WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

News-1

சிறிலங்காவின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் நாவற்குழி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாவற்குழி பகுதியிலுள்ள விகாரையில் இடம்பெறவுள்ள மத நிகழ்வில் சவேந்திர சில்வா மற்றும் 128 பௌத்த பிக்குகள் பங்கேற்கவுள்ள நிலையிலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலையாளியே வெளியேறு

இதன் போது, தமிழர் தேசத்தில் பௌத்த விகாரை எதற்கு? இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவே வெளியேறு, நிறுத்த நிறுத்து பௌத்த மயமாக்கலை நிறுத்து, வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு, நாற்குழி  விகாரை சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் அடையாளம், திட்டமிட்ட  பௌத்த மயமாக்கலை நிறுத்து, நாவற்குழி தமிழர் தேசம், தமிழர் தேசத்தில் புத்த கோயில் எதற்கு,  ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய  வண்ணம் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த பேராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய  செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகர் உட்பட பலர் கொண்டிருந்தனர்.

இவ்வாறு முன்னணியினரின் பேராட்டம் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதும், அந்த போராட்டத்தை ஊடறுத்து பிக்குகளுக்கும் சவேந்திர சில்வாவுக்கும் மேள தாள முழக்கங்களுடன் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

பௌத்த பிக்குள் யாழிற்கு

யாழ்ப்பாணம் நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு நூற்றுக் கணக்கான பௌத்த பிக்குகளுடன் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவும் இன்று வருகைதந்துள்ளார்.

நாவற்குழி விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் பிரித் ஓதி வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றவுள்ளது. இந்த வழிபாட்டை நடத்துவதற்காகவே தென்னிலங்கையில் இருந்து நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளனர்.

மிகப்பெரும் பூஜை வழிபாடு

 அதற்கமைய இன்று காலை முதல், பிரித் ஓதுதல் மற்றும் விசேட பூசை ஏற்பாடுகள் என மிகப் பெரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தென்னிலங்கையில் இருந்து வருகை தந்துள்ள சவேந்திர சில்வாவிற்கும் 128 பௌத்த பிக்குகளுக்கும் முப்படையினரின் மரியதை மற்றும் மேள தாளம், ஆலவட்டம் போன்ற வரவேற்பளித்து போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து விகாரை வரை அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

நாவற்குழி சமீத்தி சுமன விகாரையின் கலச திரை நீக்கம் இன்றைய தினம் முப்படைகளின் பிரானதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்குபற்றுதலுடன் பௌத்த ஆகம முறைப்படி சம்பிரதாய பூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இதன் பொழுது சிங்கள மக்கள் பௌத்த துறவிகள் இராணுவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்த நிலையில் விசேட பௌத்த நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பேக்கரி பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள பேக்கரி தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பாண் ஒன்றின் விலை 150, 160, 170 எனவும் சில பிரதேசங்களில் 180 ரூபாயிற்கும் விற்பனை செய்யப்படுவதால் விற்பனை 100% குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மின் கட்டண உயர்வால், பேக்கரி தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பேக்கரி தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது என ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஆகவே குறைந்தபட்சம் பாணின் விலை 100 ரூபாயாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன கூறியுள்ளார்.

அனைவரும் வாயை மூடிக்கொண்டு உட்கார வேண்டும் என்பதே அரசாங்கம் பொதுமக்களுக்கு சொல்லும் செய்தி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட அடக்குமுறைகுறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கூட, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வாயை மூடி அமருமாறு எதிர்க்கட்சி உறுப்பினருக்கு தெரிவித்ததையும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆயிரக்கணக்கானோர் நேற்று நடத்திய போராட்டத்தில் பொலிஸார் பல் முறை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்த போரட்டத்தில் காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என ஐக்கிய நடுகள் சபையால் முன்வைக்கப்பட்ட பிரேரணை பொதுச் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் குறித்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

எனினும், ஐநாவின் குறித்த சிறப்புத் தீர்மானம் 141 நாடுகளின் ஆதரவுடன், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்களிப்பு முடிவு 

உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும், உடனடியாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரி ஐக்கிய நாடுகள் சபையால் சிறப்புத்தீர்மானம் முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளநிலையில், சீனா, இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான் உள்ளிட்ட 32 நாடுகள் குறித்த வாக்கெடுப்பினை புறக்கணித்திருந்தன.


தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புதிய புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும் என ஈழ கவிஞர் காசி ஆனந்தன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் காசி ஆனந்தன் இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார் என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.

பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புதிய புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும் என மீண்டும் காசி ஆனந்தன் தகவல் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 82 வயது பெண் இறுதிச்சடங்கின் போது உயிருடன் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சனிக்கிழமை அன்று, நியூயார்க்கின் போர்ட் ஜெபர்சனில் உள்ள Water Edge Rehab மற்றும் நர்சிங் மையத்தில் 82 வயது பெண்ணொருவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரது உடல் நான்கு மைல் தொலைவில் உள்ள மயான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சுவாசித்த மூதாட்டி

அங்கு சென்றதும் அரை மணிநேரம் கழித்து, குறித்த மூதாட்டி சுவாசித்துக் கொண்டிருப்பதை இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஒருவர் கவனித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அப்பெண் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரது நிலை குறித்து தெரிவிக்கப்படவில்லை என சஃபோல்க் கவுண்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில அட்டர்னி ஜெனரல் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கும், அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் இது தேவையற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு மோசமான சூழ்நிலை' என கூறியுள்ளார்.    


இலங்கையிலிருந்து உலகளாவிய சிவநெறிய திருமுறை விண்ணப்பம்100வது நிகழ்ச்சி சூம் வழிமுலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இன்நிகழ்வு ஒவ்வெரு வியாழக்கிழமைகளிலும் சூம் வழிமூலம் உலகளாவிய ரீதியில் நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்வை  அச்சுவேலி உயிலங்குளம் சித்தி விநாயகர் ஆலயம்,சிவசிறீ குமாரசாமிக்குருக்கள் அறக்கட்டளை, பிரித்தானியா சைவமுன்னேற்றச் சங்கம்,இந்திய சேலம் பன்னிருதிருமுறைகள் பகுப்பாய்வு மையம் என்னும் அமைப்புகள் இணைந்து உலகரீதியாக சைவசமய பிள்ளைகளை இணைத்து நடாத்திவருவதை யாவரும் அறிவீர்கள். இந்த நிகழ்வின் நூறாவது வார நிகழ்வானது கடந்த வியாழக்கிழமை 02.1.2023 இல்  பலநூறு மாணவர்கள் சைவப்பெரியார்கள் இணைந்த ஓர் நிகழ்வில் பல்வகையான சைவசமய திருமுறைகள், வில்லுப்பாட்டு,மகிழ்வுரைகள், வாழ்த்துரைகள் என்பன தொடர்ச்சியாக நான்கரை மணிநேரம் நடைபெற்றது. இன்நிகழ்வை இலங்கை இந்து குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி சிவசிறீ  வைத்தீஸ்வரக்குருக்கள் , பிரித்தானியா தொண்டர்சீர்பரவுவார் திரு.வா.இ.இராமநாதன் அவர்கள், சேலம் பன்னிரு திருமுறைப் பகுப்பாய்வு மைய ஸ்தாபகர் கலாநிதி  சங்கரநாராயணன் அவர்கள் இணைந்து நடாத்தும் இன்நிகழ்வில் அழகிய தொகுப்பாளினியாக கலைஞானச்சுடர் திருமதி சுபாசினி சங்கீத ஆசிரியர் அவர்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள பல சைவப்பெரியார்கள் ஊடகத்துறையினர்,ஆர்வலர்கள்,அபிமானிகள்,வைத்தியர்கள்,ஆலய அறங்காவலர்கள் ,குருமார்கள், மாணவர்கள் பொதுமக்கள் என இணைந்து சைவத்தை வளர்க்க இதன் ஆரம்பகர்த்தாவாகிய இலங்கை இந்து குருமார் அமைப்பின் தலைவர் சிவசிறீ  வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்களின் சைவப்பணிக்கு தொடர்ந்து கரம்கொடுத்து கடந்த 100 வாரங்களாக பாடுபட்டு உழைத்த அனைவருக்கும்  யேர்மனி பண்ணாகம்.கொம் இணையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறது.  
வாழ்க சைவம்!!  வளக்க அறநெறிகள்!!

நீங்களும் இதில் இணைந்து மன நிறைவும், ஆறுதலும் பெறுங்கள் கீழே உள்ள சூம் முகவரிக்கு வாருங்கள் இறை ஆசிபெறுங்கள்

அன்புக்குரிய அனைவருக்கும்.
திருவருளுடன் குருவருளும் ஒருசேர கிடைக்க பிரார்தனை செய்கிறோம்.
ஒவ்வொரு வியாழக்கிழமைதோறும்,
 மாலை 07.00 மணிக்கு இலங்கை நேரம்.   பி. ப. 1.30 மணி  ஐரோப்பா பி. ப. 2.30 மணி, சிங்கப்பூர் இரவு 9.30 மணி

"சிவநெறிய திருமுறை விண்ணப்பம்" . தொடர்..

