WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

Kovil - Temple
பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி  ஆலயம்




விசவத்தனை பதியுறையும் எம்பெருமானுக்கு தேர்த் திருவிழா

04.04..2023
 
பண்ணாகம் விசவத்தனைப்பதியினில் வீற்றிருந்து திருவருள் பாலிக்கும் கலியுகவரதன் முருகப்பெருமானின் இரதோற்சவம் நாளைய தினம் பக்தி பூர்வமாக நிகழவுள்ளது. 
 04.04.2023 செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணிக்கு முருகப்பெருமானுக்கு நவகலச அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பூஜை வழிபாடுகள் நிகழப்பெற்று, காலை 8.00 மணிக்கு சண்முகார்ச்சனையும், காலை 9.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் நிகழப்பெற்று தவில் நாத கான இசை மழை பொழிய சிம்மாசனத்தில் சிங்காரநாயகனாக சண்முகப்பெருமான் எழுந்தருளுவார். தொடர்ந்து முற்பகல் 10.00 மணிக்கு இரதத்தில் ஆரோகணிப்பார்.


பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி 

ஆலயம் வருட மஹோற்சவ  விஞ்ஞாபனம் 2023


கொடியேற்றம் - 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை

இரதோற்சவம் - 04.04..2023 செவ்வாய்க்கிழமை. 

தீர்த்தோற்சவம் - 05.04.2023 புதன்கிழமை 

மிக மிக பக்திபரவசமாக சிறப்பாக  நடைபெறும்.

www.pannagam.com

27.3.2021 பண்ணாகம் விசவத்தனை முருகன் ஆலய தேர்த்திருவிழா மிக பக்தி பரவசமாக நிறைவுபெற்றது.

இவ்வருடம் மிக மிக சிக்கலான கொரோனாக் காலமாதலால் திருவிழாக்கள் மிக விமர்சையாக இல்லாமல் இருந்தபோதும்  தேர்த்திருவிழா மிக எழிமையாக மக்கள் நேர்த்திகடன்களைப் பாதிக்காகலும் பல பக்தர்களை உள்வாங்கி முருகன் திருவருளால் நடைபெற்றது.  இவ்வருடம் ஏழு பக்தர்கள் பறவைக்காவடி  நேத்திக்கடன்களை நிறைவுசெய்த்து குறிப்பிடத்தக்கது. 
பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி கோவில் விகாரி வருட மஹோற்சவ விஞ்ஞாபனம்  2020
 விசவத்தனை வேலவனின் 2020 மகோற்சவம் நாட்டு நிலமை காரணமாக

 பிற்போடப்பட்டுள்ளதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றார்கள்.

பரிபாலன சபையின
பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி 

கோவில் விகாரி வருட மஹோற்சவ 

விஞ்ஞாபனம் 2020

கொடியேற்றம் - 27.03.2020 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணி 

இரதோற்சவம் - 05.04.2020 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணி 

தீர்த்தோற்சவம் - 06.04.2020 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணி
பண்ணாகம் விசவர்த்தனை முருகன் ஆலய புதிய தோற்றத்தில் 27.3.2020 திருவிழா ஆரம்பம் . 

சங்கானை மேற்கில் அமைந்துள்ள பண்ணாகம் -விசவத்தனை என்னும் புண்ணிய பதியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் . பண்ணாக மக்களின் குல தெய்வமாக விளங்குபவர் விசவத்தனை முருகன். கிழக்கே நோக்கிய கோயில் வாசலுடன் பிள்ளையார், வைரவர், முத்துக்குமார், ஆறுமுகசாமி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் என்பவற்றை பரிவாரத்தெய்வங்களாக கொண்டு இக் கோயில் விளங்குகின்றது. தினமும் மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.

இவ்வாலயத்தின் இராஜகோபுரம் பொதுமக்களின் பெருநிதியுடன்     2010இல் கோயிலின் பிரதான வாயிலில்  இராஜகோபுரம்  பூர்தியாக்கி கும்பாவிசேகம் நடைபெற்று. 

மீண்டும் பெதுமக்களின் பாரிய பங்களிப்புடன் உள்பிரகாரமண்டபங்கள் மிக நவீன வடிமைப்பில் உருவாக்கிய 2017,2018  ஆலய நிர்வாகத்திற்கு எம்மக்களின் நன்றிகள். இன்று 2019 இல் புதுப் பொலிவுடன் ஆலயம் மிளிர்கிறது.


ஆலய உள் அமைப்பின் புதிய தோற்றம். 2019

முருகப்பெருமானின் மெய்யடியார்களே!


எமது ஊரின் அடையாளமாய், எம்மையெல்லாம் தாங்கிடும் வேராய், எம்மை அனுதினமும் காத்தருளும் வேலவனாய் எங்களூரில் வீற்றிருந்து வினையறுக்கும் விசவத்தனை முருகப்பெருமான் திருத்தலத்தில் முருகப்பெருமானின் பெருங்கருணையினால் பெருந்திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. மூன்று கோடி ரூபா மதிப்பீட்டில் பெருந்திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றது. கோவிலின் முன்பக்க வேலைகள் செம்மையுற நடைபெற்று நிறைவுற்று, கோவிலின் பின்பகுதி கொட்டகைகள் முழுவதும் கழற்றப்பட்டு, பழுதடைந்த தூண்கள் அகற்றப்பட்டு புதிய தூண்கள் நிறுவப்பட்டு வருகின்றது. அந்த வகையில் முருகப்பெருமானின் முத்தான திருத்தல திருப்பணி வேலைகள் யாவும் செம்மையுற நடைபெற்று நிறைவடைந்து திருத்தலம் புதுப்பொலிவு பெறுவதற்கு உங்கள் ஒவ்வொருவரினதும் நிதிப்பங்களிப்பினை எதிர்பார்த்திருக்கின்றோம்.
மகா கும்பாபிஷேகம் நிகழப்பெற்று இந்த வருடம் இருபது வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. வெகுவிரைவில் மகா கும்பாபிசேகம் நிகழ காலம் கனிந்துள்ளது. கடந்த காலங்களில் எவ்வாறு 325 இலட்சங்கள் வரை தந்து பல்வேறு செயற்பாடுகளைச் செய்திட வைத்தீர்களோ, திருப்பணியினை செம்மையுற நடைபெற வைத்தீர்களோ அது போல் இம்முறையும் இத் தொகையைத் தந்து இப்பெரும் இறை கைங்கரியத்தை செம்மையுற நிறைவு செய்ய வைத்து முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

* முடிந்தளவு நிதி தாருங்கள் அல்லது உங்கள் பெயரால் ஏதாவது திருப்பணி வேலை ஒன்றை பொறுப்பேற்று கலியுகவரதனின் கருணையை பெற்றுக் கொள்ளுங்கள்.

* எம்மோடு தொடர்பு கொண்டு உங்கள் நிதியினை தந்துதவி, நற்காரியமாற்றிய பெரும் மனநிறைவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.


