

'உண்மையாத்தான் சாமான் கொண்டு வந்தனான்.'

தாமோதரன் உண்மையை அறிய, கடையைவிட்டு இறங்கி நடந்து, கோகுலனின் காரையடைந்து, எட்டிப் பார்த்தார். கோகுலனும் வந்து காரைத் திறந்தான்.

இரண்டு சூட்கேஸ்கள் இருந்தன.

'நீ பொல்லாத கில்லாடியடா...!' என்று முகத்திலே சந்தோசம் சொரிய, அவன் முதுகில் தடவிவிட்டார்.

'ஓ!' என்று கூறிவிட்டு, தாமோதரனும் கோகுலனும் சூட்கேசுகளைத் தூக்கிக்கொண்டு போய் கடைக்குள் வைத்தார்கள்.

ஆக்கள் நின்றதால், 'பிறகு கதைப்பம்!' என்றவர்,
'மாதவன்ரை கணக்கு என்ன மாதிரி.... கதைச்சனியே...?' கேட்டார்.

'நாளைக்குக் கதைக்கிறன்.'

'நான் அலுவல் முடிச்சிட்டன். வாறமாதம் திறப்புவிழா... மாதவனைச் சம்மதிக்க வைக்கிறது உன்னிலை தான் இருக்கு! உன்னை நம்பித் தான் கடை எடுத்திருக்கு. சரியே!' என்றார் தாமோதரன்.

சாமான்களை எடுத்துக்கொண்டு, இருவர் காசைக் கொடுக்க தாமோதரனிடம் வர,
'நீங்கள் பிஸியாக நிக்கிறீங்கள்... நான்  நாளைக்கு வாறன்!' என்று கோகுலன் வீட்டுக்குச் செல்லக் கிளம்பினான்.

தாமோதரன் பொருட்களைப் பார்த்து, அவற்றிற்கு உரிய காசை வாங்கியவாறு,
'கோகுலன் ஒரு கதை!' என்று அவசரமாகக் கணக்கை முடித்து, அவர்களைப் போகவிட்டு, அவனிடம் வந்து,
'இவன் இராகுலன் கொக்காவோடை சேட்டை விடுகிறான் போலைக் கிடக்கு! உன்ரை சொந்தக்காரன் எண்டதிலை நீயே பாத்துக்கொள்! வேறை ஆருமெண்டால் நானே நாரியைக் கழட்டியிருப்பன்.' என்று ஜானகி அவனுக்கு வெளியிட விரும்பாத இராகுலனின் அட்டகாசத்தை அவிழ்த்துவிட்டார்.

கோகுலனின் முகம் கோபத்தில் சிவந்தது.

'அவனுக்கு என்ன அக்காவோடை பிரச்சனை..! அவன்தானே உந்த மன்றத்துக்குத் தலைவர்.... அது இது எண்டு மதிப்பா இருக்கிறான். இப்பிடி அதுவும் எங்கடை வீட்டிலை வந்து அக்காவோடை தனகியிருக்கிறான் எண்டா... கமலாக்காவுக்குத் தெரியாதோ..?'

'நல்லாத் தெரியும். ஜானகி நேரை சொல்லி, அடுத்தமுறை சொந்தமெண்டும் பார்க்கமாட்டன் பொலிசுக்குப் போவன் எண்டு எச்சரித்து விட்டிருக்கிறாள்!'

'ஏன் அக்கா சொல்லேல்லை...?'

'நீ சண்டைக்குப் போவாயெண்டுதான்! உன்ரை குணம் தெரியும்தானே அவளுக்கு! எனக்குக்கூடச் சொல்லேல்லை. யசோ மனம் பொறுக்கமுடியாமல் சொல்லியிருந்தாள். உனக்குச் சொல்லக் கூடாதாம், தெரிஞ்சமாதிரிக் காட்டிக்கொள்ளாதை!'

'இப்ப போய் அவன்ரை மூஞ்சையை உடைக்கப் போறன்.'

'போ! போய் உடைச்சிட்டு வா! பேய்க்கதை கதைக்கிறாய். ஆளிலை ஒரு கண் வைச்சிரு எண்டதுக்காகச் சொன்னனானே ஒழிய, அவன்ரை மூஞ்சையை உடைக்கச் சொல்லேல்லை.

'அப்ப அந்த றாஸ்கலை சும்மா விடச்சொல்லுறீங்களோ? நான் இல்லாத நேரம் பாத்து இப்பிடி நடந்திருக்கிறான் நாய்! அவனைச் சும்மா விடச் சொல்லுறீங்கள்!'

'சும்மா விடச்சொல்லேல்லை. நேரம் பார்த்துச்  செய்யவேணும். ஆள் ஒரு வண்வே!'

'வண்வே எண்டா எனக்கென்ன.. உடைச்சு நூறாக்கி விட்டிடுவன்... உவங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது தாமோதரனண்ணை.'

'அது சரி! பிரச்சனையளைப் பெரிசுபடுத்தி விடாதை. ஏற்கனவே நீ சரியாக் கஸ்டப்படுகிறாய். இனி அடிதடி.. பொலிஸ் வழக்கு.... எண்டு இழுபடேலுமே! அதோடை அவனுக்கு நாலு மச்சான்மார் இருக்கிறாங்கள். மன்றம் அதுஇது எண்டும் கரிதாஸ் அதுவெளியையும் கொஞ்ச ஜேர்மன்காரர்களை  வைச்சிருக்கிறான். அவன் ஒரு நரி... பொறி போட்டு விழுத்தவேணும்... நான் சொல்லுறதைக் கேள்!'

கோகுலனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அருகேயிருந்த சீமெந்துக்கட்டில் இருந்தவிட்டான். தாமோதரன் சொன்ன காரணங்களை அவனும் யோசித்துப் பார்த்தான்.
'எல்லாம் கஸ்டகாலம்....' என்று தலையையாட்டினான்.

'தெரியுதெல்லே... கவனமா யோசிச்சு நட! பிரச்சனையள் வரேக்கை மூளையைக் கூர்மையா வைச்சிருக்க வேணும். இல்லாட்டி நிமிர முடியாது.'

'சரி, நான் வீட்டை போறன்.'

'ஓ!' வீட்டிலை ஜானகிக்கோ யசோவுக்கோ தெரிஞ்சதாக் காட்டிக் கொள்ளாதை.'


கோகுலனுடன் கதைக்க வேண்டுமென்றிருந்த பரதன் அவனின் வீட்டுப்பக்கமாகக் காரில் வரும்போது அவன் கார் நிற்பது கண்டு, தன் காரை ஓரமாகப் பாக்பண்ணிவிட்டு இறங்கி வந்து, வீட்டுமணியை அழுத்தினான்.

கோகுலன் வந்து வீட்டுக்கதவைத் திறந்தான்.

உள்ளே யசோ இருந்தாள். பரதன் அவளை அங்கு எதிர்பார்க்க வில்லை. 'ஏன் இப்ப வந்தேன்' என்று அவன் மனம் சங்கடப்பட்டது.

'வாங்கோ பரதனண்ணை!' என்று ஆவலாக கோகுலனும்
'வாங்கோ அண்ணா!' என்று யசோவும் முகம்மலர அழைத்தபோது அவன் சங்கடம் சற்றுத் தணிந்தது.

'மாறிமாறி ஒரே பிரச்சினையாக் கிடக்கு!' என்றான் கோகுலன்.

'என்ன பிரச்சனை... சிலோனுக்குப் போனனீர்? கலியாணம் குழம்பினது வரை கேள்விப்பட்டனான்.'

'கலியாணம் குழம்பினதுக்காக நான் கவலைப்படேல்லை. அதுக்குப் பொம்பிளை சொன்ன காரணம்தான் எனக்குக் கவலை.'

'கோகுலன்! கவலைப்படாதை. அவளுக்கு உன்னைத்  தெரியாது. உன்னைப் பற்றி முழுசாகத் தெரிந்து கொள்ளாத ஒருத்தி மாட்டன் எண்டு சொல்ல வேணுமெண்டதுக்காக நுனி நாக்கிலையிருந்து எறிந்த சொற்களுக்கு நீ கலங்குவது அர்த்தமில்லை.'

'அதொரு பக்கம் கிடக்க சீட்டு முறிஞ்சு... அது வேறை கடனாளியாக்கிப் போட்டுது!'

'எவ்வளவு காசு வேணுமெண்டு கேக்க என்னாலை முடியாமல் கிடக்கு! ஏனெண்டா நீ ஐந்நூறு மார்க் கேட்டாலும்கூட தாற நிலையிலை நான் இண்டைக்கு இல்லை. கொள்ளையடிச்ச மாதிரி மனிசிக்காரி கிடந்ததையெல்லாம் வழிச்சுக்கொண்டு போனதும் பத்தாதெண்டு பாங்கிலும் கடன் வைச்சிட்டு ஓடியிட்டாள்.' என்று பரதன் சொல்ல,

'ஓமண்ணை! உங்கடை கஸ்டம் எனக்குத் தெரியும்தானே!' என்றான் கோகுலன்.

'உந்தச் சீட்டெல்லாம் அநாவசியம்... தேவையில்லை எண்டு சொல்ல நினைச்சாலும் கையிலை காசில்லாதவைக்கு ஏஜென்ஸிக்குக் கட்டி ஆளைக் கூப்பிடவோ அக்கா தங்கச்சிக்கு சீதனம் குடுக்கவோ அவசரத்துக்குக் கைகுடுக்கத்தான் செய்யும். நல்லா நடக்கிறதும் இருக்கு... இடையிலை முறியிறதும் இருக்கு... உன்னுடைய கஸ்டகாலம்.'

'இதெல்லாம் என்னாலை சமாளிக்க முடிஞ்சிட்டுது, ஆனா இப்ப ஒரு ஆளை வெட்டியிட்டு ஜெயிலுக்குப் போகவேண்டியவன் நான். அதுதான் யசோவும் நானும் கதைச்சுக் கொண்டிருந்தம்.'

'ஆரை வெட்டவேணுமெண்டு யோசிக்கிறீங்கள்....! அப்பிடி என்ன செய்திட்டார் அந்த ஆள்...?'

'இராகுலனைத்தான்...'

'உங்களுக்கு அவர் சொந்த மச்சானெல்லே!'

'ஊத்தையன். சொந்தக்காரன் எண்டு சொல்லவே நாக் கூசுது.'

'என்ன சொல்லுறாய்! அவர்தானே கூட்டம், விழா எண்டு லெவலா  ஏதோ செய்து கொண்டிருக்கிறார். நீ உப்பிடிச் சொல்லுறாய்...!'

'படிச்சவனாயிருக்கலாம்.... பேச்சாளன் அதுஇதெண்டு  திறமை இருக்கலாம். மனசு சுத்தமாக இருக்கவேணும். அவனிட்டை அது இல்லை. அக்கா தானும் தன்பாடுமெண்டு இருக்கிறா. அவவோட சேட்டை விடுகிறான். மனிசிக்காரி கண்டும் காணாமல் இருக்கிறாள். இதுவும் ஒரு குடும்பம். கிலுசு கெட்டதுகள்!' என்று ஆத்திரம் கொட்டக் கூறியவன், யசோவைக் காட்டி,
'எவ்வளவோ கஸ்டப்பட்டு எடுத்த றெயினிங்கைக்கூடக் கெடுத்துப் போட்டான்.'


வெறுப்பேத்தும் இராகுலன்


'ஏன் இப்பிடியெல்லாம் செய்யிறான்... சீ!' என்று முகத்தில் வெறுப்புக் குவிய, பரதன் மேலும் சொன்னான்.
'வந்த புதிசிலை அப்ப, 'ராம்... நான் எல்லாம் எவ்வளவு உதவி செய்திருப்பம். சாமான் வேண்டாமல் சமைக்காமல் இருப்பான். பாவம் என்று எத்தனைநாள் சாப்பாடு குடுத்திருப்பம். நன்றி மறந்து போய் ஏதோ பெரிய அறிஞன் என்று தலைக்கனத்தில் திரியிறது போதாதெண்டு சும்மா இருக்கிற ஆக்களோடை ஏன் தனகிறான்? என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினான்.

'அக்காவோடை இருக்கிற கோபத்திலை யசோவின்ரை வேலைக்கு உலை வைச்சிருக்கிறான் எண்டால் இவனை ஒரு மனிசன் எண்டு எப்பிடிச் சொல்லுறது...!' என்றான் கோகுலன்.

'என்ரை வேலை போனால் பறவாயில்லை. ஜானகியக்காவை யெல்லே நிம்மதியா இருக்கவிடாராம். அவரவர் செய்யிறது அவரவருக்கு... கடவுள் பாத்துக்கொள்வார். விட்டிட்டு எங்கடை அலுவலைப் பாப்பம்.' என்று கவலையுடன் பகர்ந்தாள் யசோ. இதனைப் பெரிசுபடுத்தினால் அடிதடிவரை போயிடும் என்று பயந்தாள் அவள்.

கோகுலன் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு,
'உங்களுக்கு பாதர் இரக்கப்பட்டு அங்கை இங்கை கேட்டு, ஒரு படிப்பை ஒழுங்குபண்ணித்தர, அதைத் தன்ரை செல்வாக்கைப் பயன்படுத்தி பாழாக்கிவிட்டிருக்கிறான். இப்பிடிக்கொத்தவனை கடவுள் பாத்துக் கொள்ளட்டும் எண்டு எங்களைக் கைகட்டச் சொல்லுறீங்கள்!' என்று கேட்டான்.

'வேறை என்ன செய்யப்போறீங்கள்...? அவரோடை போய்ச் சண்டை பிடிக்கப் போறீங்களா...? இப்ப இருக்கிற பிரச்சனையளுக்கை இது தேவையா? விடுங்கோ! '

'அவன் ஒரு பயந்தாந்கொள்ளி யசோ. அவனை இவனைத் தெரியுமெண்டிட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரியுறான். வழமாச் சந்திக்கட்டும். குடுக்கிறன்!' என்ற பரதன், கோகுலனைப் பார்த்து,

'நீ ஒண்டும் செய்து போடாதை!  கொஞ்சம் பொறுமையாத்தான்  இவன்ரை விசயத்திலை நடக்கவேணும்.' என்று அவனைச் சமாதானப்படுத்தினான்.



` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 25

24.10.2019



கல்யாணம் என்பது வெறும் கனவவோடு போய்விடுமா?

பங்குபற்றும் பாத்திரங்கள்        

ஜானகி 
கோகுலன்
யசோ  
கண்ணன்  
வேணி  
கோகுலன் தனக்கு வேண்டியவர்களுக்கு ஏதோ அன்பளிப்புகள் கொழும்பிலிருந்து கொண்டு வந்திருந்தான்.

ஜானகிக்கும் யசோவுக்கும் கோகுலனின் கலியாணப்பேச்சுக் குழம்பியது பெரும் வேதனையளித்தது. கோகுலனைச் சமாதானப் படுத்த ஆறுதல்வார்த்தைகளை இருவரும் மாறிமாறிக் கூறினார்கள்.

கோகுலன் தனக்குள் கவலை இருப்பதைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. சிரித்துச் சமாளித்தான்.

அப்போ கண்ணனும் வாணியும்  வீட்டுக்கு வந்தார்கள்.
'வாங்கோ! வாங்கோ!' என்று அவர்களை அன்பாக வரவேற்றாள் ஜானகி.

ஜானகி தேநீர் போட எழும்ப, அவளை இருக்கும்படி சொல்லிவிட்டு யசோ சமையலறைக்குச் சென்று தண்ணியைக் கொதிக்க வைத்தாள்.

'அவர்கள் சொந்தக்காரர்கள், சுதந்திரமாகக் கதைக்கட்டும்.' என்று அவள் நினைத்தாள்.
'கண்ணனின் முன்னுக்கு நான் ஏன் இருக்க வேணும்? அவரும் சங்கடப்படலாம்... ஏன் தேவையில்லாத மனக்கஸ்டங்கள்...' என்றது அவள் மனசு.

'அம்மா சங்கிலி தந்து விட்டவவே...?' கேட்டாள் வேணி.

'உனக்கேன் அதை...? கிடக்கிறது பத்தாதே...!' கேட்டான் கோகுலன்.

'கலியாணம் செய்யேக்கை தாறன் எண்டவ! தரவேண்டியதுதானே! அவளுக்கு எல்லாம் கிடக்கு! குடுக்காதேங்கோ எண்டு நீயே சொல்லியிருப்பாய்.'

'ஏன் நான் அப்பிடிச் சொல்லுறன்! என்னிலை பழி போடுறாய்!'

'அவன் ஏதோ பிரச்சனையிலை இருக்கிறான். நீ சங்கிலியும் அதுவும் இதுவும் எண்டுகொண்டு நிக்கிறாய்?' அதட்டினாள் ஜானகி.

'அதுக்கும் இதுக்கும் என்னக்கா...? தாற எண்டதைத் தரலாம் தானே! கிழடுகளுக்குக் கூட இன்னும் ஆசை!'

'உனக்குத்தர வைச்சிருந்ததெண்டு அம்மா சொன்னவ... பிறகு...' என்று நிறுத்தினான் கோகுலன்.
'பிறகு என்னவாம்.... மருமகளுக்குக் குடுக்கப்போறாவாமே!'

'எந்த மருமகளுக்கு...?' என்று குறுக்கிட்டாள் ஜானகி.

'அண்ணைக்கு வாறவவுக்குத்தான்!' என்றாள் அறுத்துறுத்து.

கோகுலன் பதில் சொல்லாமல் வெறுப்போடு தலையாட்டினான்.

'ஏனடி இப்பிடி நடக்கிறாய்? உன்ரை சொத்தை எங்களுக்கேன்? என்ன இது... இவள் இப்பிடிக் கேக்கிறாள்....!' என்று கண்ணனைப் பார்த்தான் கோகுலன்.

'எனக்கு ஒண்டும் தெரியாது... இது உங்கடை சகோதரங்களின்ரை பிரச்சனை. அம்மா சங்கிலி குடுத்துவிடுவா என்று வேணி சொன்னவ! அதுக்கு மேலை எனக்குத் தெரியாது.' என்று தான் தப்ப முயன்றான் அவன்.

'என்ன உங்களுக்குத் தெரியாது எண்டுறியள்... அம்மா எழுதின கடிதம் உங்களுக்குக் காட்டேல்லையே..!' உறுமினாள் வேணி.

அப்போ தேநீருடன் யசோ வந்தாள்.
'பெண்கள் அடங்கி நடக்க வேண்டும் எண்டு சொல்லேல்லை. அடக்கமாயிருந்தால் அது பெண்மையைப் பெருமைப்படுத்தும்... இந்த யசோ மாதிரி.' என்று கண்ணனின் அறிவு ஒரு கோடு கீறிக் காட்டியது.

தேநீரைப் பரிமாறிவிட்டு யசோ திரும்பி நடந்தாள்.

'இரு! எங்கை போறாய்?' என்று அவளைத் தடுத்தாள் ஜானகி.

'கதையுங்கோ! எனக்குக் கொஞ்ச வேலையிருக்கு! முடிச்சிட்டு வாறன் அக்கா!' என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

அவள் போவதைப் பார்த்தான் கண்ணன். அந்தநடையில்கூட ஒரு வித பொறுமை தெரிந்தது.

'என்ன யோசிக்கிறீங்கள்....?' என்று முழங்கையால் கண்ணனுக்கு இடித்தாள்  வேணி.

'ஓ'.... ஓ!' என்று புலனை மீண்டும் பேச்சுக்கு மீளச் செலுத்திய அவன்,
'கடிதத்திலை எழுதிக்கிடக்கு! அதுக்கென்ன இப்ப..?' என்றான் மனைவியின் குணம் தெரிந்தவனாய்.

'சங்கிலி இப்ப அம்மாட்டை இல்லை. முக்கியமான ஒண்டுக்குக் குடுத்திட்டா! வேணுமெண்டாச்சொல்லு நான் வாங்கித்தாறன்...!' என்றான் கோகுலன்.

'சும்மா சொல்லுவீங்கள்... தாறன்.... வாங்கித்தாறன் எண்டு...! ஏன் தேவையில்லாமல்.... இல்லையெண்டா இல்லை. விசயம் முடிஞ்சுது. நானும் கேக்கமாட்டன்.'

'வேணி! இது அம்மாவுக்கும் உனக்கும் உள்ள பிரச்சினை... வேணுமெண்டா ரெலிபோன் நம்பர் கிடக்கு! எடுத்துக்கதை.' என்றான் கோகுலன் அமைதியிழந்தவனாய்.

'வீட்டிலையிருந்து வெளிக்கிடேக்கை இப்பிடியொரு பிரச்சனையோடை வாறதெண்டா நான் அங்கேயே இருந்திருப்பன்.' என்றான் கண்ணன் வேணியைப்  பார்த்து.

'நான் எங்கை பிரச்சனையோடை வந்தனான்...? எனக்குத் தாறதெண்டதைக் கேட்டா, ஆதுக்குப் பேர் பிரச்சனையே...அங்..!' என்று கண்ணனின் வாயை அடக்கிவிட்டு, கோகுலனைப் பார்த்து,
'ஏன் கலியாணம் குழம்பினது?' என்று கேட்டாள்.

'பொம்பிளை வீட்டுக்காரங்களுக்கு என்னைப் பிடிக்கேல்லையாம். மாட்டன் எண்டிட்டினம்.'

'ஏன் பிடிக்கேல்லை...? நல்லாத்தானே இருக்கிறாய்.' என்றாள் வேணி.

'உங்களை  மாதிரி ஒரு மாப்பிளைக்கு அவை குடுத்தெல்லே வைச்சிருக்க வேணும்.' என்றான் கண்ணன் தானும் ஏதாவது கதைக்க வேண்டும் என்ற நிலையில்.

'அவைக்கு விருப்பமில்லையாம். அவள் ரீச்சராக இருக்கிறாள், ஊருக்கை மாப்பிள்ளை கிடைச்சா அங்கையே இருக்கலாமெண்ட நினைப்போ... என்னவோ...!' என்று உண்மையை மறைக்கச் சொன்னாள் ஜானகி.

'ஏனக்கா! உள்ளதைச் சொல்லுங்கோவன்! நான் கலியாணம் செய்யிறது சிலபேருக்குப் பிடிக்கேல்லை. இஞ்சையிருந்தே பொம்பிளை வீட்டுக்காரருக்கு என்னைப்பற்றி எழுதிச்சினமோ இல்லாட்டி ரெலிபோனிலை சொல்லிச்சினமோ தெரியாது.... நான் ஒரு முழுக்குடிகாரனாம்... என்னைக் கட்டத் தான் ஒரு பைத்தியமா என்று பொம்பிளை சொன்னவவாம்.'

'நல்ல பொம்பிளையா இருக்கிறாள், நான் எண்டாலும் இப்பிடித்தான் சொல்லியிருப்பன்.'

'எப்பிடி...? குடிகாரன் எண்டு கொண்ணையைச் சொல்லுறியோ!'

'குடி மட்டுமே...? மிச்சம்....' என்றாள் தமாசும் கலந்து.

கோகுலன் எழுந்து கார்த்திறப்பைப் பொக்கற்றுக்குள்ளால் எடுத்தவாறு வீட்டைவிட்டுக் கிளம்பினான்.

'நில்லடா! எங்கை போறாய்? உன்ரை தங்கச்சிக்குக் கதைக்கப் பேசத் தெரியாதுதானே.' என்று ஜானகி தடுத்தும் அவன் கேட்கவில்லை.
'பிறகு வாறன்!' எண்டவனாய் நடந்தான்.

சமையலறைக்குள் நின்ற யசோ, அமளிப்படுவது கேட்டு எட்டிப்பார்க்க, கோகுலன் பிச்சடிச்சுக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு போவது தெரிந்தது.

'கோகுலன்!' என்றாள் அவள்.

சாத்திய கதவு மெதுவாகத் திறபட, கோகுலன் தலையை மட்டும் உள்ளே நீட்டி, 'என்ன...!' என்றான்.

அதற்குள் யசோ படிகளை அவசரமாகத் தாண்டி, வாசலுக்கு வந்து விட்டாள்.

'எங்கை போறீங்கள்...?'

'றூமுக்கு!'

'நில்லுங்கோவன்! சமைக்கிறனெல்லே... பிளீஸ்!'

'நான் குடிகாரன். என்னை விடு யசோ! சொந்தத்தங்கச்சியே எனக்கு வாழ்க்கை இல்லையெண்டு சொல்லேக்கை... விடு! நான் போறன்.'

அப்போ ஜானகியும் கீழே வந்துவிட்டாள்.
கண்ணன் பாதிப்படிகளைக் கடந்தபடி நின்றான்.

'நான் பகிடிக்கெல்லே சொன்னனான்!' என்றாள் வேணி மேலே நின்றவாறு.

'உங்கடை தங்கச்சியைப் பற்றி உங்களுக்குத் தெரியும்தானே... கோவிக்காமல் உள்ளுக்கு வாங்கோ!' என்று தடுத்தான் கண்ணன்.

'கொஞ்சம் செல்ல வாறன்!'

'சமைக்கத் தொடங்கியிட்டன். இல்லாட்டி நானும் உங்களோடை வந்திடுவன்!' என்று கோகுலனின் காதில் மட்டும் கேட்கும்படி சொன்னாள் யசோ.

கோகுலன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அந்தக்கணம் வேணி சொன்ன வார்த்ததைகள் அடியோடு மறந்துபோக, எழுந்த கோபமும் மாறி, யசோவின் சாந்தமிகு முகம் தெரிந்தது.

'ஏன் போறீங்கள்! எனக்குத் தெரியும் கோபத்திலை பழைய குருடி கதவைத் திறவடிஎண்டு.... எனக்குச் சத்தியம் பண்ணியிருக்கிறீங்கள்.'
என்றாள் ஒரு குழந்தைபோல.

ஜானகி ஏதும் பேசவில்லை. யசோ சொன்னால் கோகுலன் அதை மீறமாட்டான் என்று அவளுக்குத் தெரியும்.