எமது தெய்வக்குழந்தைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து, வாழ்த்துக்களுடன் நல்லாசிகளையும் வழங்கி, வாழ்வில் கல்வியிலும் கலைகளிலும் மேலும் மேன்மையான நிலை பெற உதவுவோம்.
இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றிகள்.
இணையவழி மெய்வழியே.

மெய்வழி... இணையவழி
417 892 9023
கடவுச்சொல்
202811
https://us02web.zoom.us/j/4178929023?pwd=SGhGMURUaTlPQkd6Vm5NcERGZUw3UT09
YouTube....Dr sivasri vytheeswara kurukkal
Dr sivasri vytheeswara kurukkal
தொடர்பு... +94777349123.
"திருவருளும் குருவருளும் ஒருசேர பிரார்த்திப்போம்" .


சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கையெழுத்து போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

விசாரணை  
கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மீதான விசாரணையின் பேரில் வசந்த முதலிகே சிறையில் தடத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

இதனை தொடர்ந்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 பவுண் தங்கத்தின் விலை

இவ்வாறான சூழலில் இன்றைய தினம் (17.01.2023) 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 195,700.00 ரூபாவாக உள்ளது.

அதேவேளை 22 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 179,400.00 ரூபாவாக பதவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தங்கத்தின் விலை

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 693,410.00 ஆகும்

24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 24,460.00

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 195,700.00

22கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,430.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 179,400.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,410.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 171,250.00


"நாளைய மாற்றம்"
எம்மவரின் முழுநீளத் திரைப்படம்.

24.9.2022 இல் யேர்மனி கம் காமாட்சி அம்பள் ஆலயத்தில் சிறப்புப்பூசையுடன் குதுகல ஆரம்பம்

                       பல குறுந்திரைகள் மற்றும் நாளய நாம் எனும் சின்னத்திரை தொடரை 65 பாகம் வரை யேர்மனி நாட்டில் இருந்து இயக்கிவரும் திருமதி. சிபோ சிவகுமாரனின் மற்றுமோர் படைப்பாக வெளிவர உள்ள  நாளைய மாற்றம்  திரைப்படத்தின் ஆரம்ப விழா ஹம் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.  
                           அன்றையதினம் நாளைய நாம் தொடரின் நடிகை, நடிகர்களும், பிரான்ஸ் நாட்டிலிருந்து அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் தயாநிதி தம்பையா, கலாநிதி பாலச்சந்திரன்,அறிவிப்பாளர் அருள்மொழித்தேவன் மற்றும்  நாளைய மாற்றம்  படத்தின் நடிகை, நடிகர்கள்  இத்திரைப்படத்திற்கான நிதி பங்களிப்பில் ஒரு பகுதியை பிரான்சு நாட்டில் வாழ்ந்து வருபவரும் சமூக அக்கறையாளரும் பிரபல தொழிலதிபருமான கலாநிதி நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள்  வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. 

          இப்படத்தின் 50% மான படப்பிடிப்பு இலங்கையில் நடை பெறவிருக்கிறது.   இதற்காகன  நிதியின் ஒருபகுதியை  தொழிலதிபர் திரு மாவை தங்கராசா அவர்கள் வழங்குகிறர். ஒப்பனை,நடிகர்கள் போக்குவரத்து,உணவு,உடைகள் என்பவற்றை நாளையமாற்றம் குழுவிர் அனைவரும் பொறுப்பேற்று படம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.  இலங்கைக்கான படப்பிடிப்புக்கு மிக விரைவில் யேர்மனியிலிருந்து நாளைய மாற்றம் குழுவினர் செல்லவிருக்கிறார்கள். இதன் இயக்குனராகவும் திரைக்கதை கர்த்தாவும் யேர்மனியில் திரைப்படத்துரையில் கல்விகற்று பட்டம் பெற்ற திருமதி சிபோ சிவகுமாரன் அவர்களும், ஒளிப்பதிவில் 30 வருடங்களுக்கு மேல் அனுபம் பெற்ற நாளைய நாம் தொடரில் புகழ்பெற்ற திரு சிவகுமாரன் அர்களும் களத்தில் உள்ளார்கள்.
மேலும் இவ்விழாவில் திரைப்பட கதாநாயகன்,கதாநாயகி ,நடிகர்கள் ,நடிகைகள் அறிமுகமும் கொளரவிப்பும் நடைபெற்றது. ஜேர்மன் வாழ்கலைஞர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்த நிகழ்வு இனிமையான நிறைவாகியது. ஆலயத்தில் பொங்கல் செய்தும் படக்குழுவிர்களின் சிற்றூண்டிகளும், இரவு உணவும் வழங்கப்பட்டு சிறப்பித்தார்கள் நளைய மாற்றம் குழுவினர். ஐரோப்பாவாழ் ஈழத்தவரின் தனித் தயாரிப்பான நளைய மாற்றம் வெகுவிரைவில் உலகத்  தமிழ் திரை அரங்குகளில் கண்டு களிக்க தயாராகுங்கள் கலையை வென்று எடுக்க கரங்கொடுங்கள்.
நாளைய மாற்றத்தின் வெற்றிக்கு அனைவரும் கரம் கொடுப்போம் வடம்பிடிப்போம்.   
பண்ணாகம்.கொம் நிர்வாகம் ஊடக அனுசரனை
23.11.2019 யேர்மன் தமிழ் கலாச்சார மன்றத்தின் ஒன்றுகூடல் மன்றத் தலைவர் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி தலமையில் இனிதே நடைபெற்றது.

