
ரூபாவை வரையறையின்றி மிதக்க அனுமதித்தால் இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் மதிப்பு 1000 ரூபாவை தாண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், பொருளாதார நடவடிக்கைகளோ அல்லது முடிவுகளோ பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தவில்லை.
இது பல தசாப்தங்களாக நடந்து வரும் விவகாரம். பொருளாதார நெருக்கடி வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இந்நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணமாகும். இங்கு அடிப்படை தவறு அரசாங்கமோ, அமைச்சரவையோ, நிதிக் கொள்கையோ அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
ரூபாவிற்கு எதிரான டொலரின் மதிப்புஇதேவேளை மக்கள் நிவாரணம் கேட்கின்றனர். அதனால்தான் நான் கூறுகிறேன், என்ன கேட்கிறீர்கள் என்பதை மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் கேட்பதை அரசாங்கம் கொடுத்தால், அது பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும். பிறகு உங்களுக்கு நல்லது எதுவும் நடக்காது. அத்துடன் நாட்டிற்கும் நன்மை எதுவும் நடக்காது என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் இறக்குமதி சுமை நாளுக்கு நாள் அதிகரிப்பு மற்றும் பணத்தைக் கண்டுபிடிக்க மாற்று வழியின்மை என்பனவற்றின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கி ரூபாயை மிதக்க அனுமதித்தது.
இதன்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 203 ரூபாவாக குறைக்கும் சந்தர்ப்பம் மத்திய வங்கிக்கு கிடைத்தது.
என்ற போதும் கடன் முகாமைத்துவம் இன்றி ரூபாவை மிதக்க அனுமதித்தால் இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் மதிப்பு 1000 ரூபாவிற்கு சென்றே நிற்கும்.
இறுதியில் எடுக்க வேண்டிய முடிவுகளை முதலிலேயே எடுப்பது சரியில்லை. அதன் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரம் அழிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளா
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் இன்று யாழ்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
சம்பள அதிகரிப்பை வழங்க கோரியும், வரி அறவீட்டினை நிறுத்தக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டமஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளை தாங்கியவாறு, 20000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்தை வழங்க வேண்டும், மாணவர்களின் போசனைக் குறைபாட்டை நிவர்த்தி செய், பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கு உள்ளிட்ட பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரும் கலந்து கொண்டதுடன், ஆர்ப்பாட்டத்தின் போது 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ். மாநகர சபையில் நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக சொலமன் சிறிலை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று(05) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.
முதல்வர் தெரிவுசொலமன் சிறிலின் வெற்றிக்காக சகல கட்சிகளிடமும் ஆதரவு கோர தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
யாழ். மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு மார்ச் 10ஆம் திகதி வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
2022 டிசெம்பர் மாதம், யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாக்கெடுப்பின் முதலாவது சமர்ப்பிப்பில் அங்கீகரிக்கப்படாததன் காரணமாக முன்னாள் முதல்வரும், சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதனையடுத்து, கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற முதல்வர் தெரிவில் இ.ஆனோல்ட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அவரது நியமனம் குறித்த கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் தனது 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெடின் முதலாவது சமர்ப்பிப்பிப்பைக் கடந்த 14 ஆம் திகதி நடாத்தியிருந்தார். அந்த பட்ஜெட் சமர்ப்பிப்பு உறுப்பினர்களுக்கிடையிலான வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது.
அதன் பின் பட்ஜெட்டின் இரண்டாவது வாக்கெடுப்பு பெப்ரவரி 28 ஆம் திகதி இடம்பெற்றது. அந்த வாக்கெடுப்பிலும் ஆனோல்ட் சமர்ப்பித்த பட்ஜெட் 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார்.
உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம்நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக் காலம் 2022 மார்ச் மாதம் 18 ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையில், உள்ளூராட்சி சபைகள் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி மேலும் ஒரு வருட காலத்துக்கு – எதிர்வரும் மார்ச் 19 வரை நீடிக்கப்பட்டிருந்தன.
