WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS -3

மாவை சேனாதிராஜா தலைமையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், கலையரசன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதனும் பல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் படத்திற்கு மாவை சேனாதிராஜா சுடர் ஏற்றி மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தி கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது கட்சியின் கடந்த கால மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டதினால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, வாிக்கொள்கையை மீளப் பெறு, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறைகளை நீக்கு என்பன உள்ளிட்ட 8 கோாிக்கைகளை முன்வைத்து பாரிய வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை முழுவதும் உள்ள 33 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டுவரும் நோயாளர்களை சிகிச்சைப் பிரிவுகளுக்கு கொண்டு செல்வதற்குகூட  வைத்தியசாலை ஊழியர்கள் இன்மையால் பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர்.

மேலும் பொதுமக்கள் நீண்டநேரமாக வரிசையில் காத்திருந்தமையையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணமாக குறிப்பிட்டு, ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கான அனைத்து விமானங்களையும் மார்ச் மாதம் முதல் இரத்து செய்வதாக Wizz Air விமானச்சேவை அறிவித்துள்ளமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினின் அடுத்த இலக்கு மால்டோவா என தகவல்கள் கசிந்துள்ள நிலையிலேயே Wizz Air நிறுவனம் குறித்த முடிவை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹங்கேரிய விமான சேவை நிறுவனமான Wizz Air பிரித்தானியாவில் இருந்து மால்டோவாவிற்கு செல்லும் விமானங்களை மொத்தமாக இரத்து செய்வதாக முதன்முதலில் அறிவித்துள்ளது.

Wizz Air நிறுவனம்


மால்டோவா நாடானது அதன் எல்லையை வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் உக்ரைனுடன் பகிர்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் Wizz Air நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில்,

“சமீபத்திய அரசியல் நகர்வுகளை கூர்ந்து கவனிக்கையில், Wizz Air நிறுவனம் மால்டோவாவுக்காக தனது அனைத்து விமான சேவைகளையும் மார்ச் 14 முதல் இடைநிறுத்துவதற்கான கடினமான ஆனால் பொறுப்பான முடிவை எடுத்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wizz Air விமான சேவை நிறுவனமானது மால்டோவாவுக்கான சேவையை பிரித்தானியாவின் Luton விமான நிலையத்தில் இருந்தே முன்னெடுக்கிறது. ஆனால், Wizz Air விமான சேவை நிறுவனத்தின் இந்த முடிவு தங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாக மால்டோவா உள்கட்டமைப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

மால்டோவா அரசு

ஐரோப்பாவிற்கு ஆதரவான மால்டோவா அரசை கவிழ்க்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக மால்டோவா அதிபர் மியா சாந்து குற்றஞ்சாட்டியுள்ள நிலையிலேயே Wizz Air விமான சேவை நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மால்டோவா நாட்டில் அரசியல் கலவரங்களை ஏற்படுத்த ரஷ்யா, மாண்டினீக்ரோ, பெலாரஸ் மற்றும் செர்பியா நாட்டவர்களை களமிறக்கவும் விளாடிமிர் புடின் நிர்வாகம் திட்டமிடுவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

2.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மால்டோவா நாடானது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதைத் தவிர்த்தே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணைக்குழு!

2023ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி, எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, திட்டமிட்டபடி மார்ச் 09ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நிலையில், இந்த தகவல் வந்துள்ளது.


தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறியுள்ள நிலையில் , தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தினை தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், “தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்” என தபாலகம் ஊடாக 500 ரூபாய் காசுக்கட்டளையை தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்

சமஷ்டி என்று முட்டி மோதிக்கொண்டிருக்காமல் முதலில் கிடைக்கின்ற அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தலைவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

இலங்கைக்கு வந்து சென்ற இந்திய வெளிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்பில், தற்போது மேசையில் 13 ஆவது திருத்தமே இருக்கின்றது. அதனையே நடைமுறைப்படுத்தாத அரசு எப்படி நீங்கள் அதற்கு அப்பால் கோருவதை நடைமுறைப்படுத்தும்? முதலில் இருப்பதைப் பெற்றுக்கொண்டு அதற்கு மேல் பெறுவதற்கு முயற்சியுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதேபாணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்கவுரையில் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்ற கருத்தை மீண்டும் முன்வைத்திருந்தார். தமிழ்த் தரப்புக்கள் அதனை நிராகரித்திருந்தன. இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கொழும்பு ஊடகம் என்று கேள்வி எழுப்பியிருந்தது.

“நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். சொல்லாடல்களை வைத்து கருத்து மோதல்கள் வேண்டாம். அதேவேளை ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்று நான் கூறியது உண்மை. அந்த நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருக்கின்றேன். இந்தநிலையில் சொல்லாடல்களை வைத்து கருத்து மோதல்கள் வேண்டாம். கிடைக்கின்ற அதிகாரங்களை முதலில் பெற்றுக்கொள்ளுங்கள். இதைவிடுத்து சமஷ்டி என்று முட்டி மோதுவதால் அது வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் இன ரீதியில் விரிசல்களை மேலும் அதிகரிக்கவே செய்யும். இதை சம்பந்தப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் கவனத்தில் கொள்வார்கள்” – என்றார்.

