மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுதியிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் கடந்த புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் போராளி தொடர்பான விடயங்கள் முற்றிலும் பொய் என அவரது குடும்பத்தினர் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகவியலளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
காட்டிலிருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளியின் சகோதரியும் அவரது மருமகனுமே இன்றைய தினம் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்கள்,
“அவர் நடுக்காட்டில் தங்கியிருக்கவில்லை. எங்களுக்கு சொந்தமான இடத்திலேயே அவர் தங்கியிருந்தார். அதுமட்டுமன்றி, அவர் தங்குவதற்கான கொட்டகையையும் நாங்களே அமைத்துக்கொடுத்தோம்.
பொய்யான தகவல்அதேவேளை, அவருக்கு சமையலுக்குத் தேவையான உணவுப்பொருட்களையும் நாங்களே ஒவ்வொரு வாரமும் கொடுத்து வருகின்றோம். அவரை எங்களது வீட்டில் தங்க வைப்பதற்காக பல தடவைகள் முயற்சி செய்தும் அவர் அதற்கு சம்மதிக்காது தனியாகவே வாழ்ந்து வந்தார்.
இவ்வாறான நிலையில், அவர் காடுகளில் இருக்கும் காய்களையும், பழங்களையும் உண்டு வாழ்ந்து வந்தார், அவர் கவனிப்பார் அற்று இருக்கின்றார். மனநலம் பாதித்துள்ளார் எனக் கூறி பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதால் நாம் தான் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.
மேலும், அவர் முன்னாள் பேராளி என்றும் அவரைப் பராமரிப்பதற்காக வெளிநாடுகளில் பலர் பணம் சேகரித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறான செயற்பாடுகளில் யாரும் ,ஈடுபட வேண்டாம்.
பணம் சம்பாதிக்கும் முயற்சிஅவரை வைத்து சிலர் பணம் சம்பாதிக்க நினைக்கின்றார்கள். தற்போதும் அவரைப் பராமரிப்பதற்காக தினமும் மூவாயிரம் ரூபா பணம் பராமரிப்பவருக்கு வழங்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.
இவ்வாறான நிலையில், வெளிநாட்டில் இருப்போர் அவர் தொடர்பில் தகவல் எதுவும் அறிய வேண்டுமாயின் எமது கிராமசேவகர் ஊடாக எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். தங்களிற்கு தேவையான விடயங்களை உண்மை நிலையை நாம் கூறுவோம்” எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர், முன்னாள் போராளியான பாலா எனவும், கடந்த 4 வருடங்களாக இவர் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, மனநலம் குன்றிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப் பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், மற்றும் அவரது சக முன்னாள் போராளிகளும் அவரை அணுகியுள்ளனர். இவர்களைக் கண்டதும் பாலா கட்டுப் பகுதிக்குள் மறைந்து விடுவார்.
அதனையடுத்து அவரை பல நாட்களாக இரவு பகலாக அவதானித்து வந்த நிலையிலேயே கடந்த புதன் கிழமை இவரை ஊர் மக்களும் அதிகாரிகளும் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு உலகளாவிய ரீதியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருபதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் மீண்டும் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் அவர் பொது வெளியில் வருவார் என்றும் நெடுமாறன் தகவல் வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் அது தொடர்பில் உறுதிபட பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த கூற்றை, முன்னர் மறுத்த இலங்கையின் இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் ரவி ஹேரத், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பதற்கான மரபணுச் சான்றிதழ்கள் உட்பட அனைத்து பதிவுகளும் இருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் பெற்றோல் விலையை சுமார் 800 ரூபாவாக அதிகரிப்பதற்காக QR முறையை இல்லாதொழிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, என ஊடகவியலாளர் ஒருவர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் வினவிய போது அவர் அதனை நிராகரித்துள்ளார்.
தற்போது அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை எனவும், எரிபொருளின் விலை 10 - 15 ரூபா வரையில் மாறலாம்.