முன்பகுதி கொட்டகை நிறைவுபெற்று தொடர்ந்து   தெற்கு பக்கம், மேற்கு பக்கம், வடக்கு பக்கத்தின் கொட்டகைகள் முழுவதும் கழற்றப்பட்டு, பழைய தூண்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

உங்கள் நிதிப்பங்களிப்பினை மக்கள் வங்கி A/C NO :- 108-2-001-7-0011324 என்ற கோவில் கணக்கிலக்கத்திற்கும் அனுப்பி வைக்கலாம்.

பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி கோவிலில் நடைபெற்று வருகின்ற உயர்திருப்பணிக்கு நிதி உதவி வழங்கியவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகி உள்ளது.  

மேலும் திருப்பணி  தொடர பெரும் நிதியை மக்கள் வாரி வழங்கி வருகிறார்கள். உங்கள் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்று உங்கள் குடும்பத்திற்கு முருகன் அருள் கிடைக்கட்டும்.   பணம் கொடுத்து பின் உங்கள் பெயர் பட்டியலில் இல்லாவிட்டால் தொடர்பு கொண்டு சரிபாருங்கள்  நன்றி

பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி ஆலயம்

2019 வருடாந்த   மகோற்சவம்.
 

11.3.2019 கொடியேற்றம் 

20.3.2019 தேர்த் திருவிழா

21.3.2019 தீர்த்தத் திருவிழா


பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி கோவிலில் நடைபெற்று வருகின்ற உயர்திருப்பணி

சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்தகார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள்.


கார்த்திகை தீபம் -- விளக்கீடு


கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதபௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்ததிருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமதுஇல்லங்களிலும் கோயில்களிலும்பிரகாசமான தீபங்களை ஏற்றிமகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத்திருநாள் ஆகும். கார்த்திகை மாதம்தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழைபொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார்என்றும்இ கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாகமலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன்கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள் மீன்பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள் மீன்களில் ஒரு நாள் மீன்கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்றகார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டுவருகின்றது.

கார்த்திகை மாதத்தின் பண்டிகைகளில்முக்கியமானதாக கருதப்படுவது கார்த்திகை தீபம் என்பதுஎல்லோருக்கும் தெரிந்த சேதிதான். சிவன் கார்த்திகை மாதகிருத்திகை நட்சத்திரத்தில் திருமால் பிரம்மன் இருவருக்கும் அக்னிவடிவமாக காட்சி தந்தார். அதாவது தமக்குள் யார் பெரியவர் என்றபோட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது அந்தபோட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் சோதியாக எழுந்துநின்று சோதியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காணவேண்டும். அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களேபெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்டஇருவரும் தமது பயணத்தத் தொடங்கினர். அன்னப்பறவையாகஉருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார்.பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத்துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார். இருவரும்பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடையமுடியவில்லை. கடைசியில் தமது தோல்வியைஇருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி சோதிப்பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்டவேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக்கொள்கிறார். அதன்படி ஒவ்வோர் ஆண்டும்கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகைதீபம் நாள். அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி மையமானதிருவண்ணாமலையில் தீபத்தை மலைமீது ஏற்றி வைக்கிறார்கள்என்பது கதை.

இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்ததிருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாககொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும்கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.                                        

இத்தீபத்திருநாள் திருவண்ணாமலையில் மிகவும்சிறப்பாகக் கொண்டாடப்படுவதால் இதை திருவண்ணாமலைத்தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக்காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில்இ தீபத்தினத்தன்றுதிருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

இத்திருநாள் முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும்கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை முதல்விரதமிருந்து மாலை பூஜை முடிந்தபின்னர் அகல் விளக்கேற்றிவரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இதுதான் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். சிவன் தனதுமூன்றாவது கண்ணான நெற்றிக் கண் மூலம் ஆறு பொறிகளைதெறிக்க வைக்கிறார். அவை ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாகமிதந்து சரவணப் பொய்கை அடைகின்றன. அங்கே சக்தியானவள்தமது சக்தியின் மூலம் ஆறு பெண்களை உருவாக்கி ஆளுக்கொருசுடரை வளர்க்க வைக்கிறாள். அந்த ஆறு சுடர்களும் ஆறுகுழந்தைகளாக வளர்கின்றன. அந்தக் குழந்தைகளைவளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்கள் வளர்த்தகுழந்தைகள் கார்த்தைகேயன். குழந்தை வளர்ந்ததும் சிவனும்சக்தியும் அங்கே வருகின்றனர். அப்போது சக்தி ஆறுகுழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள்.அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது.சிவன் கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாகமாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்றுஅழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்தகார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள். அதாவதுகார்த்திகேயன் பிறந்தநாள்.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள்மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும் வீட்டுமுற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில்தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள்ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தேவாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றிஅடைத்து "சொக்கப்பானை"க்கு அக்கினியிட்டு சோதிவடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான்சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவுகூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால்அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்க வைத்துவழிபடுவர்.

இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவசமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்றுஅதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்திஇரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில்காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தைநிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள்வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம். பௌர்ணமி நிலவுகிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக்குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும்வீடுகளுக்குள்ளும் வெளியிலும் அகல் விளக்குகளில் தீபமேற்றிநேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்திவழிபடுவர்.

சிவபெருமானின் வடிவங்களில் முக்கியமான ஒன்றுஅர்த்தநாரீஸ்வர வடிவமும் ஒன்றாகும். சிறந்த சிவபக்தரானபிருங்கி முனிவர் சக்திதேவியை வணங்காமல் சிவபெருமானைமட்டும் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பராசக்திபிருங்கிமுனிவரின் சக்தியை பறித்து விடுகிறார். உடலில் சக்திஇல்லாமல் பிருங்கி முனிவர் துவண்டு போனார். இதை கண்டசிவபெருமான் சிவனும் – சக்தியும் ஒன்றே என்பதை இவர்கள்மூலமாக உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திதேவியைவிட்டு பிரிந்தார் ஈசன். சிவபக்தரை சோதித்துவிட்டோமே எனவருந்திய சக்திதேவி தன் தவறை உணர்ந்து சிவலிங்கமே மலையாகஇருக்கும் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று தவம்செய்தார். தவத்தை ஏற்ற சிவபெருமான் சக்திதேவிக்கு காட்சி தந்துதனது இடதுபாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். ஆகவே கார்த்திகை தீபத்தன்று சிவபெருமான்அர்த்தநாரீஸ்வராக வலம் வருவார். இந்த நாளில்அர்த்தநாரீஸ்வரரின் தரிசனத்தை கண்டால் கோடி புண்ணியம்கிட்டும். திருவண்ணாமலை சென்று அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்கஇயலாதவர்கள் மனதால் அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும்கோடி புண்ணியம் கிட்டும்.