'வா! யசோவோடை போய்ச் சமையலுக்குக் கெல்ப் பண்ணு!'  என்று சொல்லிக்கொண்டு, மீண்டும் படியேறி ஹோலுக்குள் வந்தாள்.

கண்ணனும் மேலே வந்தான்.
'இவன் இவளையே செய்யலாமே! பிறகேன் வேறை கலியாணம் பேசுவான்?' என்று வேணி, அமைதியாக இருந்தவாறு ஒரு குண்டைத் தூக்கியெறிந்தாள்.

ஜானகி அவளை விழுங்கிவிடுவது போலப் பார்த்தாள்.

'கண்ணன்! இவளைக் கூட்டிக்கொண்டு வீட்டை போங்கோ!' என்றாள்.

கண்ணனுக்கு வார்த்ததைகள் வரவில்லை. யசோவும் கோகுலனும் கலியாணம் செய்யலாம் என்று வேணி சொன்னது அவன் மனதைச் சுண்டி இழுத்தது. ஜானகி வேறு வேணியைக் கூட்டிக்கொண்டு வெளியே போகச் சொல்லிவிட்டாள் செய்வதறியாது நின்றான்.

'ஒரு ஐடியா சொல்லக்கூடாதோ....! உன்ரை சொல்லைக் கேட்கானாம் என்ரை சொல்லைக் கேட்கானாம். அவள் சொன்னாத் தலைகீழாயும் நிப்பான் போலைக் கிடக்கு! உனக்கு விளங்கேல்லை, எனக்கு விளங்கிச்சுச் சொன்னன்.. அதுக்கேன் கோவிக்கிறாய்?' என்றாள் வேணி ஒன்றும் நடவாததுபோல.

'வேண்டாம் இந்தக் கதை! தயவுசெய்து வேண்டாம்! எங்களை நிம்மதியா இருக்கவிடு!'

அப்போ கோகுலனும் யசோவும் வந்தார்கள். யசோ சமையலறைக்குப் போக அவன் மீண்டும் ஹோலுக்குள் வந்து சோபாவில் இருந்தான்.

'அண்ணை! ஏன் உனக்குக் கோபம் வருகுது...? நீ முந்திமாதிரி இல்லை.' என்று கோகுலனுக்குப் பக்கத்தில் போய் அவன் கையைப் பிடித்தாள்.

'அவனைச் சும்மா இருக்கவிடு!' என்றாள் ஜானகி. பிறகும் ஏதாவது சொல்லி அவன் மனதை நோகடித்துப் போடுவாளென்ற பயம் அவளுக்கு.

'கதைக்கிறதையும் கதைச்சுப்போட்டு இப்ப நல்லபிள்ளைமாதிரி கையைப் பிடிக்கிறாய்!' என்று  அவள் கையை விடுவிக்கப் பார்த்தான் கோகுலன்.

அவள் விடவில்லை. மாறாக நெருங்கிச் சென்று, மற்றக்கையால் அவன் கழுத்தைச்சுற்றி, தலையால் அவன் தலையில் செல்லமாக முட்டினாள்.

'நீ என்ரை அண்ணையடா! பகிடி... உன்னோடை எவ்வளவு பகிடி, கிண்டல் விட்டிருப்பன்... இப்ப கல்யாணம் செய்து போட்டன் எண்டால் பிறத்தியே...? கோவிச்சுக்கொண்டு ஓடுறாய் என்ன!' என்று கழுத்தைச் சுற்றிய கையால் முதுகில் ஒரு தட்டுப் போட்டாள்;.

கோகுலனின் கண்கள் குளமாகின.
அவனை இழுத்துத் தன் மடியில் போட்ட வேணி,
'அழாதையடா! அவள்... அந்தப்பொம்பிளை என்ரை கண்ணில் பட்டால் குடுமியை ஒட்ட அரிஞ்சுபோடுவன்! பள்ளிக்கூடத்திலை படிப்பிக்கிறாவாம்... பழக்கவழக்கம் தெரியாதவள்!' என்று பல்லை உடைத்து விடுவது போல நெரும்பினாள்.

யசோ தூர நின்று பார்த்துவிட்டு,
'சகோதரம் சகோதரம்தான்' என்று மனதுக்குட் சொல்லிக் கொண்டாள்.

'ஆரெண்டா என்ன... எந்த நாட்டுக்காரியெண்டா என்ன உனக்குப் பிடிச்சவளாக் கூட்டிக்கொண்டுவா! நான் உனக்குக் கட்டி வைக்கிறன்! நீ அந்த ரீச்சர்காரிக்கு முன்னுக்கு வாழ்ந்து காட்டு!' என்றாள் வேணி.

அவள் வார்த்தைகள் யசோவின் காதுகளிலும் வீழ்ந்தன.

'யசோ வருத்தக்காரி. இல்லாட்டி அவளையே உனக்குச் செய்து வைக்கலாம். வேறை நல்ல பிள்ளையாப் பாத்துச்சொல்லு!' என்றாள்  வேணி.

இதுவும் யசோவின் காதுகளில் விழுந்தது. கோகுலன் ஏதோ சொன்னான். அது என்ன...? அவளுக்கு விளங்கவில்லை.

'நான் வருத்தக்காரிதான் ஆனால் என்னைப்பற்றி கோகுலன் என்ன சொல்லியிருப்பான்....!' அவள் நெஞ்சு ஆவலாகத் துடித்தது. ஆனால் அவள் காதில் விழவில்லையே... யாரைக் கேட்க....? ஜானகியை...! சீ... கண்ணனிடம்.... ம்... வேணி... சீ வேண்டாம். தேவையில்லை. அவன் என்ன சொன்னான் எண்டது எனக்கு அநாவசியம்.' என்ற முடிவுக்கு வந்தாள்.

தன்னை வருத்தக்காரி என்று வேணி சொல்லும்போது அவளைப் பார்த்து நெரும்பிக்கொண்டு கோபமாகக் கையை ஓங்கிய ஜானகியின் முகம் யசோவின்  கண்முன்னே வந்தது.

அது அவள் நெஞ்சை நிமிர வைத்தது.
'கலியாணம் செய்துதான் வாழவேண்டுமெண்டில்லை. ஒரு நல்ல அக்கா அல்லது அண்ணன்  இல்லாட்டி ஒரு நல்ல நட்பு ஜானகி போல இருந்தால் போதும் வாழ்க்கையை வாழலாம்.' என்று மனதுக்குள் எண்ணியவாறு தன் வேலையில் ஈடுபட்டாள்.

தொலைபேசியடித்தது. ஜானகி எடுத்தாள்.

'தாமோதரமண்ணை! என்று கோகுலனைப் பார்த்து, 'உன்னோடை கதைக்கப் போறாராம்!' என்றாள்.

'அண்ணை! சுகமா இருக்கிறீங்களே?' என்று தானே ஆரம்பித்தான் கோகுலன்.

'டேய்! வந்து இவ்வளவு நேரமாகுது... ஒரு போன் எடுக்கத் தெரியேல்லையே...'

'வாறன். வரத்தான் இருந்தனான். இஞ்சை தங்கச்சி, கண்ணன் எல்லாம் வந்ததிலை நேரம்போட்டுது! கொஞ்சம் பொறுத்து வாறன் அண்ணை!'

'கடை அலுவல் மறக்காதை என்ன!' என்று திடப்படுத்திக்கொண்டு தொலைபேசி உரையாடலை முடித்தார் தாமோதரன்.

'என்னவாம்?' கேட்டாள் வேணி புதினம் அறியும் ஆவல் தொனிக்க.

'அந்தாளோடை பெரிய தொல்லை!' என்று உண்மையை மறைக்க மனமில்லாமல்
'ஏதோ வரட்டாம்... கடை அலுவலாம். போய்ப் பாத்துக்கொண்டு வாறன்!' என்று விட்டு கோகுலன் புறப்பட எழுந்தான்.

யசோ எட்டிப் பார்த்தாள்.
கோகுலன் அவளை அணுகி,
'கடைக்கதை கதைக்க தாமோதரனண்ணை வரட்டாம். போட்டு வாறன்!' என்றான்.

'போட்டு வாங்கோ! கண்டதையும் சாப்பிட வேண்டாம்! இஞ்சை சமைச்சிருக்கிறன். வந்து சாப்பிடவேணும்.'

'சரி. போட்டு வாறன்!'

'இஞ்சைதானே படுப்பீங்கள்... அக்கா சொன்னா!'

'பாப்பம்.'

'ஓமெண்டு சொன்னா கொஞ்சம் மனதுக்குச் சந்தோசமா இருக்குமே!'

'பாப்பம்!' என்று மீண்டும் சொல்லிச் சிரித்துவிட்டு விரைந்து வெளியேறினான் அவன்.



` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 24

17.10.2019



எலியும் பூனையும்

பங்குபற்றும் பாத்திரங்கள்        

ஜானகி 
யசோ  
கண்ணன்  
வேணி  

'பரதனைத் தெரியும். நல்லாத் தெரியும்.'

'சொன்னபடி கேட்பார். சோலிக்கு வரமாட்டார். பாவம் எவ்வளவு கெட்டிக்காரன்... நல்ல எண்ணங்கள் நிறைந்தவர். பொருத்தமில்லாத பொம்பிளையைக் கட்டினதாலை ஏமாந்து, வாழ்க்கையை இழந்து... பெத்தபிள்ளைகள் டேய்! என்று ஏசுமளவுக்கு பாதாளத்தில் தள்ளப் பட்டு வீழ்ந்து கிடக்கிறார். அந்த மனிசனை நிமிர்த்திவிட உங்களாலை முடியும்.'

'யசோ நீ நல்லாக் கதைக்கிறாய்! ஆமா, அவரைப் பற்றி இவ்வளவு விபரங்கள் எப்பிடித் தெரிஞ்சு வைச்சிருக்கிறாய்?'

'கோகுலன் கொஞ்சம் சொன்னவர், மிகுதியை நேரில் சந்திச்சுத் தெரிஞ்சு கொண்டனான்.'

'பொல்லாத துணிச்சல்காரியா இருக்கிறாய்!'

'பெண்டாட்டியை விட்டிட்டிருக்கிற ஆம்பிளையள் எல்லாரும் என்ன பொல்லாதவையே...?'

'அப்பிடிச் சொன்னனானே?'

'அப்ப ஏன் யோசிக்கிறீங்கள்..? நானும் நீங்களும் பெட்றூமுக்கை படுக்கலாம். பரதன் என்ரை றூமுக்கை இருக்கலாம்.. பிள்ளையளும் சந்தோசப்படுவாங்கள்! ஓமெண்டு சொல்லுங்கோ அக்கா!' என்று கெஞ்சினாள் யசோ.

'எடி! பொம்பிளையள் இரண்டு பேர் நாங்கள் இருக்கிற வீட்டிலை ஒரு ஆம்பிளை... ஒரு சொந்தபந்தமில்லை... இருக்க வைச்சால் பாக்கிற சனத்துக்கு என்ன பதில் சொல்லுறது...?'

'என்னக்கா கேள்வியிது? சனத்துக்குப்பயந்து கொண்டிருக்கிறியள்.'

'மானம் மரியாதை எண்டதுக்குத் தலை வணங்கத்தானே வேணும்!'

'தலை வணங்கிறம்தானே அக்கா. சமுதாயத்துக்கு மாறா நடக்கிறமே... இல்லைத்தானே! நீங்கள் கணவரை இழந்து இத்தனை ஆண்டுகளாய் தனித்து வாழுறீங்கள். பரதனின் மனைவி இன்னொருத்தனோடை ஓடிப்போய்  விவாகரத்துச் செய்து, வேறொருத்தனைக் கல்யாணம் செய்து, பிள்ளையும் பெற்றுச் சந்தோசமா இருக்கிறாள். நீங்கள் இரண்டுபேரும் கல்யாணம் செய்யிறதிலை என்ன பிழையிருக்கு....?'

'நான்தானே சொல்லியிட்டன்... கலியாணம் செய்ய என்னாலை முடியாதெண்டு...!'

'நீங்கள் சொன்னனீங்கள்.. உங்கடை மனதிலை இன்னொரு ஆம்பிளைக்கு இடமில்லையெண்டு... அதைக் காப்பாற்றுங்கோ! ஆனால் கலியாணம் செய்து ஊர்வாயை மூடுங்கோ! அவரும் நீங்களும் நல்ல பிறன்ட்ஸாக இருக்கலாம். யோசிச்சுப் பாருங்கோ! சமூகத்திலை மதிப்போடை, கௌரவமா இருக்கலாம். எல்லாத்தையும்விட பிள்ளையளுக்குப் பெரிய பாதுகாப்பு. இதையெல்லாம் ஏன் சிந்திக்க மாட்டன் எண்டுறியள்?
செத்தவை திரும்பி வரப்போறேல்லை. உயிரோடை இருப்பவை யின்ரை சோகத்தைப் பகிர்ந்து கொள்வதாக நினையுங்கோவன்!'

ஜானகி பதில் சொல்லாமல் இருந்தாள்.

'அக்கா! அடுத்தவைக்குப் பயந்து நாங்கள் வாழமுடியாது. லவன், குசனுக்கும் பரதனிலை நல்ல விருப்பம். உங்களுக்கே தெரியும்.'

'இரண்டாம்; கலியாணம் எண்டதை என்னாலை நினைச்சுக்கூடப் பார்க்க முடியேல்லை.'

'ஏன் நினைக்கிறீங்கள்...ஓமெண்டு செய்யுங்கோ! ஊர்உலகத்திலை நடக்காததே... பிளீஸ் அக்கா!'

'உன்னட்டையிருந்து லேசிலை தப்ப முடியாது. எல்லாவித ஆயுதங்களையும் காட்டி என்ரை வாயை அடைச்சுப் போட்டாய். எண்டாலும் என்னாலை இப்ப பதில் சொல்ல முடியாது. என்னை வற்புறுத்தாதை!' என்றாள் ஜானகி.

அதற்கு மேலும் இந்த விடயத்தைப்பற்றி அவளுடன் கதைத்துப் பிரயோசனமில்லை என்று நினைத்தவளாய்,
'ஓ.கே இனி உங்கடை விருப்பம்.. ஆனால் இராகுலனுக்கு ஒரு பாடம் படிப்பிக்காட்டி அவன் உங்களுக்குத் தொல்லை தந்து கொண்டேதான் இருப்பான்.' என்று எச்சரித்தவளாய் தன் அறைக்குச் சென்றாள் யசோ.


'ரதிக்குப் பெரிய வாய் தானேயொழிய வேறை ஒண்டுமில்லை. நாளைக்கே வேலை எடுக்கலாம் எண்டமாதிரி விளாசித்தள்ளிவிட்டு இண்டைக்குச் சொல்லுறாள், கொஞ்சநாள் பொறுத்து வந்து கேட்டுப்பாக்கட்டாம்.' என்றாள் வேணி கண்ணனைப் பார்த்து.
அவன் வேலையால் வந்து பாத்றூமுக்குள் உடுப்பு மாற்றிக் கொண்டிருந்தான்.

'நீங்கள் எங்கையாவது கேட்டுப்பாருங்கோ!' என்று குரலை இறக்கிக் கேட்டாள்  வேணி.

'பேசாமல் கிட! வேலையும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம்' என்று எச்சரித்தான் கண்ணன்.

'நான் இங்கை முழுநாளும் என்னப்பா செய்யிறது?'

'வீட்டுவேலையைச் செய்! நேரம் தன்னாலை பறந்து போயிடும். பிள்ளை பிறந்தால் அதைக் கவனிக்கவே நேரம் பத்தாது.'

'இப்ப ஏன் பிள்ளைக்கதையைத் தொடங்குறீங்கள்? நான் இப்போதைக்குப் பிள்ளை வேண்டாமெண்டு சொல்லிப்போட்டன். என்னை வேலைக்குப் போக ஓமெண்டு விடுங்கோ! இல்லாட்டிப் பறவாயில்லை நான் போவன்!'

'போ! நல்லாப்போ! கையோடை ஒரு வீட்டையும் பார்! அங்கேயே போய் இரு! இஞ்சை வரவேண்டாம்.'

'என்ன வேறை வீடு பாக்கட்டோ...? இப்பிடிச் சொன்னாப் பயந்திடுவன் எண்டு பாக்கிறீங்களோ...?'

'உன்னைப் பயப்பிடுத்தி எனக்கு என்ன லாபம்.. ஒழுங்கா வீட்டிலை இருந்து, பிள்ளையைப் பெத்து வளர்! நான் வேலைக்குப் போய் உழைச்சுத்தாறன்.'

'கலியாணம் கட்டின உடனை பிள்ளையைப் பெத்திட்டு வீட்டுக்குள்ளை அடைஞ்சு கிடக்கட்டே...?'

'ஏன் அடைஞ்சு கிடக்கிறாய்? பிள்ளையைக் கூட்டிக்கொண்டு பார்க்கிற்குப் போ!'

'என்னப்பா கிரந்தக்கதை கதைக்கிறீங்கள்...?'

'வேலையாலை வந்த என்னை கொஞ்சம் சும்மா இருக்கவிடு! அரிப்பெட்டி போட்டுக் கொண்டிருக்காதை!'

'நான் கதைக்கிறது உங்களுக்கு அரிப்பெட்டி போடுற மாதிரி இருக்கோ?'


'அரிப்பெட்டியைவிட மோசமாக் கிடக்கு! பின்னையென்ன வேலைக்குப் போகவேண்டாமெண்டால் கேக்கவேணும். அதை விட்டிட்டுத் திருப்பித் திருப்பிக் கேட்டுக்கொண்டிருந்தா...?'

'ஏன் வேண்டாமெண்டுறீங்கள்..!'

'கலியாணம் கட்டினால் நேரகாலத்துக்குப் பிள்ளையைப் பெற வேணும்.'

'இரண்டுவருசம் வேலை செய்திட்டுப் பிறகு பெத்தாலென்ன...?'

'என்னோடை அப்ப வந்தவங்களைப் பார்! இரண்டு மூண்டு பிள்ளையளைப் பெத்து, நல்லா முன்னேறி இருக்கிறாங்கள். நாங்கள் இன்னும்  நாளைப் பிற்போட்டா...?'

'ஏன் நான் வேலைக்குப் போனால் காசு வராதா...முன்னேற மாட்டமா? என்ன பாவம் செய்து உங்களிட்டை வந்து கழுத்தை நீட்டினேனோ தெரியாது! சிக்... இந்த உலகத்திலை எத்தினை வடிவான வசதியான பெடியன்கள் இருக்க, உங்களைக் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டிக்கிடக்கு!'

'ஏன் மாரடிக்கிறாய்... விட்டிட்டுப் போவன். இஞ்சை நீ இல்லையெண்டு  ஆர் அழுகிறது...?'

'கழுத்திலை தாலியைக் கட்டி, சீதனத்தையும் வாங்கிப் பொக்கற்றுக்கை போட்டுக்கொண்டு, போற எண்டாப் போகட்டோ...? நீங்கள்  எல்லாம் ஒரு ஆம்பிளை, உங்களுக்கெல்லாம் ஒரு கலியாணம்...' என்றவள் கதவை அடிச்சுச் சாத்திவிட்டுப் போனாள்.

ஒரு பெருமூச்சு விட்டான் கண்ணன். கல்யாணம் என்றது எவ்வளவு சுகமான இன்பமளிக்கும் ஒரு நிகழ்வு... அவனைப் பொறுத்தவரை ஈட்டியும் வாளுமாக... இரவும் பகலும் புரியும் யுத்தகளமாக இருந்தது.

கதவைக் கோபத்தில் சாத்திவிட்டுப் போனவள் என்ன செய்யப் போறாள்... நிஜமாகப் போனால்... என்ற பயம் வளர, அவசரமாக எட்டிப் பார்த்தான். வேணி சமையலறைக்குள் சாப்பாடு சூடாக்கிக் கொண்டிருந்தாள்.

நிமிர்ந்து பார்த்துவிட்டு, 'சாப்பிட்டுப் படுக்கப் போறீங்களோ?' என்று கேட்டாள்.
'இல்லை... ஏன் கேக்கிறீர்...?' என்றான்.

'அண்ணை சிலோனாலை வந்திட்டார். போட்டு வரலாமெண்டு நினைச்சன்.'

'போட்டு வருவம்!' என்று சாப்பிட உட்கார்ந்தான்.
'இவள் ஒரு வித்தியாசமானவள். அடியாபிடியா எண்டாள், இப்ப அறுசுவையுடன் உணவு படைக்கிறாளே! நல்லாயிருக்கு எண்டு சொல்லப்போனால் நக்கலாகச் சொல்லுறதாய் நினைத்து, பிறகும் சண்டையை வளர்ப்பாள்.' என்று எண்ணியவனாய் மௌனமாகச் சாப்பிட்டான்.


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 23

11.10.2019


வேணி வேலைக்குக் போகப்போறாள்?

பங்குபற்றும் பாத்திரங்கள்        

பரதன்  
ஜானகி 
யசோ  
இராகுலன் 
கண்ணன்  
வேணி  

'ஜானகி வந்தால் செய்யலாம். இல்லாட்டி இப்பிடியே இருப்பன். பிள்ளையளையெல்லே அவள் வெறுக்கச் செய்யிறாள். ஏனெண்டே தெரியேல்லை...!'

'இப்பிடியானவைக்கு முன்னாலை நீங்கள் வாழ்ந்து காட்டவேணும். தலை குனியாமல் நிமிர்ந்து நடந்து காட்டுங்கோ! அதைப் பார்த்து அவை தலை குனிவினம்!'

'என்ரை பிள்ளையளை என்னட்டை விட்டாளெண்டால் அதுகளை நான் ராஜாவீட்டுப்பிள்ளைகள் மாதிரி வளர்த்துக் காட்டுவன்.. உங்களைப்போல!'

'என்ரை பிள்ளையள் ராஜாவீட்டுப்பிள்ளையள் மாதிரி வளர்றாங்கள் எண்டுறீங்கள்!'

'நிச்சயமா..!'

'தாங்ஸ்! அவர் இல்லை எண்ட குறையைப் பிள்ளையள் உணரக்கூடாது எண்டு நிறைய முயற்சி எடுத்தன்... அவள் கண்கள் நனைந்தன.'

'என்ரை பிள்ளையள் என்னோடை இருந்தா முதல் வேலையை விட்டிட்டு பாட்ரைம் வேலை ஒண்டைத் தேடிச் செய்து கொண்டு வீட்டோடை இருந்து பிள்ளையளைப் படிப்பிச்சு ஆளாக்குவன்.' என்றான் பெருமூச்சுவிட்டபடி.

'அவள் விடாட்டி பறவாயில்லை, என்ரை பிள்ளையளைப் படிப்பிச்சு ஆளாக்கி விடுங்கோவன்!'

'அதுக்கு...!' என்று பரதன் தயங்குவதை அவள் கவனியாதவளாய் கதவைத் திறந்து கொண்டு தன் வீட்டுக்கு விரைந்தாள்.                        


கண்ணன் வீடு.
தொலைக்காட்சியில் ஏதோ செற்றிங் செய்து கொண்டிருந்தான் கண்ணன்.

வேணி தொலைபேசியில் கதைத்துவிட்டு வந்தாள்.
'எப்பிடி இண்டைக்கு வேலை...?' கண்ணனைப் பார்த்துக் கேட்டாள்.

அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். ஒருநாளும் அவள்  அப்படி ஆர்வமாகக் கேட்டதில்லை.

'என்ன இண்டைக்கு என்னிலை இவ்வளவு அக்கறை...?'

'உங்களிலை இல்லை. உங்கடை வேலையிலை.'

'நான் வேலையிலை சந்தோசமாக இருந்தாத்தானே ஒழுங்கா வேலைக்குப் போய் குடும்பத்தின்ரை நிதிப்பிரச்சனையைச் சோல் பண்ணலாம்... அதுதானே!'

'நீங்கள் உழைக்கிறது எந்த மூலைக்குக் காணும்?'

'என்ன...? என்ரை சம்பளம் எந்த மூலைக்குக் காணுமோ! வடிவா பேசீற் பாக்கிறியோ இல்லாட்டிப் போகடிபோக்கிலை கேக்கிறியோ?'

'உண்மையாத்தான். அவனவன் மாதாமாதம் எவ்வளவு சுழையா அள்ளுறாங்கள்... கடை... அந்த பிஸ்னஸ்... இந்த பிஸ்னஸ் எண்டு... அதுதான் நான்...'

'என்ன கடை போடப் போறியோ...?'

'இல்லை, வேலைக்குப் போகப்போறன்!'

'வேலைக்குப் போகப் போறியோ.... எங்கை வேலை கிடக்கு? எவ்வளவு சனம் வேலையில்லாமல் கிடக்குதுகள். உனக்கு ஆரோ வேலையே தாறான்...!' என்று நளினமாகச் சிரித்தான் கண்ணன்.

'ஏன் சிரிக்கிறீங்கள்...? ரதி வேலைக்குப் போறாள் தெரியுமே!'

'ஓ!'

'அவளிட்டைச் சொல்லியிருக்கிறன், அநேகமாக் கிடைக்கும்.'

'என்ன...!'

'வேலைதான்.'

'சும்மா விசர்க்கதை கதைக்காமல் வீட்டுவேலையை ஒழுங்காச் செய்து பழகு! பிறகு மற்றதைப் பாப்பம்.'

'வீட்டுவேலையை ஒழுங்கா நான் செய்யாமல் வேறை நீங்களே வெட்டி விழுத்துறீங்கள்..?'

'ஒருவேலை செய்ய ஒன்பது மணித்தியாலம் எடுக்கும். உன்னை ஆரும் வேலைக்கு எடுத்தால் பக்றரியைப் பூட்டிப்போட்டு, அவன் வேலை தேடித் திரிய வேண்டி வந்திடும்.'

'நீங்கள் என்ன பெரிய திறமே...? ஒரு அலுவல் சொந்தமா யோசிச்சுச் செய்திருக்கிறீங்களா...? சும்மா பிளேன் வேண்டுவம் பறக்க விடுவம் என்று கற்பனையில் மிதப்பீங்களேயொழிய, ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறீங்களா..?'

