எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான நெருக்கடி காரணமாக ரயில்வே ஊழியர்கள் சேவைக்கு வருவதற்கு போக்குவரத்து வசதி இல்லாததால், பல ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதனால், ரயில் மூலம் அலுவலங்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரச துறை ஊழியர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலைமை காரணமாக நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 30 ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தினமும் பல ரயில் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
எரிபொருள் நெருக்கடி காரணமாக அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த ஊழியர்கள் ரயில்களில் பயணிப்பதால், ஒரு ரயிலில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்கள் சுகாதார,சமூக மேம்பாட்டுக்காக சுவீஸ் நாட்டு இளம் மருத்துவர்களாலும்,பொதுநலவிரும்பிகளாலும் நலவாழ்வு மருத்துவ அமைப்பு 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்கள் கொரோனாகாலத்தில் மக்கள் மருத்துவ விழிப்புணர்வு பெற அயராது உழைத்தனர். இவ் அமைப்பு சுவீஸ் நாட்டு சட்டதிட்டங்களுக்குஅமைய அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நலவாழ்வு மருத்துவ அமைப்பின் 2022ம் ஆண்டின் 1வது பொதுக்கூட்டம் சுவீஸ் சூரிச் நகரிலுள்ள உணவு விடுதியில் 19.6.2022 நடைபெற்றது. இதற்கு பண்ணாகம்.கொம் நிர்வாகத்தினரும் அழைக்கப்பட்டு கலந்து கொண்டனர். இந்த அமைப்பு தமிழ் இளம் மருத்துவர்கள் மற்றும் பொதுஅமைப்பினர் மிகவும் ஆர்வத்துடன் ஆதரவு கொடுத்துவருகின்றனர். கடந்த காலங்களில் சூம் மூலமாக உலக வைத்தியர்கள் பலரையும் அழைத்தும், ஐரோப்பா நாட்டில் வசிக்கும் எம் தமிழ் வைத்தியர்களுடனும் மக்கள் அவதிப்படும் பலவகை நோய்கள் பலவற்றிற்கு சிறப்பானவிளக்கங்களும் தீர்வுகளும் வழங்கியதுடன், மக்களின் கேள்விகளுக்கு தகுந்த விளக்கங்களும் கொடுத்துவருவதால் பலர் இதில் இணைந்து பயனடைந்துள்ளார்கள். இதற்காக மக்கள் எந்தவித கட்டணங்களும் கொடுக்கதேவையில்லை ஈழத்தவர் மேம்பாடே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
2022ம் ஆண்டின் 1வது ப்பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதுடன் கடந்த காலங்களில் நலவாழ்வு அமைப்பின் செயல்ப்பாடுகள், இனிவரும் கால செயல் திட்டங்கள் என கூடி ஆராய்ந்ததுடன் இன்னும் என்ன சிறப்பான பணிகளை தொடரலாம் என்ற ஆய்வும் செய்யப்பட்டது, நலவாழ்வு அமைப்பின் துரித செயல்பாட்டால் மக்கள் மருத்துவ அறிவுறுத்தலால் மிக சிறப்பான பயன் அடைகின்றனர் இவர்கள் செயற்பாட்டுக்கு அனைவரும் மேலும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் இவர்கள் பணி இன்னும சிறக்கும், எம் இனத்துக்கும் உடல் நலம் வளம் பெருகும் என்பதே உண்மையாகும். உலகளாவிய வைத்தியர்கள் தங்கள் வேலைப்பளுக்களுக்கும் மத்தியிலும் இதில் இணைந்து மக்கள் நலவாழ்வுப் பணியாற்றும் அத்தனை பேருக்கும் சிறப்பான வாழ்த்துகள் தொரிவிப்பதில் பண்ணாகம்.கொம் இணையமும் பெருமையடைகின்றது. நாம் அனைவரும் ஒன்று படுவோம் நன்று புரிவோம் ஒற்றுமையாய் நலவாழ்வு அமைப்புடன் பயணிப்போம்.