கார்த்திகை தீபதன்று அதிகாலையில்அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம்மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பார்கள். பின்பு அந்த தீபங்களைஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவார்கள்.இதனை ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் என்ற தத்துவத்தைஉணர்த்துகிறது. சிவபெருமானே அனைத்து வடிவங்களிலும்இருக்கிறார் என்பதை இது தெரியப்படுத்துகிறது. மாலையில்கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள்எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்துஅர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம்ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில்விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஜோதிவடிவமாக காட்சி கொடுத்தது போல் நமக்கும்ஈசன் ஜோதிவடிவமாக காட்சி தருகிறார். மகாதீபம் ஏற்றும் வேளையில் மட்டுமேஅர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடியும். மற்றநாட்களில் இவர் சன்னதியை விட்டுவருவதில்லை. நம் இல்லத்தில் கார்த்திகைதீபதன்று அண்ணாமலையார் – உண்ணாமுலை அம்மன் படத்தைவைத்து கார்த்திகை தினத்தில் தோன்றிய முருகப்பெருமானையும்கார்த்திகை பெண்களையும் மனதால் நினைத்து ஆறு தீபங்கள் ஏற்றிவழிபடவேண்டும் . இந்த ஆறு தீபங்களை ஏற்றுவதற்கு முன்னதாகமஞ்சளில் விநாயகரை பிடித்து பூஜிக்க வேண்டும். பிறகு மாவிளக்குதீபம் ஏற்றிய பிறகு வீட்டின் வெளிபுறத்திலும் அகல்விளக்கு ஏற்றவேண்டும். பிறகு அரிசிபொரியை வைத்து அர்த்தநாரீஸ்வரரைமனதால் நினைத்து வணங்க வேண்டும். இதனால் சிவ-சக்தியின்அருளாசி நமக்கும் நம் குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைத்துசகல நலங்களோடு சுபிச்சமான வாழ்க்கை அமையும்.

கார்திகை மாதம் முழுவதும் தீபம் வீடுகளில் தீபம்ஏற்றுவது. சிறப்பாகும். முடியாத பட்சத்தில் பரணி, கார்த்திகை,ரோகிணி மூன்று நாட்கள் மட்டுமாவது தீபமேற்றுவது சிறப்பாகும்.அதாவது கார்த்திகை தீப நாளிற்கு முதல்நாள், கார்த்திகைதீபத்தன்று, கார்த்திகை தீபத்திற்கு அடுத்தநாள். வீட்டின் தலைவாசலில், கொல்லைபுற வாசலில், பூசை அறை வாசலில் எனகுறைந்த பட்சம் மூன்று தீபங்கள் ஏற்ற வேண்டும். மற்றப்படி வீட்டில்உள்ள அறைகளின் வாசல்கள் மற்ற இடங்கள் எல்லாம் வீடு தீபஒளியில் பிரகாசமாக இருக்கும் அளவிற்கு தீபங்கள் ஏற்ற வேண்டும்.

முறைப்படி விரதமிருந்து தீபமேற்றிவழிபடும் அனைவரின வாழ்விலும் ஒளிபிறக்கும். பரிபூரண நம்பிக்கையுடன்கடைப்பிடியுங்கள் ஒளிமயமானஎதிரகாலம் நிட்சயம்-


தொகுப்பு-  பண்ணாகம் இ.க.கண்ணன்

2016

முருகப்பெருமானின் பாலஸ்தாபன கும்பாபிசேகம் எதிர்வரும் 02.06.2016 வியாழக்கிழமை

பண்ணாகம் விசவத்தனை பதிதனில் வீற்றிருந்து தன்னை எண்ணி வழிபடும் அடியவர்களின் துயர் களைந்து வற்றாத செல்வத்தினையும் வளமான வாழ்வினையும் அருளுகின்ற முருகப்பெருமானின் பாலஸ்தாபன கும்பாபிசேகம் எதிர்வரும் 02.06.2016 வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வரும் கடக லக்கினமும் , அச்சுவினி நட்சத்திரமும் துவாதசி திதியும், அமிர்தசித்தயோகமும் கூடிய சுப முகூர்த்தத்தில் முருகப்பெருமானின் திருவருளினால் நிகழவுள்ளது.

கிரியா கால விபரம்
31.05.2016 செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கர்மாரம்பம், விநாயக வழிபாடு, ஸ்ரீகணபதிஹோமம், நவக்கிரக மகம், வாஸ்து சாந்தி
மாலை 5.00 மணிக்கு மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், கும்பஸ்தாபனம்,பேரசலனம், யாகபூஜை , பிம்பஸ்தாபனம்
01.06.2016 புதன்கிழமை காலை, மாலை யாகபூஜை , ஹோமம்
02.06.2016 வியாழக்கிழமை காலை யாகபூஜை , ஹோமம் , பூர்வபச்சிம சந்தானம் , காலை 9.30 முதல் 10.30 மணி வரையுள்ள சுபமுகூர்த்தத்தில் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் , தசதர்சனம் , மஹா அபிஷேகம் , பூஜை

கார்த்திகைத் திருவிழா


பண்ணாகம் விசவத்தனை முருகன் ஆலய கார்த்திகைத் திருவிழா 15.2.2016 மாலை 4.00 மணிக்கு மிகச் சிறப்பாக பக்திபரவசமாக நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு முருகன் அருட்கடாச்சத்தை பெற்றுக் கொள்ளவும்.

-ஆலய பரிபாலன சபை- 

பண்ணாகம் விசவத்தனை முருகன் ஆலயம்


சங்கானை மேற்கில் அமைந்துள்ள பண்ணாகம் -விசவத்தனை என்னும் புண்ணிய பதியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் . பண்ணாக மக்களின் குல தெய்வமாக விளங்குபவர் விசவத்தனை முருகன். கிழக்கே நோக்கிய கோயில் வாசலுடன் பிள்ளையார், வைரவர், முத்துக்குமார், ஆறுமுகசாமி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் என்பவற்றை பரிவாரத்தெய்வங்களாக கொண்டு இக் கோயில் விளங்குகின்றது. தினமும் மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.

இவ்வாலயத்தின் இராஜகோபுரம் பொதுமக்களின் பெருநிதியுடன்     2010இல் கோயிலின் பிரதான வாயிலில்  இராஜகோபுரம்  பூர்தியாக்கி கும்பாவிசேகம் நடைபெற்று புதுப் பொலிவுடன் ஆலயம் மிளிர்கிறது.