'இவ்வளவு நாளும் இந்தவீட்டு அடுப்பிலை பூனைதான் படுத்து எழும்பினது, இப்ப நீ வந்தபிறகுதான் பானை வைச்சு இறக்கிறம். சும்மா ஏன் கொக்கரிக்கிறாய்.... அலுவலைப் பார்த்திட்டுக் கிட!'

'நீங்கள் என்ன வேணுமெண்டாலும் சொல்லுங்கோ! நான் வேலைக்குப் போகத்தான் போறன்!'

'சரி போ!' என்றான் கண்ணன்.

'என்ன சரி போ எண்டுறீங்கள்.'

'ஏன் வேணி பாயிறீர்? ரதி வேலை எடுத்துத் தந்தால் போம்! நான் தடுக்கேல்லை.' என்று அவள் ஆசைக்கு இசைந்தான் அவன்.


தொலைபேசி மணியடித்தது.

நித்திரைத்தூக்கத்தில் றிஸீவரை எடுத்தாள் ஜானகி.

'ஹலோ ஜானகி... ஐ லவ் யூ! என்று ஒலித்தது மறுமுனையில்.

'ஆர் நீ?' என்று அதட்டினாள் ஜானகி.

'என்னைத் தெரியாதோ... நான் உன்ரை கொத்தானடி! கதவைத் திறந்து வை வாறன்!' என்றதும் யார் என்று விளங்கிக்கொண்டாள்.

'இராகுலன்! இனிமேல் சொந்தம் பந்தமெண்டு  பாக்கமாட்டன், பொலிசிலை சொல்லுவன்! வை போனை!'

'குழந்தைப்பிள்ளை மாதிரிக் கதைக்கிறாய். வீட்டுக்கு வாற மகாவிஸ்ணுவை வேண்டாமெண்டு விரட்டுறாய்... கொஞ்சம் மனசு வை! சின்னவயசிலை நானும் நீயும் அப்பா, அம்மா விளையாடேல்லை...!' இரவு குடித்த மதுபானத்தின் உளறல் இன்னும் இராகுலனின் வார்த்தைகளில் பின்னியிருந்தது.

ஜானகி பேச்சை வளர்க்காமல் தொலைபேசியை அடித்து வைத்தவள் கவலை முட்டிக்கொண்டு வர, மீண்டும் படுக்கையில் விழுந்து அழுதாள்.

பக்கத்தில் குசன் படுத்திருந்தான்.

சத்தமாக அழுது அவன் நித்திரையைக் குழப்ப மனமில்லாமல் எழுந்து பாத்றூம் போனாள். நேரம் ஆறுமணி பத்து நிமிடமாகி இருந்தது.

முகத்தைக் கழுவி, சாமியறைக்குப்போய் விளக்கேற்றி, திருநீறும் பூசிவிட்டு, கண்ணீர் வழிந்தோட நின்றாள்.

'இராமா! 'ராமா! எனக்கேன் இந்தச் சோதனை.. பிள்ளையளை வளர்த்து ஆளாக்கிவிடவேணும் எண்டு உயிரோடு இருக்கிறேன். இந்த இராட்சதன் ஏன் என்னோடை வம்புக்கு வாறான்? கடவுளே! நல்ல கணவனைத் தந்து ஆசைகாட்டிவிட்டு பாதியிலே அழித்து விட்டியே.. பிள்ளைகளும் நானும் தவிக்கிற தவிப்பு... ஐயோ கண்ணா...!'

யாரோ நடந்து வரும் அரவம் கேட்டு, கண்ணீரை அவசரமாகத் துடைக்கப் போனாள்.

'அக்கா!' என்று அவளை ஆதரவோடு அணைத்து,
'அழாதேங்கோ...! பிளீஸ் அக்கா...! என்ன?' என்று கேட்டாள் யசோ.

'என்னடி யசோ... இவன்ரை ஆக்கினை தாங்கமுடியேல்லை! சின்ன வயசிலை அம்மா அப்பா விளையாடினனாங்களெண்டு தண்ணியைப் போட்டிட்டு விசர்க்கதை கதைக்கிறான்.'

'கமலமக்காவுக்குத் தெரியாதே...? சொல்லுங்கோவன்! இல்லாட்டி கோகுலன் வரட்டும் சொல்லுவம்.'

'வேண்டாம் யசோ! தேவையில்லாத பிரச்சனையள் வரும்.'

'ஓ.கே அக்கா...! நான் ஒண்டு கேக்கிறன் கோவிக்காதேங்கோ.' என்றாள் யசோ ஜானகியின் கையைப் பிடித்தபடி.

'சொல்லு! உன்னோடை நான் ஏன் கோவிக்கிறன்!'

'கோவிக்கக்கூடிய விசயம் எண்டதிலை சொல்லுறன்.'

'சொல்லு, நான் கோவிக்கேல்லை!'

''ராம்அண்ணாவும் நீங்களும் உயிருக்குயிரா வாழ்ந்தனீங்கள்.  அதை மறக்கமுடியாது. நான் நினைக்கிறன்... எனக்கு அவரைத் தெரியாது... நீங்கள்  சொன்னதை வைச்சுப் பார்த்தால் அவர் ஆத்மா உண்மையிலை சந்தோசப்படும், நான் சொல்லுறதை நீங்கள் செய்தால்....' என்றாள் யசோ பீடிகையுடன்.

'என்னடி பெரிசாக் கதையளக்கிறாய்...? 'ராம்... அவர் 'ராமன்தான்... நாங்கள் எத்தினை தரம் சண்டை போட்டிருப்பம். தேவையில்லாமல் எல்லாம் சண்டை போட்டிருப்பம்... ஆனால் ஒருநாள் கூட அதைக் கோபமா வளர்த்துக்கொண்டது கிடையாது. கருத்துக்களை பெரிசா விவாதிப்பம். மோதிக்கொள்வம். பிறகு கொஞ்சநேரத்திலை இரண்டு பேருமே ஒரு முடிவுக்கு வந்திடுவம்.... போயிட்டார் பாவி..! நான் என்ன பாவம் செய்தேனோ.... கிடந்து  மாயிறன்!'

'இல்லை..... இல்லை ! நீங்கள் ஒரு பாவமும் செய்யேல்லை. சாகிறவைக்குப் பிரச்சனையில்லை. எல்லாத்தையும் அப்பிடியே விட்டபடி அவை போயிடுவினம். இருக்கிறவைதான் பிரச்சனைகளைச் சந்திக்க வேணும்... நீங்கள் நல்ல துணிச்சல்காரி... இத்தனை காலமும் சமாளிச்சிட்டீங்கள்! ஆனால் அக்கா... பரதன் தங்கமான மனிசன் தனியா இருக்கிறார்....'

'வேண்டாம்! பிளீஸ் யசோ! இன்னொரு ஆம்பிளைக்கு என்ரை மனசிலை இடமில்லை.'

'சரி. மனசிலை இடம் கொடுக்காட்டியும் வீட்டிலை இடம்  குடுங்கோ!'  

'எப்பிடியடி...! நீ ஒரு பொம்பிளை எண்டதிலை எங்களோடை இருக்கிறாய்... ஆரும் ஒண்டும் கதைக்க முடியாது. ஒரு ஆம்பிளையை இந்த வீட்டிலை அனுமதிச்சால் பாக்கிறவங்கள் பத்துவிதமா முடிச்சுப் போடுவாங்கள்!'

'பரதனை உங்களுக்குத் தெரியும்தானே அக்கா!'



` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 22

03.10.2019



பரதன் வீட்டுக்குச் சென்ற ஜானகி 

பங்குபற்றும் பாத்திரங்கள்        
யசோ
பரதன்  
ஜானகி 

இரவு எல்லோரும் தூங்கிவிட்டார்கள்.
ரெலிபோன் மணி அடித்தது.
ஜானகி நித்திரைத் தூக்கத்தில் றிஸீவரை எடுத்து, 'ஹலோ!' என்றாள்.
மறுமுனையில் ஒரு முனகல் ஒலி.

'ஹலோ..! ஹலோ!' என்றாள்.
'நீ நல்ல வடிவாய் இருக்கிறாய்.' என்றது அந்தக் குரல்.

'ஆர் நீ...?' என்று கோபமாகக் கேட்டாள் அவள்.

'பேர் சொன்னா என்னோடை வருவியோ...?'

'போடா றாஸ்கல்!' அடித்து வைத்தாள் ரெலிபோனை.

தொலைபேசி மீண்டும் ஒலித்தது.
ஜானகி எடுக்கவில்லை.
பல நிமிடங்கள் போயின.
மீண்டும் ரெலிபோன்மணி ஒலித்தது.

றிஸீவரைத் தூக்கிவைத்து விடுவது என்ற எண்ணத்துடன் கட்டிலை விட்டெழ, 'அக்கா!' என்று யசோ பாதி நித்திரையிலிருந்து எழுந்து வந்தாள்.

'ஆரோ ஒருத்தன் ரெலிபோன் அடிச்சுக்கொண்டே இருக்கிறான்.'

'என்னவாம்...?'

'வெறியோ... விசரோ தெரியாது!'

மீண்டும் அடித்தது.

யசோ எடுத்து, 'ஹலோ!' என்றாள்.

படார் என்று மறுமுனையில் கட்டானது.

'வைச்சிட்டான்!'  என்றாள் யசோ.

'இடைக்கிடை இப்பிடி நடக்குது... ஆனால் இண்டைக்குக் கதைச்சவன், நான் வடிவா இருக்கிறனாம்.. நாய்!' என்று கறுவினாள் ஜானகி.

'வேலை வெட்டியில்லாத ஆரோ வேணுமெண்டு செய்யினம்!'

'நீயும் பாவம். விடிய எழும்பவெல்லே வேணும், போய்ப்படு! இது என்ரை தலைவிதி. இனிப் படுத்தாலென்ன நித்திரை வரப்போதே?'
'யோசிக்காமல் படுங்கோ அக்கா!'

'ஓ! நீயும் படு. போ!'
யசோ தன்னறைக்கு நடந்தாள்.

ஜானகிக்குத் தூக்கம் வரவில்லை.
இது இராகுலனாகத்தான் இருக்குமென்று நினைத்தாள். நீ நல்ல வடிவாய் இருக்கிறாய் எண்டது ரெலிபோனில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது... வேணுமெண்டு வேறை குரலில் கதைச்சிருக்கிறான். அவன் குரல்தான் எண்டு நிச்சயம் செய்தாள்.



பரதன் மத்தியான உணவு அருந்திக்கொண்டிருந்தான். பிற்பகல் இரண்டுமணியாகி இருந்தது. இரவுவேலை. நித்திரையால் எழுந்து, கடையளுக்குப் போய் வந்து, சமைத்து... தனி ஒரு வயிற்றுக்கு ஒரு சோறு.. ஒரு கறி என்று சோகம் கொட்ட.. ஏதோ பசிக்குக் கொஞ்சமேனும் சாப்பிடவேணுமே... சாப்பிட்டான்.

வீட்டுமணியொலித்தது.
சாப்பாட்டை சமையறைக்குள்ளிருந்த குளிர்சாதனப்பெட்டியின் மேல் வைத்துவிட்டு, அவசரமாகக் கையைக் கழுவித்தடைத்துவிட்டு வீட்டுக்கதவைத் திறந்தான்.

எதிர்பார்க்காத அதிசயம்....!
அவன் சில வினாடிகள் அதிர்ந்துபோய் சிலையாக நின்றுவிட்டான்.

'சுகமாக இருக்கிறீங்களா?'

'ஓ!' என்று பதில் சொன்னவன்,
'வாங்கோ ஜானகி!' என்று மனம் நிறைய வரவேற்றான்.

'மனம் சரியில்லை!' என்றாள் ஜானகி.

'என்ன ஏதும் பிரச்சனையே...?'

'ம்....ம்...' என்று தலையாட்டினாள் ஜானகி.

'சாப்பிடுங்கோவன்!'

'தந்தால் சாப்பிடுவன்!'
இருவரும் சமையற்கூடத்துக்குச் சென்றார்கள்.

பிறிச் மேல் சோறும் கோப்பையும் இருப்பதைக் கண்டு,
'இப்பதான் சாப்பிடுகிறியளோ...?' கேட்டாள் ஜானகி.

'ஓ!'

அலுமாரியைத் திறந்து ஒரு கோப்பையை எடுத்து, சிறிது தண்ணீரால் கழுவிவிட்டு, அதற்குள் சோற்றைப் போட்டான் பரதன்.
கறிச்சட்டியைத் திறந்தான்.

'தாங்கோ நான் போடுறன்!' என்றாள்.

பரதன் சோற்றுடன் கோப்பையை அவளிடம் கொடுத்தான். 'கறியைக் கொஞ்சம் சூடாக்கினால் நல்லது!'
அடுப்பை அவன் போட, ஜானகி கறிச்சட்டியை அடுப்பில் வைத்தாள்.

'ஈஸ்வரி எப்பிடி இருக்கிறா...?'

'ஈஸ்வரி அவள் கெட்டிக்காரி. இப்ப ஒரு ஜேர்மன்காரனைச் செய்து இருக்கிறாள்.

'அப்ப சந்திரன்...?'

'அவன் விட்டிட்டுப் போயிட்டான்.'

'இவவுக்கு வேணும், நல்லா அலையட்டும். அப்பதான் படிப்பினை வரும்.'

'அவள் நல்லாயிருக்கிறாள்.'

'அவன் விட்டிட்டுப் போட்டானெல்லோ!'

'ஓ! இப்ப ஜேர்மன்காரன் நல்லா வைச்சிருக்கிறான். நல்ல புதுவீடு.. கார், வேலைக்குப் போறாள். என்ரை பிள்ளையள் நல்லா ஜேர்மன் கதைக்கினம். தமிழ் மறந்தே போச்சு! என்னோடை இருந்தா எட்டியும் பார்க்க முடியாத வாழ்க்கை அவளுக்குக் கிடைச்சிருக்கு! கடவுள் அவளைத் தண்டிக்கவில்லை. பதிலுக்குத் தூக்கி விட்டிருக்கிறார்.'

ஜானகி அவனைப் பார்த்தாள். அவன் கண்கள் ஈரமாகத் தெரிந்தன.

கறியைக் கிளறி அடுப்பை நிற்பாட்டினான் பரதன்.

'எங்கையெண்டாலும் அவள் நல்லாயிருக்கட்டும். பிள்ளையள் என்னை மறந்து போச்சுதுகள்!' நனைந்திருந்த கண்கள் குளமாகி வழிந்தன.

'கடவுளிலை எனக்கு நல்ல விருப்பம். கடவுளுக்கு என்னிலை விருப்பமேயில்லை. என்னென்னவெல்லாம் நினைச்சிருந்தன்! என்ரை குடும்பமே எனக்கு உலகம் எண்டு நினைச்சன். நான் எட்டாததை என்ரை பிள்ளையளைக்கொண்டு எட்டலாமெண்டு கனவு கண்டன். எல்லாம் கானல்நீராப்போச்சு!'

கறியைப் போட்டு, சோற்றைக் குழைத்த ஜானகி சாப்பிட மனமில்லாதவளாய் இருந்தாள். கண்ணீர் வழிந்தது.

'அழாதேங்கோ ஜானகி!'

'குளறியழ வேண்டும்போலிருக்கு!' என்றாள் ஜானகி.

'நெஞ்சு வெடிச்சுச் சாகவேண்டியவன் நான், இன்னும் உயிரோடை இருக்கிறன்!'

'வேண்டாம் பரதன். அப்பிடிச் சொல்லாதேங்கோ!'

'எப்பிடியெல்லாம் இருந்தனான்.  இண்டைக்கு இப்பிடியாப் போச்சு!' அவனின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

'அழாதேங்கோ பரதன்... பிளீஸ்!'

'கடவுள் சிலநேரம் வெறும் சிலையாகவே இருந்துவிடுவார்... நீங்களெல்லாம் எப்பிடி வாழ வேண்டியனீங்கள்... 'ராமுக்கு ஏன் அந்த அக்ஸிடன்ட் நடக்கவேணும்? நீங்கள் பிள்ளையளோடை தனியாக் கஸ்டப்படவேணும்...ஏன்...? கடவுள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்.'

'இது விதி! அழுது தீராது... அனுபவித்துத்தானேயாக வேணும்.'

'உங்களுக்கு அப்பிடி... எனக்கு இப்பிடி...'

'நீங்கள் ஏன் எங்கடை வீட்டுக்கு வாறேல்லை...?'

'நீங்கள் வரவேண்டாமெண்டு சொல்லியிருந்தீங்கள்!'

'நாங்கள் இரண்டு பேருமே துரதிஸ்டசாலியள்.... பாவம் செய்தவர்கள்... என்ன செய்யிறது? இண்டைக்கு என்னையும் மீறித்தான் நான் இங்கை வந்திருக்கிறன். நினைச்சா பயமா இருக்கு! நான் இஞ்சை வந்ததை ஆரும் பார்த்தால்... கனக்க வேண்டாம் கமலமக்கா பார்த்தாப் போதும்... நியூசிலை வந்தது போலை ஊர் முழுக்கப் பிரசித்தமாகிவிடும்.'

'அப்ப நான் உங்கடை வீட்டை வந்தாலும் இதே தானே நடக்கும். கதை கட்டுறவங்கள் அந்த மாதிரிக் கதை கட்டிப் போடுவாங்கள்! ஏன் வீணா அப்பிடி ஒரு தேவையில்லாத அவமானம் உங்களுக்கு?'

'உங்களுக்கு வேறை ஆருமே இல்லையோ..? தனிய இப்பிடிக் கவலையோடை இருப்பதை என்னாலை பார்த்துக் கொண்டிருக்க முடியேல்லை.'

'சமுதாயம் எண்ட ஒண்டிருக்கு ஜானகி! அது எங்களைச் சும்மா விடாது.'

'மனம்விட்டுக் கதைக்கிறதுக்கு எங்களுக்கு உரிமையில்லையா? இதயச்சுமைகளை இறக்கி வைக்க ஒரு மனிசன் இன்னொரு மனிசனைச் சந்திக்கக்கூடாதா?'

'எங்கடை கட்டுப்பாடு, பண்பாடு அப்பிடி... மனச்சுத்தத்தோடு பழகினாலும் அதை மாசுபடுத்த எண்டே சில சனம் இருக்கு!'

'எல்லாத்தையும் பாத்தா வாழமுடியாது. கதைக்கிறவை கதைக்கத் தான் செய்வினம்! அடிதடிக்காரர் வீட்டுக்கதையெண்டா பயத்திலை அடக்கி வைச்சு வாசிப்பினம். அப்பாவிகளின் வீட்டுக்கதையெண்டா பப்ளிக்காகவே பறை தட்டுவினம். இது மனிசஇயல்பு!'

'ஜானகி!' என்றவன் பேசாமலிருந்தான்.

'என்ன...?' என்றாள் அவள்.

'அண்டைக்கு நான் கோகுலனைக் கொண்டு கேட்டது, உங்களைக் கலியாணம் செய்ய விருப்பமெண்டது, உங்களுக்குச் சரியான கோபம் எண்டு அறிஞ்சன், கோவிக்காதேங்கோ! எந்தவிதமான தப்பான எண்ணமும் எனக்கில்லை.'

'நான் கோவிக்கேல்லை. நீங்கள் முறையா ஒழிவு மறைவில்லாமல், உங்கடை மனசுக்குப் பட்டதை வெளிப்படுத்தினீங்கள். இது உங்கடை உரிமை! பிள்ளையளுக்கு நீங்கள்  வந்தால் பெரிய சந்தோசம்!'

'வாறன்! நெஞ்சு நிறைய உங்கள்  நினைப்பு இருக்கு! என்ரை வாழ்க்கைதான் போச்சே. நீங்கள், உங்கடை பிள்ளையள் நல்லா இருக்கவேணும். அதுக்கு என்னாலை முடிஞ்சதைச் செய்ய நிறைய ஆசை. இண்டைக்கு நேரை உங்களைச் சந்திச்சதாலை உள்ளதை அப்பிடியே சொல்லியிருக்கிறன். நீங்களும் கோவிக்காமல் கேட்கிறீங்கள். நான் இண்டைக்கு நல்ல சந்தோசமா இருக்கிறன்.' பூரிப்பு பரதனின் முகத்தில் பூத்துச் சிரித்தது.

அதேவித உணர்வுகள் ஜானகி உள்ளத்திலும் எழுந்து, அவள் சோகஇருளைச் சற்று விலக்கி, கீற்றாக ஒரு ஒளிக்கதிர் அவளது நெஞ்சத்தைத் தொட்டது போல கண்களில் இனம் தெரியாத மலர்ச்சி விரிந்தது.

'எப்ப கோகுலன் வாறார்?' கேட்டான் பரதன்.

'வாற திங்கள்...'

'ரெலிபோன் எடுத்தவரே..?'

'ஓ! எடுப்பான். பொம்பிளை இன்னும் வந்து சேரேல்லை.. அவையின்ரை பதிலைப் பொறுத்து சிலநேரம் ஒரு கிழமை பிந்தி வாற எண்ணம்..!'

'கோகுலன் வரவிட்டிக்கு ஒருநாளைக்கு நான் உங்கடை வீட்டை வாறன்!'

'ஏன் இண்டைக்கு, நாளைக்கு வந்தால் குறைஞ்சு போயிடுமோ...?'

'குறையாது.. நல்லது எண்டு பாத்தன்!'

'ரெலிபோன் எடுக்கலாம்... இல்லாட்டி அதுக்கும் கோகுலன் வரவேணுமோ...?'

'ஓ.கே!' என்றான் பரதன்.

'போட்டு வாறன்!' அவள் வெளியேற நடந்தாள்.

அவனும் கதவுவரை வந்து,
'தாங்ஸ் ஜானகி!' என்றான்.

அவள் நின்று அவனைப் பார்த்தாள்.
சில வினாடிகள் கழிந்தன. அதற்கு மேலும் அவளால் அடக்க முடியவில்லை. அவனருகே போய் நின்றாள்.

பனியில் நடுங்கும் பசுபோல அவள் சோகத்தில் துவண்டு நின்றாள்.

அவளை ஆதரோவோடு தன் கைகளால் அணைத்து, அவள் கூந்தலையும் தடவிவிட அவன் மனம் உந்தியது. ஆனால் அவன் அப்படிச் செய்யாது, அவளைக் கருணையுடன் பார்த்தான்.

அவளும் பதிலுக்குப் பார்த்தவாறு, இரண்டு கைகளையும் அவனை நோக்கி நீட்ட, அவற்றை  அவன் ஆதரவோடு பற்றியபடி,
'நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கவேணுமெண்டு நினைச்சன்!' என்று சொன்னான்.

'உங்களிலை நிறையப்பேர் அன்பு வைச்சிருக்கினம். நீங்கள் நீண்டகாலம் சந்தோசமாக வாழ்வீங்கள்!' என்று ஆறுதற்படுத்தினாள் ஜானகி.

'வாயாலை சும்மா ஆறுதலுக்குச் சொல்லுறீங்கள். ஆனால் உண்மை உங்களுக்கே தெரியும்.'

'என்ன தெரியும்...?'

'நான் ஒரு அனாதையெண்டு தான்!'

'ஆர் உங்களை அனாதை எண்டது?'

'அப்ப என்ரை இந்த வாழ்க்கைக்கு என்ன பெயர்...?'

'பரதன்! ஏன் வொறீஸாகக் கதைக்கிறீங்கள்? நாங்களெல்லாம் இல்லையோ...?'

'இல்லையெண்டு சொல்லேல்லை, 'ராம் இருந்தால் எனக்குத் தனிமையே வந்திராது. ஆனால் அவன்தான்... இல்லையே... உங்களோடை நான் பழகினால் அதை உலகம் உரசிப் பார்க்கும்... வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைக்கும்!'

'உலகம் நல்லது. உலகத்திலுள்ள மனிசர்கள்... அதுவும் ஒருசிலர் தான் அப்பிடி... நல்லவர்கள்தான் இந்த உலகத்திலை அதிகம்... நிறைய நிறைய இருக்கிறார்கள். அவர்கள் நிறையவே மௌனம் சாதித்துவிடுவார்கள். உள்ளதை உள்ளபடி சொல்லவோ, இல்லாததை இல்லையென்று சொல்லவோ துணிவில்லாமல்,
'எமக்கேன் வீண்வம்பு?' என்று ஒதுங்கி விடுவார்கள்.'

'அவர்கள் இருந்தும் இல்லாததுமாதிரித்தானே! ஒரு சிலர் கதை கட்டி விடுவாரே என்று நாங்கள் நல்ல நண்பர்களாகக்கூடப் பழக முடியாதே!' என்றான் ஏக்கத்துடன்.

'நான் 'ராமிலை உயிரையே வைச்சிருந்தன். கணவன் மனைவிக்கு அடுத்தவர்கள் உதாரணம் காட்டக்கூடியதாக வாழ்ந்தனாங்கள். இண்டைக்கு 'ராம் இல்லை. உடலை விட்டு உயிர் போனதுமாதிரி பிள்ளையளுக்காக என்ரை வாழ்க்கை போகுது. பிள்ளையளின் வாழ்க்கைதான் என்ரை வாழ்க்கை என்றாகிவிட்டது.'

'அதை ஆரும் தவறு எண்டு சொல்லேல்லையே! உங்கடை நிலையிலை நான் இருந்தாலும் இதைத்தான்; செய்திருப்பன்.'

'ஆம்பிளை நீங்கள்... நல்ல பொம்பிளையாப் பார்த்து கலியாணம் செய்யுங்கோ!'

'ஜானகி வந்தால் செய்யலாம்


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 21

28.9.2019




நீ கோகுலன் எண்டா நான் தாமோதரன்

 பங்குபற்றும் பாத்திரங்கள்  

கோகுலன்
தாமோதரன்


 தாமோதரனின் கடைக்குப் போனான் கோகுலன்.

'அண்ணை! எப்பிடிச் சுகமா இருக்கிறீங்களே...?'

'சுகத்துக்கு என்னடாப்பா...? என்ன சிலோனுக்குப் போறியாம்.'

