WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS 9

சுவிட்சர்லாந்தில் உள்ள அழகான மலைக்கிராமத்தில் குடியேற விரும்புவோருக்கு, சுவிஸ் அரசாங்கம் 50 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்றது. உலகம் முழுதும் இருந்து சுற்றுலா பயணியர், ஆண்டு முழுதும் இங்கு வந்து குவிந்தபடி இருப்பர்.

இந்த அழகான பனிமலையில், கடல் மட்டத்தில் இருந்து 4,265 அடி உயரத்தில் அல்பினென் எனும் கிராமம் உள்ளது. வாலெய்ஸ் என்ற சுற்றுலா தலத்துக்கு செல்லும் வழியில் அல்பினென் கிராமம் உள்ளது.

இங்கு அரிய வகை பறவைகள், வன விலங்குகளுடன் ரம்மியமான தட்ப வெப்பநிலையில் அழகான, அமைதியான வாழ்க்கையை இங்கு வாழலாம். சுற்றுலா பயணியருக்கான சவால் நிறைந்த பல விளையாட்டுப் போட்டிகளும் உள்ளன.

யாரும் விருப்பப்படுவதில்லை

எனினும் , இந்த கிராமத்தில் வசித்தவர்கள் படிப்படியாக இங்கிருந்து வெளியேறி, வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர். கிராமத்தில் பிழைப்பதற்கு தேவையான வாழ்வாதாரம் இல்லாததே காரணமாக கூறப்படுகிறது.

கடந்த 2020 நிலவரப்படி, இந்த கிராமத்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 243 ஆக உள்ளது.

ஆள் நடமாட்டம் இன்றி அமைதியாக காணப்படும் இந்த கிராமத்தில் குடியேற யாரும் விருப்பப்படுவதில்லை. இதன் காரணமாக இங்கு மக்கள் குடியேறுவதை ஊக்கப்படுத்த, சுவிஸ் அரசு கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது.

50 லட்சம்

அதன்படி 'இங்கு குடியேறுபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அளிக்கப்படும்' என சுவிஸ் அரசங்கம் அறிவித்துள்ளது.

அதேசமயம் சுவிஸ் குடியுரிமை வைத்துள்ள, 45 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இங்கு குடியேற விண்ணப்பிக்க முடியும்.

வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் சுவிஸ் நாட்டில் 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.


எகிப்து பிரமிடுக்கு உள்ளே கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய தாழ்வாரம்: உள்ளிருந்து கிடைத்த அதிசயம்

எண்டோஸ்கோபி கேமரா படமெடுத்த தாழ்வாரத்தின் உட்பகுதி

பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்தில் உள்ள மாபெரும் கிசா கிரேட் பிரமிடு கட்டமைப்புக்குள் அதன் முதன்மை நுழைவாயிலுக்கு மேலே ஒரு மூடப்பட்ட ரகசிய தாழ்வாரம் போன்ற பகுதி இருப்பது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்குள்ளே உள்ள காட்சி இப்போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகாலம் கழித்து அந்நாட்டு தொல்லியல் துறை அதிகாரிகள் அதன் உள்ளே எப்படி உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

என்டோஸ்கோபி முறையில் எடுக்கப்பட்ட வீடியோ அந்தத் தாழ்வாரத்தின் உட்புறங்களைப் படமெடுத்துக் காட்டியுள்ளது. 30 அடி நீளமும், 7 அடி அகலமும் உள்ளது ஆங்கிலத்தில் காரிடார் என்று குறிக்கப்படும் அந்தத் தாழ்வாரம்.

நுழைவாயில், அல்லது இது போல கண்டுபிடிக்கப்படாமல் உள்ள இன்னொரு தாழ்வாரம் இரண்டில் ஏதேனும் ஒன்றைச் சுற்றி, பிரமிடின் பாரம் மிக அதிகமாக இறங்காமல் தடுக்கும் வகையில் அந்த பாரத்தை பரவலாக்கி கொடுப்பதற்கான கட்டுமான உத்தியாக இந்த தாழ்வாரம் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இப்படி ஒரு ரகசியத் தாழ்வாரம் இருப்பது 2016ஆம் ஆண்டு முதல் முறையாக மியூவோகிராஃபி என்ற ஊடுருவி படமெடுக்கும் தொழில்நுட்பத்தின் உதவியோடு கண்டுபிடிக்கப்பட்டது.