ஆனால் உக்ரைன்-ரஷ்யா யுத்தம் போன்ற உலக நிலைமைகளை தன்னால் கட்டுப்படுத்த முடியாது. அந்த சந்தர்ப்பங்களில் விலை எவ்வளவு உயரும் என கூற முடியாது. அத்தகைய சூழ்நிலையில் விலை கூடி குறைய கூடும்.
QR முறைஅடுத்த மூன்று மாதங்களில் QR முறை முற்றாக ஒழிக்கப்படும். விரைவில் மேலும் மூன்று நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரித்தானியாவில் செயல்படுத்தப்பட்டு வந்த வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற சோதனைத் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற பரிசோதனை திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு துறைகளை சார்ந்த 61 நிறுவனங்கள் செயல்படுத்தி வந்த நிலையில் இந்த திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை திட்டத்தின் மூலம் சில சுவாரசியமான மாற்றங்கள் காணப்பட்டதாக ஒக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சோதனையில் ஈடுபட்ட பாஸ்டன் கல்லூரியின் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளரான ஜூலியட் ஷோர் தெரிவித்துள்ளார்.
சோதனை திட்டம்மேலும் இந்த சோதனை திட்டத்தின் மூலம் பணியாளர்கள் அவர்களது வேலை நேரத்தை சாரசரியாக அதிகரித்ததை கண்டோம். அதே போன்று உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகளில் பணிப் புரியும் ஊழியர்கள் தீக்காயம் மற்றும் தூக்க பிரச்சனைகளில் இருந்து பெரும் அளவு வெளியேறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 61 நிறுவனங்கள் இந்த நான்கு நாட்கள் சோதனை திட்டத்தை செயல்படுத்தி வந்த நிலையில், 91 சதவீத நிறுவனங்கள் இந்த திட்டத்தை தொடர போவதாகவும், 4 சதவிகித நிறுவனங்கள் இது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வெறும் 4 சதவிகித நிறுவனங்கள் மட்டுமே இதனை தொடரப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
வேலை வாய்ப்புநான்கு நாள் வேலை திட்டத்திற்கு 10க்கு 8.5 என்ற மதிப்பீட்டை நிறுவனங்கள் வழங்கியுள்ளன. 7.5 சதவிகித மதிப்பீடுகள் உற்பத்தி மற்றும் வணிக செயல்திறன் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த திட்டத்தின் மூலம் நிறுவனங்களின் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், வருவாய் 35 சதவிகிதம் உயர்ந்து இருப்பதுடன் வேலை வாய்ப்புகளும் பெருகியுள்ளன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தி தமிழ் அரசியல் கட்சிகளால் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கான முயற்சியாக இருக்கலாமென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்கும் விதமாகவே இவ்வாறான செய்தி பரப்பப்படுவதாகவும், எனினும், மீண்டும் பிரபாகரன் தலைதூக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
13ற்கான அழுத்தமேஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே நவீன் திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ. நெடுமாறன் எந்த அடிப்படையில் தெரிவித்தார் என்பது எமக்கு தெரியாது. ஆனால், அவர் உயிராேடு இல்லை என்பதை சிறிலங்கா இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே இந்த விடயம் தொடர்பில் பெரிதுபடுத்திக்கொள்ளத் தேவையில்லை. அத்துடன், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற தகவல் மூலம் வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம்.
நீதிமன்றத் தீர்ப்புஎவ்வாறாயினும் பிரபாகரன் தலைதூக்கப்போவதில்லை. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலேயே இந்த செய்தி பரப்பப்படுகிறது.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாடு பிளவுபடும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதன்மூலம் நாடு பிளவுபடாது என கடந்த 1987 ஆம் ஆண்டில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
முற்றாக மாறிய வடக்கு கிழக்குஇதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணம் பிரபாகரனின் ஆதிக்கத்துக்கு கீழே இருந்தது. தற்போது அந்த நிலைமை முற்றாக மாறிவிட்டது. அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணம் இணைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அங்குள்ள சிங்கள, முஸ்லிம் மக்கள் உறுதியாக இருக்கினறனர்” எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் சில முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஓல்கோட் மாவத்தையின் ஒரு மருங்கு வீதியும் மூடப்பட்டுள்ளது.
அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் இணைந்தே கொழும்பு கோட்டைக்கு அருகில் போராட்டம் ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவக் குழுக்கள்இதன் காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியை காவல்துறையினர் மூடியுள்ளனர்.
இதற்கமைய தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
கைக்குழந்தைக்கு விமான ஊழியர்கள் தனி பயணசீட்டு எடுக்க வேண்டும் என்று கூறியதால் ஒரு தம்பதி செய்த காரியம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள பென்-குரியன் விமான நிலையத்தில் கைக்குழந்தைக்குத் தனியாக பயணசீட்டு எடுக்க வேண்டும் என்று ரயன்ஏர் நிறுவன விமான ஊழியர்கள் கோரிக்கை விடுத்ததால் அந்த தம்பதி குழந்தையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், அந்த தம்பதி தங்கள் குழந்தையை சோதனை வளாகத்திற்கு முன்பாக விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
ஆத்திரமடைந்த தம்பதிகைக்குழந்தைக்கு விமானத்தில் தனி பயணசீட்டு வாங்க வேண்டும் என்று ரயன்ஏர் ஊழியர்கள் சொன்னதால் அந்த தம்பதி இப்படிச் செய்துள்ளதாக இஸ்ரேல் விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த தம்பதி பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த தம்பதி தங்கள் குழந்தையையும் முதலில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
அதிகாரிகளில் கோரிக்கையால் ஆத்திரமடைந்த அந்த தம்பதி, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், விமான ஊழியர்கள் நிச்சயம் பயணசீட்டு எடுத்தாக வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
எங்கள் கண்களையே நம்ப முடியவில்லைபணத்தைச் செலுத்தி பயணசீட்டை பெறாமல் ஜோடி குழந்தையை சோதனை வளாகத்தில் விட்டுவிட்டு விமானத்தை நோக்கி ஓடியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தம்பதியினரை நிறுத்தியுள்ளனர்.
பாதுகாப்பு சோதனையின் போது அவர்களை நிறுத்திய அதிகாரிகள், குழந்தையைப் பெற்றுச் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர். கைக்குழந்தையை பொறுப்பின்றி விட்டுச் சென்ற அந்த ஜோடியை பெல்ஜியம் நாட்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இது குறித்து ரயன்ஏர் விமான நிறுவன அதிகாரி கூறுகையில், "இதைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் பார்த்ததே இல்லை. எங்களால் எங்கள் கண்களையே நம்ப முடியவில்லை.''என தெரிவித்தார்.
இலங்கை தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
மாகாணங்களுக்கு போலீஸ், காணி அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் வகையிலான, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இந்த சர்வகட்சி மாநாடு நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் 5 தமிழ்க் கட்சிகளைக் கொண்டு உருவான புதிய கூட்டணி தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பல கட்சிகள் உருவாகலாம், கட்சிகளைப் பயன்படுத்தி பல கூட்டணிகள் கூட்டமைப்புக்கள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எது என்பதைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளால் நிரூபித்துக் காட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணிகூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் மேலும் சில கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ள நிலையிலும் கூட்டமைப்பு என்ற பெயரிலேயே செயற்படப்போவதாகத் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய 5 தமிழ்க் கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
பல கட்சி உருவாக்கத்தால் பாதிக்கும் மக்கள்எவரும் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திக் கட்சிகள், கூட்டணிகள் கூட்டமைப்புக்கள் அமைப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டால் அது மக்களைத்தான் தாக்கும் மக்களைப் பலவீனப்படுத்தும்.
தமிழ் மக்கள் இந்தக் கருமத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். இலங்கைத் தமிழரசுக் கட்சி நீண்டகால வரலாற்றைக் கொண்ட கட்சி. தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சி, 1949 ஆம் ஆண்டு தொடக்கம் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சி.
