
சிறிலங்காவின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் நாவற்குழி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாவற்குழி பகுதியிலுள்ள விகாரையில் இடம்பெறவுள்ள மத நிகழ்வில் சவேந்திர சில்வா மற்றும் 128 பௌத்த பிக்குகள் பங்கேற்கவுள்ள நிலையிலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலையாளியே வெளியேறுஇதன் போது, தமிழர் தேசத்தில் பௌத்த விகாரை எதற்கு? இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவே வெளியேறு, நிறுத்த நிறுத்து பௌத்த மயமாக்கலை நிறுத்து, வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு, நாற்குழி விகாரை சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் அடையாளம், திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை நிறுத்து, நாவற்குழி தமிழர் தேசம், தமிழர் தேசத்தில் புத்த கோயில் எதற்கு, ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பேராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகர் உட்பட பலர் கொண்டிருந்தனர்.
இவ்வாறு முன்னணியினரின் பேராட்டம் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதும், அந்த போராட்டத்தை ஊடறுத்து பிக்குகளுக்கும் சவேந்திர சில்வாவுக்கும் மேள தாள முழக்கங்களுடன் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
பௌத்த பிக்குள் யாழிற்குயாழ்ப்பாணம் நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு நூற்றுக் கணக்கான பௌத்த பிக்குகளுடன் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவும் இன்று வருகைதந்துள்ளார்.
நாவற்குழி விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் பிரித் ஓதி வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றவுள்ளது. இந்த வழிபாட்டை நடத்துவதற்காகவே தென்னிலங்கையில் இருந்து நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளனர்.
மிகப்பெரும் பூஜை வழிபாடுஅதற்கமைய இன்று காலை முதல், பிரித் ஓதுதல் மற்றும் விசேட பூசை ஏற்பாடுகள் என மிகப் பெரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தென்னிலங்கையில் இருந்து வருகை தந்துள்ள சவேந்திர சில்வாவிற்கும் 128 பௌத்த பிக்குகளுக்கும் முப்படையினரின் மரியதை மற்றும் மேள தாளம், ஆலவட்டம் போன்ற வரவேற்பளித்து போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து விகாரை வரை அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
நாவற்குழி சமீத்தி சுமன விகாரையின் கலச திரை நீக்கம் இன்றைய தினம் முப்படைகளின் பிரானதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்குபற்றுதலுடன் பௌத்த ஆகம முறைப்படி சம்பிரதாய பூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இதன் பொழுது சிங்கள மக்கள் பௌத்த துறவிகள் இராணுவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்த நிலையில் விசேட பௌத்த நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பேக்கரி பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள பேக்கரி தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பாண் ஒன்றின் விலை 150, 160, 170 எனவும் சில பிரதேசங்களில் 180 ரூபாயிற்கும் விற்பனை செய்யப்படுவதால் விற்பனை 100% குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மின் கட்டண உயர்வால், பேக்கரி தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பேக்கரி தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது என ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஆகவே குறைந்தபட்சம் பாணின் விலை 100 ரூபாயாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன கூறியுள்ளார்.
அனைவரும் வாயை மூடிக்கொண்டு உட்கார வேண்டும் என்பதே அரசாங்கம் பொதுமக்களுக்கு சொல்லும் செய்தி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட அடக்குமுறைகுறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கூட, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வாயை மூடி அமருமாறு எதிர்க்கட்சி உறுப்பினருக்கு தெரிவித்ததையும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆயிரக்கணக்கானோர் நேற்று நடத்திய போராட்டத்தில் பொலிஸார் பல் முறை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.