மியூவான்கள் என்ற அணுவுட் துகள்களைச் செலுத்தி ஆய்வு சோதனை செய்து, அதில் கிடைத்த தரவுகளை ஆய்வு செய்தது ஸ்கேன் பிரமிட்ஸ் என்ற ஆய்வுத் திட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு. இந்த மியூவான்கள் காஸ்மிக் கதிர்களின் துணை வினையாக விளைவது. இதைச் செலுத்தும்போது கற்கள் இவற்றில் பகுதியளவை உறிஞ்சிக்கொள்ளும். அந்தத் தரவுகளில் தெரிந்த அடர்த்தி மாறுபாடுகளைக் கண்டறிந்தது.

கிரேட் பிரமிடு கட்டமைப்பின் வடக்கு முகத்துக்குப் பின்னால் ஒரு காலி இடம் இருப்பதை இந்த ஊடுருவாத் தொழில்நுட்பம் காட்டிக் கொடுத்தது. முதன்மை நுழைவாயிலுக்கு 7 மீட்டருக்கு மேலே இது கண்டறியப்பட்டது. ஆங்கில V எழுத்தின் வடிவத்தில் அமைந்த செவ்ரான் கட்டமைப்பு ஒன்று இந்த இடத்தில் அமைந்துள்ளது.

குஃபு பாரோ மன்னன் கல்லறையை நெருங்கிவிட்டார்களா?

இந்தக் கண்டுபிடிப்பை அடுத்து, ரேடார், அல்ட்ரா சவுண்ட் ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, செவ்ரான் கட்டமைப்பின் இணைப்பில் உள்ள ஒரு மெல்லிய இடைவெளி வழியாக, 0.24 அங்குல அளவுள்ள மெல்லிய எண்டோஸ்கோப் குழல் ஒன்றினை அனுப்பி உள் அமைப்பைப் படம் எடுத்தார்கள்.

இந்த எண்டோஸ்கோப் கேமரா மூலம் அந்தத் தாழ்வாரத்தின் உள்ளே எடுக்கப்பட்ட படங்கள் வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டன. அந்த வீடியோவில், உள்ளே ஒரு காலியான தாழ்வாரம் போன்ற அமைப்பு இருப்பதும், அதன் கூரை வளைவான கற்களால் ஆகியிருப்பதும், அதன் பக்கச் சுவர்கள் கரடுமுரடான கற்களால் பின்னிப் பின்னி உருவாக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

"இந்த ஸ்கேனிங் ஆய்வைத் தொடர்ந்து செய்து, இதற்குக் கீழே ஏதாவது இருக்கிறதா, இல்லை வெறும் இந்தத் தாழ்வாரம் மட்டும்தானா என்பதைக் கண்டறிய என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்," என்றார் எகிப்தின் தொல்பொருள்கள் உச்சநிலை கவுன்சிலின் தலைவரான முஸ்தஃபா வாசிரி.

இந்த கிரேட் பிரமிடு கிசா பீடபூமியின் மீது கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் 146 மீட்டர். தோராயமாக கிமு 2609 முதல் கி.மு. 2584 வரையிலான காலப்பகுதியில் ஆட்சி செலுத்திய சியோப்ஸ் அல்லது குஃபு பாரோ மன்னர்களின் காலத்தில் இது கட்டப்பட்டது.