19.6.2022 நலவாழ்வு புதிய நிர்வாக உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனித்து செயல்பட வேண்டிய இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வெற்றி என்பது அவர்களின் சகோதர ஒற்றுமையில் பின்னிப் பிணைந்ததாக இருந்தது. எனினும் அண்மைய நாட்களில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் அவர்களின் ஆட்சி அதிகாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது.
சிறிலங்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அவர்களின் அரசியல் இருப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அவர்கள் சகோதரர்களுக்கு இடையிலும் தமது குடும்பத்திற்குள்ளும் முக்கிய பதவிகளை பகிர்ந்துகொண்டனர். ஒருவருக்கு சிக்கல்வரும் பொழுது அத்தனை பேரும் ஒன்றிணைந்து அதனை வெற்றி கொள்ளும் மார்க்கத்தை கண்டுபிடிப்பர்.
எனினும், பொருளாதார சரிவால் நாடு அதளபாதாளத்திற்குள் சென்றதன் பின்னர், அதனை சமாளிப்பதற்குப் பதிலாக ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
இச்சரிவிற்கு யார் காரணம் என்ற பெரும் சர்ச்சைக்குள் அவர்களே முட்டி மோதியதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகிருந்தன. அதுமாத்திரமன்றி, பதவிகளை விட்டுக்கொடுக்காமலும் தங்களின் வீழ்ச்சியை அவர்களே உருவாக்கினர் என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், அண்ணன் மகிந்தவின் வழிகாட்டுதலிலும், தம்பி பசிலின் திட்டங்களிலும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை முன்னெடுத்திருந்தார். ஆனால், பிணக்குகள் உச்சம் தொட, நாட்டில் பொது மக்கள் கிளர்ந்தெழுந்ததன் பின்னர், மகிந்த ராஜபக்ச பதவியை துறந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது பசில்
அண்ணன் தம்பி, என்று அதிகாரங்களை தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொண்ட சகோதரர்கள் யாரும் தற்போது உடனில்லை. கோட்டாபய ராஜபக்ச மட்டும் அரச தலைவராக பதவியில் நீடிக்கிறார்.
அண்ணன் மகிந்தவும் இல்லாமல், தம்பி பசிலும் இல்லாமல் அவர் தனது எஞ்சிய ஆட்சிக்காலத்தை எப்படி சமாளித்துக் கொள்ளப் போகிறார் என்கிற கேள்வியை தென்னிலங்கை அரசியல் அவதானிகள் எழுப்பியிருக்கிறார்கள்.
ரணில் விக்ரமசிங்க என்னும் அரசியல் தந்திரியுடன் கோட்டாபய இணங்கி எஞ்சிய காலத்தை சீராக்குவாரா அல்லது ரணிலுடன் மைத்திரி மோதுண்டு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது போல, கோட்டாபயவும் மைத்திரி வழியில் பயணிப்பாரா அல்லது தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழலை தீர்க்க முனைப்புக்காட்டுவாரா என்பதை வரும் நாட்கள் உறுதிப்படுத்தும்.
இலங்கையில் அந்நிய செலாவணி குறைந்துள்ள நிலையில் நாட்டிற்குள் அந்நிய செலாவணியை கொண்டுவர ரணில் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு முயற்சிகளையும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீள முடியாமைக்கு இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறையே மூலகாரணமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு அந்நிய செலாவணியை உள்ளீர்க்கும் வகையில் அரசாங்கம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
வெளிநாட்டவர்களுக்கு ‘கோல்டன் பரடைஸ் விசா’ என பெயரிடப்பட்டுள்ள நீண்ட கால வீசா வழங்கும் திட்டத்தை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் குறைந்தது ஒரு இலட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட காலத்திற்கு இந்த விசா வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு வைப்பிலிட்ட பணத்தில் 50 ஆயிரம் டொலரை ஒரு வருடத்திற்கு பின்னர் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மீதமுள்ள 50,000 டொலரை குறைந்தபட்ச இருப்புத் தொகையாக கணக்கில் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இந்த விசா வசதியின் பலன்களை அனுபவிக்க முடியும் என்றும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் கூறியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டினருக்கு இணைய வழி ஊடாக விசா வழங்கப்படவுள்ளது.
சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகோல்டன் பாரடைஸ் விசா நடைமுறையின் கீழ் உள்ளீர்க்கும் வெளிநாட்டவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் இந்த விசா வசதியின் பலன்களை அனுபவிக்க முடியும்.
இலங்கையில் குறைந்தபட்சம் 75 ஆயிரம் டொலர் அல்லது சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசா வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிவெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் 100,000 டொலர்களை இலங்கைக்கு அனுப்பினால் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு டொலர்களை அனுப்பி வைக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து மாதத்திற்கு 500 மில்லியன் டொலர்களை நாங்கள் பெற்றால், வரிசைகளை அகற்றவும், மக்களுக்கு மருந்துகளை வழங்கவும், மின்வெட்டை நிறுத்தவும் முடியும் என்று அவர் எங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்குள் ஒரு மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டால் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வழங்கவும் நாங்கள் முன்மொழிகிறோம். சில வரிச் சலுகைகளை வழங்கவும் நான் முன்மொழிகிறேன். என தெரிவித்தார்.
இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவையும் ஒற்றுமையையும் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நட்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வது ஆகிய உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தில் உள்ள எமது நண்பர்களின் உதவி அவசரமாகத் தேவைப்படுகிறது என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவில் இன்று நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் 27வது சர்வதேச மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றும் போதே அரச தலைவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு இலங்கை. நமது தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகள் நமது தேசத்தின் ஜனநாயக கட்டமைப்பின் மூலம் ஆதரிக்கப்படுவது மிகவும் முக்கியமானது.
புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமித்துள்ளோம், மேலும் தேசிய ஒருமித்த கருத்தை உருவாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து விவாதங்களை நடத்தி வருகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்19 காரணமாக சுற்றுலாத் துறையிலும் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் உள்நாட்டில் பணம் செலுத்துவதில் சரிவு மற்றும் பணவீக்கம் கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது.
ஏப்ரலில், இலங்கையானது எமது கடனாளிகளுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த வெளிநாட்டு பொதுக் கடனை மறுசீரமைக்கும் நோக்கத்துடன் ஒரு ‘கடன் நிறுத்தத்தை’ அறிவித்தது, அதே நேரத்தில் பொருத்தமான வேலைத்திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தை அணுகியது.
எவ்வாறாயினும், அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வது ஆகிய உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தில் உள்ள எமது நண்பர்களின் உதவி அவசரமாகத் தேவைப்படுகிறது
ஜப்பான் இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளிகளில் ஒன்றாக உள்ளதுடன், ஜப்பானிடம் இருந்து நிதியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த கடினமான நேரத்தில் நமது நாட்டிற்கு ஆதரவையும் ஒற்றுமையையும் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு இலங்கையின் மற்ற நட்பு நாடுகளையும் வேண்டுகோள் விடுக்கிறேன்", எனக் குறிப்பிட்டார்.
முள்ளிவாய்க்கால் தினத்தில் முன்னாள் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும் போரின் முடிவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் வெறுப்புக்குப் பதிலாக அன்பைக் காட்டுவோம். பழிவாங்குவதற்கு பதிலாக மன்னிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க முகநூல் பதிவில் தெரிவித்தமை வருமாறு..
"ஒரு நாட்டையோ மனித இனத்தையோ போரினால் தோற்கடிக்க முடியாது, முப்பது வருட இனப்படுகொலைப் போரில் நாம் இழந்தவை ஏராளம். வடக்கிலும் தெற்கிலும் உள்ள தாய்மார்கள் பிள்ளைகளை இழந்துள்ளனர். பிள்ளைகள் பெற்றோரை இழந்தனர். நாங்கள் சிங்களவர், தமிழ், முஸ்லிம் என பிரிந்துள்ளோம்.