'ஓமண்ணை. அம்மா, அப்பாவைப் பாத்திட்டு வரலாமெண்டு பாக்கிறன்.'

'கலியாணம் கட்டப் போறாய் எண்டு சனம் கதைக்குது!'

'அதுவும் தான்!'

பென்னாம்பெரிய பூசனிக்காயைச் சோத்துக்கை மூடி ஒழிக்கிற மாதிரி ஒழிக்கப் பாக்கிறாய்!'

'சீ...சீ.... வீட்டுக்காரர் தெரியாதே ஒரே ஆக்கினையாக் கிடக்கு!  அக்காவும் ஒற்றைக்காலிலை போய்ச் செய்துகொண்டு வா! எண்டு கலைக்கிறா.'

'சரி...சரி.. ஏன் வெட்கப்படுகிறாய்? நல்ல விசயம்தானே. மற்றது இரண்டு மூண்டு தரம் உனக்கு ரெலிபோன் எடுத்தன் எங்கை போறனி..?'

'அக்கா வீட்டைதான் போயிருப்பன். ஏன் சும்மா எடுத்தனீங்களே?'

'இல்லை. காசு கொஞ்சம் தரலாமெண்டு நினைக்கிறன்.'

'என்ன காசு...?'

'என்ன காசெண்டு கேக்கிறாய்...! நான் உன்னட்டை கடை போடேக்கை வாங்கின காசு. நான் கேட்க கேட்க ஒண்டும் சொல்லுறாயில்லை. பக்கத்துக்கடை விடப்போறாங்களாம்.. விருப்பம் எண்டாச் சொல்லு! பங்காச் செய்வம்!'

'எனக்குப் பிரச்சனையில்லை.'

'அப்ப செய்வமடா!' புடவையும் நகையும் அந்தக் கடைக்கை போடலாம். நல்லா ஓடும்!'

'ஒண்டண்ணை! மாதவன் அண்ணைக்குக் காசு குடுக்க வேணும். மாதம் மாதம் வட்டிக்கே உழைக்கிற சம்பளம் போகுது!'

தாமோதரன் யோசித்தார்.
'சீட்டொண்டு தொடங்குது. சேர்ந்திட்டு இரண்டாவது மூண்டாவதிலை கழிவு போனாலும் பறவாயில்லை எடுத்துக்குடு!'

'ஐயோ அண்ணை! சீட்டோ... வேண்டாமண்ணை! ஒருக்காப் பட்ட நட்டம் போதுமண்ணை! யசோவோ அக்காவோ அறிஞ்சால் அடிக்க வருவினம்.'

'எல்லா விசயங்களையும் பொம்பிளையளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. பிறகு சொல்லலாம்.'

'சரி. அப்பிடித்தானெண்டாலும்... என்னெண்டு சீட்டுக் கட்டுறது? வட்டிக்காசு குடுக்கத்தான் சரி!'

'என்னட்டை நீ தந்த பத்து... அது இப்ப ஏழு வருசம்... வட்டியும் முதலும் எவ்வளவு எண்டு பார்!

'உங்களிட்டை நான் வட்டி வேண்டுவனே? என்னண்ணை நீங்கள்?'

'நீ கோகுலன் எண்டா நான் தாமோதரன். உனக்கு நான் இப்ப வட்டியும் தரேல்லை முதலும் தரேல்லை. உன்ரை முதலை நான் பங்காத்தான் கணக்கிலை வைச்சு அதுக்கு லாபம் கணக்குப் பார்த்து, பாங்கிலை வைச்சிருக்கிறன். எவ்வளவு தெரியுமே?'

லாச்சியைத் திறந்து, கணக்குத் துண்டை எடுத்துக் கொடுத்துவிட்டு வியாபாரத்தைக் கவனித்தார்.

கோகுலன் பிரமித்துப் போய் நின்றான்.

'ஒண்டு போட்டு நூறு கொடுப்பான் விவசாயி. நூறை ஆயிரம் ஆக்குவான்; வியாபாரி.'

'அண்ணை! நான் இல்லையெண்டு சொல்லேல்லை. நீங்கள் கஸ்டப் படுகிறீங்கள். உழைக்கிறீங்கள்! சும்மா இருந்த எனக்கேன்?' என்று கேட்டான் கோகுலன்.

'சும்மா இருந்தாலும் முதல் போட்டது நீ! இது ஆதாயம்.'

'அப்ப நீங்கள் கடை போடேக்கை, கொஞ்சம் உதவி செய்  எண்டு கேட்டீங்கள்! தந்தன். அதுக்கு நீங்கள் முதல்... லாபம் எண்டு பெரிசுபடுத்திறீங்கள்.'

'உனக்குத் தெரியும் 'ராமும் நானும் எப்பிடிப் பழகினனாங்கள்  எண்டு.....!'

'அதுசரி...!'

'அப்ப நான் சொல்லுறதைக்  கேள்! உனக்கு காசு வேணுமெண்டா தாறன். இல்லாட்டி இரண்டு பேருமா கடையை எடுத்துச் செய்வம்!'

'பாவக்காய் என்ன விலை...? ஒண்டும் நல்லாயில்லை... அழுகல் பிடிச்சமாதிரிக் கிடக்கு!' என்று சாமான் வாங்க வந்த ஒருவர் கேட்டார்.

'எடுங்கோ! பாத்துப் போடலாம்.' என்று மரக்கறிகள் இருந்த இடத்துக்கு பொலித்தீன்பை ஒன்றை எடுத்துச் சென்று, பாவற்காயை அதற்குள் எடுத்துப்போட்டு,
'வேறை என்ன எடுக்கப் போறீங்கள்?' என்று கேட்டார்.

'அரிசி எடுத்தனான்.  தேங்காய்... புளி... படக்கசற் இது இரண்டும்
ரெலிபோன்கார்ட்டும்.....'

கணக்கைப் பார்த்து, காசை வாங்கி, மிச்சத்தையும் கொடுத்து வழியனுப்பிவிட்டு, கோகுலனைப் பார்த்தார் தாமோதரன்.

'பொம்பிளைப்பிள்ளை ஒண்டை வேலைக்கு வைக்கவேணும். மகள் இடைக்கிடை வந்து உதவி செய்யிறவள். இப்ப படிப்பு... கஸ்டம் எண்டு பஞ்சிப்படுகிறாள்.'

'படிக்கிற பிள்ளையை ஏன் டிஸ்ரப் பண்ணுறீங்கள்...? ஒரு ஆளை வேலைக்கு வையுங்கோவன். நான் றான்ஸ்போர்ட் வேலை ஏதாவது வேணுமெண்டா செய்து தாறன். முந்தியும் சொன்னனான்தானே! கடையிலை நிக்கச் சொல்லி மட்டும் கேட்டிடாதேங்கோ!'

'ஓ! ஓ! நான் கேக்கேல்லை. காரோட்டம் கிழமையிலை இரண்டு மூண்டு தரம் ஓடவேணும். வேலையோடை சமாளிப்பியே!'

'ஓ. அது செய்யலாம்.'

'மாதவனுக்குக் கடன் காசைப்பற்றி இப்ப ஒண்டும் கதைக்காதை. நான் சீட்டுப் போடுறன். சேருகிற காசைக் குடுப்பம். பிறகு கழிவு கொஞ்சம் இறங்க நீ எடுத்து எனக்குத் தா!'

'சரி. கணக்கு வழக்கிலை நீங்கள் பிழை விட மாட்டீங்கள். பார்த்துக் கொள்ளுங்கோ!'
  'அது நான் பாப்பன். நீ கவனமாகப் போயிட்டு வா!' என்று அன்போடு அவனைத் தடவிவிட்டார் தாமோதரன்.

'ஓமண்ணை... சரி போட்டு வாறன்!' என்று விடை பெற்றான்  


ஜானகியின் குழப்பம்

பங்குபற்றும் பாத்திரங்கள்

ஜானகி 
இராகுலன்
கமலம்


ஜானகி வேலையால் வந்திருந்தாள். குளித்து, உடுப்பு மாற்றி, சாப்பிட்டபின் சிறிது ஓய்வாக இருக்கவேணும் போலிருந்தது.

யசோ பள்ளிக்கூடம் போயிருந்தாள். முதியோர் பராமரிப்புக்குரிய பயிற்சிக்கு இடம் கிடைத்ததால்  படித்துக்கொண்டிருந்தாள்.  பயிற்சி முடிந்தால் உடனே அண்மையிலுள்ள முதியோர் இல்லத்தில் வேலை எடுக்கலாம். இந்தப் பயிற்சி படிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது யசோவுக்குப்  பெரிய சந்தோசம். இதுவும் கடவுள் செயல்தான். அவள் வருத்தமாக வைத்தியசாலையில் இருந்தபோது அங்கு வந்த நோயாளிகளைப் பார்வையிட்டு  ஆசீர்வதிச்சுச் செல்லும் போதகர் அவளுக்கு நன்கு அறிமுகமாகி இருந்தார்.
ஒருசமயம் அவர் அவளைப்பற்றி விசாரித்து, அவள் நிலைமையை அறிந்து, இரக்கப்பட்டு, தனக்குத் தெரிந்தவர்கள் மூலமாக இந்த முதியோர் பராமரிப்புக்குரிய பயிற்சியும், அதன்பின் அங்கேயே தொடர்ந்து தொழில்புரியும் வாய்ப்பையும் எடுத்துக் கொடுத்திருந்தார்.

இதனால் வீட்டுவேலைகளை ஜானகியும் யசோவும் வசதிப்படி பகிர்ந்து செய்து வந்தார்கள்.

கொஞ்சம் காலாற இருந்து, அன்று வந்திருந்த ஈழநாடு பத்திரிகையை எடுத்து வாசித்தாள் ஜானகி.

வீட்டுமணி ஒலித்தது. யாராக இருக்குமென்ற கேள்விக்குறியுடன் கதவைத் திறந்தாள். இராகுலனும் அவன் மனைவி கமலமும் நின்றார்கள். இராகுலன் முகம் முழுக்கப் பல்லாகச் சிரித்தான். கமலம் கதவைத் தாண்டி உள்ளே வந்தபடி,
'என்ன, ரெலிபோனும் எடுக்கிறேல்லை, வீட்டையும் வாறேல்லை... கோவம். கீவமே..?' என்று கேட்டாள்.

விருப்பமில்லாத வேளையிலே வந்த வேண்டாத விருந்தினர்கள் என்றாலும் வீட்டுக்கு வந்தவர்களை வாசலிலே வைத்துத் திருப்பி விட ஜானகிக்கு மனம் வரவில்லை.

'வாங்கோ! இப்பதான் வேலையாலை வந்தனான்.' என்று உள்ளே அழைத்து, சோபாவில் இருக்கச் சொன்னாள்.

'எங்கை யசோ...?' கேட்டான் இராகுலன்.

கேட்காததுபோல பத்திரிகையிலே கண்ணை வைத்துக் கொண்டிருந்தாள்.

அன்று ஒருநாள் இராகுலன் வீட்டுக்கு வந்து, கீழ்த்தரமா நடந்து கொண்டதை அவள் இன்னும் மறக்கவில்லை.

'தண்ணி வென்னி குடிக்கிறீங்களோ எண்டு ஒரு வார்த்தை கேட்க மாட்டியே....?' கேட்டாள் கமலம்.

'இப்பதானே வந்தனீங்கள், பொறுத்துப்போடலாம் எண்டு இருக்கிறன். போட்டுத்தாறன்.' என்று மனமில்லாதவளாய் சமையலறைக்கு நடந்தாள்.
அவளுக்குப் பின்னால் இருவரும் எழுந்து சமையலறைக்கு வந்துவிட்டனர்.

'வீடெல்லாம் குப்பையாக் கிடக்கு! பொம்பிளையள் வேலைக்குப் போனால் இப்பிடித்தான் ஒண்டையும் பொறுப்பாச் செய்யேலாது.' என்றான் இராகுலன்.

ஜானகி அவனை நிமிர்ந்து பார்த்தாள். பதில் சொல்லவில்லை. 'இவனுக்கெல்லாம் என்ன விளக்கம் சொல்லுறது..? மீசை நரைச்சும் ஆசை நரைக்காமல் பிற பெண்களைப் பார்த்துக்கொண்டு திரியும் பித்துப் பிடிச்ச உனக்கு என்ரை வீடு குப்பையாக் கிடக்கோ...?' என்று மனதுக்குள் கறுவியபடி, கண்களால் ஒருகணம் அவனைப் பார்த்து சுட்டுவிட்டு,
'காலநேரம் பார்க்காமல் வீடுகளுக்கு விசிற் வந்திடுவியள், உங்கடைவீடு எப்பிடிக் கிடக்கெண்டு அதைப்பற்றி அக்கறைப்பட மாட்டீங்கள். இங்கை வந்து வேலைக்குப் போற பொம்பிளையள் ஒண்டையும் பொறுப்பாச் செய்யேலாதாம்' என்று நினைத்தவளாய், தண்ணீரை அடுப்பில் வைத்துவிட்டுச் சட்டிபானைகளைக் கழுவினாள்.

இராகுலனும் கமலமும் சாப்பாட்டு மேசைக்கு முன்னிருந்த கதிரைகளில் இருந்தார்கள்.

'கோகுலன் சிலோனுக்குப் போட்டானாம், எங்களுக்குச் சொல்லேல்லை!' என்றாள் கமலம்.

'என்னத்தைச் சொல்லுறது...?'

'கலியாணம் செய்யப் போறானாம் பொம்பிளை கொழும்பிலை வந்து நிக்கிறாவாம்.' என்றான் இராகுலன்.

ஜானகி கேட்காததுபோலக் கழுவிக்கொண்டிருந்தாள்.

பதில் வராதது கண்ட கமலம், புதினம் அறியும் ஆவலுடன்,
'என்ன ஜானகி, பொம்பிளை வந்திருக்கிறாவோ..?' என்று சற்று உரத்துக் கேட்டாள்.

'தெரியாது...!' என்றாள் ஜானகி.

'ஏன் மறைக்கிறாய்? ஊரே கதைக்குது. நீ எங்களுக்கு ஒழிக்கிறாய்'

'நான் ஏன் ஒழிக்கிறன்? இது அவன்ரை விசயம்... தன்னோடை பழகிற ஆருக்காவது சொன்னானோ இல்லையோ தெரியாது. நான் ஒருத்தருக்கும் சொல்லேல்லை.'
'உங்கடை தம்பி கலியாணம் செய்யிறது உங்களுக்குத் தெரியாமலிருக்கே...?' நளினம்படக் கேட்டான் இராகுலன்.

'ஒவ்வொருநாளும் வந்துபோறான், ஏன் சொல்லாமல் விடுகிறான்!' சொன்னாள் கமலம்.

'யசோவைச் செய்யேல்லையோ..?' கேட்டான் இராகுலன்.

கழுவுறதை அப்படியே போட்டுவிட்டு, அதிர்ச்சி முகத்தில் குவிய, இராகுலனை விழித்துப் பார்த்தாள்.

'என்ன ஒண்டும் தெரியாதமாதிரிப் பாக்கிறாய்...! யசோவைக் கோகுலன் கலியாணம் செய்யப்போறான் எண்டுதானே எல்லாரும் நினைச்சுக்கொண்டு இருக்கினம்.' என்றாள் கமலம்.

'என்ன கதைக்கிறீங்கள் கமலமக்கா?' ஜானகியின் முகத்தில் கோபம் கோலம் போட்டது.

'ஏன் கோவிக்கிறாய்...? ஊரிலை சனங்கள்  கதைக்கிறதைக் கேட்டனான். அதுக்கு எரிஞ்சு விழுகிறாய் ஜானகி!'

'சனங்கள் எண்டா ஆரைச் சொல்லுறீங்கள்? எங்களிட்டை ஒருத்தரும் இப்பிடிக் கதைச்சதில்லை.'

'உங்களிட்டை இந்தக்கதையை ஆரோ சொல்லுவினமே? நாங்கள் நெருங்கி உங்களோடை பழகினதாலை சொல்லுறம்.'

'நீங்களும் மற்றவை மாதிரிச் சொல்லாமலே விட்டிருக்கலாம். இனிமேல் இப்பிடி ஆருக்கேன் தயவுசெய்து சொல்லிப் போடாதேங்கோ! உங்கள் இரண்டு பேரையும் கையெடுத்துக் கும்பிடுறன்.' என்றாள் ஜானகி பொறுமை இழந்தவளாய்.

அவசரமாகத் தேநீரைக் கலந்து கொடுத்தாள்.
'கெதியாப் போங்கோ!' என்று அவள் மனம் கத்தியது.

'யசோ நல்ல பிள்ளைதான், ஆனால் வருத்தக்காரி. அவளைக் கட்டிப்போட்டு கோகுலன் என்ன செய்யிறது...? அவன் செய்யிறது தான் சரி!' என்றாள் கமலம்.

'என்ன உளறுறீங்கள்...? எனக்கெண்டா விளங்கேல்லை!'

'யசோவும் கோகுலனும் ஒருத்தரையொருத்தர் விரும்பினவை.. உங்களுக்குத் தெரியாதே?' கேட்டான் இராகுலன் கிண்டலாக.

'அப்பிடி அதுகள் பழகேல்லை.' முறித்துச் சொன்னாள் ஜானகி.

'எங்களுக்கேன் தேவையில்லாத கதை! வாங்கோ போவம். கடைக்குப் போய்ச் சாமான்கள் வாங்கவேணும்.' என்று இராகுலனின் தோளில் இடித்தாள் கமலம்.

'போட்டு வாறம்!' என்று இருவரும் எழுந்தனர்.

ஜானகிக்கு கோபம் மூக்கு முட்ட வந்து விட்டது. அடக்கிக்கொண்டு மௌனமாக நின்றாள்.

'வேலையாலை வந்து நிக்கிறாய், நாங்கள் இன்னொரு நாளைக்கு வாறம் சரியே!' என்று கமலம் ஜானகியை நெருங்கி, நாடியில் தடவிவிட்டாள்.

'சரி, போட்டு வாங்கோ!' என்று அவர்களுக்கு விடை கொடுத்தவள். 'யசோவையும் கோகுலனையும் சேர்த்து ஊர் கதைக்கிறதா?' என்று தனக்குள் குழம்பினாள்.

அப்படியிருந்தாலும் அதில் அவளுக்கு ஆட்சேபனை இருக்கவில்லை. இதுவரை அப்படியொரு எண்ணமும் அவளுக்குத் தோன்றவில்லை.


அவர்கள் ஒழிவு மறைவாகப் பழகியதாக அவளுக்குத் தெரிய வில்லை. கதைப்பது, சேர்ந்துபோவது, ஒருவருக்கொருவர் உதவி புரிவது... இவற்றை வைத்துக்கொண்டு காதல் என்று முடிவு செய்வதா....?

அப்படியிருந்தால் கோகுலன் கலியாணம் செய்யச் சம்மதித்து, கொழும்புக்குப் போகத்  தேவையில்லையே!

அவன் கலியாணம் செய்யப்போவது தெரிந்தும் யசோ எந்த எதிர்ப்போ கவலையோ காட்டவில்லையே! வழக்கம் போல அவள் கலகலப்பாக, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறாள்.

எங்கடை சனங்களின் கட்டுக்கதை இது! என்று முடிவுக்கு வந்தவளாய், பாதியில் விட்ட வீட்டுவேலையைத் தொடர்ந்தாள்.



` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 20

18.9.2019


ஜானகியின் அறிவுரையும் வேணியின் வெறுப்பும்

பங்குபற்றும் பாத்திரங்கள்

ஜானகி 
வேணி 

'புருசனோ.. புடலங்காய். தெரிஞ்சிருந்தா கழுத்தை நீட்டியிருக்க மாட்டன்.'

'இப்பிடிச் சொல்லாதை! கலியாணம் கட்ட முந்தி இவன் வேண்டாம் அவன் வேண்டாமெண்டு நல்ல கணவனைத் தேடலாம். கட்டினபிறகு இவன்தான் எல்லாமெண்டு அவனுக்கு அடங்கி வாழக்கற்றுக்கொள்ள வேணும். இல்லாட்டி வாழ்க்கை தொலைந்து போயிடும்!'

'நீயே வாழ்க்கையைத் தொலைச்சுப்போட்டு நிக்கிறாய்! பிறகு எனக்கென்ன வாழ்க்கையைப்பற்றி பாடம் சொல்லிக் குடுக்கிறியோ?'

'எடியே! நான் உன் அக்காவெடி! நான் முந்தி உன்னைமாதிரித்  தான் துடிப்பா இருந்தன். இப்ப எல்லாம் போச்சுதடி...' கண் கலங்கினாள் ஜானகி.

'உன்ரை வயசுக்கு இன்னொரு கலியாணம் கட்டிச் சந்தோசமா இருக்கலாம்தானே! ஆர் உன்னை இப்பிடி அலையச் சொன்னது?'

'பாவங்களுக்குத் தண்டனைகள்  உண்டு. அதுதான் நான் அனுபவிக்கிறன்.'

'ஏன் அக்கா அழுகிறாய்? எனக்கு இந்தக் கலியாணம் சந்தோசத்தைத் தரேல்லை.'

'ஏன் அப்பிடிச் சொல்லுறாய்?'

'அவர், இன்னும் தம்பி, தமக்கை, தாய், தகப்பன் எண்டு காசு அனுப்பிக் கொண்டிருக்கிறார். ஆமான வீடு இல்லை. மற்றவை எல்லாம் எவ்வளவு நல்லா இருக்கினம். ஒரு பழங்கிடையன் காரை வைச்சுத்தள்ளிக்கொண்டு திரியிறார். நல்ல வேலையில்லை. கோர்ட் சூட் போட்ட, படிச்ச ஒருவனா எனக்குப் பேசியிருக்கலாந்தானே! அண்ணை சீதனத்துக்குப் பயந்து, இப்பிடியான ஒரு ஆளை எனக்குக் கட்டித்தந்திருக்கிறார்.'

'வேணி!' அதட்டினாள் ஜானகி.

'இப்ப அவர் உன்ரை புருசன். இப்பிடியொரு வாழ்க்கையாவது கிடைச்சிருக்கே எண்டு கடவுளுக்கு நன்றி சொல்லுறதை விட்டிட்டு என்னடி உளறுறாய்? இப்ப வன்னியிலை இருந்தா எப்பிடி இருக்கும் கொஞ்சம் யோசிச்சுப்பார்!' என்றாள் ஜானகி.

'ஏன்.. எனக்கென்ன தலையெழுத்தே... என்னட்டை வடிவில்லையோ படிப்பில்லையோ... நீங்களெல்லாம் இருக்கேக்கை நான் ஏன் கஸ்டப்படவேணும்?
'வேணி! இருக்கிறதை எறிஞ்சு போட்டு, பறக்கிறதுக்கு எட்டாதை!'

'இருக்கிறது குப்பை. அதை எறிஞ்சா என்ன? கொட்டினா என்ன? நான் ஒண்டும் குறைஞ்சுபோக மாட்டன்.'
'அப்ப ஏனடி கட்டினனீ...? கட்ட முந்தியெல்லோ மாட்டன் எண்டிருக்க வேணும்.'

'எனக்குத் தெரியுமே? நேற்றும் தம்பியார் எடுத்து மில் வாங்கப் போறன் எண்டுறார். இவர் பெரிய கொடைவள்ளல் கர்ணன்.. உடனை ஓம்.. இந்தா அனுப்பிறன்! எண்டு பாங்குக்கு ஓடுறார்.'

'அது அவரின்ரை பிரச்சினை. அவர் குடும்பத்தை அவர்தானே பாக்க வேணும். உன்னைப் பட்டினி போட்டு அப்பிடிச் செய்தாத்தான் பிழை.. பெத்து வளர்த்த தாய்தகப்பனை வேறை ஆர் பாக்கிறது?'

'மற்றப் பிள்ளையள் சிலோனிலை இருக்கினம் தானே, அவையும் பாக்கலாம்தானே!'

'ஊரிலை அவரவர் தங்கடை பாட்டையே பாக்கக் காணேல்லை. அங்கை இருந்திட்டு வந்த நீயே இப்பிடிக் கேட்டா...? பேசாமல் அந்தாளின்ரை சொல்லைக் கேட்டு வாழப்பார்! சும்மா வாய் காட்டாதை!'

'உங்களுக்கு என்ன தெரியும்? இப்பிடிப் பிரச்சனை அவரவருக்கு வரேக்கைதான் தெரியும்.'

'ஏன் எனக்குத் தெரியாதோ?'

'இவ்வளவு நாளும் உழைச்சு என்ன செய்தவர்? வீட்டுக்குத்தானே கொட்டினவர். இப்ப கலியாணம் கட்டியிட்டார், இனி மனிசி பிள்ளையள் எண்டு வாழ வேணுமெண்டா காசு வேணும், சேமிக்கப் பழகவேணும்.'

'எல்லாம் போகப்போகச் சரிவரும். நீ வந்தவுடனேயே நூற்றுக்கு நூறு உன்ரை எண்ணம் போலை நடக்க அவர் ஒண்டும் கொம்பியூட்டரில்லை. கொஞ்சம் கொஞ்சமாத்தான் வழிக்குக் கொண்டு வரலாம்.'

'அது எனக்குச் சரிவராது. வெட்டு ஒண்டு துண்டு இரண்டு எண்டு நடப்பவள் நான்.'

'இதுக்கு மேலை நான் என்ன சொல்ல? அக்கா எண்ட முறையிலை என்ரை அறிவுக்குப்பட்டதைச் சொல்லியிருக்கிறன். பார்த்து நடந்துகொள்! கலியாணம் கட்ட முந்தி அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாம் கூட நிப்பினம். கட்டினபிறகு கணவன், பிள்ளையள்தான் பக்கத்திலை கூட இருப்பினம். கடைசிவரை வரப் போறவையும் அவைதான். இப்ப இருக்கிற வசதிகளைக் கண்டிட்டு நீ துள்ளாதை! இந்த வசதிகளும் எங்களை விட்டிட்டு விலகிப் போகக் கனநேரம் எடுக்காது.' என்ற ஜானகி மணிக்கூட்டைப் பார்த்துவிட்டு, 'எனக்கு நேரமாகுது. நான் போட்டு வாறன்!' என்று விடைபெற்றாள்.