தமிழ் மக்களுக்காக அறவழியில் போராடி பல தியாகங்களைச் செய்த கட்சி. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி கொழும்பில் எனது இல்லத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய தமிழரசுக் கட்சி செயற்படுகின்றது.
தமிழரசுக் கட்சிக்கு மக்கள் ஆதரவுஆனால், கூட்டமைப்பின் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளும் (ரெலோ, புளொட்) அந்தத் தீர்மானத்துக்கு எதிர்மறையாகச் செயற்படுகின்றன. இது தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.
தமிழ் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயற்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை. எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் நான் எதிர்ப்பு அரசியல் செய்ய விரும்பவில்லை.
இதுவரை காலமும் நடந்த விடயங்கள், நடக்கின்ற விடயங்கள் ஆகியவற்றைத் தமிழ் மக்கள் கவனமாகச் சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எமது ஐபிசி தமிழ் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் இலங்கைத் தமிழரசு கட்சி தனியே போட்டியிடுவதென்று தீர்மானித்துள்ளது.
தனித்துப் போட்டிநடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு கிடைக்கப்பெறும் ஆசனங்களின் அடிப்படையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கூட்டமைப்பை விட்டு நிரந்தரமாக பிரியவில்லை எனவும் எதிர்வரும் தேர்தலின் போது மட்டுமே தனித்து போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த பிரிவு இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழரசுக்கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விக்னேஸ்வரனுடன் கூட்டணிமேலும் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட் ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் கூட்டணி, துளசி தலைமையிலான ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து ஒரு கூட்டமைப்பை அமைக்கவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜேந்திரகுமாருடன் பேச்சுஅத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள பேச்சு நடத்தப்படும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்கொட்லாந்து எடின்பர்க்கிலுள்ள உணவக உரிமையாளர் ஒரு மாதம் இலவசமாக பீட்ஸாக்கள் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவினம் அதிகரிக்கும் சூழலில் மக்களுக்கு உதவ அவ்வாறு திட்டமிட்டதாக 50 வயதுமிக்க உரிமையாளர் மார்க் வில்கின்சன் கூறினார்.
தமது ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்யவும் அது வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நேரத்தில் இலவச பீட்ஸாமக்களுக்கு உதவும் அதேவேளை, உணவு விநியோக்கிப்பாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் பயனடையலாம் என்பதால் இலவச பீட்ஸா திட்டம் மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலவச பீட்ஸா திட்டத்துக்கான செலவு 12,000 பவுண்ட் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2020 மார்ச் மாதம் COVID-19 நோய்ப்பரவலின் தொடக்கத்தில், திரு.வில்கின்சன் உணவு விநியோகச் சேவையைத் தொடங்கினார்.
இந்நிலையில், உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நேரத்தில் இலவச பீட்ஸாக்கள் வழங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒமிக்ரான் BF.7 திரிபு மூலமாக சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து தற்போதுதான் உலக பொருளாதாரம் மீண்டுவரும் வேளையில், மீண்டும் சீனாவில் இந்த புதிய திரிபு காரணமாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
அதேநேரம், இந்த புதிய வகை கொரோனா வைரசின் தாக்கத்தை எதிர்கொள்ள இதுவரை எடுத்துக்கொண்ட தடுப்பூசிகள் போதுமா, புதிய தடுப்பூசி எதுவும் தேவையா, என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்துகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள தமிழர் கார்முத்துமணி. இவர், ஓர் உயிரி மருந்து நிறுவனத்தின் முதன்மை ஆய்வு அதிகாரியாக செயல்படுகிறார்.
அவரிடம் தற்போது நடைபெறும் ஆராய்ச்சி, கொரோனவை தடுக்கும் புதிய தடுப்பு மருந்துகள் பற்றி விளக்கம் கேட்டோம். பேட்டியிலிருந்து...
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், மீண்டும் மக்கள் அங்கு இறந்துபோவதாகவும் செய்திகள் வந்துள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா மீண்டும் அங்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது ஏன்?