தற்போது ஆலய உள் சுற்றுமண்டபங்கள்  பழுதடைந்து  உடைந்து மழைகாலங்களில் ஒழுகும் நிலையில் உள்ளது இதை திருத்தி அமைக்கவேண்டிய நிலையில் ஆலயம் உள்ளது  எனவே அதற்கான நிதியினை பொதுமக்களிடம் ஆலயம் எதிர்பார்த்து நிற்கிறது. தங்களால் இயன்ற நிதியினை வாரி வழங்கமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


கீழே உள்ள எமது விளம்பரத்தைப் பாருங்கள்


ஆலய பரிபாலன சபை

பண்ணாகம் விசவத்தனை முருகன் கோயில்

சங்கானை மேற்கில் அமைந்துள்ள பண்ணாகம் -விசவத்தனை என்னும் புண்ணிய பதியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் . பண்ணாக மக்களின் குல தெய்வமாக விளங்குபவர் விசவத்தனை முருகன். கிழக்கே நோக்கிய கோயில் வாசலுடன் பிள்ளையார், வைரவர், முத்துக்குமார், ஆறுமுகசாமி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் என்பவற்றை பரிவாரத்தெய்வங்களாக கொண்டு இக் கோயில் விளங்குகின்றது. தினமும் மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.

தோற்றமும் தொடர் வளர்ச்சியும்

200 ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த கதிர்காமர் என்பவர் தனது சொந்தக் காணியில் ஒரு கொட்டில் கட்டி அதில் வைரவசூலம் வைத்து பூசை செய்து வழிபட்டு வந்தார். பின்னர் அக் கொட்டில் மடாலயமாக பெருப்பிக்கப்பட்டு ஊர் மக்கள் சேர்ந்து வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத முதல் செவ்வாயில் வைரவரிற்கு விளக்கு வைத்து அடுத்த செவ்வாய் ஊர்மக்கள் சேர்ந்து பொங்கல் பொங்கி படைத்து வழிபாடு செய்தார்கள். இந்தக் காலத்தில் பிராமணக் குருமார் பூசைக்கு நியமிக்கப்பட்டனர்.

கதிர்காமரின் பேரனாகிய சின்னட்டியர் காலத்தில் வைரவ மடாலயத்திற்கு அருகில் முருகப் பெருமானிற்கும் என ஒரு மடாலயம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சின்னட்டியர் மகன் செல்லப்பா காலத்தில் முருகனுக்கு ஆகம முறைப்படி ஆலயம் அமைக்கப்பட்டது. ஆனால் வைரவரின் இருப்பிடம் மாற்றம் செய்யப்படவில்லை. 1910ஆம் ஆண்டு கர்ப்பக்கிரகம், திருமஞ்சனக்கிணறு, மகாமண்டபம் என்பன அமைக்கப்பட்டன.

1912ஆம் ஆண்டு முதலாவது கும்பாபஷேகம் நடத்தப்பட்டது. இக் காலத்தில் பத்து நாட்கள் பங்குனி மாதத்தில் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. 1928ஆம் ஆண்டளவில் முருகைக் கற்களால் ஆன கற்பக்கிரகம் வைரக் கற்களால் மாற்றி அமைக்கப்பட்டது. இத்துடன் கொடிமரம், பலிபீடம், அர்த்தமண்டபம், தரிசனமண்டபம் போன்றனவும் கட்டப்பட்டு இதேகாலத்தில் இரண்டாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதன் பின் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழாக்கள் இடம்பெற்றன.

1948இல் சுவாமி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1954 இல் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. 1958இல் கோயில் பரிபாலன சபை உருவாக்கப்பட்டது. இது தற்போதும் ஆலய செயற்பாடுகளை பரிபாலனம் செய்து பராமரித்து வருகின்றது. 1966இல் புதிய சித்திரத் தேர் உருவாக்கப்ட்டது. தேர்முட்டி, தேர் தரிப்பிடம் என்பனவும் இக் காலத்தில் அமைக்கப்பட்டன.

1982ஆம் ஆண்டு நான்காவது கும்பாபிஷேகம் நடைபெற்றது; 1998இல் ஐந்தாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2010இல் கோயிலின் பிரதான வாயிலில்  இராஜகோபுரம்  பூர்தியாக்கி கும்பாவிசேகம் நடைபெற்று புதுப் பொலிவுடன் ஆலயம் மிளிர்கிறது.

விழாக்கள்

பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை தீர்த்த திருவிழாவாக கொண்டு வளர்பிறை முதல் பத்து நாட்கள் கொடியேற்றத்துடன் மகோஸ்சபம் ஆரம்பமாகும். சித்திரை மாத பூரணை வைகாசி மாத வைரவ பொங்கல், வைகாசி விசாகம் ஆடிச் செவ்வாய் புரட்டாதிச் சனி ஐப்பசி கந்தசஷ்டி கார்த்திகை விளக்கீடு மார்கழி திருவெம்பாவை தைப் பூசம் மாசி சிவராத்திரி

அன்னதான சபை இவ் ஆலயத்தில் நடைபெறும் விழாக்களின் போது அன்னதானம் வழங்குவதற்கென ஸ்ரீ முருகன் அன்னதான சபை என்ற அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இதற்கென ஆலயத்தின் முற்பகுதியில் பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.இதனை நிர்வகிப்பதற்கென தனியான நிர்வாக கட்டமைப்பும் செயற்பட்டு வருகின்றது.

---------------------------

14.3.2012 இல் விசவத்தனை முருகன் கோபுர

கும்பாபிஷேகம்.

பண்ணாகம் இணையத்தின் விஷேட இணைப்பு

வரலாறு மிக்க எங்கள் ஆலயம்

விசவத்தனை முருகன் கோயில் இலங்கை பண்ணாகத்தில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குல தெய்வமாக விளங்குபவர் விசவத்தனை முருகன். கிழக்கே நோக்கிய கோயில் வாசலுடன் பிள்ளையார், வைரவர், முத்துக்குமார், ஆறுமுகசாமி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் என்பவற்றை பரிவாரத்தெய்வங்களாக கொண்டு இக் கோயில் விளங்குகின்றது. தினமும் மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.

 200 ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த கதிர்காமர் என்பவர் தனது சொந்தக் காணியில் ஒரு கொட்டில் கட்டி அதில் வைரவசூலம் வைத்து பூசை செய்து வழிபட்டு வந்தார். பின்னர் அக் கொட்டில் மடாலயமாக பெருப்பிக்கப்பட்டு ஊர் மக்கள் சேர்ந்து வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத முதல் செவ்வாயில் வைரவரிற்கு விளக்கு வைத்து அடுத்த செவ்வாய் ஊர்மக்கள் சேர்ந்து பொங்கல் பொங்கி படைத்து வழிபாடு செய்தார்கள். இந்தக் காலத்தில் பிராமணக் குருமார் பூசைக்கு நியமிக்கப்பட்டனர்.

கதிர்காமரின் பேரனாகிய சின்னட்டியர் காலத்தில் வைரவ மடாலயத்திற்கு அருகில் முருகப் பெருமானிற்கும் என ஒரு மடாலயம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சின்னட்டியர் மகன் செல்லப்பா காலத்தில் முருகனுக்கு ஆகம முறைப்படி ஆலயம் அமைக்கப்பட்டது. ஆனால் வைரவரின் இருப்பிடம் மாற்றம் செய்யப்படவில்லை. 1910ஆம் ஆண்டு கர்ப்பக்கிரகம், திருமஞ்சனக்கிணறு, மகாமண்டபம் என்பன அமைக்கப்பட்டன.

