ஜெர்மனியில் வசிக்கும் ஆயிரகணக்கானோருக்கு புகழ் பெற்ற நிறுவனம் ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டில் புகழ் பெற்ற வர்த்தக நிறுவனம் தனது கிளை நிறுவனங்களை மூடவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் பலர் தங்களுடைய பணிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வேலை இழக்கும் அபாயம்ஜெர்மனியில் பிரபல வர்த்தக ஸ்தபனமான கெலரியா கப் கொப் நிறுவனமானது தனது கிளை நிறுவனங்களில் அதாவது மொத்தமாக இருக்கின்ற 129 கிளைகளில் 52 கிளைகளை மூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த 52 கிளைகள் மூடப்பட்டால் அதில் பணியாற்றும் 4500க்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கெலரியா கப் கொப் நிறுவனமானது ஒஸ்றியா நாட்டினுடைய பிரபல வர்த்தகர் பென்கு என்பவரால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது.
பாரிய வீழ்ச்சிஇதேவேளையில் இந்த கெலரியா கப் கொப் னுடைய நிகழ்நிலை(online) ரீதியிலான வியாபாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது கொரோனா காலங்களில் இந்த வியாபாரம் பாரிய அளவில் உயர்வடைந்துள்ளது. அதாவது கொரோனா காலங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தினால் இலகுவில் இந்த வியாபாரம் பாரிய உயர்ச்சியை அடைந்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதாக எழுத்துமூல அறிவிப்பு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அவ்வாறான அறிவித்தல் கிடைத்தால் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் ஜனநாயகம் நிலை நாட்டபட்டுள்ளது என்றும் அதற்கு தலை வணங்குவதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை அரசாங்கம் விரும்பாமலோ தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் செய்துள்ளனர்.
தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ,பௌத்த துறவிகள், வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தினரின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சையினை ஏற்படுத்திய குருந்தூர் மலையில் இராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில் விகாரை நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்கள் திடீர் விஜயம் செய்து களநிலவரங்களை ஆராய்ந்துள்ளனர்.
நடப்பது என்ன?இதன்போது, குருந்தூர் மலையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் முற்றுமுழுதான இராணுவ பிரசன்னத்துடன் காணப்பட்டுள்ளது.
குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு பக்கற்றுக்களும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தங்குவதற்கான கட்டில்களும் தீயில் சுடப்பட்டுக்கொண்டிருக்கின்ற குளத்து மீன்களும் ஏற்கனவே வத்தலாக்கப்பட்ட கருவாடுகளும் காணப்பட்டுள்ளது.
அங்கு சீருடையில் நின்ற இராணுவத்தினர் பலர் காட்டுக்குள் தம்மை மறைத்துக்கொண்டுள்ளனர்.
கட்டுமானத்திற்கான வாளி போன்ற தடையங்கள் மேற்பகுதியில் காணப்பட்டுள்ளது.