கொரோனா முதல் அலையில் சீனாவில் அதிக பாதிப்புகள் இருந்தன. அதன் பின்னர், பிற நாடுகளுக்கு பரவியது. அங்கு கொரோனா கட்டுக்குள் வந்தபோது, பிற நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கும் நிலை ஏற்பட்டது.
கொரோனா வைரசுக்கு தடுப்பூசி வந்ததும், பல்வேறு நாடுகளிலும், தடுப்பூசி பயன்பாடு அதிகரித்தது. அதனால், இராண்டாம் அலைக்கு பின்னர், கொரோனாவின் தாக்கம் பெரும்பாலும் உலகளவில் கட்டுக்குள் இருந்தது. பல நாடுகளில் தடுப்பூசி முகாம் பெரியளவில் நடைபெற்றது.
ஆனால் சீனாவை பொறுத்தவரை, பிற நாடுகளில் கண்டறியப்பட்ட வெற்றிகரமான தடுப்பூசிகளை சீன அரசாங்கம் பயன்படுத்தவில்லை. அங்கு, அவர்களாகவே ஒரு தடுப்பூசியை அறிமுகம் செய்தார்கள், இருந்தபோதும், பிற நாடுகளைப் போல, தடுப்பூசி முகாம்கள் அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாக இருந்தது.
தற்போது புதிய கொரோனா திரிபு அங்கு வந்துள்ளதோடு, இறப்புகளும் அதிகரித்துள்ளன. அந்த நாட்டில் இருந்து பலரும் பல நாடுகளுக்கு சென்றிருப்பார்கள் என்பதால், உலகளவில் மீண்டும் இந்த கொரோனா தாக்கம் கவனம் பெற்றுள்ளது.
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், பூஸ்டர் ஊசி போட்டுக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். தற்போது வெளியாகியுள்ள புதிய வகை கொரோனா வைரஸை சமாளிக்க இதுவரை எடுத்துக்கொண்ட தடுப்பூசிகள் போதுமானதாக இருக்குமா? மீண்டும் நான்காவது முறையாக கொரோனா தடுப்பூசி தேவையா?
நான்காவது தடுப்பூசி தேவையா இல்லையா என்று தற்போது உறுதியாக நாம் சொல்லமுடியாது. நான்காவது முறையாக நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால், புதிய வகை கொரோனவால் பாதிப்பு ஏற்பாடாது என்று எந்த உறுதியும் சொல்லமுடியாது. தடுப்பூசி போடுவதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும். ஆனால் அதனால் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று உறுதியாக சொல்லமுடியாது.
வைரஸ் என்பது தன்னை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற உறுதியோடு பரவும் என்பதால், முதலில் நம்மை நாம் தற்காத்துகொள்வதுதான் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
எளிமையாக புரிந்துகொள்வதற்கான உங்களுக்கு விளக்குகிறேன். ஒரு சிக்கலான பாதையில் நீங்கள் பயணிக்கும்போது, வளைந்து நெளிந்து செல்வீர்கள், உங்கள் இலக்கை அடைய முயற்சிப்பீர்கள், கடினமான பாதையாக அது இருந்தால், முயற்சி செய்வீர்கள் தானே, அதுபோலதான் இந்த கொரோனா வைரஸ் தனது இருப்பை உறுதிசெய்துகொள்ள, அதனுடைய தன்மையை மாற்றிக்கொண்டு வாழ முயற்சிக்கும். அதனால்தான் மியுடேஷன்ஸ் (மரபணுப் பிறழ்வு) நடக்கிறது. புதிய வகை கொரோனா வைரஸ் திரிபுகள் அவ்வப்போது உருவாவதை தடுக்கமுடியாது.
கொரோனா வைரஸ் முதல் அலையில் இருந்த அதே தன்மையில் தற்போது இல்லை. பலவகையில் அது மாறிவிட்டது. இதுவரை சுமார் 10 முதல் 15 வகையான திரிபுகளாக தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளது. அறிவியல்பூர்வமாக சொல்வதென்றால், ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ என்ற இரண்டு வகையாக வைரஸ் உள்ளது. கொரோனா வைரஸ் ஓர் ஆர்.என்.ஏ வைரஸ், இது தனது உருமாற்றிக்கொண்டே இருக்கும். இதனை கட்டுப்படுத்துவது சிரமம்தான்.