1912ஆம் ஆண்டு முதலாவது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக் காலத்தில் பத்து நாட்கள் பங்குனி மாதத்தில் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. 1928ஆம் ஆண்டளவில் முருகைக் கற்களால் ஆன கற்பக்கிரகம் வைரக் கற்களால் மாற்றி அமைக்கப்பட்டது. இத்துடன் கொடிமரம், பலிபீடம், அர்த்தமண்டபம், தரிசனமண்டபம் போன்றனவும் கட்டப்பட்டு இதேகாலத்தில் இரண்டாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதன் பின் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழாக்கள் இடம்பெற்றன.

1948இல் சுவாமி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1954 இல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 1958இல் கோயில் பரிபாலன சபை உருவாக்கப்பட்டது. இது தற்போதும் ஆலய செயற்பாடுகளை பரிபாலனம் செய்து பராமரித்து வருகின்றது. 1966இல் புதிய சித்திரத் தேர் உருவாக்கப்ட்டது. தேர்முட்டி, தேர் தரிப்பிடம் என்பனவும் இக் காலத்தில் அமைக்கப்பட்டன.

1982ஆம் ஆண்டு நான்காவது கும்பாபிஷேகம் நடைபெற்றது; 1998இல் ஐந்தாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2010இல் கோயிலின் பிரதான வாயிலில் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து அதன் வேலைகள் நடைபெற்று 2012 நிறைவு நிலையில் உள்ளது. தொடர்ந்து உள் மண்டபங்கள் அனைத்தும் மீள்புனரமைப்பு செய்து முதலாவது கும்பாவிஷேகம் 1912ம் வருடம் நடத்தப்பட்டு இன்று 2012 இல் 100 வது வருடமாகிறது இந்த வருடம் மீளவும் கும்பாவிஷேகம் நடைபெறுவது மிக நல்ல பலன்களை மக்களுக்கு கிடைக்க ஏதுவாக அமையும் எனவே மக்கள் அனைவரும் ஒன்று பட்டு இத்திருப்பணிகளை நிறைவு செய்து முருகன் அருள் ஒளியை பண்ணாகத்திலும்  உலகவாழ் பண்ணாக மக்கள் மனைகளிலும் விளங்கச் செய்வோம்.

பண்ணாகம் இணைய ஆசிரியர் -இககி-

 

பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி கோவிலில் நடைபெற்று வருகின்ற உயர்திருப்பணிக்கு நிதி உதவி வழங்கியவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகி உள்ளது.  

மேலும் திருப்பணி  தொடர பெரும் நிதியை மக்கள் வாரி வழங்கி வருகிறார்கள். உங்கள் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்று உங்கள் குடும்பத்திற்கு முருகன் அருள் கிடைக்கட்டும்.