கணவனின் தவறை ஏற்க மறுக்கும் கமலம்

பங்குபற்றும் பாத்திரங்கள்

ஜானகி
கமலம் - இராகுலனின் மனைவி 

ஜானகிவீட்டுக்கு இராகுலனின் மனைவி கமலம் வந்தாள். கதவைத் திறந்துவிட்டவள், வாங்கோ என்று கூட ஒரு வார்த்தை அழைக்க மனமில்லாமல் மினுக்கிக் கொண்டிருந்த உடுப்பைத் தொடர்ந்து மினுக்கினாள்.

'ஜானகி! என்ன பேசாமலிருக்கிறாய்?'

'என்னத்தைப் பேசிறதெண்டு யோசிக்கிறன்.'

'எத்தினை நாள் கழித்து வந்திருக்கிறன், பேசுறதுக்கே கதையில்லை?'

'எனக்கு மனம் சரியில்லை. நீங்கள் போட்டு இன்னொரு நாளைக்கு வாங்கோ!'

'ஏன் கோவிக்கிறாய்?'

'எனக்கு ஒருதரோடும் கோபமில்லை. நானும் பிள்ளையளும்  தனியா இருந்தாலும் நிம்மதியா இருக்கிறம். அதைக் கெடுக்காமல் இருங்கோ! உங்கடை புருசனை இஞ்சை வரவேண்டாமெண்டு சொல்லுங்கோ... நீங்கள் இல்லாதநேரம் இங்கை வந்து, தனியா இருந்த என்னை என்னவெல்லாம் கேட்டவன் எண்டு கேளுங்கோ!'

'அவர்  உன்ரை கொத்தான்.... எனக்குத் தெரியுமே என்ன கேட்டவரெண்டு!'

'கலியாணங்கட்டி பிள்ளையளும் வளந்திட்டுதுகள்...மனிசர் மாதிரியே நடக்கினம்...?'

'ஏன் ஏதோ பிழையா நடந்தவரே?'

'என்னக்கா சாதாரணமாக் கேக்கிறீங்கள்? உங்களுக்காக விட்டனான். இல்லாட்டி பொலிசுக்குச் சொல்லி, ஜெயிலுக்கு அனுப்பியிருப்பன்.'

'என்ன ஜானகி குழந்தைப்பிள்ளை மாதிரி...? அவர் பியரைக் குடிச்சா என்ன கதைக்கிறதெண்டு தெரியாமல் ஏதேனும் கதைச்சிருப்பார். நீ இதையெல்லாம்; பெரிசுபடுத்துறாய்!'

'குடிச்சாக் குடிச்சிட்டு வீட்டிலை படுக்க வேணும்  கமலமக்கா. அடுத்தவீட்டை போய் இன்னொருத்தன்ரை மனிசியின்ரை புடவையை பிடிக்கக்கூடாது!'

'முறைமச்சான் எண்டிட்டு பகிடிபகிடியா அப்பிடி இப்பிடியேதும் செய்திருப்பர். இதுக்குப் போய்க் கோவிக்கிறாய்!'

'அக்கா! நீங்களும் ஒரு பொம்பிளை... உங்கடை புருசன் நடந்த விதத்துக்குக் கோவிக்காமல் வேறை என்னக்கா செய்யிறது?'

'வடிவா இருக்கிறாய். ஸ்ரைலாத் திரியிறாய். ஆம்பிளையளுக்குப் பார்க்க ஆசையாயிருக்கு! நாங்கள் பொம்பிளையள்தான் கொஞ்சம் அடக்கமா இருக்கவேணும்.'

'வீட்டிலை இருந்த என்னட்டை வந்து, நடக்கக்கூடாத விதத்திலை அநாகரிகமா நடந்திட்டுப் போயிருக்கிறார். அவருக்கு வக்காளத்து வாங்குறீங்கள். வெளிநாட்டிலை வேலை செய்யிற நான் வெள்ளைச் சேலை கட்டிக்கொண்டு மூலைக்குள்ளை இருக்கேலுமே...?'

'அப்பிடி அடக்கமா இருந்தா ஆரும் வராயினமெண்டு சொல்லுறன்.'

'இஞ்சை ஆரும் வரேல்லை... உங்கடை புருசன்தான் வந்தவர்... எனக்கு ஒரு கதையும் வேண்டாம். நீங்களோ அவரோ இனிமேல் எங்கடை வீட்டை வரவேண்டாம்.... தயவுசெய்து வரவேண்டாம்! என்னை நிம்மதியா இருக்க விடுங்கோ!'

கமலம் எழுந்து கையை விரித்து, முகத்தை நெளித்துவிட்டு வெளியேறினாள்.

குசனின் கவலை

பங்குபற்றும் பாத்திரங்கள்

லவன்
குசன்

லவன் படித்துக்கொண்டிருக்க, அவனிடம் குசன் கவலையுடன் வந்தான்.

'லவன்!'

'என்ன..?'

'அம்மா கலியாணம் செய்தா எவ்வளவு நல்லது..'

'ஏன்டா...?' என்று புத்தகத்தை மூடிவிட்டு, தம்பியாரைப் பார்த்தான்.

'அம்மா கலியாணம் செய்தா எங்களுக்கொரு புதுப் பப்பா வருவாரெல்லேடா...!'

'அதை அம்மாவைப் போய்க் கேளன்!'

'நீயும் வாடா...!'

'அம்மாவுக்குக் கலியாணம் செய்ய விருப்பமில்லை.'

'ஏனடா? அப்பா ஒருத்தர் இருந்தால் எவ்வளவு நல்லது! டேவிட்.. அவன்ரை அம்மாவும் கலியாணம் செய்து அவனுக்குப் புதுஅப்பா வந்திட்டார்.' என்று உதாரணம் காட்டினான் குசன்.

'டேவிட்டின் அம்மா ஜேர்மன்காரி. நாங்கள் தமிழர்... எங்கடை ஆக்கள் அப்பா இல்லாட்டி திரும்பக் கலியாணம் செய்யிறது குறைவு!' என்றான் லவன்.

'பரதன்மாமா மாதிரி ஒரு அப்பா எண்டால் அம்மாவுக்கும் விருப்பமாயிருக்கும்.' என்று மேலும் சொன்னான் குசன்.

'அம்மாவுக்கு அப்பாவைத் தவிர வேறை ஒருத்தரிலும் விருப்பமே இல்லை.' என்று தாயின் மனக்கிடக்கைகளைத் தம்பியாருக்குக் கூறினான் லவன்.

கோகுலனுக்குத் திருமணப்பேச்சு

பங்குபற்றும் பாத்திரங்கள்

கோகுலன்
யசோ

கோகுலன் கொழும்புக்குச் செல்லத் தயாரானான். அவன் தாயும்  தகப்பனும் ஏற்கனவே கொழும்பில் தங்கியிருந்தார்கள். ஊரிலே அவனுக்குப் பொம்பிளை பார்த்து கொழும்புக்கு வருகிறா. பார்த்துப்பேசிப் பொருத்தமென்றால் திருமணமும் செய்யும் தீர்மானமும் இருந்தது.

முதல் ஒரு பெண் பார்த்து அவனுக்கு அனுப்பி வைக்கும் தறுவாயில் யாரோ வேண்டாதவர்கள் இல்லாததையும் உள்ளதையும் பெரிதுபடுத்திக் காட்டிக் குத்திவிட்டார்கள்.
இதனால் இரண்டாந்தரம் அதே பிசகு எழக்கூடாது என்று ஜாக்கிரதையாக இருந்தான்.
பயணத்துக்கு முதல்நாள் யசோவைச் சந்தித்து விடைபெறச் சென்றான்.

'மாப்பிள்ளை வாங்கோ!' என்றாள் யசோ. அவன் இலங்கை போய் வர இருப்பது ஏற்கனவே அவளுக்குத் தெரியும். முகத்தில் வாட்டம் இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் பூசி மறைக்க முகத்தில் சிரிப்பை விசேடமாக அழைத்திருந்தாள்.

'சிலோனிலிருந்து என்ன வேண்டிக்கொண்டு வாறது...?'

'ஒண்டும் வேண்டாம். நீங்கள் பத்திரமாப் போட்டு வந்தால் அதுவே போதும்!' என்றாள்.
'எதாவது கொண்டு வந்தால் வேண்டாமெண்டு சொல்லுவீங்களா...? சந்தோசப்படமாட்டீங்களா..?'

'நான் ஒரு வருத்தக்காரி. நான் சந்தோசமாக இருந்தாலென்ன இல்லாட்டியென்ன... ஆருக்கு நட்டம்?'

'உங்களை ஆர் வருத்தக்காரி எண்டது? ஏன் இப்பிடிக் கவலையாக் கதைக்கிறீங்கள்?'

'ஒண்டுமில்லை!'

'நான் சிலோனுக்கெல்லே போட்டு வரப்போறன். சிரிச்சுக்கொண்டு வழியனுப்புறதுக்கு அழுகிறமாதிரி இருக்கிறீங்கள்.'

'நீங்கள் நல்லாயிருக்க வேணும். சந்தோசமாப் போட்டு வாங்கோ! அம்மா, அப்பாவுக்கு அடுத்தபடியா உங்களிலை உயிரையே வைச்சிருக்கிறன். கவனமாப்போய் பொம்பிளையை உங்களுக்குப் பிடிச்சுக்கொண்டால் கலியாணம் செய்து கொண்டு வாங்கோ! என்ரை வாழ்த்து என்றைக்கும் உங்களுக்கு இருக்கும்!'

'யசோ! கலியாணத்துக்கு நான் அவசரப்படேல்லை. அம்மா ஒற்றைக்காலில் நிக்கிறா. எத்தினைதரம் மாட்டன் எண்டு சொல்லுறது. இது நல்ல இடமெண்டு அப்பாவும் சேர்ந்து மறுப்புத் தெரிவிக்கமுடியாதளவுக்கு ரெலிபோனிலை சொல்லியிட்டினம்.'

'கலியாணம் எண்டது இந்த வயதிலைதான் செய்யிறது. மினுமினுப்பா, கம்பீரமா, தலையிலை அடர்ந்த கறுத்தமுடி இருக்கேக்கை, வயிறு தொந்திவிழ முதல் செய்யேக்கை ஒரு அழகு இருக்கு! போய்ச் சந்தோசமாச் செய்திட்டு வாங்கோ!'

'என்ன... இண்டைக்குக் கனக்கக் கதைக்கிறீங்கள்?'

'நீங்கள் வருமட்டும் இங்கை பம்பலில்லை போறடிக்கும்.'

'இரண்டு கிழமை லீவிலைதானே போறன். டக்கெண்டு வந்திடுவன்.'

'கலியாணம் செய்தால் பிறகு மனிசியைக் கவனிக்கவே நேரம் போதாது. பிறகெங்கை மற்றவையைக் கவனிக்கிறது?'

'ஏன் அப்பிடி நினைக்கிறீங்கள்? என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே!'

'உங்களைப்பற்றி நல்லாத் தெரியும். ஆனா கலியாணம் செய்தா அநேகமான ஆம்பிளையளின்ரை பாதிக்குணங்கள் பதுங்கி ஒழிச்சிடும். மனைவியின் மீது கொண்ட பாசத்தாலோ அல்லது பயத்தாலோ தெரியாது. இதை அநேகமான  இடத்திலை நான் பாத்திருக்கிறன்.'

'கோகுலன் வித்தியாசமானவன்!'

'யசோவும் வித்தியாசமானவள்தான் ஆனால் ஆரையும் கவலைப் படுத்தமாட்டாள்.'

'நீங்கள் சொல்லுறதைப் பாத்தால் நான் யாரையோ கவலைப்படுத்திற மாதிரியெல்லோ கிடக்குது!'

'நான் விசரி ஏதோ உளறுறன். நீங்களும்  என்னை மாதிரித்தான்  ஆரையும் கவலைப்படுத்தமாட்டீங்கள். ஒண்டுக்கும் யோசிக்காமல் சந்தோசமாப் போட்டு வாங்கோ!'

'அம்மா, அப்பாவைப் பார்க்கத்தானே வேணும். யாழ்ப்பாணம் போகப்போயினமாம். அங்கை போனா பிறகு கஸ்டம்தானே!'

'ஓ! பின்னையென்ன.... போய்ப்  பாத்திட்டு வாங்கோ! யாழ்ப்பாணம் பிறகு போகலாம்தானே, அப்ப நானும் வாறன்.'

'உங்களுக்கும் ஊர் ஆசை வந்திட்டுது!'

'பெற்ற தாய், தந்தை, பிறந்த ஊர், கும்பிட்ட கோவில் இதெல்லாத்தையும் விட்டிட்டு இங்கை வந்து ஏதோ வாழுறம். அதெல்லாம் உயிரோடை ஒட்டிய பந்தங்கள். மரணம்வரை கண்முன்னே நிற்பவை!'

'என்ன செய்யிறது....? இதுதான் விதி என்றிட்டு இருக்கிறது. வாழ்க்கை வாழவேணுமே! சரி உங்களுக்கு என்ன கொண்டு வாறது...? சொல்லுங்கோவன்.'

'மயூரி அம்மன் கோவிலுக்குப் போகேலுமென்றால் ஒரு அர்ச்சனை செய்யுங்கோ!'

'ஆர் பேருக்கு...?'

'சும்மா ஒரு அர்ச்சனை. அம்மாளுக்குத் தெரியும்.'

'உங்களுக்குக் கலியாணம் சீக்கிரமாக் கைகூட வேணுமெண்டு தானே!' கேட்டான் கோகுலன்.

'இதைவிட வாழ்க்கையிலை வேறை ஆசையளே இல்லையா...?

'ஒரு பெண்ணுக்கு திருமணம் எண்டது வாழ்க்கையிலை முக்கியமான ஒண்டுதானே.'

'எனக்கில்லை....!'

'ஏன்?'

'எனக்கு அதைவிட வேறை பெரிய ஆசைகள் இருக்கலாமெல்லே!'

'இருக்கலாம். அது என்னெண்டு சொன்னால் தானே. நானும் சேர்ந்து அர்ச்சனையின் போது கும்பிட முடியும்.'

'எனக்கு உயிராய் இருப்பவ ஜானகியக்கா. அவ நல்லாயிருக்க வேணும் எண்டதுதான் என்ரை பெரிய ஆசை.'

'அப்ப நான் நல்லாயிருக்கவேணுமெண்டு கும்பிட மாட்டீங்களா?'

'நீங்கள் நல்லாயிருப்பீங்கள். உங்களைக் கட்டப்போறவ ஒண்டுக்குப் பத்துத் தடவை சுத்திச்சுத்திக் கும்பிடுவா.'


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 19

14.9.2019



கீரியும் பாம்பும்

பங்குபற்றும் பாத்திரங்கள்;
கோகுலன்
யசோ
பரதன்
ஜானகி
லவன்
தாமோதரம் அண்ணை
வேணி
கண்ணன்                                                                                                                                
ராம் - ஜானகியின் கணவர் பெயர்


அப்போ தொலைபேசிமணி அடித்தது.

'நான் பரதன் இஞ்சை ஆஸ்பத்திரியிலையிருந்து கதைக்கிறன்.'

'சொல்லுங்கோ பரதனண்ணை என்ன ஆஸ்பத்திரியிலை நிக்கிறீங்களோ...?'

'ஓ! குசனை இஞ்சை கொண்டு வந்து மருந்து கட்டுப்படுது!'

'என்ன நடந்தது...?' பதறினான் கோகுலன்.

'ஒண்டுமில்லை. எல்லாம் சுகம். அறிவு வந்திட்டுது. இப்ப உடனை விடமாட்டினம் எண்டுதான் நினைக்கிறன். நாளைக்கு விட்டிடுவினம்.'

'நாங்கள் வாறம்! எத்தினையாம் வார்ட்...? ஓ...ஓ! எங்கை கண்டனீங்கள்? ஓ! அந்த பவுஸ்ரெல.... பெரிய கிடங்கு வெட்டி வைச்சிருக்கிறாங்கள்.... அதுக்கையோ... ஐயோ! அங்கை நீங்கள் எங்கை போனனீங்கள்? ஓ... நன்றி பரதனண்ணை... நன்றி. கடவுள் மாதிரி நீங்கள் வந்திருக்கிறீங்கள்!'

'புகழாதையும். உங்களை மாதிரி நானும் தேடிக்கொண்டு திரிஞ்சனான். ஒரு ஊகத்திலை அந்த றோட்டுவேலை நடக்கும் இடத்துக்குப் போய்ப் பாத்தனான். அது ஒரு பயங்கரமான இடம். ஏன் அப்பிடிச் செய்து வைச்சிருக்கிறாங்களோ தெரியாது. சரி! அப்ப வாங்கோ! வந்து கதைக்கலாம்.'

'ஓ! வைக்கிறன்.' என்று முகம் சிரிக்க ரிஸீவரை வைத்தான்.
'குசன் கொஸ்பிற்றல்லை இருக்கிறான்... றோட்டுவேலை செய்யிற கிடங்குக்கை விழுந்து பாதிமயக்கத்திலை கிடந்திருக்கிறான்... பரதனண்ணை  ஊரெல்லாம் தேடித் திரிஞ்சு போட்டு, அங்கையும் போய்த் தேடியிருக்கிறார். கண்டிட்டு அம்புலன்சுக்கு அடிச்சு ஆஸ்பத்திரியிலை சேர்த்திட்டு, இஞ்சை அடிச்சவர்.'

ஜானகிக்கு அழுகை மேலும் பொங்கிக் குமுறியது. எழுந்துபோய் 'ராமின் படத்தைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

யசோ அவளின் கண்ணீரைத் துடைத்து,
'அக்கா! அழாதேங்கோ. கும்பிட்ட தெய்வம் எங்களைத் தவிக்க விடாது. வாங்கோ! போட்டு வருவம்...' என்று அழைத்தாள்.

அப்போ தாமோதரன், 'நீங்கள் போய்ப் பாருங்கோ! இந்த நேரத்திலை நாங்கள் வந்தால் சரியில்லை.... விடியப் போறம்.' என்று சொல்லி, வீட்டுக்குப் போக எழுந்தார்.

அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் செல்ல, கோகுலன், ஜானகி, யசோ, லவன் எல்லோரும் வைத்தியசாலைக்குச் சென்றார்கள்.

குசனின் உடலில் பல இடங்களில் உரசலும் காயங்களும். கட்டுக்கள் போடப்பட்டிருந்தன.

'பயப்படும்படி ஒண்டுமில்லை. எக்ஸ்றே எடுத்து எல்லாம் ஓ.கே. நாளைக்கு வீட்டுக்கு விடலாமெண்டு டொக்டர் சொன்னவர்.' என்றான் பரதன்.

'ஜானகி, பரதனை அணுகி,
'உங்கடை கால்லை விழுந்து வணங்கவேணும் போலக் கிடக்கு.. கடவுள் மாதிரி வந்து என்ரை பிள்ளையைக் காப்பாற்றி இருக்கிறீங்கள்... தாங்ஸ் பரதன்.' என்றாள்.

'இப்பிடி ஏன் பெரியவார்த்தையள் சொல்லி என்னை அளவுக்கு அதிகமாப் புகழுறீங்கள்? நான் அப்பிடியொண்டும் அதிசயமாச் செய்யேல்லை. நீங்கள் தேடினமாதிரி நானும் தேடினனான்... தாமோதரனண்ணை தான் எனக்கும் சொன்னவர். தெரிஞ்சதும் உங்கடை வீட்டை வந்து ஆறுதல் சொல்ல நினைச்சன்... பிறகு தேடிப்பாத்திட்டு வரலாமெண்டு இருந்தன்...!' என்றான் பரதன்.


ஒருநாள்.
கண்ணன் வீட்டிலே காலை ஏழு மணிபோல தொலைபேசிமணி அடித்தது.

நித்திரையில் இருந்த வேணி, திடுக்கிட்டு விழித்து, அரைத்தூக்கத்தில், 'ஹலோ!' என்றாள்.

'அண்ணி! நான் யாழ்ப்பாணத்திலையிருந்து சுந்தரம் கதைக்கிறன். சுகமா இருக்கிறீங்களே?'

'சுகமா இருக்கிறம்! பொறும், அண்ணையிட்டைக் குடுக்கிறன்.'

'கதையுங்கோவன் அண்ணி....' என்ற சுந்தரத்தின் வார்த்தைகளைக் கேட்க வேணி அங்கில்லை. அவள் றிஸீவரைக் கீழே வைத்துவிட்டு, கண்ணனை எழுப்பிவிட்டாள்.

'அண்ணை கதைக்கிறன்... என்ன சுந்தரம்...சும்மா எடுத்தனியே?'

'அண்ணை! மெயின்றோட்டிலை இருந்த மில் விற்கப்போயினம். மலிவா எடுக்கலாம். வேண்டட்டே..? எனக்கும் இப்ப வேலையில்லை. அத்தானும் இங்கை சும்மா இருக்கிறார். வாங்கினா எல்லாருக்கும் நல்லது....'

'நம்பரைத்தாவன்! நான் எடுக்கிறன்.'

'பிரச்சனையில்லை. விபரத்தைக் கடிதத்திலை எழுதுறன். இரண்டு லட்சம் ரூபா. நாங்கள் ஒண்டரை கேட்டிருக்கிறம். என்ன செய்யிறது?' என்று கண்ணனிடம் ஆவலுடன் விடயத்தைக் கூறினான் சுந்தரம்.

'ஓம் எண்டு சொல்லு! நான் இரண்டு லட்சம் அனுப்புறன்!'

'சரியண்ணை. அனுப்புங்கோ! ஓமெண்டு சொல்லுறம். அத்தான்ரை எக்கவுண்டுக்கு அனுப்புங்கோ!'

கண்ணன் தொலைபேசியை வைத்துவிட்டு பாத்றூம் போய்வந்து, மீண்டும் படுக்கையில் சரிந்தான். பஞ்சி அலுப்பு இன்னும் கொஞ்சம் தூங்கச் சொன்னது.

படுத்திருந்தபடி,
'மில் ஒண்டு மலிவா வந்திருக்காம். தம்பி வேண்டப்போறானாம்.' என்று வேணியைப் பார்த்தான்.

'வேண்டட்டன். அதுக்கேன் விடியக்காத்தாலை ரெலிபோன் எடுப்பான்...?'

'அவன் எவ்வளவு கஸ்டப்பட்டு ரெலிபோன் எடுக்க  வந்திருப்பான் எண்டதை நினைச்சுப்பார்!'

'எல்லாரும்தானே அப்பிடிச் செய்யினம்! இவை மட்டும்தான்
கஸ்டப்படுகினமோ?'

'ஏன் விடியக்காத்தாலை சண்டைக்கு வாறீர்?'

'நான் ஒண்டும் சண்டைக்கு வரேல்லை. பேசாமல் படுங்கோ!'

கண்ணன் பேசாமலிருந்தான். தம்பி சொன்ன விபரங்களை அவளுக்குச் சொல்லவேணும் எண்டு அவனுக்கு ஆவல். அதைக் கேட்கும் ஆர்வம் அவளுக்கில்லை.

அந்த மில்லை அவனுக்கு நன்கு தெரியும். சின்ன வயசிலை அங்கே நெல்லுக்குற்ற, மாவரைக்க என்று சென்றிருக்கிறான். அப்போ அது அவன் கைக்கெட்டாத ஒன்று. அந்த முதலாளி வயதாக, பிள்ளைகளிடம் ஒப்படைத்தார். பிள்ளைகள் ஒருவர் பின் ஒருவராய் வெளிநாடு செல்ல, மில்லை விற்க வேண்டிய நிலை வந்திருந்தது.

இதுபற்றி வேணி அறிந்திருக்க நியாயமில்லை. அவளைப் பொறுத்த வரை ஒன்றைப் பார்த்தால் அப்படி ஒன்று தனக்கும் வேணுமென்று ஆசை வரும். புதுவீடொன்றைக் கண்டால் அந்தமாதிரி இருக்கு! என்று அந்த வீட்டுக்காரர்மீது பொறாமை எழும்.

நியாயமே இல்லாத பொறாமை. அந்த வீட்டைக் கட்ட, வீட்டுக்குச் சொந்தமானவர்கள் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள். இரவு பகலென்று உழைத்து... மூளையைச் செலவழித்து, பல சிரமங்களைச் சந்தித்து... அப்படியொரு அழகான வீடு எழுந்து நிற்கிறது. இதனைச் சிந்தித்துப் பார்க்குமளவுக்கு அவளுக்கு அறிவு இடம் கொடுக்கவில்லை. ஆசை இருக்கிறளவுக்கு ஆர்வமோ முயற்சியோ  அவளிடமில்லை.

எழுந்து வெளிக்கிட்டு வங்கிக்குச் செல்லக் கிளம்பினான் கண்ணன்.

'எங்கை போறீங்கள்....?' கேட்டாள் வேணி.

'பாங்குக்கு...'

'ஏன்?'

'வீட்டுக்குக் காசு அனுப்பப் போறன்!'

'இப்ப உங்களிட்டைக் காசு கிடக்கே? இங்கை எத்தினை தேவையள் இருக்கு.  தம்பி எடுத்த உடனை அவைக்குக் கொட்ட மட்டும் காசு கிடக்கே?'

'ஏன் இப்பிடிக் கத்திறீர்? ஒரு நல்ல காரியத்துக்கு அவன் கேக்கிறான்... நானும் ஓமெண்டுட்டன்... அத்தானுக்கும் வருமானம் இல்லை. நல்ல லாபம் வரும்.'

'இலாபம் வந்தா எங்களுக்குத் தரப்போயினமே? என்ரை காசிலை ஒரு சதமும் எடுக்க வேண்டாம். நான் தரமாட்டன்.'

'ஏன் வேணி தடை சொல்லுறாய்? மாதாமாதம் காசு அனுப்பிறது தானே. இப்பிடி ஒண்டை வாங்கிக் கொடுத்தா, முதலும் முதலாய் இருக்கும் அவையளுக்கும் வேலையாகுது!'