புவியில் உள்ள மிகப் பழைய, மிகப்பெரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான இதை எப்படிக் கட்டியிருப்பார்கள் என்பது குறித்து அறிஞர்களிடம் மாறுபட்ட கருத்துகளே நிலவுகின்றன. கிசாவில் காணப்படும் மூன்று பிரமிடுகளில் மிகப் பெரியது இந்த கிரேட் பிரமிடு.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் விவாதிக்கும் அளவுக்கு மிகப் பெரிய கண்டுபிடிப்பு இது என்று பொருள் தரும் வகையில் “உலகின் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் செல்லும் பெரிய கண்டுபிடிப்பு இது” என்று குறிப்பிட்டார் எகிப்து தொல்லியல் அறிஞர் ஜஹி ஹவாஸ்.

குஃபு மன்னர் புதைக்கப்பட்ட குழி இன்னும் பிரமிடுக்குள் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க இந்தக் கண்டுபிடிப்பு உதவி செய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.

அந்தத் தாழ்வாரத்துக்கு அடியில் ‘முக்கியமான ஒன்று’ இருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.

"இப்போதில் இருந்து இன்னும் சில மாதங்களில், நான் சொல்வது சரியா இல்லையா என்பதை நாம் பார்க்கமுடியும்," என்றார் அவர்.

இதைப் போல இரண்டாவது, இதைவிடப் பெரிய வெற்றிடம் ஒன்று 2017ஆம் ஆண்டு மியூவோகிரஃபியை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது.

30 மீட்டர் நீளமும், பல மீட்டர் உயரமும் உள்ள இந்த வெற்றிடம், கிராண்ட் கேலரி என்று அறியப்படும் பகுதிக்கு நேர் மேலே அமைந்துள்ளது.

நாம் எதிர்கொண்ட நெருக்கடிகளை ஆராயும்போது அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடிந்தமை ஒரு அதிசயமாகவே தெரிகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், தேர்தலை நடத்த பணம் கொடுக்க மாட்டோம் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பட்ஜெட்டில் செலவினங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

எங்களின் செலவினங்களுக்கு சரியான முன்னுரிமை அளித்ததால், நீண்ட எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். 12 மணி நேர மின்வெட்டை ஓரிரு மணி நேரமாகக் குறைத்துள்ளோம்.

மருந்துத் தட்டுப்பாடு இருந்தாலும், அன்றைய காலத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவு. அன்றைக்கு விவசாய உரத்துக்காக கூக்குரலிட்ட விவசாயிகள் தற்போது நெல்லை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, ஒருவித மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாம் எதிர்கொண்ட நெருக்கடிகளை ஆராயும்போது அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடிந்தமை ஒரு அதிசயமாகவே தெரிகிறது.

அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து செலவுத் தலையீடுகளுக்கும் பணம் ஒதுக்காமல் இதைச் செய்தோம்.

அதனால்தான் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அனைத்து அமைச்சுக்களின் செலவினங்களும் ஐந்து சதவீதம் குறைக்கப்பட்டன.

அமைச்சகங்களின் செலவினங்களும் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. தற்போது, உள்ளூராட்சித் தேர்தல் செலவுகளுக்கு எப்படி முன்னுரிமை அளிப்பது என்பதுதான் பிரச்சினை. எங்கள் வாதம் முழுக்க அதன் அடிப்படையிலேயே உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

வவுனியாவில் பாடசாலை ஒன்றிற்கு அருகில் காற்றில் சிதறிய குளவி ஒன்று அவ்வழியாக சென்றவர்களை கொட்டியதில் பாடசாலை மாணவர் உட்பட 5 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (21-02-2023) பிற்பகல் கோவில்குளம் பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் அம்புலன்ஸ் மூலம் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பிறகு மாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்ற மாணவன் உட்பட அவ்வழியாக சென்ற 4 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் பப்புவா பிராந்திய கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டு, பணயக் கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நியூசிலாந்து விமானி காணப்படும் படங்களை  கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பிலிப் மெஹ்ர்டென்ஸ் எனும் இந்த விமானி, இந்தோனேஷியாவின் சுசி எயார் நிறுவனத்துக்காக பணியாற்றிவந்தவர்.