-----------------

* திரு நாகலிங்கம் வரதராஜன் - 737,500 ரூபா
* திரு.துரைசிங்கம் சிவனேசன் - 725,000 ரூபா
* திரு.சுப்பிரமணியம் சாந்தரூபன் - 700,000 ரூபா
* அமரர் இ.சரவணமுத்து - 610,000 ரூபா
* கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம் - 225,140 ரூபா
* திரு பாலசிங்கம் தேவகஜன் - 300,000 ரூபா
* சோ.இ.ஆறுமுகம் குடும்பம் - 225,000 ரூபா
* தி.நடராசமூர்த்தி குடும்பம் - 200,000 ரூபா
* பாக்கியநாதன் கேதீஸ்வரன் - 200,000 ரூபா
* அமரர் வ.சுசீலா - 200,000 ரூபா
* அப்பாப்பிள்ளை சிவப்பிரகாசம் குடும்பம் - 200,000
* நடராசா அருட்சோதி - 166,000 ரூபா
*திரு பொன்.சிவபாலன் - 155,900 ரூபா
* திரு தெ.தயாளன் - 155,900 ரூபா
* திரு கி.காண்டீபன் - 155,900 ரூபா
* திரு கு.ரஞ்சன் - 155,900 ரூபா
* திரு பா.காந்தி - 155,900 ரூபா
* திரு ந.கிருஷ்ணமூர்த்தி - 155,900 ரூபா
* திரு பொ.சிவநேசன் - 152,500 ரூபா
* திரு பால பாஸ்கரன் - 152,500 ரூபா
* அமரர் கனகசபை செல்வரத்தினம் - 150,000 ரூபா
* பஞ்சலிங்கம் றஞ்சினி - 150,000 ரூபா
* திரு விவேகானந்தன் இராகுலன் - 150,000 ரூபா
* திரு திருச்செல்வம் அருள்முகன் - 111,111 ரூபா
* திரு அ.நிமலநாதன் - 101,111 ரூபா
* திரு தர்மலிங்கம் ஸ்ரீகணேசமூர்த்தி - 108,660 ரூபா
* செல்வி குகராஜ் ஆர்த்திகா - 104,500 ரூபா
* அமரர் வி.கிருஷ்ணசாமி - 100,000 ரூபா
* திரு சீ.அருள்வாசகம் - 100,000 ரூபா
* அமரர் நா.ஆசைமுத்து - 100,000 ரூபா
* கருணீஸ்வரன் மங்களராணி குடும்பம் - 100,000 ரூபா
* திருமதி தவளாம்பிகை சிவசுப்பிரமணியம் - 100,000 ரூபா
* திருமதி சோ.பிருந்தா - 100,000 ரூபா
* திரு நடராசா நந்தகுமார் - 100,000 ரூபா
* திரு எ.தவயோகன் - 100,000 ரூபா
* சிவபால ஸ்ரீவரதராஜன் - 100,000 ரூபா
* திருதிருமதி ஜோதிலிங்கம் சாந்தி - 100,000 ரூபா
* திரு வைத்திலிங்கம் துரையரங்கன் - 100,000 ரூபா
* அமரர் இ.நடராசா ( க.கலையரசி ) - 100,000 ரூபா
* அமரர் தி.சுபலட்சுமி - 200,000 ரூபா
*அமரர் சம்மந்தமூர்த்தி அன்னப்பிள்ளை - 100,000 ரூபா
* அமரர் கைலாயபிள்ளை வடிவாம்பிகை - 100,000 ரூபா
* அமரர் சின்னக்குட்டி ஆறுமுகசாமி - 100,000 ரூபா
* சிவபாதசுந்தரம் தனலட்சுமி - 100,000 ரூபா
* அமரர் பொன்னம்பலம் கனகசபை - 100,000 ரூபா
* அமரர் பொன்னம்பலம் வெற்றியுடையார் - 100,000 ரூபா
* திரு தி.ஆனந்தமூர்த்தி - 100,000 ரூபா
* திருமதி சிவதேவா சிவதர்சினி - 94,250 ரூபா
* திரு க.தேவராசா - 85,000 ரூபா
* குணசிங்கம் வளர்மதி - 85,000 ரூபா
* திரு அ.திருக்குமார் - 77,950 ரூபா
* ச.தனம் - 77,950 ரூபா
* திருமதி ச.சுமதி - 77,950 ரூபா
* திரு சீ.சிவகுமார் - 77,950 ரூபா
* திரு ப.சிவஞானகுரு - 77,950 ரூபா
* திரு கு.மூர்த்தி - 77,950 ரூபா
* திரு க.மலர்ச்செல்வன் - 77,950 ரூபா
* திரு செ.செல்வச்சந்திரன் - 77,950 ரூபா
* திரு சண்.கணபதிப்பிள்ளை - 77,950 ரூபா
* திரு பத்மநாபசர்மா பாஸ்கரசர்மா - 76,250 ரூபா
* காந்தி நந்தனா - 76,250 ரூபா
* அமரர் க.அன்னம்மா - 76,250 ரூபா
* அமரர் ந.சிவப்பிரகாசம் - 75,000 ரூபா
* அமரர் அப்பாப்பிள்ளை நடராசா - 71,325 ரூபா
* அமரர் A,K.நடராசா ராசம்மா - 71,325 ரூபா
* திரு இ.க.கிருஷ்ணமூர்த்தி - 65,400 ரூபா
* திருமதி பி.சிவரூபி - 58,000 ரூபா
* திரு வி.சிறீதரன் - 53,902 ரூபா
* திரு கண்ணன் - 51,000 ரூபா
* திரு தி.அருணகிரிநாதன் - 51,300 ரூபா
* திரு பொ.ஜெகநாதன் - 50,000 ரூபா
* திரு ஆறுமுகம் சிவானந்தன் - 50,000 ரூபா
* அமரர்கள் எதிர்வீரசிங்கம் மகேஸ்வரி - 50,000 ரூபா
* திரு பொ.தனேசன் - 50,000 ரூபா
* திரு த.கிருபாகரமூர்த்தி - 50,000 ரூபா
* திரு அ.தர்மலிங்கம் - 50,000 ரூபா
* திரு சி.சுபரூபன் - 50,000 ரூபா
* திரு சீ.பரலீசன் - 50,000 ரூபா
* திரு ந.சோமஸ்கந்தராசா - 50,000 ரூபா
* செல்வி ஆசைமுத்து கனகாம்பிகை - 50,000 ரூபா
* செல்வி சிவனேசன் தாமரை - 50,000 ரூபா
* திரு சி.சிவகாந்தன் - 50,000 ரூபா
* திருதிருமதி ஜெயநாயகம் ரஜனி - 50,000 ரூபா
* திரு சி.ஸ்ரீகமலராஜன் - 50,000 ரூபா
* அமரர் து.துரைராஜ் - 50,000 ரூபா
* கேதீஸ்வரன் லோஜினி,கோபிகா - 50,000 ரூபா
* திரு ம.சற்குணசிங்கம் - 50,000 ரூபா
* திரு தி.குகநேசன் - 46,770 ரூபா
* திரு சு.ஏரம்பமூர்த்தி - 46,770 ரூபா
* சு.தே.சரஸ்வதி - 46,770 ரூபா
* திரு மு.கிருஷ்ணகுமார் - 46,770 ரூபா
* ச.தங்கம் - 46,770 ரூபா
* திரு பொ.சிவமூர்த்தி - 46,770 ரூபா
* திரு மா.கணேசன் - 46,770 ரூபா
* திரு சீ.முரளி - 46,770 ரூபா
* திரு ஜெயராஜசிங்கம் லக்ஷ்மன் - 42,500 ரூபா
* ஜெயராஜசிங்கம் சிவதர்சினி - 42,500 ரூபா
* திரு சிவனேசன் காண்டீபன் - 42,500 ரூபா
* திரு சிவனேசன் சபேசன் - 42,500 ரூபா
* திரு விவேகானந்தன் சுதன் - 42,500 ரூபா
* சி.கலாமணி - 42,500 ரூபா
* செல்வி கதிரமலைநாதன் யசோதா - 40,000 ரூபா

* அமரர் இ.சிவபாக்கியநாதன் - 35,000 ரூபா
* திரு க.கணபதிப்பிள்ளை - 34,000 ரூபா
* திரு ஆ.முருகானந்தன் - 34,000 ரூபா
* திருமதி திலகதாஸ் லீலாவதி - 34,000 ரூபா
* திரு சத்தியமூர்த்தி நடராசமூர்த்தி - 33,000 ரூபா
* திரு க.பேரின்பநாதன் - 31,700 ரூபா
* ச.சயந்தினி - 31,180 ரூபா
* பேப்பர்மணியம் சரஸ்வதி - 31,180 ரூபா
* திரு சொ.சிவலிங்கம் - 30,500 ரூபா
* சிவப்பிரகாசம் குடும்பம் ( 9 ஆம் திருவிழா) - 30,000 ரூபா
* அமரர் ச.பாலலட்சுமி - 30,000 ரூபா
* செல்வகாந்தன் நந்தலா - 30,000 ரூபா
* திரு த.பாரதிதாசன் - 27,165 ரூபா
* சி.தியாகராசா - 26,000 ரூபா
* திரு அ.சிவப்பிரகாசம் - 25,000 ரூபா
* திரு ஆ.பத்மநாதன் - 25,000 ரூபா
* ஜெ.யதுசிகா - 25,000 ரூபா
* திரு மு.க.நடராசா - 25,000 ரூபா
* 1ஆம் திருவிழா உபயகாரர் - 25,000 ரூபா
* கி.கமலாதேவி - 21,732 ரூபா
* ம.நடேசன் - 21,732 ரூபா
* அ.மாலா - 21,732 ரூபா
* தர்மராசா சாந்தி - 21,050 ரூபா
* திரு பொ.பத்மநாதன் - 20,000 ரூபா
* அமரர் தம்பிப்பிள்ளை பாக்கியம் - 20,000 ரூபா
* இராசரத்தினம் இலட்சுமிப்பிள்ளை - 20,000 ரூபா
* திரு பொ.திருவாதவூரர் - 20,000 ரூபா