இந்த நீடிப்பின் படி, எதிர்வரும் மார்ச் 19 வரை சபை நடவடிக்கைகளைக் கொண்டு நடத்துவதற்காகப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காகவே தேர்தல் நடாத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
tதொற்று நோய்க்கு முன்பை விட, கடந்த ஆண்டு பிரித்தானியா இருமடங்கு வதிவிட விசாக்களை வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தை விட கடந்த ஆண்டு மொத்தம் 1.4 மில்லியன் விசாக்கள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இது 2019ம் ஆண்டு 7,14,300 ஆக இருந்தது. இதற்கு அதிகமான மக்கள் பிரித்தானியாவிற்கு வேலை செய்ய மற்றும் படிக்க வந்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
வேலை விசாக்கள்தொற்று நோய் காலத்தில் பயணங்கள் முடக்கப்படுவதற்கு முன்பு வரை, பிரித்தானியாவில் வழங்கப்படும் வேலை விசாக்கள் நாட்டில் அதிக விகிதத்தை கொண்டு இருந்தது, இவற்றில் மூன்றில் ஒரு பங்கு இந்திய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் பிரித்தானியாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் குடியேற்றத்தை ஒன்றாக கருதுகின்றனர் என்று டிசம்பரில் யூகோவ் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தொற்று நோய்க்கு பிறகு நூறாயிரக்கணக்கான மக்கள் வேலை சந்தையில் இருந்து வெளியேறிய பின்னர், வேலை விசா மானியங்கள் UK முழுவதும் தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை பிரதிபலிக்கின்றன.
அதே சமயம் பிரித்தானியாவில் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், அதிக ஊதியம், அதிக உற்பத்தி திறன் கொண்ட பொருளாதாரத்துடன் நாட்டை விட்டு வெளியேறவும் அரசாங்கம் விரும்புகிறது.
வியட்நாமில் உள்ள இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் மீது பணம் திருடியதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த 42 வயதான அருண ருக்ஷான் ராஜபக்ச என்பவர் பணம் திருடியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த 2020 மார்ச் முதலாம் திகதி ஹோ சி மின் நகரில் உள்ள ‘டான் சோன் நாட்’ சர்வதேச விமான நிலையம் வழியாக வியட்நாமிற்குள் சென்றுள்ளார்.வியட்நாமின் பல பகுதிகளிலும் வேலை தேடி அலைந்த நபர் வேலை கிடைக்காமையினால் 2022 ஆண்டு அக்டோபர் 11 ஆம் திகதி, ஹனோயின் ஹோன் கீம் மாவட்டத்தின் வீதிகளில் மற்றவர்களின் சொத்துக்களை திருடும் நோக்கத்துடன் சுற்றி அலைந்துள்ளார்.
அந்த சமயம் உணவகம் ஒன்றிற்குள் நுழைந்து 13 மில்லியன் வியட்நாம் டோங் (545 அமெரிக்க டொலர்) பணம் அடங்கிய கறுப்பு கைப்பையை திருடி சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அங்கு வசிக்கும் உள்ளூர் மக்களின் உதவியுடன் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட இலங்கையை சேர்ந்த நபர் மடக்கி பிடிக்கப்பட்டு தாய் டு வார்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது அதனை அடுத்து திருடப்பட்ட கைப்பை அவரிடம் இருந்த நிலையில் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
ஜப்பானிய தீவு ஒன்றில் ஆயிரக்கணக்கான காகங்கள், கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
கியோட்டோவிற்கு அருகிலுள்ள ஹோன்ஷுவில் கட்டிடங்கள், வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் சூழ்ந்திருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், விலங்குகள் அல்லது பறவைகள் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் கூடுவது இயற்கை பேரழிவின் தொடக்கத்தைக் குறிக்கிறதென்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
காக்கைகள் கூடும் காணொளிதீவில் மர்மமான முறையில் காக்கைகள் கூடும் காணொளி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
காவல்துறை அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டு, கொள்கை விளக்க உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை ஒற்றையாட்சி முறைக்குள் அதிகப்பட்ச அதிகாரங்களோடு பல காலமாக இருக்கும் இனப் பிரசினைக்கு தீர்வு வழங்கப்படும்.
காணி விடுவிப்புஇருப்பினும் காவல்துறை அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் துரிதமாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கைதிகள் விடுதலைஇதேவேளை எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் அதிபர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளின் பின் மீண்டும் இயங்க தயாராகும் பழையமாணவர் சங்கம்.
பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க புதிய நிர்வாகம்
பழையமாணவர் சங்கம்
புலமைப்பரிசில் 2023
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அது தமிழீழம் மலர வழி வகுக்கும்' என உத்தர லங்கா சபாவின் தலைவரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், நாடு பிளவுபடாது. எனவே இந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டுமானால், யாராவது 22ஆம் திருத்தத்தை கொண்டுவந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும் என நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
மீண்டும் இரத்த ஆறு ஓடும்இந்த நிலையில், இந்தக்கூட்டத்தை புறக்கணித்த விமல் வீரவன்சவிடம் அதிபரின் கருத்து தொடர்பில் செய்தியாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபட்டே தீரும். அது தமிழீழம் மலர வழிவகுக்கும். நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும். இப்படியான நிலைமை ஏற்படக் கூடும் என்று அதிபருக்கு தெரியும்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதனை பல தடவைகள் தெரிவித்து விட்டோம்.
தான் நிறைவேற்று அதிகார அதிபர் என்ற மமதையுடன் ஒவ்வொரு நாளும் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிடுகிறார்.
மக்களை ஏமாற்றும் நோக்குசிங்கள மக்களையும், தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் ஏமாற்றும் நோக்குடனேயே அதிபர் செயற்படுகின்றார். ஆனால், சிங்கள மக்கள் விழிப்பாகவே இருக்கின்றார்கள்.
அதிபர் இவ்வாறு நடைமுறைச்சாத்தியமற்ற கருத்துக்களைக் கூறி காலத்தை இழுத்தடிப்பார் என்று தெரிந்து தான் நாம் சர்வகட்சி கூட்டத்தை புறக்கணித்தோம்” - என்றார்.
யாழ்ப்பணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் 108 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ரணில் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளில் பல்வேறுபகுதிகளிலும் உள்ள 108 ஏக்கர் காணிகளை உடனடியாக விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடங்கள் கட்ட கூடாதுஅதேவேளை, ஏனைய காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. அந்த வகையில் பலாலி வீதியின் கிழக்கில் உள்ள விவசாய காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் பலாலி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அந்த பகுதியில் கட்டிடங்கள் கட்ட கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோயில் பகுதிஎனினும், விவசாய தேவைக்காக அவற்றை விடுவிக்கும்படி தமிழ் மக்கள பிரதிநிதிகள் வலியுறுத்தினதையடுத்து அது பற்றி ஆராய்வதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும், நாகர்கோயில் பகுதி விடுவிப்பு பற்றியும் குறித்த கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எமது ஐபிசி தமிழ் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் இலங்கைத் தமிழரசு கட்சி தனியே போட்டியிடுவதென்று தீர்மானித்துள்ளது.
தனித்துப் போட்டிநடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு கிடைக்கப்பெறும் ஆசனங்களின் அடிப்படையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கூட்டமைப்பை விட்டு நிரந்தரமாக பிரியவில்லை எனவும் எதிர்வரும் தேர்தலின் போது மட்டுமே தனித்து போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த பிரிவு இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழரசுக்கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விக்னேஸ்வரனுடன் கூட்டணிமேலும் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட் ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் கூட்டணி, துளசி தலைமையிலான ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து ஒரு கூட்டமைப்பை அமைக்கவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜேந்திரகுமாருடன் பேச்சுஅத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள பேச்சு நடத்தப்படும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொருவரும் தமது உயிரிழந்த அன்புக்குரிய உறவுகளை அமைதியாக நினைவுகூருவதற்கு முழு உரிமை உள்ளது எனவும் அதனை யாரும் தட்டிப்பறிக்க முடியாது" எனவும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பகிரங்கமாக மேற்கொள்ளப்படும் நிலையில், அதற்கு அரசு அனுமதி வழங்கியிருக்கின்றதா என ஊடகமொன்று கேள்வி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே அதிபர் இதனைக் கூறியுள்ளார்.
நினைவேந்தல் உரிமை“இலங்கை ஜனநாயக நாடு எனச் சுட்டிக்காட்டியுள்ள அதிபர், நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு இனமும் மரணித்த தமது உறவுகளை அமைதியாக நினைவேந்த முழு உரிமை உண்டு எனவும் இதைவிட வேறு எந்தக் கேள்வியும் தற்போதைய நிலைமையில் அவசியமற்றது எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சோஸ்நகரில் தமிழ்ப் பாடசாலையின் ஆண்டுவிழாவில்