கடந்த 7 ஆம் திகதி, பப்புவா பிராந்தியத்திலுள்ள தூரப்பிரதேசமொன்றிலுள்ள பரோ விமான நிலையத்தில் தனது விமானத்தை அவர் தரையிறக்கிய பின்னர் அவ்விமானியும் விமானத்திலிருந்த பயணிகளும் திரும்பிவரவில்லை.

விமானி காணப்படும் படங்கள்

மேற்கு பப்புவா தேசிய விடுதலை இராணுவம் எனும் கிளர்ச்சி அமைப்பானது அவரை சிறைபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அவரின் விமானத்தையும் எரித்ததாக தெரிவித்துள்ளது. அத்துடன், விமானி மெஹ்ர்டென்ஸ் காணப்படும் படங்களையும் மேற்கு பப்புவா தேசிய விடுதலை இராணுவம் வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிக்கள், அம்புகள் முதலான ஆயுதங்களை ஏந்திய கிளர்ச்சியாளர்களுடன் விமானி மெஹ்ர்டென்ஸ் அப்படங்களில் காணப்படுகிறார்.

பரோ விமான நிலையத்துக்கு விமானங்கள் வருவது நிறுத்தப்பட வேண்டும் என மேற்படி கிளர்ச்சியாளர்கள் முன்னர் கூறியதுடன், பப்புவாவின் சுதந்திரத்தை இந்தோனேஷியா உறுதிப்படுத்தும் வரை விமானி மெஹ்ர்டென்ஸ் விடுவிக்கப்பட மாட்டார் எனவும் மேற்படி கிளர்ச்சியாளர்கள் முன்னர் கூறியிருந்தனர்.

பப்புவா தீவின் கிழக்குப் பகுதியில் பப்புவா நியூகினி நாடு அமைந்துள்ளது. அத்தீன் மேற்குப் பகுதி இந்தோனேஷியாவின் ஒரு பகுதியாக உள்ளது.

அப்பகுதியை தனி நாடாக்குவதற்காக மேற்கு பப்புவா தேசிய விடுதலை இராணுவம் எனும் கிளர்ச்சி அமைப்பு போராடி வருகிறது.


கவிஞர் நா.தேவதாசன் அவர்களின் „திருக்குறள் கவிதைகள்'நூல் வெளியீட்டு விழா.


ஜேர்மனி, இராட்டிங்கன் நகரில் கடந்த 11.02.23 அன்று,கவிஞர் திரு..நா.தேவதாசன் அவர்களால் எழுதப்பட்ட திருக்குறள் கவிதைகள் என்ற நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

திருக்குறள் அதிகாரம் ஒன்றான கடவுள் வாழ்த்திலிருந்து அதிகாரம் நூற்றிமுப்பத்தி மூன்று ஊடல் உவகை வரையுள்ள குறள்களுக்கு இந்நூலில் கவிஞர் திரு.நா.தேவதாசன் அவர்கள் இரண்டடிக் குறள் வழியில்,வாசிப்போருக்கு எளிதில் பொருள் விளங்கக் கூடியதாக சிறப்பாக எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருக்குறளுக்கு பொருள் எழுதியோர் பலருண்டு.முதல் பொருள் எழுதிய பரிமேலழகரிலிருந்து டாக்டர் மு.வரதராசன், கலைஞர் கருணாநிதி எனப் பலரைச் சொல்லலாம்.   இவர்கள் அனைவரும் குறள் வரிகள் எதனைச் சுட்டிக்காட்டியதோ அதன் மையக் கருத்திலிருந்து விலகாமல் அவரவர் அதற்கான பொருளைச் சுட்டி நிற்கும் வார்த்தைகளைக் கையாண்டு எழுதியிருந்தார்கள்.

கவிஞர் திரு.நா.தேவதாசன் அவர்கள்,இவர்கள் அனைவரிலிருந்தும் வேறுபட்டு,சிந்தித்து இப்படியும் எழுதலாம் என ஒரு புதிய வழியில் தனித்துவமிக்கதாக எழுதியிருப்பது பாராட்ட வேண்டிய ஒரு முயற்சியாகும்.