தொடர்ச்சி...   1.1.2018 வரை



தொடர்ச்சி...
363) திரு கிருஷ்ணமூர்த்தி பிரசாத் ( ஜேர்மனி ) - ரூபா 303,089.91
364) அமரர் பேரின்பம் யோகமலர் - 10000 ரூபா
365) அமரர் ம.துரைசிங்கம் - 10000 ரூபா
366) திரு வ.கிருபாகரன் - 1000 ரூபா
367) திரு துரைசிங்கம் சிவனேசன் ( நோர்வே ) - 275000 ரூபா
368) திரு பொ.திருவாதவூரர் - 25000 ரூபா
369) திரு தே.கபிலன் - 15000 ரூபா
370) திருமதி சி.தவளாம்பிகை - 40000 ரூபா
371) செல்வன் யுவகாந்தன் கர்ணிஷ் - 15000 ரூபா
372) அமரர் முருகையா ஜெகன்மோகன் - 100000 ரூபா
373) திருமதி சிவதேவா சிவதர்சினி ( லண்டன் ) - 30000 ரூபா
374) திருமதி ராணி ஸ்ரீதரன் - 10000 ரூபா
375) திரு பா.தேவகஜன் - 100000 ரூபா
376) திரு விசுவலிங்கம் பரமசிவம் - 5000 ரூபா
377) திரு சி.சிவபாலன் - 80000 ரூபா
378) அமரர் க.அன்னபூரணம் ஞாபகார்த்தமாக திரு க.கந்தசாமி - 25000 ரூபா
379) திரு க.சிவகுமார் - 35110 ரூபா
380) திரு ஜெகநாதன் செந்தில்நாதன் - 50000 ரூபா
381) திரு ம.சற்குணசிங்கம் - 50000 ரூபா

பிரான்ஸ்
382) திரு விஜயரத்தினம் கிருபாகரன் - 26745 ரூபா
383) திரு சிவபாதம் ஸ்ரீசிவராஜன் - 17830 ரூபா
384) அமரர் அப்பாப்பிள்ளை நடராசா - 89150 ரூபா
385) திரு மாணிக்கரத்தினம் ஜெயகாந்தன் - 17830 ரூபா
386) திரு துரைசிங்கம் பிரசாத் - 17830 ரூபா
387) திரு நடராசா கண்ணுத்துரை - 26745 ரூபா
388) அமரர்கள் பரராஜசிங்கம் சற்குணதேவி - 17830 ரூபா

389) திரு ச.தேவகுரு - 10000 ரூபா
390) செல்வன் மயூரன் கிஷானன் - 5000 ரூபா
391) செல்வி தவச்செல்வம் சயானா - 5000 ரூபா
392) திரு அ.முருகதாசன் - 2000 ரூபா
393) செல்வி இராமலிங்கம் நேசம்மா - 10000 ரூபா  ஜேர்மனி

394) அத்தத்தா குடும்பம் - 17826 ரூபா
395) திரு வைரவநாதன் ( சாமி ) - 17826 ரூபா
396) திரு சி.சகுந்தலநாதன் - 17826 ரூபா
397) பண்ணாகம்.கொம் - 17826 ரூபா
398) திரு வா.முத்தழகன் - 17826 ரூபா
399) செல்வன் துரையரங்கன் நகுல் - 53480 ரூபா
400) திரு மா.கிருஷ்ணர் - 89134 ரூபா

401) ஓர் அன்பர் - 2000 ரூபா
402) திரு சு.பரமசிவம் - 10000 ரூபா
403) திரு சு.பரமலிங்கம் - 5000 ரூபா
404) திருமதி யோகேஸ்வரன் இராசமலர் - 5000 ரூபா
405) திரு தி.அருணகிரிநாதன் ( நோர்வே ) - 50000 ரூபா
406) திரு மு.ஜெகதீஸ்வரன் - 5000 ரூபா
407) அமரர் இ.அப்பாத்துரை - 10000 ரூபா
408) செல்வி வகிஸ்ணா தயாளன், கவிஸ்ணா தயாளன் ( அவுஸ்ரேலியா ) - 61811.46 ரூபா

409) சு.மதியாபரணம் - 134,050 ரூபா
410) சு.குணரத்தினம் - 100,000 ரூபா
411) உ.கல்யாணி - 50000 ரூபா
412) சி.விஜயதாசன் - 11001 ரூபா

* திரு ஆ.விவேகானந்தன் - 17,000 ரூபா
* பத்மசோதி ரஞ்சி - 16,500 ரூபா
* தயாபரன் ஆரணி - 16,500 ரூபா
* அமரர் ம.துரைசிங்கம் - 15,850 ரூபா
* அமரர் த.இலட்சுமிதேவி - 15,850 ரூபா
* அமரர் நா.ரசிந்தா - 15,850 ரூபா
* சி.சிவராஜன் - 15,850 ரூபா
* வி.கிருபாகரன் - 15,850 ரூபா
* கி.சுதன் - 15,850 ரூபா
* ஐ.தனுசா - 15,850 ரூபா
* சமியா பல்பொருள் அங்காடி - 15,850 ரூபா
* ந.கேதீஸ்வரன் - 15,000 ரூபா
* க.பேரின்பநாதன் - 15,000 ரூபா
* ஜெயராஜ் கவிநேயன் - 15,000 ரூபா
* ஜெயராஜ் சாத்வீகன் - 15,000 ரூபா
* அமரர் சி.சிவநாயகம் - 11,380 ரூபா
* அமரர் சி.நல்லம்மா - 10,000 ரூபா
* திரு அ.வாசுதேவலிங்கம் - 10,000 ரூபா
* திருமதி சி.சிவறஞ்சினி - 10,000 ரூபா
* சு.இரத்தினசிங்கம் குடும்பம் - 10,000 ரூபா
* தெ.குணாளன் - 10,000 ரூபா
* மாணிக்கவாசகர் விஜயகுமார் - 10,000 ரூபா
* மு.சிவசிதம்பரகுருக்கள் - 10,000 ரூபா
* து.பிரதீப் - 10,000 ரூபா
* அமரர் து.ஸ்ரீபத்மநாதன் குடும்பம் - 10,000 ரூபா
* க.பொன்னுத்துரை - 10,000 ரூபா
* மு.விவேகானந்தன் - 10,000 ரூபா
* அமரர் வை.விசுவலிங்கம் - 10,000 ரூபா
* அமரர் வி.சரஸ்வதி - 10,000 ரூபா
* திருச்செல்வம் திருமகன் - 10,000 ரூபா
* ஜெ.செந்தில்குமார் - 10,000 ரூபா
* சு.பரமசிவம் - 10,000 ரூபா
* கைலைநாதன் பரிபூரணலட்சுமி - 10,000 ரூபா
* ஞா.சின்னையா - 10,000 ரூபா
* சொ.இராசமணி - 10,000 ரூபா
* தே.திலீபன் - 10,000 ரூபா
*கி.நகுலேஸ்வரன் - 10,000 ரூபா
* அமரர் இ.மாணிக்கரத்தினம் - 10,000 ரூபா
* பொ.சிவன்யோகம் - 10,000 ரூபா
* அமரர் இ.அன்னம்மா - 10,000 ரூபா
* தி.வேல்மாறன் - 10,000 ரூபா
* திரு இ.தம்பையா - 10,000 ரூபா
* திரு பொ.நாகலிங்கம் - 10,000 ரூபா
* வே.நடராசா - 7925 ரூபா
* சி.நாகசேனன் - 7925 ரூபா
* ம.ஜெயகாந்தன் - 7800 ரூபா
* ச.சுந்தரமூர்த்தி - 7000 ரூபா
* பொ.விக்கினேஸ்வரன் - 6000 ரூபா
* பொ.கறுவல்தம்பி - 5000 ரூபா
* அமரர் மா.சிவரத்தினம் - 5000 ரூபா
* சி.திலக்சன் - 5000 ரூபா
* அமரர் நா.ஆசைமுத்து - 5000 ரூபா
* தி.செல்வநாதன் - 5000 ரூபா
* தி.ஸ்ரீஸ்கந்தமூர்த்தி - 5000 ரூபா
* அமரர் - சு.அன்னம்மா - 5000 ரூபா
* தி.எழிலரசன் - 5000 ரூபா
* செ.வைத்திலிங்கம் - 5000 ரூபா
* ச.முகுந்தன் - 5000 ரூபா
* து.கேதீஸ்வரன் - 5000 ரூபா
* சி.பவன் - 5000 ரூபா
* கு.சாதனா - 5000 ரூபா
* ஆ.சொக்கலிங்கம் - 5000 ரூபா
* தே.கபிலன் - 5000 ரூபா
* கு.கணேசமூர்த்தி - 5000 ரூபா
* க.பிரபுடதேவன் -5050 ரூபா
* கா.பொன்னுத்துரை - 5000 ரூபா
* பொ.நகுலேஸ்வரன் - 5000 ரூபா
* செ.பொன்னம்பலம் - 5000 ரூபா
* சு.தவத்துரை - 5000 ரூபா
* ராணி சீதரன் - 5000 ரூபா
* அமரர் கைலாயபிள்ளை ஜெயலட்சுமி - 5000 ரூபா
* ச.நடேஸ்வரன் - 5000 ரூபா
* பொ.சரண்யா - 5000 ரூபா
* வே.குமரகுரு - 5000 ரூபா
* அமரர் சு.யோகேஸ்வரன் - 5000 ரூபா
* பொ.குலேந்திரராசா - 5000 ரூபா
* க.கணேசராசா - 5000 ரூபா
* அ.பரமேஸ்வரசர்மா - 5000 ரூபா
* ம.சற்குணசிங்கம் - 5000 ரூபா
* த.திலீபன் - 5000 ரூபா
* கு.கணேசமூர்த்தி - 5000 ரூபா
* அ.ஜெனகன் - 5000 ரூபா
* அ.இராமலிங்கம் - 5000 ரூபா
* சி.லதா - 5000 ரூபா
* மயூரன் கிஷானன் - 5000 ரூபா
* நே.இராமலிங்கம் - 5000 ரூபா
* சி.ஜெனஜன் - 5000 ரூபா
* புவனேந்திரன் - 5000 ரூபா