இந்த போரட்டத்தில் காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என ஐக்கிய நடுகள் சபையால் முன்வைக்கப்பட்ட பிரேரணை பொதுச் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் குறித்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
எனினும், ஐநாவின் குறித்த சிறப்புத் தீர்மானம் 141 நாடுகளின் ஆதரவுடன், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாக்களிப்பு முடிவுஉக்ரைனில் உள்ள ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும், உடனடியாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரி ஐக்கிய நாடுகள் சபையால் சிறப்புத்தீர்மானம் முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளநிலையில், சீனா, இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான் உள்ளிட்ட 32 நாடுகள் குறித்த வாக்கெடுப்பினை புறக்கணித்திருந்தன.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புதிய புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும் என ஈழ கவிஞர் காசி ஆனந்தன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் காசி ஆனந்தன் இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார் என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.
பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புதிய புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும் என மீண்டும் காசி ஆனந்தன் தகவல் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 82 வயது பெண் இறுதிச்சடங்கின் போது உயிருடன் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சனிக்கிழமை அன்று, நியூயார்க்கின் போர்ட் ஜெபர்சனில் உள்ள Water Edge Rehab மற்றும் நர்சிங் மையத்தில் 82 வயது பெண்ணொருவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரது உடல் நான்கு மைல் தொலைவில் உள்ள மயான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சுவாசித்த மூதாட்டிஅங்கு சென்றதும் அரை மணிநேரம் கழித்து, குறித்த மூதாட்டி சுவாசித்துக் கொண்டிருப்பதை இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஒருவர் கவனித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அப்பெண் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரது நிலை குறித்து தெரிவிக்கப்படவில்லை என சஃபோல்க் கவுண்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநில அட்டர்னி ஜெனரல் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கும், அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் இது தேவையற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு மோசமான சூழ்நிலை' என கூறியுள்ளார்.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கையெழுத்து போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விசாரணை
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
இதனை தொடர்ந்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
1 பவுண் தங்கத்தின் விலைஇவ்வாறான சூழலில் இன்றைய தினம் (17.01.2023) 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 195,700.00 ரூபாவாக உள்ளது.
அதேவேளை 22 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 179,400.00 ரூபாவாக பதவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தங்கத்தின் விலைதங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 693,410.00 ஆகும்
24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 24,460.00
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 195,700.00
22கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,430.00
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 179,400.00
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,410.00
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 171,250.00
Click to edit table header |
ஊடகவித்தகர் பண்ணாகம் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பொதுப் பணி விபரங்களும், விருதுகளும். 1) பண்ணாகம்.கொம் இணைய பிரதம ஆசிரியர், நிர்வாக இயக்குனர். 2) யேர்மன் தமிழ் கலாச்சார மன்றத் தலைவர். 3) யேர்மனி தமிழ்ப் பாடசாலை ஆசிரியர். 4) முன்னாள் நமது இலக்கு பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் 5) ஐரோப்பிய தமிழ் வாசக வட்ட அமைப்பின் தலமை இயக்குனர். 6) தமிழ் இணைய அகத்தின் நிறுவனர் . (முதற் பணி உலக 26 எழுத்தாளர்களை இணைத்து நாவல் உருவாக்கியது) 7) பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் நிர்வாக செயற்பாட்டாளர். 8) இலண்டன் பி.பி.சி தமிழ்ச் சேவை ஒன்றியத்தினால் ஊடகவியலாளர் அங்கீகார சான்றிதழ் பெற்றவர். 9) சிறந்த தமிழ் ஆசிரியப்பணி விருதாளர். 10) 24 மணிநேர தொடர் பேச்சு உலகசாதனையாளர். 2020 11) உலகத் தமிழ்மொழி நாளாளில் 8 மணி நேரப்பேச்சு உலகசாதனை 20.2.2021 விருதுகள். 1) ஊடகவித்தகர் விருது. 2017 2) வாழ்நாள் சாதனையாளர் விருது.2019 3) வாசகர் வட்ட விருது. 2019 4) சிறந்த தமிழ் ஆசிரியர் விருது. 2012 5) உலகசாதனை பேச்சாளர் விருது.2020 6) உலகசாதனை தமிழ்மொழி நாள் பேச்சு 2021 7) செந்தமிழோன் விருது 29.5.2021 |