இந்நூலில் உள்ள குறள்களைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கையில்,திருவள்ளுவர் எவ்வாறு இரண்டடியில் பொருளுணர்த்தலாம் எனத் தனது குறள்கள் மூலம் ஒரு எழுத்துப் புரட்சி செய்தாரோ, அதைப் போன்று இந்நூலாசிரியரும் இன்றைய சமகாலத்தில் ஒரு எழுத்துப் புரட்சியைச் செய்துள்ளார் என்பதைத் துணிந்து சொல்லலாம்.  இத்தகு நூலொன்று தமிழ்நாட்டில் வெளிவந்திருந்தால் அங்கு இந்நூலின் தாக்கமே வேறாக இருந்திருக்கும்.

புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ்க் கவிஞர் ஒருவர் எழுதிய இந்நூலைப் பெருமிதப்படுத்தும் வகையில் நாம் கொண்டாட வேண்டும்.

மண்டபநிறை சபையோர் முன்னிலையில் வெளியிடப்பட்ட இவ்விழா திருமதி.ஈஸ்வரி தேவதாசன்,திருமதி.புனிதாம்பாள் ஞானசம்பந்தன் ஆகியோரின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பித்து,அகவணக்கம் எனத் தொடர்ந்து திருமதி.சாந்தமலர் இரத்தினசிங்கம் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து,செல்வி.சுபைதா இரவீந்திரநாதன் அவர்களின் வரவேற்புரை,திரு.அம்பலவன் புவனேந்திரன் அவர்களின் ஆய்வுரை,திரு.செல்வகுமாரன் அவர்களின் வெளியீட்டுரை, தமிழவேள் திரு.நயினை விஜயன் பிரதம விருந்தினர் உரை ,திரு.ஏலையா க.முருகதாசன்,திரு.சிறீஜிவகன் ஆகியோரின் சிறப்புரைகள்,திரு.வ.மண் சிவராஜா திரு.ந.கதிர்காமநாதன் ஆகியோரின் வாழ்த்துரைகள் நூலாசிரியரின் நன்றியுரை என உரைகள் இடம்பெற்றிருந்தன.

எசன் தமிழர் கலாசாரநற்பணிமன்றம்,எசன் நுண்கலைக்கல்லூரி தமிழவேள் நயினை விஜயன் அவர்களால் ,செந்தமிழ்த்தேனி எனும் விருது வழங்கி மதிப்பளிக்கப்படார்.  நிகழ்ச்சிகளை சிறப்பாக, திருமதி. கலையரசி லிங்கேஸ்வரனும், திரு. மகேஷ் மகேஷ்வரனும்  சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருந்தனர். 

கவிஞர் நா.தேவதாசன் அவர்களின் நன்றியுரையோடும் விழா இனிதே நிறைவுற்றது.
செய்தி .ஏலையா க.முருகதாசன்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக நசுக்கப்பட வேண்டும் என்பதனை சம்பந்தன் உள்ளூர விரும்பினார் என தமிழ்த்தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அவரது இறுதி நாட்களில் இதனை கூற வேண்டியது எனது கடமை எனவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

அண்மையில், சாவகச்சேரியில் இடம் பெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“இறுதி யுத்தத்தின் போது, குழந்தைகள், பெண்கள் தொடக்கம் முதியவர்கள் வரை விமான குண்டு வீச்சிற்கும், ஷெல் தாக்குதல்களுக்கும் பலியாகி கொண்டிருந்த பொழுது 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவிலே, தலைவராக இருந்தார்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்தாத சம்பந்தன்

அவ்வேளை, எமது 22 எம்பிக்களும் பல்வேறு நாடுகளில் செயலாற்றி வரும் நிலையில் ராமதாஸ் எங்களை டெல்லிக்கு அழைத்து, இந்திய நாடாளுமன்றில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க வைத்தார். அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தியிருந்தால், நான் திட்டவட்டமாக கூறுகின்றேன் யுத்தம் கட்டாயம் நிறுத்தப்பட்டிருக்கும்.