எடுத்துக்காட்டாக, எச்.ஐ.வி என்பது ஓர் ஆர்.என்.ஏ வைரஸ், இதுவரை எச்.ஐ.வி வைரஸில் சுமார் 400கும் அதிகமான திரிபுகள் வந்துவிட்டன. ஒரு சில வகையான எச்.ஐ.வி வைரஸ் மேற்கத்திய நாடுகளில் மட்டும் காணப்படுகிறது, ஒரு சில வகை ஆசிய நாடுகளில் காணப்படுகிறது. அதாவது, எச்.ஐ.வி வைரஸ் ஒவ்வொரு பகுதியில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை எதிர்த்து எவ்வாறு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளமுடியுமோ அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு வாழ்கிறது. அதே போன்ற நிலைதான் தற்போது கொரோனா வைரசிலும் காணப்படுகிறது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
கொரோனா வைரஸ் முதல் அலையில் இருந்தபோது, அதனை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதனை எதிர்ப்பதற்கான தடுப்பூசி கண்டறியப்பட்டது. ஒரு வைரஸின் பேட்டர்ன்-ஐ (மாதிரி) கண்டறிவதற்குதான் அதிக காலம் தேவைப்படும். அதன் திரிபு வகையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு திரிபுக்கும் தடுப்பூசி என்பது அறிவியல் உலகில் தேவையற்றது என்று கருதப்படும்.
ஏனெனில், நீங்கள் தடுப்பு மருந்து கண்டறிவதற்கு ஒரு சில தினங்கள்தான் ஆகும். ஆனால் அதனை முதலில், விலங்குகளிடம் சோதனை செய்யவேண்டும், பின்னர் மனிதர்களிடம் சோதனை செய்யவேண்டும். அதற்கான காலம் அதிகம் தேவைப்படும். அதற்குள் மீண்டும் வேறு திரிபு வருவதற்கான வாய்ப்புள்ளது என்பதால், பொதுவாக திரிபுகளுக்கு தடுப்பூசி கொண்டுவருவது என்பது வரவேற்பை பெறுவதில்லை.
ஆனால், தற்போது, உலகளவில் பல்வேறு தடுப்பூசி ஆய்வு நிறுவனங்கள் பேன் கொரோனா (PAN CORONA ) என்ற பல்வேறுவிதமான கொரோனா திரிபுகளுக்கும் சேர்ந்த வகையில் ஒரு தடுப்பூசியை கண்டறியும் சோதனைகள் நடத்தி வருகின்றன. பல்வேறு நாடுகளிலும் தற்போது இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் என்பது, டெங்கு, சிக்குன் குனியா, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை போல, நாம் எப்போதும் கவனமாக இருக்கவேண்டிய நோய்களின் பட்டியலில் வந்துவிட்டது. தடுப்பு மருந்து வரும்வரை தற்காப்பு என்பதுதான் ஒரே வழி.
தடுப்பூசிகள் மூலம் நம்மை தற்காத்துக்கொள்வது என்பது தற்போது இரண்டாவது வாய்ப்பாகதான் நாம் கருதவேண்டும். முதல் வாய்ப்பு என்பது நம்மை நாம் தற்காத்துக்கொள்வதுதான் சிறந்தது. கொரோனா வைரஸ் என்பது ஆர்.என்.ஏ வைரஸ், அதாவது விரைவாக தன்னை உருமாற்றிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.
தடுப்பூசி கண்டறிந்து, அதனை நாம் போட்டுக்கொள்வதற்கு ஒரு காலம் தேவைப்படும். ஆனால் அந்த காலத்தை விட குறுகிய காலத்தில் கொரோனா வைரஸ் தனது அடுத்த திரிபு நிலைக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால், தடுப்பூசியை மட்டுமே வாய்ப்பாக நாம் கருதுவதைவிட, நம்மை தற்காத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பதை முதன்மையாகக் கருதவேண்டும்.