யேர்மன் தமிழ் கலாச்சார மன்றத்தின் 2019 இவ் வருடத்திற்கான  நிறைவு ஒன்றுகூடல் மன்றத் தலைவர் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி தலமையில் இனிதே நடைபெற்றது.  இவ் ஒன்று கூடலில் மன்ற அங்கத்தவர்கள் மன்ற கலைவகுப்பு மாணவர்கள் ,பெற்றோர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள். 
இவ்வருடம் 2019  மன்றத்தால் நாடத்தப்பட்ட நிகழ்வுகள் மற்றும் சமூகப்பணிகள் பற்றிய  அறிக்கையை தலைவர் மக்களுக்கு எடுத்துக்கூறினார்.  யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம்  யேர்மனிய மக்கள் மத்தியில் ஒரு நற்பெயரைப்பெற்று விளங்குவதாகவும் பல வேலைத்திட்டங்களை இலகுவாக செய்வதற்கு இது உதவியாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார். மன்றத்தின் நிர்வாக அங்கத்தவர்களின் பாரிய முயற்சியும் புரிந்துணர்வும் மூன்று வருடங்களில் மன்றத்தின் வளர்ச்சியில் தெரிகிறது என்றார். தொடர்ந்து அடுத்தவருடம் 2020 க்கான திட்டங்கள் பல அடுத்த நிர்வாகசபையில் ஆராயப்பட்டு நடைமுறைக்கு வரும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் மன்ற நிர்வாகம் எடுத்துவருகிறது. இதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.  
ஒன்றுகூடல் மாலை 16.30.மணிக்கு ஆரம்பித்து இரவு 20.00மணி வரை நடைபெற்றது இதில் மன்றச் செயலாளர் இராசாத் அவர்களின் திருமணவரவேற்பும் மன்ற உறுப்பினர்களால் செய்யப்பட்டது. இரவு விருந்துடன்ஒன்று கூடல்  சிறப்பாக நிறைவு பெற்றது. 
Click to edit table header
ஊடகவித்தகர் பண்ணாகம் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பொதுப் பணி விபரங்களும், விருதுகளும்.

1) பண்ணாகம்.கொம் இணைய பிரதம ஆசிரியர், நிர்வாக இயக்குனர்.
2) யேர்மன் தமிழ் கலாச்சார மன்றத் தலைவர்.
3) யேர்மனி தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்.
4) முன்னாள் நமது இலக்கு பத்திரிகையின் முதன்மை ஆசிரியர்
5) ஐரோப்பிய தமிழ் வாசக வட்ட அமைப்பின்  தலமை இயக்குனர்.
6) தமிழ் இணைய அகத்தின் நிறுவனர் . (முதற் பணி உலக 26 எழுத்தாளர்களை இணைத்து நாவல் உருவாக்கியது)
7) பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் நிர்வாக செயற்பாட்டாளர்.
8) இலண்டன் பி.பி.சி தமிழ்ச் சேவை ஒன்றியத்தினால் ஊடகவியலாளர் அங்கீகார சான்றிதழ் பெற்றவர்.
9) சிறந்த தமிழ் ஆசிரியப்பணி விருதாளர்.
10) 24 மணிநேர தொடர் பேச்சு உலகசாதனையாளர். 2020
11) உலகத் தமிழ்மொழி நாளாளில் 8 மணி நேரப்பேச்சு உலகசாதனை 20.2.2021

விருதுகள்.
1)  ஊடகவித்தகர் விருது. 2017
2) வாழ்நாள் சாதனையாளர் விருது.2019
3) வாசகர் வட்ட விருது. 2019
4) சிறந்த தமிழ் ஆசிரியர் விருது. 2012
5) உலகசாதனை பேச்சாளர் விருது.2020
6) உலகசாதனை தமிழ்மொழி நாள் பேச்சு 2021
7) செந்தமிழோன் விருது 29.5.2021