'ஆர் மாதம்மாதம் காசு அனுப்பிறதெண்டது?'

'நான்தான்... ஏன்?'

'நீங்கள் என்னண்டு அனுப்பப் போறீங்கள்? நானும் ஒருத்தி வீட்டிலை இருக்கிறன்.. ஒரு ஆமான வீடில்லை ...........
காரைப் பாருங்கோ!.............
இப்பிடி ஒரு சின்னக்காரை ஆர் வைச்சிருக்கிறாங்கள்? பென்சும், அவ்டியுமெண்டு பளபளக்கத் திரியுது சனம்.'

'அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்....? என்ரை வீட்டை நான் தானே பாக்கவேணும்.'

'இப்ப உங்கடை வீடு இது.... கலியாணம் கட்ட முந்தி உங்கடை பிரச்சனையளைப் பாத்தீங்கள்... அதைப் பற்றிக் கேட்டனானே... இனிமேல் ஒருடமும் ஒரு காசும் அனுப்பேலாது. அப்பிடியெண்டா எங்கடை அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாருக்கும் அனுப்ப வேணும்.'

கண்ணன் ஜக்கற்றைக் கழற்றி எறிந்துவிட்டு ஹோலில் கிடந்த சோபாவில் தொப்பென்று விழுந்தான்.

'என்ன இருந்திட்டீங்கள்..?'

'ஏன் இருக்கவும் கூடாதே...? அடக்கம் ஒடுக்கமா சொல்லுறதைக் கேட்டு நடக்கிறதுதான் மனைவிக்கு அழகு.  எதுக்கெடுத்தாலும்
பறநாகம் மாதிரிப் படமெடுத்துக்கொண்டு நிக்கிறாய்!'

'எனக்கு உங்களைப் பிடிக்கேல்லை. மதிப்பா கோட்சூட் போட்டுக் கொண்டு கௌரவமா வேலை செய்யிற ஒருத்தன்தான் எனக்கு மாப்பிள்ளையா வரவேணுமெண்டு கனவு கண்டவள் நான்...'

'அப்பிடியெண்டா ஏன் என்னைக் கட்டினனீ? கழுத்தை நீட்டிப் போட்டு, இப்ப ஏன் என்ரை கழுத்தை அறுக்கிறாய்? ஜேர்மனியிலை படிக்கச் சந்தர்ப்பம் வரேல்லை. கிடைச்ச வேலையைச் செய்து கொண்டிருக்கிறன். போதுமான சம்பளம் தாறாங்கள். பெரும்பாலும் இப்பிடித்தான் எல்லாரும்....!'

'அப்பிடிச்சொல்லாதேங்கோ! கடை வச்சிருக்கிறாங்கள். றேடியோ நடத்துறாங்கள். ஏஜென்ஸி செய்யிறாங்கள். டொல்மேச்சராய் இருக்கிறாங்கள்... இப்பிடி எங்கடையாக்கள் எத்தினை செய்யினம்... விபரமுள்ளவங்கள் விலாசமா இருக்கிறாங்கள்.'

'அப்பிடியெண்டா அவங்கள்ளை ஒருத்தனைப் போய்க்கட்டு!' என்று சொல்ல வாய்வந்தது. முன்பென்றால் கழுத்திலே பிடித்து வெளியே தள்ளியிருப்பான். ஆனால் இது அவனுக்கு இரண்டாவது முறை. முதல் யசோவை வருத்தமென்ற காரணத்தை வைத்து, ஆராயாமல் கலைத்துவிட்டவன், காலங்கடந்த பின்தான், தான் செய்தது தவறு என்று தெரிந்துகொண்டவன். வேணிக்கும் யசோவுக்கும் தான் எத்தனை வேறுபாடுகள்.... இவளைக் கண்டபின்தான் யசோவின் அன்பு, அடக்கம், பணிவு என்ற பண்புகள் அவன் மனதில் தெரியத் தொடங்கின.

யசோவிடம் அளவுக்கதிகமாகவே இருந்த இந்தப் பண்புகளை வேணியிடம் தேடினான் கண்ணன். மருந்துக்கும் அவை இவளிடம் கிடைக்காமல் காய்ந்தான்.

அன்போடு கையை நீட்டினால், அவன் நினைவைப் புரிந்துகொண்டு, என்ன அவசரம் இருந்தாலும் அவன் கைகளுக்குள் அடங்கி, அவனுக்குள் அந்தக்கணம் ஐக்கியமாகிவிடுவாள் யசோ. கேட்காமலே அவன் தேவைகளைப் புரிந்துகொண்டு பம்பரமாகச் சுழன்று வந்தவள் அவள்.

யசோவுக்கென்று தனிப்பட்ட ஆசைகள் இருந்ததாக அவனறியான். இவன் நினைப்புக்கள்தான் அவள் ஆசைகளாய் இருந்தன.

இப்போ அவள் அவனிடம் இல்லை. மனைவி என்ற உரிமையுடன் பத்திரகாளி ஒன்றுடன் வாழ்க்கை நடத்தவேண்டியிருக்கிறதே என்று தனக்குள் நொந்து பெருமூச்சுவிட்டான்.


அன்று ஜானகிவீட்டுக்குச் சென்றான் கண்ணன். ஜானகியிடம் நடந்ததைச் சொன்னான். யசோவும் கேட்டுக்கொண்டிருந்தாள். அவனது கண்கள் கலங்கி, சோகத்தின் கொந்தளிப்பு வெளிப்பட்டது.

'நாங்கள் கணவன் மனைவியாக இருக்கேல்லை..... கீரியும் பாம்புமாகத்தான் இருக்கிறம்.'

'அவள் சின்னப்பிள்ளை. கொஞ்சம் விட்டுப்பிடியுங்கோ! நான் அவளோடை கதைக்கிறன்.' என்று ஆறுதல் பகர்ந்தாள் ஜானகி.

'எதுக்கெடுத்தாலும் திருப்பிக்கதைக்கிறாள்!' வார்த்தைகளில் வறட்சி ஒலிக்கக் கூறினான் கண்ணன்.

'அவள் செல்லமாக வளர்ந்ததாலை அடக்கமில்லாமல் இருக்கிறாள். என்னோடையே எடுத்தெறிஞ்சுதான் கதைக்கிறவள். அக்கா எண்டு மதிக்கிறேல்லை.'

'தம்பி காசு அனுப்பச்சொல்லிக் கேட்டவன். மில் ஒண்டு சந்திச்சிருக்காம் வாங்கப் போறானாம். நானும் சரியெண்டு காசு அனுப்பிறதாச் சொல்லிப்போட்டன். வேணி ஒற்றைக்காலிலை நிண்டு மறிக்கிறாள். வீட்டுக்கு ஒருசதக்காசும் அனுப்பவிடமாட்டன் என்கிறாள். ஆம்பிளைப்பிள்ளையெண்டு நான் இருக்கிறன். தாய் தகப்பன் சகோதரங்களுக்கு உதவி செய்யத்தானே வேணும். அது அவளுக்கு விளங்குதில்லை. அவளோடை கதைக்க முடியாதக்கா!' என்று தன் மனக்குமைச்சல்களை வெளிக்கொட்டினான்.

'அவளுக்குக் கன்னத்திலை இரண்டு அறை அறையாதேங்கோவன். பொல்லாத வாய்க்காரியா இருக்கிறாள். நான் வாறன். அவவுக்கு வாழ்க்கையெண்டா என்னெண்டு தெரியேல்லை. நீங்கள் போங்கோ! கவலைப்படாதேங்கோ! சமாளிச்சுப்போங்கோ!' என்றாள் ஜானகி.

'நான் எவ்வளவோ சொல்லிப் பாத்திட்டன். படிச்சமாப்பிள்ளைதான் வேணுமெண்டு கனவு கண்டவளாம். மதிப்பான வேலை செய்யேல்லையாம் எண்டு பெரிய கதை அளக்கிறாள். அவளுக்கு என்னைப் பிடிக்கேல்லை. வாயாலை நேரையே சொல்லுறாள். நான் என்ன செய்ய? தான் படிச்சவளாம் நான் படிக்கேல்லையாம் எண்டு வாயிலை வந்தபடி கொட்டுறாள்.'

ஜானகி மறுநாள் வேணிவீட்டுக்கு வந்தாள். கண்ணன் வேலைக்குப் போயிருந்தான். வேணி தமிழ்ப்படம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஜன்னல் திறந்துவிடாததால் வீட்டுக்குள் ஒரே வெக்கைமணம். ஹோலுக்குள் கழற்றிப் போட்ட உடுப்புக்கள் அங்குமிங்குமாகக் கிடந்தன. படுக்கையறை பார்க்கத் தேவையில்லை. படுமோசமாக இருந்தது.

'இந்த நேரத்திலை படமே பாக்கிறாய்?' கேட்டாள் ஜானகி.

'வேறை என்ன செய்யச் சொல்லுறாய்?'

'வீடு கிடக்கிற கிடைக்கு என்ன செய்யிறதெண்டு கேக்கிறியே?'

'தலையிடிக்குது.... ஒண்டும் செய்ய மனமில்லை.'

'ஜன்னலைத் திறந்து நல்ல காற்றை வீட்டுக்கைவிடு! தலையிடி தன்ரைபாட்டிலை போகும்! வேலைக்குப் போன மனிசன் திரும்பி வரப் போறார், நீ இன்னும் தலை இழுக்காமல்... என்ன கோலம் இது? ஆரும் பார்த்தா எங்களையுமெல்லே குறை சொல்லுவினம்!'

'உங்களை ஒருத்தரும் குறை சொல்ல மாட்டினம். இது என்ரை வீடே... விரும்பினபடி வைச்சிருக்க...? வாடை வீடு. இருக்குமட்டும் இருந்திட்டுப் போறது!'

'அது உன்ரை இஸ்டம்... நான் வந்த விசயம் வேறை.. கண்ணன் நேற்று வீட்டை வந்தவர்....'

'ஏன் வந்தவர்? எனக்குச் சொல்லேல்லை!'

'அவர் சொன்னதை நான்  நம்பேல்லை. இஞ்சை வந்து பார்த்த பிறகுதான் வீடு கிடக்கிறகிடையைப் பாக்க நம்பத்தான் வேண்டிக் கிடக்கு!'

'வீட்டுக்கதையை ஊர்ஊரா விற்கவும் தொடங்கிட்டார். வரட்டும்!'

'ஏன் மரியாதை இல்லாமல் கதைக்கிறாய்...? அவர் உனக்குத் தாலி கட்டின புருசன்.'


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 18

05.9.2019



யசோவின் ஆசை

பங்குபற்றும் பாத்திரங்கள் -   

யசோ
கோகுலன்
தாமோதரன்

யசோ வழியை வழியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அன்று கோகுலன் வீட்டுக்கு வரவுமில்லை, தொலைபேசி எடுக்கவும் இல்லை.

இது வழக்கத்துக்கு மாறு என்பதால் அவளின் நெஞ்சு படபடத்தது. ஜானகி வேலைக்குப் போயிருந்தாள். சிறுவர்கள் வழக்கம்போல பள்ளிக்கூடம் போயிருந்தார்கள்.

கோகுலனுக்கு ரெலிபோன் எடுக்கும் முடிவோடு எழுந்து செல்ல, தொலைபேசிமணியொலித்தது.

அவனாகத்தான் இருக்குமென்று நினைத்து நெஞ்சம் இன்ப இடி இடிக்க, றிஸீவரை எடுத்தாள்.

எதிர்பார்த்த குரல் ஒலிக்கவில்லை.

'பிள்ளை யசோ!' என்றார் தாமோதரன்.

'தாமோதரமண்ணை சொல்லுங்கோ!' என்று சமாளிக்க முடியாமற் தடுமாறிப் போனாள்.

'என்ன.. டிஸ்ரேப் பண்ணிப்போட்டனே..? வருத்தம் சுகமே?

'பறவாயில்லை இருக்கிறன்.'

'யசோ! கோகுலன் இஞ்சை வந்தவன். கேட்டா கோவிப்பாய்.
நான் வேணுமெண்டு சொல்லேல்லை.... வாய் வழுக்கி கண்ணன்ரை பெயரை உச்சரிச்சுப் போட்டன். கோகுலன் பிறகு விடுத்துவிடுத்துக் கேட்டும் சொல்லேல்லை.'

'என்ன அண்ணை நீங்கள்.... இது சாதாரண விசயமே? குடும்பங்களுக்கிடையிலை பிரச்சனையெல்லே வெடிக்கப்போகுது!'

'இல்லை யசோ! நான் நடந்தது ஒண்டும் விபரமாச் சொல்லேல்லை. கண்ணன் செய்திட்டான், இனி யசோவுக்கு ஒரு இடத்திலை பாக்கலாமெண்டு வஞ்சகமில்லாமல்  சொல்லிட்டன். வேறை ஒண்டுமே சொல்லேல்லை.'

'அவ்வளவும் காணும்தானே குண்டு வெடிக்கிறதுக்கு...' என்றவள்.
'சரி அண்ணை. நான் பிறகு எடுக்கிறன்.' என்று றிஸீவரை வைத்துவிட்டாள்.

கோகுலனின் நம்பர்களை தொலைபேசியில் அழுத்தினாள். என்கேச் அடித்தது. திரும்பவும் முயற்சி செய்து அதுவும் அப்படியேயிருக்க, றிஸீவரை வைத்துவிட்டு உடுப்பைச் சரிப்படுத்தி முகத்தையும் கண்ணாடியில் பார்த்து தலைமுடியையும் ஒழுங்கு படுத்திக்கொண்டு கோகுலனின் அறைக்கு விரைந்தாள்.

கதவு பூட்டிக் கிடந்தது. பலதடவை தட்டியும் திறக்கவில்லை.
ஏமாற்றம் முகத்தில் இருளாகப் படியத் திரும்பிச் சோர்வுடன் நடந்தாள்.

அப்போ கதவு திறக்கும் சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தவள் அங்கே கதவைத் திறந்தபடி கோகுலன் நிற்பதைக் கண்டாள். அவனை அப்படி ஒரு கோலத்தில் இதுவரை அவள் பார்க்கவில்லை. கிளறிக்கிடந்த தலைமுடியும் வியர்த்து எண்ணெய் படிந்த முகமும் திறந்த சேட்டும் அவன் நன்றாகக் குடித்திருக்கிறான் என்பதை எடுத்துக்காட்டின.

'என்ன...?'என்றாள் யசோ.

'ஒண்டுமில்லை!'

'ஏன் குடிச்சனீங்கள்?'

'நான் குடிச்சா அதைக் கேட்க நீர் ஆர்?'

'நானோ... உங்கடை மனிசி!'

'ம்' என்று அலுப்புக் கொட்டினான்.

'உங்களுக்கு என்ன பிரச்சனை...? குடிக்கமாட்டன் எண்டு அண்டைக்குச் சத்தியம் செய்து போட்டு இண்டைக்குத் திரும்பவும் போத்திலை உடைச்சு வைச்சிட்டு இருந்தா...?
என்ன பேசாமலிருக்கிறீங்கள்;...?
என்னைப் பற்றி ஏதும் அறிய வேணும்  எண்டால் என்னைக் கேட்கலாம்தானே!'

'முழுப்பூசனிக்காயைச் சோற்றுக்கள் மறைச்சு வைச்சிருக்கிறீர்!' என்ற கோகுலனின் வார்த்தைகள் அடைச்ச குரலில் வெளிவந்தன.

'நான் ஒண்டும் ஒழிக்கேல்லை. என்னைப்பற்றி உங்களுக்குத் தெரியும்தானே...!'

'உங்களைப்பற்றி எனக்கு என்ன தெரியும்? உங்கடை வாயாலை ஏதாவது சொன்னனீங்களோ? யாரோ சொல்லித்தானே எல்லாம் அறியவேண்டிக்கிடக்கு!'

வசனங்களை முறித்து முறித்து தன் மனக்கிடக்கையை வெளிப்படுத்தினான் கோகுலன்.

'யாருக்கும் சொல்லமாட்டீங்கள் என்றால்... இதாலை வேறை எந்தப் பிரச்சனையும் வராது என்று சத்தியம் செய்யுங்கோ சொல்லுறன்!'

'சத்தியம் செய்ய வேணும்...
என்னை உமக்குத் தெரியாது.... நம்ப மாட்டீர்...
சத்தியம் பண்ணினால்தான் சொல்லுவீரோ?'

'சத்தியம் செய்தே நீங்கள் குடிக்கிறீங்கள்... அப்ப என்னெண்டு உங்களை நம்புறது...?'

'எல்லாருந்தானேப்பா குடிக்கிறாங்கள்! நான் மட்டும் ஏதோ பெரிசா குடிச்சு அழிக்கிறனாக்கும்!'

'ஒரு விசேடத்துக்கு பார்ட்டீ ஒண்டிலை  நாகரிகத்துக்காக  கொஞ்சம் நண்பர்களோடு சேர்ந்த குடிப்பதை இந்த நாடுகளிலை தவிர்க்க முடியாதெண்டாலும் நீங்கள் சின்னன்பொன்னன் பிரச்சனைக்கெல்லாம் பியரையும் பிரண்டியையும் ஊத்திக் குளிக்கிறீங்கள். மற்றவையின்ரை மனம் எரிந்து கதறுவது உங்களுக்குத் தெரியாது.' யசோவின் கண்களில் நீர் தழும்பித் துளித்தது.

'இப்ப என்ன நடந்து போச்சு! நான் என்ன புதுசாக் குடிக்கிறன்... ஊரிலையும் குடிச்சவன். ஊர்மாறி சிற்றிக்கு வந்தும் குடிச்சவன். நீங்கள் வந்த பிறகு உங்கடை விருப்பத்துக்குக் குடிக்காமலிருந்தது உண்மைதான்... என்னை ஏன் தடுக்கிறீங்கள்?'

'அக்கா சொல்லி அலுத்துப்போய் விட்டிட்டா! இனி நானும் சொல்லி, கத்தி அழுது எல்லாம் பாத்திட்டு விட்டிடுவன் எண்டு மட்டும் நினைக்காதேங்கோ! என்னைப்பற்றி உங்களுக்குத் தெரியாது... செத்துப்போயிடுவன்.'
கோகுலனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்து அவள் தன்மீது வைத்திருக்கும் எல்லை மீறிய அன்பைப் புரிந்து கொண்டவனாய்...
'நீர் ஏன் இவ்வளவுதூரம்... வருத்தம் சரியாக மாறேல்லை. ஏன் யசோ?
உம்மைக் கண்ணன் ஏமாத்திட்டான் எண்டதை அறிய ........  என்னாலை ஜீரணிக்க முடியவில்லை. ஒரு சொல்லுச் சொல்லி யிருந்தால் இண்டைக்கு நீர் அவன் மனைவியாக இருக்கலாமே!'

'அந்தக்கதை வேண்டாம்.... அது முடிஞ்சு போச்சு.. எனக்கு அப்படி ஒரு ஆசையுமில்லை.'

'அப்ப என்ன ஆசை இருக்கு..? சொல்லும்'

'ஜானகியக்கா முதலே எனக்குச் சொன்னது மாதிரி நான் ஒரு வேலைக்குப் படிக்கப் போறன்!'

'படிச்சிட்டு....!'

'வேலை செய்யப்போறன்.'

'வேலை கிடைச்சபிறகு...?'

'அதுக்குப் பிறகு யோசிப்பம்.'

'அதுக்குப்பிறகு நான் சொல்லுறதைச் செய்வீரோ...?'

'என்ன சொல்லப்போறீங்கள்? சொல்லுங்கோ முடிஞ்சாப் பாப்பம்!'

'இப்ப சொல்லமாட்டன்.'

'இரகசியமோ...?'

'அப்பிடித்தான் வையுமன்.'


குசனைக் காணவில்லை.

பங்குபற்றும் பாத்திரங்கள் -   

யசோ
கோகுலன்
தாமோதரன்
லவன்
குசன்
பரதன்
கண்ணன்
வேணி

ஒருநாள்....
குசனைக் காணவில்லை.
யசோ எங்கும் தேடிப் பார்த்துவிட்டாள். கோகுலனுக்கு ரெலிபோன் எடுத்துச் சொல்ல, அவனும் வந்து தேடினான்.
லவன் குசனோடு கூடப்படிக்கும், சேர்ந்து விளையாடும் பிள்ளைகள் வீடுகள் எல்லாம் விசாரித்துப் பார்த்தான்.

'பாடசாலையால் வந்து சாப்பிட்டிட்டு விளையாடப் போறன் எண்டு போனவன் பொழுதுபட்டுப்போச்சு... எங்கை போய் நிக்கிறான்?' என்று யசோ கண்ணீரைக் கொட்டினாள்.

'உங்கை எங்கையாவது தானே நிப்பான். நான் போய்ப் பாத்துக் கொண்டு வாறன்... நீர் அழாதையும்.'

'இஞ்சை.... ஒருக்கா வாசு வீட்டுக்கு ரெலிபோன் எடுத்துப் பாருங்கோ!'

'அங்கை போறவனே...?' என்று கேட்ட கோகுலன் அவர்களின் தொலைபேசி எண்களை அழுத்தினான்.

'குசன் வந்தவனே அக்கா...?'

'இல்லை...!'

'விளையாடப் போனவன். காணேல்லை.'

'பிள்ளையைக் கவனமா எல்லே பார்க்க வேணும். பிள்ளை கடத்துறவங்கள் உலாவுறாங்கள். அண்டைக்கும் ஜேர்மன்காரப்பிள்ளை.... பன்னிரெண்டுவயது... காணேல்லையெண்டு தேடினவை... பிறகு...!'

'சரி. அப்ப நான் பிறகு எடுக்கிறன்.... றிஸீவரை வைத்தவன்.
'எந்தநேரம் என்ன கதைக்கிறதெண்டு தெரியாததுகள் எல்லாம் வெளிநாட்டுக்கு வந்திருக்குதுகள்... அசல் விசர்க்கேஸ்!'

'என்னவாம்;;.;..?' என்றாள் யசோ விளங்காதவளாய்.

'சிக்.... இந்த மனிசிக்கு எடுத்தநேரம் எடுக்காமல் விட்டிருக்கலாம்.'

'ஏன் என்ன சொன்னவை?'

'பிள்ளைபிடிகாரர் உலாவுறாங்களாம் அதாம் இதாம் எண்டு பெரிசா உளறுது!'

'எனக்குப் பயமாக்கிடக்கு! அக்கா வந்து இக்கணம் துடிதுடிக்கப் போறா! ஐயோ! கோகுலன் என்ன செய்ய? பொலிசுக்கு ரெலிபோன் எடுத்துச் சொல்லுவமா...?'

'பொறும் யசோ! முதல் அக்காவுக்குச் சொல்லிப்போட்டு...' என்றவன் மீண்டும் ரெலிபோன் எடுத்து நம்பர்களை அழுத்திவிட்டு,
'அக்கா!' என்றழைத்தான்.

'கோகுலன்! சொல்லு என்ன விசேசம்....?'

'குசன் விளையாடப்போனவன் இன்னும் வீட்டை வரேல்லை. தேடிப்பார்த்தும் காணேல்லை.
என்ன செய்யிறது... பொலிசுக்கு எடுத்துச் சொல்லவோ?'

'மிகயேல், டானியல் இவங்கடை வீடுகளிலெலாம் பாத்தனீங்களே? அநேகமா போய் நிக்கிறவன்.' என்று பதற்றத்துடன் பதில் சொன்ன ஜானகி,
'நான் லீவு போட்டிட்டு வாறன்.' என்று றிஸீவரை வைத்தாள்.

'அக்கா வாறாவாம்!' என்று யசோவைப் பார்த்துச் சொல்லிவிட்டு வேறும் தெரிந்தவர்களுக்கு ரெலிபோன் எடுத்து விசாரித்தான்.
தொலைபேசியை வைக்க, அதன் மணி ஒலித்தது. எடுத்து,
'ஹலோ!' என்றான் கோகுலன்.

'தாமோதரன் கதைக்கிறன்;... டேய் கோகுலன்! என்ன குசனைக் காணேல்லையாம். வாசன்ரை மனிசி எடுத்துச் சொன்னவ!'

'ஓமண்ணை! எங்கை போய் நிக்கிறானோ தெரியாது. வழக்கமா நேரத்தோடை வீட்டை வந்திடுவான்.'
'லவன் எங்கை....? அவனுக்கும் தெரியாதே?'

'அவன் இஞ்சை நிக்கிறான். வீட்டுவேலை செய்து கொண்டிருந்தவன்...... குசனைக் காணேல்லையெண்டு அவனும் உங்கை தேடிப்போட்டு வந்திருக்கிறான்.'
'உதுவழிய எங்கையாலும் தான் நிப்பன். அவசரப்படாதேங்கோ!'

'இங்கை யசோ அழுதுகொண்டிருக்கிறா... அக்கா வேலைக்குப் பாதியிலை லீவுக்குச் சொல்லிப் போட்டு வந்து கொண்டிருக்கிறா! என்ன செய்யிறதென்டு தெரியேல்லை.'

'நான் வாறன்.... பயப்பிடாதேங்கோ! பெடியங்களைத் தெரியாதே... விளையாட்டுக் கண்ட இடத்திலை மிலாந்திக்கொண்டு நிக்கிறது வழக்கம்தானே! பாத்திட்டுப் பொலிசுக்குப் போகலாம் பொறுங்கோ'

தொலைபேசி வைக்கப்பட்டது. சில நிமிடத்தில் மீண்டும் அடித்தது. கோகுலன் அதை எடுத்தான்.
'ஹலோ!'

'ஓ! நான் தாமோதரன் .... டேய் கோகுலன்! ரவுணுக்கை கேர்மஸ் நடக்குது... அங்கை போய் பாத்தனீங்களே?'

'இல்லையண்ணை நோர்மலாப் போகமாட்டான்... தூரந்தானே!'