அதுமட்டுமன்றி, இலங்கையில் இடம்பெற்றுவரும் யுத்தத்தினை நிறுத்த வேண்டும் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, இந்திய நாடாளுமன்றிலுள்ள அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் பகிரங்க வேண்டுகோளாக விடுத்து, தனித்தனியாக சந்திக்கும் ஆவலோடு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டொக்டர் இராமதாஸ், ஒரு கடிதத்தை  எமக்கு அனுப்பி அந்த கடிதத்தை கையொப்பமிட்டு மீண்டும் தனக்கு அனுப்புமாறும் கோரிக்கை விடுத்தார்.

சம்பந்தன் அசண்டை

அதனை கையொப்பமிட்டு மீண்டும் அனுப்புமாறும், அதனை ஆவணப்படுத்துமாறும் கூறிய போதும் குறித்த கடிதம் கிடைத்தது என்று கூட பாட்டாளி மக்கள் கட்சி தலைவருக்கு சம்பந்தன் அறிவிக்கவில்லை” எனவும் காலம் கடந்து உண்மைகளை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

சுவிஸ்லாந்தின் ஆறோ மாநில நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாகவும், தற்போது சுவிஸ்லாந்தின் சென்.கேலன் (St.Gallen) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் (கண்ணன்) எனப்படும் நபரும், அவரது மகனும் பயணித்த மகிளுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து நடைபெற்ற இடத்திலேயே அவரது மகன் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரது தந்தையும் தற்போது உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

நாளை (16.1.2023 திங்கட்கிழமை) அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்வதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் மூன்றாம் தவணை விடுமுறை 3 கட்டங்களாக வழங்கப்பட்டுவருவதை கருத்திற்கொண்டு, நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்த்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சிக்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குற்றச்சாட்டின் பேரில் உத்தியோகஸ்த்தருடன் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரியகாவல்துறை கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியும் காவல்துறை காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியுடன் சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிளுக்கு 30 தோட்டாக்கள் வழங்கப்பட்டன.

அதில் ஒன்று காணவில்லை, எனவே அந்த தோட்டாவுக்கு என்ன ஆனது என்பதை அறிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தோட்ட, கடல் கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 31) சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், அண்மைக்காலமாக அதிகரித்துள்ள மாடு திருட்டு, போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் காணி விடுவிப்பு, பாடசாலை மைதானம் போன்ற பொது இடங்களை புனரமைப்பது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் இராணுவத்தினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவிக்கப்பட்டது.


சைபீரியா நகரில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, கெமரோவோவில் உள்ள  சைபீரியா நகரில் அமைந்திருந்த பதிவு செய்யப்படாத முதியோர் இல்லம் ஒன்றிலேயே நேற்று இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்ட போது, குறித்த கட்டடத்தொகுதியில் இருந்த அனைவரும் முதியவர்கள் என்பதால், வெளியில் வர முடியாமல் அவதிப்பட்டுள்ளனர்.

சடலங்கள் மீட்பு

அதற்குள் தீ வேகமாகப் பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தின் இரண்டாம் தளம் முழுவதும் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், கட்டிடத்திற்குள் சிக்கியர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்த 20 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு செய்யப்படாத இல்லங்கள்

ரஷ்யா முழுவதும் பல முதியோர் இல்லங்கள் பதிவு செய்யாமல் இயங்கி வருவதாகவும், அதிகாரப்பூர்வமாக அவை தனிப்பட்ட சொத்தாக கருதப்படுவதால் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது எனவும் ரஷ்ய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியு்ளளது.


இலங்கை மீளவே முடியாத ஒரு பிரச்சனையில் கால் வைத்திருக்கிறது,  அதிலும் குறிப்பாக தமிழர் தாயக பிரதேசங்களான வடக்கு கிழக்குபகுதிகள் தான் அதிக ஆபத்தில் சிக்கியிருக்கிறது

3 வயது குழந்தையை ஒரு தந்தை வன்புணர்வு செய்திருக்கிறான் என்றால் அவனுள்ளே இருந்திருக்க கூடிய அந்த மதுபோதையின் தாக்கம் எப்படியானதாக இருந்திருக்கிறது.

