இன்று வெள்ளிக்கிழமை(26) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 430 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் வடமாகாணத்தில் 07 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஆறு பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை பனிப்புயலொன்று தாக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், மழையும் பனியுமாக நாட்டில் பெரும் இடையூறை ஏற்படுத்தப்போவதாகவும், ஸ்காட்லாந்தில் -15 பாகை மற்றும் பிரித்தானியாவில் -6 பாகை செல்ஷியஸாக வெப்பநிலை இறங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளுக்கு பனி எச்சரிக்கை விடுத்துள்ள குறித்த மையம் தாழ்வான பகுதிகளில் 5 சென்டி மீற்றர் அளவுக்கும், உயரமான பகுதிகளில் 40 சென்டி மீற்றர் அளவுக்கும் பனிப்பொழிவு இருக்கும் எனவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பண்ணாகம் ஒன்றியம் பிரித்தானியா நிர்வாக உறுப்பினர்கள் ஒன்றினைந்த சூம் செயலி ஊடாக வாழ்த்துக்களும் கருத்துக்களும்
பண்ணாகம் இணையத்தின் 15 வது ஆண்டு நிகழ்வுக்கான ஓளிப்பதிவில் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒண்றியத்தின் நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள் பண்ணாகம் இணையத்தைப் பாராட்டியும் கவிதைகள் மூலமும் வாழ்த்துக்கள் வழங்கி பல நல்ல கருத்துக்களையும் வழங்கிய ஓளிப்பதிவு விரைவில் பண்ணாகம் ரீவியில் வெளிவரும்.
விநாசித்தம்பி இராஜரூபன் ( சொந்த ஊர் பளை), மயூரப்பிரியன் (யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் உயர்தரப்பிரிவு மாணவனும், இந்துக்கல்லூரி 2004ம்,2005ம் ஆண்டுகளின் துடுப்பாட்ட அணியின் தலைவரும், மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளருமாக திகழ்ந்தவர்.) யாழ் – வடமராட்சியைச் சேர்ந்தவர்களான அருணாச்சலம் சிதம்பரநாதன் , ஞானக்குமரன் புத்திரசிகமணி , நிர்மலா சத்தியசீலன் ,வெங்கடாசலம் கணேசபாக்கியன் , நாதநாயகி அம்மா , உறவினர் ராஜசிங்கம் ,வாசுதேவன் நேரு (Radio Officer as in the Merchant Navy) , புஸ்பவதனா , தணிகாசலம் சக்திவேல் .
முதலான பத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரு வாரங்களில் இங்கிலாந்தில்
கோரோனோவிற்குப் பலியாகி உள்ளனர்.
கண்ணீர் அஞ்சலிகள்
ஆற்றமுடியாத பெரும் துயரத்தில் இருக்கும் எம் உறவினர்களுக்கு ஆழ்ந்த தெரிவித்துக்கொள்கின்றோம் . அவர்களது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் .
மேலும் covid 19 பெரும்தோற்று இன்னும் அதிகமாக பரவிக்கொண்டிருக்கின்றது. இன்னும் பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் . அவர்கள் பூரணகுணமடைந்து வீடுதிரும்ப பிராத்திப்போம் .
இணையமூடாக கொரோனா பற்றிய தமிழ் வைத்தியர்களின் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அமர்வு 2 – 24/01/2021 SUNDAY
2pm – UK, 3pm – EU, 7.30pm – SL, 9am – CA
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88906231650…
Meeting ID: 889 0623 1650
Passcode: vanakkam
கொரோனா தொற்று ஒரு வருடமாகியும் முற்றுப்பெறாத பேரவலம். எம் உறவுகளை இழந்துபோகும் நிலை தொடருமா?
எமது எண்ணற்ற கேள்விகளுக்கான பதில்களுடன் துறைசார் மருத்துவர்கள் பங்குகொள்ளும் சிறப்பு அமர்வு…
அன்புடன் அழைக்கின்றன;
கிளி மக்கள் அமைப்பு.
மில்ரன் கீன்ஸ் தமிழர் பொதுமன்றம் -ஐ. இ.
லிவர்பூல் தமிழ்க்கல்விக்கூடம் -ஐ. இ.
கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கம் -ஐ. இ.
நெதர்லாந்து மனிதாபிமான நடவடிக்கைக்கான கூட்டுறவு சங்கம்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தும் மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்கவேண்டும், பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு பொலிஸார் விலக வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
இதேவேளை, வீதியில் கொட்டகை அமைத்து போராட்டம் நடத்த யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், நேரில் சென்று அனுமதியளித்தார்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவில் கூட வெளிநாடுகளுக்கு வழங்கும் எண்ணம் தமக்கு கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உறுதிபட தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு துறைமுகம் எமக்கு மிகவும் முக்கிய கேந்திர நிலையமாகும்.எனினும் கடந்த நல்லாட்சி அரசில் கொழும்பு கிழக்கு முனைய அபவிருத்தி குறித்து 2017 இல் இந்தியாவுடனும் 2019 இல் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் இரண்டு உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன. அதன்பின்னர் நாம் பல நெருக்கடிக்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது.
எனவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ அல்லது முகாமைத்துவத்தையோ வெளிநாட்டிற்கு கையளிக்கும் எண்ணம் கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் நின்றவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ச மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளமை முக்கியத்துவம் பெறுகின்றது.
மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என மிக முக்கிய பௌத்த பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடம் வலியுறுத்தியுள்ளது.
மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “மாகாணசபை என்பது வெள்ளையானை. அதனிடம் வேலை வாங்கமுடியாது.
மாறாக உணவுகளை மாத்திரமே வழங்கிக்கொண்டிருக்கவேண்டும். அவ்வாறானதொரு நிலைமை எமது நாட்டுக்கு தேவையில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று மக்கள் வாழும் பகுதிகளுக்கு நேரில் சென்று பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கிவருகின்றார்.
எனவே, மாகாணசபைகள் வேண்டாம். அதற்கான தேர்தலை நடத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்களின் சார்பில் கோரிக்கை விடுக்கின்றேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.