அந்தப் போரினால் நான் ஒரு கண்ணை இழந்தேன். இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. போரின் முடிவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் வெறுப்புக்குப் பதிலாக அன்பைக் காட்டுவோம்.
கொழும்பு - ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரினதும் வீடுகள் தீவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் நாட்டைவிட்டு வெளியேறக்கூடும் என தெரிவிக்கப்பட்டும் நிலையில், ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரச தலைவருக்கு அதிகாரங்களை வழங்கிய அரசமைப்பின் 20வது சீர்திருத்த சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவை கூட்டத்தில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் 19வது திருத்தம் மற்றும் 20வது திருத்த சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்களை உள்ளடக்கிய வகையில் 21வது திருத்த சட்டத்தை முன்வைக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன்று அதிகாலை 2 மணியளவில் வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 15 பவுண் நகை மற்றும் 2 1/2 இலட்சம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிற்குள் இருவர் உள்நுழைந்து வீட்டில் உள்ளவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திற்கு திடீர் என விஜயம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், ஜனாதிபதி இதுவரை சபைக்குள் பிரசன்னமாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்றும்(புதன்கிழமை) நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே, ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு திடீர் என விஜயம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், ஜனாதிபதி சபைக்குள் பிரவேசிக்கும் பட்சத்தில், அவரிடம் கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அணு ஆயுதங்களை வாங்கும் யுக்ரேனின் முயற்சியை அனுமதிக்க மாட்டோம் - ரஷ்ய வெளியுறவுத்துறை
அணு ஆயுதங்களை வாங்க யுக்ரேன் முயற்சித்து வருவதாகவும் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியிருக்கிறார் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கோ லாவ்ரோஃப்.
யுக்ரேனின் செயல்பாடு மிகப்பெரிய அச்சுறுத்தல் மற்றும் அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
"யுக்ரேனில் இன்னும் சோவியத் அணுசக்தி தொழில்நுட்பம் உள்ளது. எனவே இந்த அச்சுறுத்தலுக்கு ரஷ்யாவே வெற்றிகரமாக பதிலளிக்க வேண்டும், என லார்வோஃப் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா பொதுச்சபை அமர்வில் பதிவு செய்யப்பட்ட செர்கே லாவ்ரோஃபின் உரை ஒளிபரப்பப்பட்டது. அதில் "முன்னாள் சோவியத் யூனியனின் நாடுகளில் மேற்கத்திய நாடுகள் ராணுவ தளங்களை கட்டக்கூடாது," என அவர் எச்சரித்தார்.
அணு ஆயுதங்களை வாங்கும் யுக்ரேனின் முயற்சியை ரஷ்யா தடுத்து நிறுத்தும் என்றும் லாவ்ரோஃப் கூறினார். எனினும், அதே அமர்வில் இடம்பெற்ற யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரி குலேபா, யுக்ரேனில் கண்மூடித்தனமாக ரஷ்யா தாக்குதல்களை நடத்தி போர்க்குற்றம் இழைப்பதாக குற்றம்சாட்டினார்.
ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு அணுகுமுறையையும் படுகொலை ஆயுதங்களைப் பயன்படுத்துவதையும் நிறுத்த சிறப்பு அமர்வைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் டிமிட்ரி குலேபா வலியுறுத்தினார்.
"யுக்ரேனில் குடியிருப்பு கட்டடங்கள், மழலையர் பள்ளிகள், ஆதரவற்றோர் காப்பகங்கள், மருத்துவமனைகள், அவசரகால வாகனங்கள், பயணிகள் பேருந்துகள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் என எல்லோரையும் இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்துவதில் எந்த நியாயமும் இல்லை," என்று குலேபா கூறினார்.
தமிழர் கலைகளை ஒன்றுபட்டுக் காப்போம்.
German Tamil Kultur verein e.V.
வாய்ப்பாட்டு ,கீபோட்(சுரத்தட்டு) ,வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் ஆகிய வகுப்புகள் உங்களுக்காக மன்றத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.