உண்மையிலே இன்று பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருக்க கூடிய இந்த ஐஸ் எனும் போதை பொருள் ஸ்ரீலங்காவை பொறுத்த வரை முன் எப்போதுமே பயன்பாட்டிலே இல்லாதா ஒன்று , அப்படியிருக்கையில் இந்த ஐஸ்ஐ முதன் முதலாக பயன்படுத்த கற்றுக்கொடுத்து யார்..? இதனுடைய ஆரம்பபுள்ளி ஏது..?

வீதிக்கு வீதி ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கடமையிலே இருக்கின்றார்கள் அப்படியிருந்தும் எப்படி இந்த ஐஸ் நாட்டிற்குள்ளே வருகின்றது

ஒரு வேளை சுமந்திரன் அவர்கள் சொல்வது போல் படையினருக்கும் கடத்தல் காரர்களுக்கும் இடையே தொடர்பிருத்தல்தென்பது உண்மையாய் இருக்குமா,,? இல்லை தடுக்கமுடியாமல் வடக்கு கிழக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்த ஐஸ் போதைக்கு பின்னால் யாரவது ஒரு சிலரது திட்டங்கள் நனவாகிக்கொண்டு இருக்கிறதா..?

உலக கிண்ண கால்பந்து போட்டிகள் கத்தாரில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தற்போது காலிறுதி போட்டிகள் முழுவதும் நிறைவடைந்து அரையிறுதி போட்டிகளுக்கான நான்கு அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

உலக கிண்ண கால்பந்து திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் பல சாதனைகள் மற்றும் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகள் மற்றும் சம்பவங்கள்


இதுவரை நடந்த உலக கிண்ண கால்பந்து போட்டிகளில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகள் மற்றும் சம்பவங்களை ஒரே பார்வையில் தருகின்றோம்.

1. உலக கிண்ண வரலாற்றில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள முதலாவது ஆப்பிரிக்கா நாடாக மொரோக்கோ இடம்பெற்றுள்ளது.

2. ஐந்து பிபா (FIFA ) உலகக் கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018 மற்றும் 2022) கோல் அடித்த முதல் வீரராக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பிடித்துள்ளார்.

3. ஸ்பெயின் அணி கோஸ்டாரிகா அணியை 7-0 எனும் கோல் கணக்கில் வென்றது, இதுவே இதுவரை அதிக கோல் வித்தியாசத்தில் பதிவான சிறந்த வெற்றியாக உள்ளது.

4. முதல் சுற்றில் பலம் பொருந்திய ஆர்ஜென்டினா அணியை தர வரிசையில் கீழ் நிலையில் உள்ள சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வரலாறு படைத்தது.

5. உலக கிண்ண கால்பந்து போட்டியை ஏற்று நடாத்தும் நாடு முதல் போட்டியில் தோல்வியடைந்தது இதுவே முதல் தடவையாகும், ஈக்வடார் மற்றும் கத்தார் ஆகிய அணிகள் மோதிய முதல் போட்டியில் கத்தார் 2:0 என தோல்வியடைந்திருந்தது.

6. உலக கிண்ண வரலாற்றில் அது கூடிய தடவைகள் சம நிலையில் போட்டியை முடித்த அணியாக இங்கிலாந்து உள்ளது, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதிய போட்டியானது சமநிலையில் முடிந்த நிலையிலே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

7. இதுவரை ஒரே ஒரு 'ஹாட்ரிக்' கோல் மட்டுமே பதிவாகியுள்ளது, சுவிட்சர்லாந்துக்கு எதிரான 'சுற்று-16' போட்டியில் போர்த்துக்கல் வீரர் ரமோஸ் இந்த 'ஹாட்ரிக்' சாதனையை படைத்தார்.