'போய் ஒருக்காப் பார்! பெடியளைச் சொல்லேலாது. ஆரோடையன் அள்ளுப்பட்டு போய் நிக்குங்கள்.!' என்று விட்டு ரெலிபோனை வைத்தார்.

'தாமோதரன் அண்ணைதான் எடுத்தவர்... கேமர்ஸ் நடக்குதெல்லே.. அங்கை போயிருப்பானெண்டு சொல்லுறார்... நான் போய்ப் பார்த்திட்டு வாறன்... நீர் அழாதையும்.  அக்கா வந்திடுவா. தாமோதரன் அண்ணையும் வாறன் எண்டு சொல்லியிருக்கிறார்.' என்று ஜக்கட்டை எடுத்துக் கொழுவிக்கொண்டு வெளியே போனவன் திரும்பிவந்து, 'வேணிக்கு எடுத்துச் சொல்லும், வேறு ஆராவது சொல்லித் தெரிஞ்சால் நாங்கள் எடுத்துச் சொல்லேல்லை எண்டு நீட்டுவாள்.'

'நான் சொல்லுறன். நீங்கள் கவனமாப் போட்டு வாங்கோ!' என்று கோகுலனைப் போகவிட்டு மனக்குழப்பத்துடன் அங்குமிங்கும் நடந்தாள் யசோ.

சிறிதுநேரம் செல்ல ஜானகி வீட்டுக்கு வந்தாள். லவனைப் பார்த்து,
'உனக்குச் சொன்னனான், குசன் எங்கை போனாலும் கவனிக்கச்சொல்லி... ' என்று அவனைக் கண்டித்தாள்.

'நான் வெளியிலை போகேல்லை, வீட்டுவேலையெல்லே செய்து கொண்டிருந்தனான்.'
'அப்ப அவனையும் வீட்டிலை மறிச்சு வைச்சிருக்கிறது.'

'அவனை ஏன் ஏசுகிறீங்கள்? நான் சொல்லிமறிச்சிருக்கலாம். வழக்கம்போல பக்கத்திலை எங்கையாவது தான் விளையாடப் போறானெண்டு நானும் பேசாமலிருந்து விட்டன்.' என்று தன்னில் தவறைத் தாங்க முயற்சி செய்தாள் யசோ.

'இல்லை யசோ! இவன் வளந்திட்டான், தம்பியார் எங்கை போறான் வாறான் எண்டு பார்க்கலாம்தானே!'

'அக்கா! தாமோதரமண்ணை எடுத்துக் கதைச்சவர். ரவுணுக்கை கேர்மஸ் நடக்குதாம்.... அங்கை போயிருப்பானோ தெரியாது, போய்ப் பாருங்கோ! எண்டு சொன்னவர்.  அதுதான் கோகுலன் அங்கை தேடிப் போயிருக்கிறார். 

அப்போ வேணியும் கண்ணனும் உள்ளே வந்தார்கள்.
'குசன் இன்னும் வரேல்லையே..?' என்றாள் வேணி.

'இப்பிடி ஒருநாளும் நிக்கிறேல்லை!' என்று பதில் சொன்னாள் யசோ.

'வேலையைவிட்டிட்டு வீட்டிலையிருந்து பிள்ளையளைப் பாக்கிறதுக்கு வேலை வேலையெண்டு அலைஞ்சு என்னத்தைக் கண்டனீங்கள்? எத்தினை நாளைக்கெண்டு பிறத்தியாரை நம்பிறது...?' என்று தமக்கை ஜானகியைப் 

பார்த்து மறைமுகமாக யசோவில் கவனக் குறைவு இருக்குமெண்டு குற்றம் சாட்டினாள்.


'இஞ்சை நாங்கள் ஒரு பிறத்தியாரையும் நம்பியிருக்கேல்லை. நானும் யசோவும் கோகுலனும் ஒருத்தர்மாறி ஒருத்தர் வீட்டிலை இருப்பம். அவன் என்ன ஆறுமாதக் குழந்தையே.... இடுப்பிலை தூக்கிக்கொண்டு திரிய...?' என்றாள் ஜானகி.

'கதைக்கப் பேசத் தெரியாட்டிப் பேசாமலிரு!' என்று வேணியை அடக்கப் பார்த்தான் கண்ணன்.

'என்ன பிரச்சனை...?' என்று கேட்டபடி தாமோதரனும் அவர் மனைவி நீலாவும் வந்தனர்.

'சும்மா கதைக்கிறம். பிள்ளையைக் காணேல்லையெண்டதும் ஒருத்தரையொருத்தர் குற்றம் சாட்டேலுமே..? இவள் வேணி சும்மா அதையும் இதையும் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.' என்றாள் ஜானகி. யசோவின் மனம் புண்படக்கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள்.

'ஏன் பிள்ளை...? அவன் குழந்தைப்பெடியன். விளையாட்டிலை அங்கை இங்கை போயிருப்பான்... வருவான்தானே! இதுக்குப் போய்த் தேவையில்லாமல் மற்றவையைக் குறை சொல்லுறதே?'

'ஏன் நான் தேவையில்லாமல் குறை சொல்லுறன்? பரதன் அக்காவைக் கலியாணம் கட்டக் கேட்டவன். அக்கா மாட்டன் எண்டிட்டா.... அதாலை...'

'வேணி!' என்று அதட்டி, அவள் வாயையடைக்க கண்ணன் முயன்றும் அவள் சொல்ல வந்ததைத் தடுக்க முடியவில்லை.

'அக்கா மாட்டனெண்டதாலை வேணுமெண்டு பிள்ளையைக் கடத்திக் கொண்டு போய் வைச்சிருக்கலாம்தானே!'

ஜானகிக்குக் கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தது.

'என்ன கதைக்கிறாய்...? கதைக்கப் பேசத் தெரியாட்டி வாயை மூடிக்கொண்டிரு! தேவையில்லாத பிரச்சனையை விலைக்கு வாங்கிறாய்.' என்று ஜானகி கோபமாக முறைத்தபடி வேணியைக் கண்டித்தாள்.

'இப்பிடிக் கதைக்காதை வேணி... பரதன் காதிலை விழுந்தால், அவன் எவ்வளவு கவலைப்படுவான். என்ன கதை கதைக்கிறாய்! அவன் ஏன் உங்கடை பிள்ளையைக் கடத்த வேணும்?' என்று காரமாகவே அதட்டினார் தாமோதரன்.

அப்போ கோகுலன் ரவுண் எல்லாம் தேடிவிட்டு, களைத்துப் போய் வீட்டுக்கு வந்தான்.

எல்லோரும் ஆவலோடு அவனைப் பார்த்தார்கள். அவன் கையை விரித்தான்.

'சரியான சனம். அதுக்குள்ளை நிண்டாலும் தெரியாது. நான் மூலை மூலையாப் பாத்திட்டன். மகேந்திரன், ஜெகன் எல்லாம் கேர்மஸிலை நிக்கினம். விசாரித்தனான். அவை ஒருத்தரும் காணேல்லையாம்.'

'என்ரை பிள்ளை எங்கை போட்டான்....?' ஜானகி அழத் தொடங்கி விட்டாள்.

நேரம் போகப்போக பயம் விசுவரூபமாக வளர்ந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் எல்லோரும் கவலை முட்ட உட்கார்ந்திருந்தார்கள்.

'பொலிசுக்கு எடுத்துச் சொல்லுங்கோ! அவங்களும் தேடுவாங்கள்... கோகுலன் சொல்லு...!'' என்றார் தாமோதரன்.

யசோவும் ஜானகியும் விக்கிவிக்கி அழுது கொண்டிருந்தார்கள்.

'கோகுலன் என்ன யோசிக்கிறாய்...?' கேட்டார் தாமோதரன்.
'பொலிசுக்குச் சொல்லவோ... பேந்து பாத்துச் சொல்லவோ எண்டு யோசிக்கிறன்!'

'பத்து மணியாகுது. சொல்லுறதிலை எந்தப் பிரச்சனையும் வரப் போறேல்லை. நாங்கள் எத்தினை மணித்தியாலங்களாத் தேடிக் கொண்டிருக்கிறம்.... பொலிஸ் எங்களுக்காகத் தானே இருக்கு. இப்பிடியான பிரச்சனைகளுக்கு உதவத்தானே அவை இருக்கினம்.' என்று அவசரப்படுத்தினார் தாமோதரன்.
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்   
இக்கதையை எழுதிவரும் திரு. காசி அவர்களுக்கு 29.8.2019 இல் பிறந்தநாள். இக்கதையிலும் பிறந்தநாள் கொண்டாட்டம் வருகிறது. அவரின் மனம்போல் சரியாக அமைந்து வந்துள்ளது. அவருக்கு பண்ணாகம் இணைய வாசகர்கள்,பிரதம ஆசிரியர்,நிர்வாகத்தினர் அனைவரும் நீடு வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.
இக்கதை 17வது பகுதியில் அவரை கெளரவப்படுத்த அவரின் படத்தை பிரசுரம் செய்கிறோம். நன்றி
=============================


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 17

28.8.2019

வாங்கோ பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு!

பங்குபற்றும் பாத்திரங்கள் -   
கண்ணன்  
வேணி 

அன்று சனிக்கிழமை.
கண்ணன் ஹோலுக்குள்ளிருந்த அலுமாரியை ஒதுக்கி, தூசு துடைத்துக்கொண்டிருந்தான்.

'பேத்டேக்குப் போக வேணும் பிறசன்ற் வாங்கவேணும் இப்ப ஏன் உதைக் கிளறிக்கொண்டு நிக்கிறியள்?' என்றாள் வேணி.
'ஆருக்கு பேத்டே...?' கேட்டான் கண்ணன்.

'அண்டைக்கு வந்து சொல்லிப்போட்டு, கார்ட்டும் தந்திட்டுப் போச்சுதுகள்.' என்றவள் எழுந்து போய் அலுமாரிக்குள் இருந்த அழைப்பிதழை எடுத்த வந்து கண்ணனிடம் நீட்டினாள்.

அதை வாங்கிப் பார்த்துவிட்டு ஞாபகம் வர,
'ஆ... இதுக்கெல்லாம் மனிசன் போவனா?' என்று கார்ட்டை மேசையில் விட்டெறிந்தான்.

'வேறையென்ன மாடா பேத்டேக்குப் போகும்?'

'மாடு போனாலென்ன? மனிசன் போனாலென்ன? உதுகள் ஒண்டுக்கும் நான் போறதில்லை!'

'கலியாணவீட்டுக்கு வந்ததுகளெல்லே?'

'ஓ! அதுக்கு...?'

'வந்த சனத்தின்ரை விசேசத்துக்கு நாங்களும் போகத்தானே வேணும்.'

'போகாட்டி என்ன வழக்கே வைக்கப்போகினம்?'

'ஜெயிலுக்கை அடைச்சுப் போடுவினம்.'

'வாய் மட்டும் பெரிசு. பொத்திக்கொண்டு வேலையைப் பார்! இல்லாட்டிப் போர்த்து மூடிக்கொண்டு படு!'

'அதுக்கு வேறையொரு ஆளைப் பாருங்கோ! நான் பேத்டேக்குப் போகத்தான் போறன்.'

'நீ செய்தாலும் செய்வாய்... அப்பிடிக்கொத்த குடும்பத்திலை இருந்து வந்தனீ...!'

'எப்பிடிப்பட்ட குடும்பத்திலையிருந்து வந்தனான்? எங்கடை குடும்பத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? வேலையும்  வீடும் சாப்பாடும் படுக்கையும் எண்டு கிணத்துத் தவளை மாதிரி இருக்கிற உங்களுக்கு என்ரை குடும்பத்தைப் பற்றிக் கதைக்க என்ன யோக்கியதை இருக்கு?' என்று கோபம் குமுற அழத் தொடங்கிவிட்டாள்.

'அதுக்கேன் இடிமுழங்கி மழை கொட்டுறது மாதிரி அழுது வடியிறாய்?'

'எங்கடை குடும்பத்தைப் பற்றிக் குறை சொன்னால் அழுகை வராமல் வேறென்ன வரும்? வெட்கம் ரோசம் உள்ளவைக்குத்  தான் அது விளங்கும்.'

'உன்னை மாதிரி ஒரு பொம்பிளையை நான் பாக்கேல்லை.'

'அதைத்தான் நானும் சொல்லுறன். உங்களைமாதிரி ஒரு மனிசனை நான் பாக்கேல்லை. ஒரு பேத்டேக்குப் போறதுக்கு அதுவும் எங்கடை கலியாணவீட்டுக்கு வந்து பிறசன்ற்ரும் தந்து சாப்பிட்டுப் போனதுகள். எங்களை மதிச்சு வீட்டுக்கு வந்து, கார்ட் தந்து, வாங்கோ எண்டு சொல்லி, தேத்தண்ணியும் குடிச்சிட்டுப் போன மனிசரை நாங்கள் மதிக்கவேணும். இப்பிடியான நல்லநாள் பெரியநாளுக்கு சனங்கள் கூப்பிட்டால் போய் நாலு பேரோடை கதைச்சுப் பழகினால்தானே எங்களுக்கும் ஒண்டெண்டால் ஆரும் வருவினம். பிடிச்ச பிள்ளையார்மாதிரி சோபாவைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு இருங்கோ!'

'எனக்கெல்லாம் தெரியும். கனக்கக் கரையாதை காகம் மாதிரி.'

'உங்களுக்கெல்லாம் தெரியுமோ...? என்ன தெரியும்? உந்த றேடியோ வாங்கினனீங்கள், செற் பண்ணத் தெரிஞ்சதே? அதுக்கும் என்ரை அண்ணை வேணும். கலியாணம் கட்டினால் இரண்டு மூண்டு நாளைக்கு வீட்டிலை நிக்கவேணும் எண்டு நீங்களா நினைச்சு லீவு எடுக்கத் தெரியாது. அதுகூட மற்றவை சொல்லித்தான் தெரியுது. பிறகு எனக்கு எல்லாம் தெரியுமெண்டு சும்மா தம்பட்டம் அடிக்கிறீங்கள். நான் காகமோ... நீங்கள்தான் பெரிய அண்டாங்காகம்.'

கண்ணனுக்குக்  கோபம் கொதித்துக்கொண்டு வந்தது. பாய்ந்து எழுந்து தலைமயிரில் கோதிப்பிடித்துக்கொண்டு, பளீர்...பளீரென்று நாலு கன்னத்தில் போட அவன் கைகள் ஏவியபோதும் தன்னை அடக்கிக்கொண்டு பேசாமல் இருந்து விட்டான்.

'என்ன பேசாமல் இருக்கிறீங்கள்? இண்டைக்கு பேத்டேக்குப் போறன். விரும்பினால் நீங்களும் வாங்கோ! வராட்டி, ஆரும் 'எங்கை கண்ணன்?' என்று கேட்டால், நீங்கள் கொஞ்சம் முந்தியா என்னைப் பாத்து, 'நீயும் ஒரு பொம்பிளையா?' என்று கேட்ட மாதிரி நானும், 'அவரும் ஒரு ஆம்பிளை எண்டு கூட்டிக்கொண்டு திரியட்டா.. என்று சொல்லுவன்.' என்றவள் பதிலை எதிர்பார்க்காது சமையலறையை நோக்கிச் சென்றாள்.
வேணி  போவதைப் பார்த்துக்கொண்டு நின்றவன், அவளுடன் மோதி வாதம் செய்வதை விட்டு அவள் வழியில் சென்று பார்ப்போம் என்று நினைத்தவனாய், பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு  போகும் முடிவுடன் எழுந்து தானும் சமையலறைக்குச் சென்றான்.
பூகம்பம் வெடிக்குமா!

 பங்குபற்றும் பாத்திரங்கள் -                   

கோகுலன்  
தாமோதரன்  

தாமோதரன் கடைக்கு கோகுலன் வந்தான்.

'கோகுலன்! வாரும்! வாரும்! என்ன கனநாளாக் கடைப்பக்கம் காணேல்லை?'

'எங்கை வருவம் எண்டு உப்பிடித்தான்.... கடையிலை எப்பிடி பிஸ்னெஸ்....?'

'நல்லாயிருக்கு! பலசரக்குச்சாமான்களை விட புடவையிலை நல்ல லாபம். அதோடை ரெலிபோன்கார்ட் ... வீடியோக்கசற் இப்பிடியெண்டு பிஸ்னெஸ் பறவாயில்லைப் போகுது. நீ எப்பிடி இருக்கிறாய்?'

'இருக்கிறன். எனக்கென்ன இப்பதானே தங்கச்சியின்ரை கலியாணம் முடிஞ்சது. கடன் கொஞ்சம் கழுத்தை நெரிக்குது. காலுக்குமேலை கால் போட்டுக்கொண்டு இருக்கேலுமே? அதுதான் ஓடுப்பட்டுத் திரியிறன். மாதவனண்ணைக்கு மாதாமாதம் வட்டி குடுக்கிறதே கஸ்டமாக் கிடக்கு!'

தாமோதரன் யோசனையுடன் தலையாட்டிவிட்டுக் கேட்டார்.
'அக்கா, பிள்ளையள் எப்பிடி?'

'சுகமா இருக்கினம் அண்ணை!'

'அதெல்லாம் இருக்க யசோ என்ன செய்யிறாள்?  அவளுக்கு பாத்து ஒரு இடத்திலை சம்பந்தம் செய்து வைச்சால் நல்லதெல்லே!' பாவம். கெட்டிக்காரப்பிள்ளை. கெட்டகாலம் போட்டு அவளை உலைக்குது!'

'கெட்டகாலம் முடிஞ்சுது அண்ணை! யசோ சுகமா இருக்கிறா. உங்களுக்குத் தெரிஞ்ச இடங்களிலை விசரரிச்சுப்பாருங்கோ! முதல்லை யசோவையும் சம்மதிக்க வைக்கவேணும்.'

'கண்ணன் செய்திட்டான்தானே! இனி ஏன் அவள் யோசிக்க வேணும்?'

'என்னண்ணை...! கண்ணன் செய்தால் யசோவுக்கு என்ன?'
தாமோதரன் தன்னையறியாமலே கோகுலனுக்கு உண்மையைக் கொட்டிவிட்டுத் தன் தவறுக்காக நெற்றியில் அடித்துத் தலை முடியைப் பிடுங்கினார்.

'ஒண்டுமில்லை கோகுலன்... ஆனால் நல்ல இடம் சந்திச்சால் சொல்லுறன்.'

'ஏனண்ணை ஒழிக்கிறீங்கள்...? சொல்லுங்கோ!'

'ஒருத்தருக்கும் சொல்லவேண்டாமெண்டு யசோ சத்தியம் வேண்டியிருக்கிறாள். இதாலை ஒரு பிரச்சனை வரக்கூடாது. அவன் இப்ப உன்ரை மச்சான்.'

'லவ் பண்ணி ஏமாத்திப்போட்டு இப்ப நல்லபிள்ளைமாதிரி நடிச்சு, தங்கச்சியைக் கட்டியிட்டார். அப்பிடித்தானே..?'

'இல்லை. லவ் பண்ணி ஏமாத்தேல்லை...டேய்! கோகுலன் பிளீஸ்! என்னை ஒண்டும் கேக்காதை! பிறகு யசோவின்ரை கண்ணிலை முழிக்கேலாது.' என்று சொல்ல மறுத்துவிட்டார் தாமோதரன். கோகுலனும் அதற்கு மேல் அவரை வற்புறுத்த வில்லை.

'யசோவிடம் நான் இப்பிடிச் சொன்னதாகச் சொல்லிப் போடாதை!'

'என்னையறியாமலே இப்பிடியொரு பூகம்பம் எங்கடை வீட்டுக்குள்ளை புதைஞ்சு கிடக்குதோ...?'

'பூகம்பம் அடங்கி விட்டுது கோகுலன். அதை நீ மீண்டும்
குமுறச் செய்யாதை!' என்று எச்சரித்தார் தாமோதரன்.


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 16
20.8.2019

கண்ணன் வேணி கருத்துமோதல்
பங்குபற்றும் பாத்திரங்கள் - 
யசோ
கோகுலன்
ஜானகி  
கண்ணன்  
வேணி 
பரதன்


'இதென்ன சிலோனே... நினைச்சாப்போலை லீவு எடுக்க?' என்றான்.

'ஏன் நினைச்சாப்போலை எண்டுறியள்? வெடிங்குக்கு லீவு எடுக்கேக்கை அஞ்சாறு நாளைக் கூட எடுத்திருக்கலாம்தானே!'

'இப்ப பிஸியான நேரம் கண்டபடி லீவு எடுக்கேலாது.'

'ஆரோ சொன்னவையோ...?'

'ஆரும் சொல்லேல்லை. பாக்கத் தெரியும்தானே!'

'மரி பண்ணினது.. ஒரு கிழமை லீவு வேணும் எண்டு கேளுங்கோ!'

'கேக்கேலாது.'

'கேட்டுப் பாருங்கோ! கட்டாயம் வேணுமெண்டு கொஞ்சம் இறுக்கிக் கேளுங்கோ!'

கண்ணன் பதில் சொல்லவில்லை.

வேணியின் இடத்தில் யசோவை நினைத்தான்.

அவள் வந்து, அவன் வீட்டில் இருந்த மறுநாள் அவன் லீவு எடுக்க நினைத்தான்.
'ஒரு அவசரம் தேவை வரேக்கை லீவு எடுக்கலாம், நான் வந்திட்டன் எண்டு திடீரென்று நீங்கள் பக்றியிலை லீவு கேக்கிறது அவ்வளவு நல்லாயில்லை.... நான் சமாளிப்பன்.' என்று சொல்லி அவனை யசோ வேலைக்குப் போகவைத்தாள். அவள் வருத்தமாக
இருக்கும்போதுகூட அவனை அவள் வேலைக்குப் போகாமல்விடும் படி தடுக்கவில்லை.

நினைவைச் சுருக்கிக்கொண்டு வேலைக்குக் கிளம்பினான்.
'கேட்டதுக்குப் பதில் சொல்லத் தெரியாதே?'

'விடியகாத்தாலை எழும்பி நிண்டுகொண்டு ஏனப்பா அறுக்கிறீர்? ஜேர்மனியிலை வேலை எவ்வளவு முக்கியமெண்டு உமக்குத் தெரியாது. பேசாமற் போய் சமையலறைக்கை இரும்!'

'ஏன் நான் சமையலறைக்கை போயிருக்கவேணும்? ஹோலுக்கை இருப்பன், பெட்றூமுக்கை படுப்பன், வெளியிலை நிப்பன்.' என்றாள்.

'சரியான வாய்காரியாக்கிடக்கு!' எரிச்சலுடன் வாய்க்குள் முணுமுணுத்தான்.

'கேக்கேல்லை. சொல்லுறதை வாயைத்திறந்து சொல்லுங்கோ! பல்லுக்கை வைச்சுக் கடிக்காதேங்கோ!'

'என்ரை அலுவலை எனக்குப் பாக்கத் தெரியும் உன்ரை அலுவலை நீ பாத்தாச் சரி!'

'அதுக்குள்ளை என்ரை உன்ரை எண்டு ஏன் பிரிக்கிறீங்கள்? நான் ஒண்டும் சும்மா வரேல்லை. சுளைசுளையாச் சீதனத்தை வாங்கிக் கொண்டு வந்தனான்.'

'இப்ப ஆர் இல்லையெண்டது? ஏன் இந்தத் தேவையில்லாத கதை எல்லாம்...?'

'எது தேவையில்லாத கதை.?'

'எல்லாந்தானப்பா!'

'கண்ணன்!  அப்பா எண்டெல்லாம் என்னைப் பாத்துச் சொல்லத்தேவையில்லை. அப்பா, அம்மா ஆசையோடை வைச்ச பெயர் இருக்கு வேணி எண்டு, அதைச் சொல்லுங்கோ! அதை உச்சரிக்க உங்களுக்குக் கஸ்டமெண்டால் பல்டொக்டரிட்டைப் போய்ச் சரிப்பண்ணிக் கொண்டு வாங்கோ!'

'என்னடி கதைக்கிறாய்... ஆரிட்டை எங்கை நிண்டு பேசிறாய் எண்டு தெரிஞ்சுகொண்டுதான் பேசிறியோ...?'

'ஓ! தெரிஞ்சுகொண்டுதான் கதைக்கிறன்.!'
'என்னடி தெரிஞ்சு கொண்டு கதைக்கிறாய்...?'      
'உந்த டீ... மட்டும் வேண்டாம். பிறகு நான் டா.... போட வேண்டி வரும்.'
'சரியான வாய்க்கொழுப்பு...!'

'ஏன் இருக்கக்கூடாதா?'

'இருக்கலாம் இருக்கலாம்... ஆனால் அதைப் புருசனிட்டைக் காட்டக்கூடாது. தெரிஞ்சுகொள்!'

'எந்தப் புருசனிட்டைக் காட்டக்கூடாது?'

'அப்ப...!'

'அப்பவுமில்லை இப்பவுமில்லை! எப்பவும் நான் நினைச்சது படிச்ச ஒருத்தன்தான் எனக்குப் புருசனாக வருவானெண்டு... அண்ணை ஏமாத்திப்போட்டான்.!'

'நான் படிக்கேல்லையெண்டு ஆர் சொன்னது...?'

'பாக்கத் தெரியுதே..'

'என்ன தெரியுது?'

'எல்லாந்தான். செய்யிற வேலையிலிருந்து இருக்கிற வீடு வரைக்கும் நீங்கள் எப்பிடி எண்டதைச் சொல்லுது.'

'வேணி! எனக்கும் கதைக்கத் தெரியும். நான் உன்னைக்  கலியாணம் செய்தது எனக்கு ஒரு மனிசி வேணுமெண்டொழிய ஒரு மாப்பிள்ளை வேணுமெண்டில்லை.'

'எனக்கும் கதைக்கத் தெரியும்.'

'என்ன திருப்பித் திருப்பிக் கதைச்சுக் கொண்டிருக்கிறாய்? கலியாணம் கட்டி இரண்டாம் கிழமை இப்பிடி மனிசிக்காரி புரிசனோடை கட்சிகட்டிக்கொண்டு நிக்கிறது ஜேர்மனியிலை என்ரை வீட்டிலையாத்தான் இருக்கும்.'