* ஆ.செந்திலாதீபன் - 1000 ரூபா
* இ.செல்வராசா - 3000 ரூபா
* சி.விஜயசேகரம் - 1000 ரூபா
* அமரர் வ.எதிர்வீரசிங்கம் - 1000 ரூபா
* அமரர் இ.அப்பாத்துரை - 2000 ரூபா
* த.துரைலிங்கம் - 3000 ரூபா
* ச.அனந்தி - 1000 ரூபா
* தி.ஜெகநாதன் - 1000 ரூபா
* அமரர் து.பரமானந்தம் - 1000 ரூபா
* நா.சாத்வீகா - 500 ரூபா
* ஜெயராசசிங்கம் - 500 ரூபா
* இ.விசுவரூபன் - 500 ரூபா
* மு.இன்பராஜ் - 2000 ரூபா
* அமரர் தி.கணேசலிங்கம் - 1000 ரூபா
* ப.கஜமுகன் - 2000 ரூபா
* யோ.யோகிதா - 1000 ரூபா
* கு.சுதாநிதி - 1000 ரூபா
* அ.கிருஷ்ணமூர்த்தி - 2500 ரூபா
* அ.பாஸ்கரன் - 1000 ரூபா
* அ.சரஸ்வதி - 2000 ரூபா
* அமரர் க.மகேந்திரம் - 1000 ரூபா
* சி.திரவியம் - 1000 ரூபா
* அ.குணரத்தினம் - 1000 ரூபா
* T.விஜயசுரேந்திரன் - 1000 ரூபா
* தி.சிவயோகநாதன் - 500 ரூபா
* மு.ஜெகதீஸ்வரன் - 3000 ரூபா
* அ.இரத்தினராசா - 1000 ரூபா
* ம.மாதங்கி - 3000 ரூபா
* கி.பாக்கியலட்சுமி - 1250 ரூபா
* ந.மகாராணி - 1000 ரூபா
* மு.ஜெயரத்தினம் - 1000 ரூபா
* செ.கோடீஸ்வரன் - 1000 ரூபா
* ம.ஜெகஜீவன் - 3000 ரூபா
* ம.பிருந்தாவன் - 3000 ரூபா
* சூ.மதிவண்ணன் - 500 ரூபா
* சூ.பிரணவன் - 500 ரூபா
* பா.திவாகரன் - 1000 ரூபா
* க.பரமசிவம் - 2000 ரூபா
* ஜெ.கிசோன் - 3000 ரூபா
* சு.பரமலிங்கம் - 2000 ரூபா
* த.இராசகுமாரி - 2000 ரூபா
* தி.மிதுசன் - 1000 ரூபா
* தி.பரந்தாமன் - 1000 ரூபா
* ஞா.மிதுசன் - 1000 ரூபா
* சீ.பற்பனாசிங்கம் - 2000 ரூபா
* சு.மோனிகா - 500 ரூபா
* ச.பராசக்தி - 500 ரூபா
* கு.பாலசுப்பிரமணியம் - 500 ரூபா
* ப.சிவகஜன் - 2000 ரூபா
* வே.குணரத்தினம் - 1000 ரூபா
* ச.சகாயினி - 1000 ரூபா
* எ.தவநாயகம் - 1000 ரூபா
* சி.சத்தியசீலன் - 2000 ரூபா
* பி.கோமதி - 1000 ரூபா
* ச.சுந்தரமூர்த்தி - 3000 ரூபா
* அமரர் பா.மயூரன் - 3000 ரூபா
* அமரர் சிவராசலிங்கம் வெள்ளிமலர் - 4000 ரூபா
* அ.தரணீபன் - 3000 ரூபா
* அ.கோபிகன் - 3000 ரூபா
* த.அருள்நிதி - 1000 ரூபா
* ஸ்ரீ.பதஞ்செயன் - 1000 ரூபா
* வி.துரைசிங்கம் - 4000 ரூபா
* பா.குமரேசன் - 1000 ரூபா
* ந.பிரணவரூபன் - 3000 ரூபா
* ம.மனோன்மணி - 2000 ரூபா
* இ.மீனாம்பாள் - 4000 ரூபா
* சு.பாலசுந்தரம் - 3000 ரூபா
* ந.பூமணி - 1000 ரூபா
* பொ.பாலசுப்பிரமணியம் - 2000 ரூபா
* அ.முருகதாசன் - 2000 ரூபா