8. ஆண்கள் உலக கிண்ண கால்பந்து வரலாற்றில் முதலாவது பெண் நடுவர் என்ற சாதனை, ஜெர்மனி கோஸ்டாரிகாவுடன் மோதிய போட்டியில் நடுவராகப் பணியாற்றிய முதல் பெண்மணி என்ற பெருமையை ஸ்டெபானி ஃப்ராபார்ட் பெற்றார்.

9. போர்த்துக்களின் பெபே இம்முறை கோல் அடித்த அதிக வயதான வீரர் ஆவார் (39 ஆண்டு, 283 நாட்கள்), சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த கோல் உடன் இந்த சாதனை பதிவாகியுள்ளது.

10. ஸ்பெயினின் பாப்லோ காவி இம்முறை கோல் அடித்த இளம் வயது வீரராக உள்ளார் (18 ஆண்டு, 109 நாட்கள்). கோஸ்டாரிகா அணிக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த கோல் உடன் இந்த சாதனை பதிவாகியுள்ளது. 

ஜேர்மனிய நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த 25 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த 25 பேரும் ஜேர்மனி அரசைக் கவிழ்க்க அழைப்பு விடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெடரல் அதிகாரிகளின் சோதனை


ஜேர்மனியில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கைதுகள்  இடம்பெற்றுள்ளதாக பெடரல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

பெடரல் அதிகாரிகள் ஜேர்மனியில் உள்ள மாகாணங்களில், 11 மாகாணங்களில் சோதனைகள்  நடத்தியிருந்தனர்.

கைது செய்யப்பட்ட 25 பேர்


ஜேர்மன் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 25 பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக பெடரல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஜேர்மனியின் போருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பை ஏற்காத Reich Citizens movement என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து பெடரல் அதிகாரிகள் இந்த  சோதனைகளை  நடத்தியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

ஜேர்மனி எசன் நகரில் 23.2.2020 இல் நடைபெற்ற தமிழ்நாடு சஞ்சிகை
"இனிய நந்தவனம் " 
யேர்மனி சிறப்பு இதழ் வெளியீட்டு விழா 

ஜேர்மனி எசன் நகரில் 23.2.2020 இல் நடைபெற்ற தமிழ்நாடு சஞ்சிகை

"இனிய நந்தவனம் " யேர்மனி சிறப்பு இதழ் வெளியீட்டு விழா பண்ணாகம்.கொம் பிரதமஆசிரியர் ஊடகவித்தகர் திரு. இ. க. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவை தமிழருவி நிறுவனர் தமிழ்வேள் திரு. திருமதி. நயினை விஜயன் அவர்கள் மிக ஒழுங்காக ஒழுங்கமைத்தனர்.
வரவேற்புரையை தமிழ்வேள் திரு. நயினைவிஜயன் வழங்கினார். தலைமையுரையை அவைத்தலைவர் ஊடகவித்தகர் திரு. இ. க. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்  வழங்கினார். சஞ்சிகை முதல் பிரதியை கம் காமாட்சி அம்பாள் ஆலய அறங்காவலர் ஆலயபிரதம குரு சிவசிறீ பாஸ்கரக்குருக்கள் வெளியிட பிரான்ஸ் ஐ. ரி. ஆர் வானொலி இயக்குனரும் உ. த. ப. இயக்க ஐரோப்பியத் தலைவர் திரு. விசு செல்வராசா அவர்கள் பெற்றுக்கொண்டார். அவ்வமையம் இனிய நந்தவன பிரதம ஆசிரியர் திரு.ந.சந்திரசேகரன் அவர்களும் மற்றும் சிறப்பிதழை அலங்கரித்த பிரமுகர்களும் கலந்து வாழ்த்துரைகள் வழங்கி சிறப்பித்தார்கள். நடனங்கள், வீணை இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இறுதியில் சிறப்பிதழ் ஆசிரியர் ஏற்புரைவழங்கினார் நிகழ்ச்சி அனைத்தையும் அவைத்திலகம் பாலா அவர்கள் தொகுத்து வழங்கினார்.