அரசாங்கம் அறிவிப்பு கொடுக்கும்வரை காத்திருக்காமல், நாமாகவே கூட்டநெரிசலான இடங்களை தவிர்க்கலாம்.
முகக்கவசம் அணிவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளலாம். நாம் இருக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வது நல்லது.
பயத்தை விடுத்து, நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தலாம்.
சர்வக்கட்சி தலைவர் கூட்டம், இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை என சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் பசுமை நிலைபேறான திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வந்துள்ள அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களை நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் நாட்டில் பெரும்பாலானோருக்கு உணவு பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதற்காகவும் சர்வதேச சமூகத்துடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.
இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஒற்றையாட்சிக்குள், பிளவுபடாத இலங்கைக்குள், அதிகாரங்களைப் பகிர நடவடிக்கை எடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் எமது அரசாங்கத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடியப் புதிய சட்டம் கொண்டு வருவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது கட்சி சம்மேளனம் கொழும்பு கெம்பல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடாந்தும் உரையாற்றிய அவர்,
“ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய அதிகார பகிர்வை ஏற்படுத்துவோம்.
குறுகிய காலத்துக்குள் மக்கள் பலத்துடன் வளர்ந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி மீது எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டேன்.
பொது தேர்தலில் வெற்றிகோட்டா கோஹோம், பசில் கோஹோம் என்கிற பெரிய புரட்சியை ஐக்கிய மக்கள் சக்தி செய்தது. குறுகிய காலத்துக்குள் பதிவு செய்யப்பட்டுக் கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாரிய வெற்றி கிடைத்தது.
இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க கோழைகள் சதி செய்கிறார்கள். ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ இருக்கும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தி மீது கைவைக்க எவருக்கும் இடமளிக்கமாட்டேன்.
எங்களை அழிக்க நினைப்பவர்கள் மக்களோடு இணைந்து எங்களை அழித்து தோற்கடித்துக்காட்டுங்கள். அரசாங்கத்துக்குள்ள தீர்வு மின், நீர் கட்டணங்களை அதிகரிப்பதல்ல. மாறாக நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவிதமான தீர்வுகளும் இல்லை.
அரச ஊழியர்களுக்கான தொழில் உரிமை பாதுகாப்புநட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது உண்மை. அதற்காக அரச நிறுவனங்களின் ஊழியர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள முடியாது. அவர்களின் தொழில் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
அரச, தனியார் கூட்டுமுயற்சிகளின் ஊடாக நட்டமடையும் அரச நிறுவனங்களை இலாபமடையச் செய்யலாம். அதேபோல் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசியலமைப்பில் அடைப்படை உரிமைக்குள் சேர்ப்போம்.
மக்களுக்கு எதிரான தீர்மானங்களுக்காக மக்களோடு ஒன்றிணைந்து வீதிக்கு இறங்குவதற்கு இந்த அரசாங்கத்திடம் ஒருபோதும் அனுமதி கேட்டுக்கொண்டிருக்கப்போவதில்லை.
மேலும் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொடவை தாராளவாதிகள் மறந்துவிட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அவர்களுக்கு நீதி கிடைக்கும்.
சரத்பொன்சேகா தலைமையில் நடவடிக்கைநாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணங்களை மீள நாட்டுக்குக் கொண்டுவருவேன். அத்துடன் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தவும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கவும் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
போராட்டத்தால் கைதுசெய்யப்பட்டவர்கள் பக்கமாக ஐக்கிய மக்கள் சக்தி நிற்பது மாத்திரமன்றி, போராட்டக்காரர்களால் முன்னெடுத்த புரட்சியை கையில் எடுத்து எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம்.
எனவே வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப முடியுமான நாட்டுக்குள்ள ஒரே தீர்வு, ஒரே மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமாகும்.
அதனால் புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அதற்காக அரசாங்கம் ஆரம்பமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்” எனவும் தெரிவித்துள்ளார்.