'ஏன் நீங்கள் எல்லா வீட்டிலையும் போய்ப் பாத்துக்கொண்டே வந்தனீங்கள்?'

'கடிநாயை வீட்டுக்கை வைச்சிருக்கலாம் இப்பிடி ஒரு குரைக்கிற நாயை வீட்டுக்கை வைச்சிருந்தா வீடு அதிர்ந்தே வெடிச்சுப்போம்!'
'என்னைப் பார்த்து நாய் எண்டு சொல்லுறியோ.? உன்னைப் பார்த்து நான் குரங்கெண்டால் எப்பிடி?'

'நான் உன்னை நாய் எண்டு சொல்லேல்லை. நான்தான் நாய். ஏன் தெரியுமே...? பைத்தியம் ஒண்டைப் பெண்சாதி எண்டு கட்டிக்  கொண்டு வந்திருக்கிறேனே! என்னை நாய் எண்டும் சொல்லலாம் குரங்கெண்டும் சொல்லலாம்.'

'நான் பைத்தியமோ...? அண்ணை அறிஞ்சா உன்னை அடிச்சே கொண்டிடுவான்.'

'ஐயோ! எந்தச் சனியனிலை முழிச்சனானோ தெரியேல்லை.'

'என்னிலை முழிச்சனி, அப்ப நான் சனியனோ...?'

'ஈஸ்வரா...ஈஸ்வரா.... ஒண்டும் வேண்டாம்' என்று நேரத்தைப்  பார்த்துவிட்டு வேலைக்குப் போட்ட ஜக்கற்றைக் கழற்றிப் போட்டு, 'நான் என்ன செய்யிறது?' என்று கேட்டான்.

'என்னண்டாலும் செய்யுங்கோவன்! எனக்கென்ன?' என்றாள்.

'லீவு எடுக்கச் சொன்னீரப்பா!'

'அப்பா எண்டு சொல்லவேண்டாம். எனக்குப் பிடிக்காது.'

'சரி சொல்லேல்லை. ஒரு கிழமை லீவு எடுக்கிறன்.. என்ன?'

'நீங்கள் லீவு எடுத்தாலென்ன? வேலைக்குப் போனாலென்ன? உங்களோடை கத்தித் தொண்டை வறண்டு போச்சு. ரீ போட்டாத் தான் சரி வேணுமெண்டா நீங்களும் குடிச்சிட்டுப்போங்கோ! ஒரு அறிவு கெட்ட சனமாக் கிடக்கு. படிப்பறிவில்லாத தாய், தகப்பனுக்குப் பிறந்ததுகள் இப்பிடித்தானே இருக்கும். கலியாணம் செய்தால் வந்து போன சனங்கள் வீட்டை போய்வரவேணும்  நாலு பேர் வந்து போக வீட்டை வசதியா வைச்சிருக்க வேணும். இதெல்லாம் நான் சொல்லித்தெரிய வேணும்... பத்து வருசம் யூரோப்பிலை எண்டு பட்டை குத்திக்கொண்டு திரியினமேயொழிய, புத்தியெண்டது மண்டைக்கை ஒரு மண்ணளவுகூட இல்லை.'

'சரி, தேத்தண்ணியைப் போடு! குடிச்சிட்டுப் போய் லீவு எழுதியிட்டு வாறன. போக வேண்டிய இடத்துக்குப் போவம்!' என்றான்.

'விளங்கினால் சரி!' என்று வேணி சமையலறைக்குச்  சென்றாள்.

என்ன செய்வதென்று தெரியாதவனாய் தலையைப் பொத்திக் கொண்டு ஹோலுக்குள் அங்குமிங்கும் நடந்தான் கண்ணன்.


பரதன் கோகுலனின் நண்பன். ஜானகி வீட்டுக்குகு கோகுலனுடன் வருவான். கைவேலைகள் செய்யும் ஆற்றல் கொண்டவன். ஜானகி வீட்டில் வெப்பமூட்டி, தண்ணீர்க்குழாய், மின்னிணைப்பு போன்றவற்றில் ஏற்படும் சிறிய திருத்தவேலைகளைச் செய்வான். அண்மையில் சற்றலைற் கோப்பை பூட்டி, தமிழ் றேடியோ கேட்பதற்கும் ஆவன செய்திருந்தான்.

சில மாதங்களாக அவன் தானாக ஜானகிவீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டான்.
வா! என்று அழைத்தால்  வருவான்.
வேணியின் திருமணம் சம்பந்தப்பட்ட வேலைகளில் கோகுலனுக்குப் பெரிதும் உதவியாக இருந்தவன்.

அன்று ஒருநாள் தன் மனதில் அரும்பிய எண்ணத்தைக் கோகுலனுக்குத் தெரிவித்தான்.

'அக்காவோடை நேரை கதையுங்கோ!' என்று கோகுலன்  சொன்னான்.

'வேண்டாம்! எதுக்கும் சில வழிமுறையள்  இருக்கு! அக்காவோடை நீ கதை! அவ சம்மதிச்சால்  பிறகு நேரை கதைக்கலாம்;' என்று பரதன் தெரிவித்ததையடுத்து ஜானகிக்கு அவன் சொன்னதைப்  பக்குவமாக கோகுலன் எடுத்துக் கூறினான்.

'இப்படியான எண்ணத்தில் யாரும் என்ரை வீட்டுக்கை வரக்கூடாது' என்று அடித்துச் சொன்னாள் ஜானகி.

'நல்ல மனிசன். ஒருவிதத்தில்  பாவம்!'

'நான் யாரையும் எடைபோட்டுப் பார்க்கவோ இரக்கப்பட்டுத் தூக்கக்கூடிய நிலையிலோ இல்லை.'

'கோவிக்காதையக்கா! நீ சந்தோசமாயிருந்தால்   நானும் சந்தோசப்  படுவன். அப்பா, அம்மாவும் உன்னை நினைச்சு எவ்வளவு கவலைப்படுகிறார்கள்... கொஞ்சம் யோசிச்சுப்பார்!'

'என்னை உனக்கு நல்லாத்தெரியும். தெரிஞ்சுகொண்டும் கேக்கிறியே கோகுலன். நான் நிம்மதியா இருக்கிறன். இதுக்கு மேலை நான் ஒண்டையும் எதிர்பாக்கேல்லை.'

'அப்பிடிச் சொல்லாதை அக்கா! வெளிநாட்டிலை எவ்வளவு பேர் எப்பிடியெல்லாம்  வாழுறாங்கள்! உனக்கு இப்பிடியொரு சந்தர்ப்பம் கடவுளின் அருள் என்றுகூடச் சொல்லலாம்.'

'கடவுளை இழுக்காதை! கடவுளுக்கு நாங்கள் சந்தோசமா இருந்தது பிடிக்கேல்லைத்தானே! வேண்டாம். என்னைக் கவலைப் படுத்தாதே!'

'பிள்ளையளின்ரை எதிர்காலத்தையாவது யோசியன். உனக்காக வேண்டாம் அதுகளுக்கு ஒரு துணையெல்லோ!'

'அவங்களுக்கு இருக்கிற துணையள் போதும்! ஆரோ ஒருத்தனைப் பார்த்து அப்பா! எண்டு அவங்கள் கூப்பிட வேண்டாம். என்னாலை தாங்கிக்கொள்ள முடியாது.'

'விளங்குது அக்கா! உன்னுடைய நிலை எனக்கு நல்லா விளங்குது!
அத்தான்ரை இடத்தைக் கடவுளாலை கூட நிரப்ப முடியாது. ஆனால் பரதன்.... அவரும் பாவம். மனிசிக்காரி விட்டிட்டுப் போன பிறகும் இவ்வளவுகாலமும் தனியாத்தானே இருக்கிறார். நல்ல பிறன்ஸாக இருக்கலாம் இல்லையோ...?'

'நல்ல பிறன்ஸாக இருக்கலாம். நான் இல்லையெண்டு சொல்லேல்லையே!'

'அக்கா! விளங்காமல் கதைக்காதை!'

'என்ன விளங்காமல் கதைக்கிறன்! எனக்கு இன்னொரு கலியாணம், இன்னொரு வாழ்க்கை வேண்டாம்.'

'தடி முறிக்கிறமாதிரி பதில் சொல்லாதேங்கோ! ஒரு முடிவிலை இன்னொரு ஆரம்பம்.... இது இயற்கையின் விதி.'

'ஓ! இல்லையெண்டு நான் சொல்லேல்லை. அவர் இருக்கும் போது நான் ஒண்டுக்கும் யோசிக்காமல் இருந்தன். எஞ்சினிலை கொழுவின பெட்டிபோல வாழ்க்கைப் பாதையில் ஓடிக்கொண்டிருந்தேன். பொறுப்பெல்லாம் அவர் தலையிலை. நல்லா சிந்தித்தார். திட்டமிட்டு நடந்தார். நல்ல வாழ்க்கை தந்தார். மரணம் இப்பிடி இடையில் வருமெண்டு ஆர் நினைச்சது? ஆனாலும் பார்! தனக்கு ஏதும் நடந்தாலும் நானோ பிள்ளையளோ தெருவுக்கு வந்திடக்கூடாது... இன்னொருத்தரிட்டைப் போய்க் கையேந்தக்கூடாது எண்டு மனிசன் எல்லா ஒழுங்கும் செய்திருக்கிறார்! அவரின்ரை பொறுப்பு இப்ப என்ரை தலையிலை. எண்டாலும் அதைக் கொண்டு நடத்த எனக்கு மனிசன் வழிகாட்டிப் போட்டுத்தான் போயிருக்கிறார்.'

'சரி! சரி! இனி ஏன் அழுகிறாய்...? அழாதை! கண்ணைத் துடைச்சுப்போட்டு சமைக்கிற அலுவலைப் பார்! பெடியள் வரப்போறாங்கள்!' என்று அவளைச் சமாதானம் செய்தான் கோகுலன்.

இதன்பின் அவசியம் ஏற்படும்போது மட்டும்தான் ஜானகி வீட்டுக்குப் பரதன் வருவது வழக்கம்.


யசோ தன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
'வா யசோ! கூப்பிட்டா நான் வந்திருப்பன்தானே! கவனம்...' என்று ஜானகி அன்போடு உபசரிக்க, கோகுலனும் அவள் சுகத்தை ஆதரவு தழுவக் கேட்டான்.

'இப்ப எப்பிடியிருக்கு?'

'பறவாயில்லை. முந்தினதைவிட எவ்வளவோ சுகம். இவ்வளவு கெதியா எழும்பி நடப்பன் எண்டு நான் நினைக்கேல்லை.'

'கடவுள் செயல். நீங்கள் கும்பிட்ட நாராயணன் திருவருள்தான் எல்லாம்.'

'இனி என்னை முதலாளி வேலைக்கு வரவேண்டாமெண்டு சொல்லுறவரோ தெரியாது.'

'ஏன்? அவருக்கு உம்மிலை நல்ல விருப்பம்தானே. அடிக்கடி விசாரிப்பார். 'யசோ!' என்று நல்ல வடிவா இழுத்துச் சொல்லுவார்.'

அப்போ ஜானகி யசோவைப் பார்த்து,
'வருத்தம் மாற நீர் ஏதாவது படியுமன். றெஸ்றோறன்ற்வேலை உமக்குக் கஸ்டமெல்லே! எழும்பி இருக்கமாட்டாமல் இருக்கிறீர். இப்ப ஏன் வேலைக்கதை? சுகம் வரட்டும். பிறகு பாப்பம்.'

யசோ ஹோலுக்குள் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள். அப்போ தொலைபேசி அடித்தது. எடுத்து,

'ஹலோ! யசோ கதைக்கிறன்!' எண்டவள்,

'அண்ணை! சுகமாக இருக்கிறன்.... மருந்துகள் எடுக்கிறன்... இரண்டு நாளைக்கொருக்கா வரச்சொல்லி டொக்டரிடம் போனனான். இப்ப ஒரு கிழமைக்கொருக்கா செக் பண்ண வரச் சொல்லியிருக்கினம்.'

'உன்னைத் தனிய விட்டிட்டு வந்தது எவ்வளவு பேய்த்தனம் எண்டு இஞ்சை அண்ணியும் சரியாக் கவலைப்படுகிறா. இரவிலை நித்திரை கொள்ளாமல் உன்னைப்பற்றித்தான் கதைச்சுக்கொண்டிருப்பம். ஒரே யோசினையாக் கிடக்கு!'

'நான் நல்ல சுகமா இருக்கிறன். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம். இஞ்சை ஜானகியக்கா கோகுலன் எல்லாரும் என்னை நல்லாப் பாக்கினம். அவைக்குத்தான் என்ன கைமாறு செய்யப்போறனோ தெரியாது.'

'அந்தப் போக்கிலியை நம்பி உன்னை அவனிட்டை ஒப்படைச்சது என்ரை மடைத்தனம். நல்லபிள்ளை மாதிரி இருந்தான்.... இப்பிடிச் செய்ய என்னெண்டு மனம் வந்தது?'

'அண்ணை! சும்மா ஏன் நீங்கள் உங்கை இருந்து கொண்டு கவலைப்படுகிறியள்? எனக்கு ஒரு குறையுமில்லை. கண்ணன் கலியாணம் செய்து தன்ரை பாதையிலை போட்டார். அவரின்ரை கதை இனிமேல் எங்களுக்கு வேண்டாமண்ணை!'

'உவங்களையெல்லாம் கடவுள் சும்மா விடமாட்டார்... என்று தன் மனக்கவலைகளைக் கொட்டினான் அண்ணன் வரதராசன்.

'வேறை என்ன அண்ணை? நான் ஏதாவது அவசரம் எண்டா எடுப்பன்தானே! அண்ணி, பிள்ளையளைக் கேட்டதாச் சொல்லுங்கோ!' என்றுவிட்டு ரெலிபோனை வைத்தாள் யசோ.

அப்போ ஜானகி வெளியேயிருந்து வீட்டுக்கு வந்தாள்.

'அண்ணை எடுத்தவர். என்னை நினைச்சு அண்ணியும் அவரும் நல்லாக் கவலைப்படுகினம்.'

'தூர இருக்கேக்கை வருத்தம் துன்பம் எண்டு நினைக்கப் பெரிசாக் கவலைப்படத்தான் தோன்றும். நேருக்கு நேரை பார்க்கக் கதைக்கக் கவலை கொஞ்சம் குறையிறது வழக்கம்தானே! என்ன செய்யிறது...?'

'நீங்களும் கோகுலனும் பக்கத்திலை இருந்து பார்க்கிற தாலை எனக்கு ஒரு குறையுமில்லையெண்டு சொன்னனான். அது அவருக்குக் கொஞ்சம் ஆறுதல்.'

'எல்லாருக்கும் எங்களைப்பற்றி பெரிசா புழுகி விடுவாய். மனிசர் எண்டா ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்யிறது தானே!' என்று சமையலறைக்குட் போனவள் அங்கே சமைத்து வைத்திருப்பதைக் கண்டு, கோபமாக வெளியே வந்து,

'யசோ! என்ன செய்திருக்கிறீர்.. சொன்னா கேக்கமாட்டீர்... டொக்டர் கொஞ்சநாளைக்கு ஒரு வேலையும் செய்ய வேண்டா மெண்டு எச்சரிச்செல்லே விட்டவர். நீர் சோறு கறியெல்லாம் சமைச்சு இவ்வளவு வேலையும் பாத்திருக்கிறீர்!'

'அக்கா! என்னாலை ஏலக்கூடியதைத்தான் செய்தனான். சும்மா வீட்டுக்கை இருக்கச் சினமாக்கிடக்கு!'

'றேடியோ கிடக்கு ரிவி இருக்கு.... எவ்வளவு புத்தகங்கள் இருக்கு... பொழுதா போகாது? வரட்டும் கோகுலன். அவன் சொன்னாத்தான் உமக்கு ஏறும்!'

'அக்கா பிளீஸ்! அவரிட்டைச் சொல்லிப் போடாதேங்கோ! என்ரை அக்காவெல்லே.... மெதுவா மெதுவா ஏதோ செய்தனான். எனக்கு ஒரு கஸ்டமுமில்லை. றைஸ்குக்கருக்கை சோறைப் போட்டிட்டு, இரண்டு கறி சமைச்சிருக்கிறன். இதென்ன ஊரே...? விறகு தேடி, அடுப்பு மூட்டி, வாளி எடுத்துத் தண்ணி அள்ளிச் சிரமப்பட...?

'நீ கதைப்பாய்... என்ரை யசோவெல்லே... கொஞ்ச நாளைக்குக் கவனமாக இரடி! எவ்வளவு பெரிய ஒப்பரேசன். சாகக் கிடந்து தப்பி எழும்பிருக்கிறாய்.'

'நான் என்ன குழந்தைப்பிள்ளையே? என்னாலை முடிஞ்ச தைத்தானே செய்யிறன். அதோடை டொக்டர் உடம்புக்கு அசைவு வேணும்... லேசான வேலைகள், எக்ஸ்சசைஸ் எல்லாம் செய்யவேணும் எண்டுதானே சொல்லியிருக்கிறார். அக்கா கோகுலனுக்குச் சொல்லிப் போடாதேங்கோ! அவர் கத்துவார் பிளீஸ்'

'சரி! நான் சொல்லேல்லை எங்கை இவங்கள்...?'

'சாப்பிட்டு வெளியிலை விளையாடப்போட்டாங்கள்!'

'பள்ளிக்கூட வீட்டுவேலையெல்லாம்  செய்யேல்லையோ...?'

'செய்திட்டுத்தான் போனவை!' என்றாள் யசோ.


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 15
14.8.2019

விசா கிடைத்துவிட்டது





பங்குபற்றும் பாத்திரங்கள் - 

யசோ
கோகுலன்
ஜானகி  
கண்ணன்  
வேணி (கோகுலனின் தங்கை)


றெஸ்ரோறன்ரில் வெங்காயம், தக்காளி, சலாற் என்பன வெட்டுவதும் சமையலுக்கு வேண்டிய ஒழுங்குகள் செய்வதும் அவளது வேலை.

யசோவுக்கு நேரம் போவதே தெரியாமலிருக்கும். மூளையைப் போட்டு உடைக்காமல் கவலைகளை ஒரு ஓரத்தில் ஒதுக்கிவிட்டு, உலகத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

யசோ வேலையால் வீட்டுக்கு வந்து சமையலில் ஈடுபட்டிருக்க வீட்டுமணியொலித்தது.

தபாற்காரர்.

பெரிய எம்பலப்பில் பாஸ்போர்ட். இந்தியா எம்பசியிலிருந்து வந்திருந்தது. கையொப்பமிட்டு வாங்கிக் கொண்டாள்.
விசா அடிக்கப்பட்டிருந்தது.
சில நாட்கள் இந்த நினைப்பே அவளுக்கில்லை. இப்ப என்ன செய்யிறது...?

பாஸ்போர்ட் வந்த விடயத்தை யாருக்கும் சொல்லாமல் இருப்பது என்று தீர்மானித்தாள்.

மாதவனிடம் வட்டிக்குக் கடன் வாங்கி, வங்கியிலும் எடுத்து வேணியின் சீதனத்தைக் கொடுத்தான் கோகுலன்.

கல்யாணத்தேதி வைத்தாகிவிட்டது. பிள்ளையார் கோவிலில் கல்யாணம். சாப்பாடு, எல்லா ஒழுங்குகளும்  நடந்தன.

நகை, உடுப்பு வாங்குவது, பலகாரங்கள் செய்வது என்று ஒரே வேலையும் ஓட்டமுமாய் காரியங்கள் நடந்தன.

அந்த நெருக்கடியிலும்  கோகுலன்  யசோவிடம், 'ஏன் இன்னும் பாஸ்போர்ட் வரவில்லை...?' என்று கேட்டான்.

'நாளெடுக்கும்தானே... இப்ப என்ன அவசரம்?' என்று மறைக்க முயன்றாள் அவள்.

'ஒருக்கா எம்பஸிக்கு எடுத்துக் கேட்டிட்டு, நேரை போவம்!' என்றான் கோகுலன்.

'வேண்டாம்! வேண்டாம்! இரண்டு நாள் பாத்திட்டு எடுப்பம்.' என்று தடுத்தாள் யசோ.

கோகுலன் கேட்கவில்லை. தொலைபேசியை எடுத்து நம்பர்களை அழுத்தினான்.

யசோ விரைந்து வந்து தடுத்தவாறே,
'பாஸ்போர்ட் வந்திட்டுது' என்றாள்.

'வந்திட்டுதோ...! எங்கை?'

'வந்திட்டுது. அதை ஏன் இப்ப? நாளைக்குக் கலியாணவீடு முடியட்டும்.' என்றாள்.

'நான் என்ரை கண்ணாலை பாத்தால்தான் நம்புவன். பாஸ்போர்ட்டைக் காட்டும்.' என்றான்.

'நீங்கள் பிடிச்சா உடும்புப்பிடி!' என்றவள், எழுந்து சென்று பாஸ்போர்ட்டை எடுத்து வந்தாள்.

வாங்கிப் பார்த்துவிட்டு,
'வந்து எத்தினை நாளாகுது? உடனை சொல்லியிருக்கலாமெல்லே!'
என்று கேட்டான்.

'கலியாணம் நடக்கட்டும். அதுக்குப் பிறகு சொல்லலாமெண்டு இருந்தன்.'

'கலியாணம் நடக்கும்தானே! முதலிலை உம்முடைய வருத்தத்தை மாற்ற யோசிக்கவேணும்!'

'கோகுலன்! குழந்தை மாதிரி கதைக்காதேங்கோ!'

'என்ன குழந்தை மாதிரி...!'

'இந்தியா போறதெண்டா விளையாட்டே..? நீங்கள் படும் கஸ்டம் எனக்குத் தெரியும். பிளீஸ் வேண்டாம்!'

'ஒரு கஸ்டமுமில்லை. நீர் நாளைக்கு இந்தியாவுக்குப் போறீர்! ஆயித்தப்படுத்தும்!' என்று கோகுலன் உறுதியாகக் கூறிவிட்டு அவசரமாக வெளியேறினான்.

'நான் போகேல்லை... கோகுலன்! இஞ்சை நில்லுங்கோ....! சொல்லுறதைக் கேளுங்கோ!' என்று யசோ எவ்வளவோ தடுத்தும் அவன் கேட்கவில்லை. சோபாவில் உட்கார்ந்து பிரடி சார்வுப்  பகுதியில் பொறுக்க அண்ணார்ந்து பார்த்தபடி, கையையும் கட்டிக் கொண்டு யோசனையுடன் இருந்தாள் யசோ.

ஐானகி குளித்துவிட்டு, தலையிலே துவாய் முறுக்கியபடி கிடக்க, புதுமலர் போல வந்தாள்.
அவளைக் கண்டு, தலையை நிமிர்த்தி உட்கார்ந்தபடி,
'கோகுலன் எனக்கு ரிக்கற் எடுக்கப் போகிறார்!' என்றாள்.

'பாஸ்போர்ட்..!' என்று ஆச்சரியம் முகத்தில் விரியக் கேட்டாள் ஐானகி.

'பாஸ்போர்ட் விசா அடிச்சு வந்திட்டுது. நான் சொல்லேல்லை. இப்ப எம்பஸிக்கு ரெலிபோன் எடுக்கப்போறன் எண்டு சொன்னார். அதுதான் பாஸ்போர்ட் வந்திட்டுது எண்டு சொன்னனான். அதைப் பாத்திட்டு நாளைக்கு நீர் இந்தியாவுக்குப் போறீர் எண்டு, நான் மறிக்க மறிக்கக் கேளாத மாதிரிப் போட்டார்.

'நீர் என்ன யசோ.... குழந்தை மாதிரி? எப்ப விசா வரும் எண்டு நாங்கள் பாத்துக்கொண்டிருக்கிறம்... வந்த விசாவைச் சொல்லாமல் என்ன நீர்....?'

'நீங்கள் கோகுலனைவிட மோசமாக் கிடக்கு! நாளைக்கு உங்கடை தங்கச்சிக்குக் கலியாணம். நிலைமை தெரியாமல் கதைக்கிறீங்கள்!'

'கலியாணத்துக்கும் இதுக்கும் என்ன...? முதலிலை நீ குணமாக வேணும். இந்தியா போறதெண்டுதானே பிளான் போட்டிருந்தது.'

'அதுக்குக் காசெல்லே வேணும்!'

'காசில்லாமலே கோகுலன் ரிக்கற் எடுக்கப் போறான்?'

'கலியாணவீட்டுக்குச் செலவழிக்க வேண்டிய காசு கையில் வைச்சிருக்கிறார். அதை எனக்குத் தந்திட்டு பிறகு தங்கச்சியாருக்கு என்ன சொல்லப்போறார்?'

'அதை நான் பாத்துக்கொள்ளுறன். நீ இந்தியாவுக்குப் போய் வருத்தத்தை மாத்திக்கொண்டு வா!'

'அக்கா! நான் சொல்லுறதைக் கேளுங்கோ!'

'நீ ஒண்டும் சொல்ல வேண்டாம். ஒரு மனதோடை போய் நோயைக் குணப்படுத்திக்கொண்டு வா!'
கோகுலன் திரும்பி வந்தான்.

'ரிக்கற் விசாரிக்கச் சொல்லியிருக்கிறன். நாளைக்கிடையில் தெரியும். இல்லாட்டி எயர்போர்ட்டிலை போய்ப் பாக்கிறது?' என்றான்.
'சூட்கேஸை றெடி பண்ணிவை!' என்றாள் ஐானகி.

கல்யாணமும் அறுவைச் சிகிட்சையும்


வேணியைக் கூட்டிக்கொண்டு கண்ணன் வந்தான்.

'கலியாணவீடு எண்ட அமளியே இல்லை!' என்றாள் வேணி.

'அமளிதுமளியிலை ஒண்டுமில்லை. ஆகவேண்டியது சரியா நடந்;தா சரிதானே!' என்றான் கோகுலன்.

'வீடியோவுக்கு