நாட்டில் 4 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பருப்பு 10 ரூபாவாலும், வெள்ளை அரிசி 5 ரூபாவாலும், சிவப்பு அரிசி 5 ரூபாவாலும், வெள்ளை நாட்டு அரிசி 4 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோ பருப்பு 305 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளை அரிசி 179 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளை நாட்டு அரிசி 180 ரூபாய்க்கும், ஒரு கிலோ சிவப்பு அரிசி 164 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கிலிருந்து கிழக்கு வரையான இரண்டாம் நாள் பேரணி இன்று காலை 9 மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகி வவுனியா மற்றும் மன்னார் எழுச்சி அணிகளை இணைத்து, முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டுள்ளது.

குறித்த எழுச்சி பேரணியை குழப்பும் நடவடிக்கையில் காவல்துறையினர், புலனாய்வாளர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய இரண்டாம் நாள் பேரணியில் இனம் தெரியாத இருவர் சிவில் உடையில் உள்நுழைந்து பேரணியில் கலந்து கொண்டவர்களை காணொளி எடுக்க முற்பட்டுள்ளனர்.

குழப்பும் நடவடிக்கை

இதனையடுத்து பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் இனம் தெரியாத நபருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், பேரணியை முன்னோக்கி செல்லவிடாது இடைமறித்து காவல்துறையினரும் குழப்பம் விளைவித்துள்ளனர்.

தமிழர்களின் அடிப்படை உரிமைகளான தாயகம், தேசியம், சுயநிர்நணயம் என்பவற்றை வென்றெடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக அமைப்புகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து இந்த பேரணியை முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.


யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், கடத்தல் மற்றும் சித்திரவதைகளில் ஈடுபடும் அதிர்ச்சி காணொளிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவங்கள் சுன்னாகம், மயிலங்காடு பகுதியில் நடப்பது தெரிய வந்துள்ளது.

மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், பணத்தை குறிப்பிட்ட திகதியில் தராவிட்டால், பணம் வாங்கியவரை கடத்திச் சென்று, சித்திரவதை செய்யும் அதிர்ச்சி சம்பவங்களும் வெளியாகியுள்ளன.

நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பரவிய இரண்டு காணொளிகளில், ஒரே குழுவினால் இரண்டு வெவ்வேறு நபர்கள் அடித்து சித்திரவதைப்படுத்தப்படுவது பதிவாகியிருந்தது.

அவர்கள் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியிருப்பதும், குறிப்பிட்ட நாளில் பணத்தை திருப்பி கொடுக்காததால், கடத்திச் செல்லப்பட்டு, தாக்கப்படுவதும் காணொளி உரையாடலில் இருந்து தெரிய வருகிறது.

இரண்டு காணொளிகளிலும் பதிவாகியுள்ள குற்றவாளிகளை கண்டறியும் பணியில் பொலிசார் ஈடுபட்டு, தற்போது, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் மற்றும் மயிலங்காடு பகுதியை சேர்ந்த குற்றக்கும்பல் ஒன்றே இந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளது. காணொளியில் பதிவாகியுள்ள இரண்டு தாக்குதலாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கும்பலில் இருப்பவர்களின் பெயர்கள் காணொளியிலேயே பதிவாகியுள்ளது. ரவி, ஜெகன், பாண்டி, சிறியென இயங்கும் இந்த நபர்கள், யாழ் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பதும், பணத்தை வசூலிக்க கடத்திச் சென்று சித்திரவதைப்படுத்துவதையும் வாடிக்கையாக கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கும்பலை சேர்ந்த ஒருவரின் வீட்டினருகில் உள்ள வாழைத்தோட்டம் அல்லது மயிலங்காடு மயானத்திற்கு ஆட்களை கடத்திச் சென்று அடித்து சித்திரவதைப்படுத்தி பணத்தை வசூலித்து வந்துள்ளனர்.

நீண்டகாலமாக நடக்கும் இந்த குற்றச்செயல் தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றக்கும்பலை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் உயர்மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலுள்ள வாள்வெட்டு குழு உறுப்பினர்கள் பலர் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பதும், பணத்தை அறவிட, இதே போல கடத்திச் சென்று தாக்குவது அல்லது வாளை காட்டி மிரட்டுவது, வாளால் வெட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் விடயமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

யாழில் உள்ள பிரதான வாள்வெட்டு குழு உறுப்பினர்கள் அனைவரும் மீற்றர் வட்டி தொழிலில் ஈடுவதும் தெரிய வந்துள்ளது.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அதிபர் எடுத்துவரும் முயற்சிகளுக்கு சரத் பொன்சேகா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில், அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டால், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாகி இரத்த ஆறு ஓடும் நிலை ஏற்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபரின் கருத்து


முன்னாள் மாகாண முதல்வர்கள் அனைவரும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு கிடைப்பதை விரும்புவதாக இலங்கை  அதிபர் அன்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கை அதிபரின் குறித்த கருத்து தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா 


ரணில் விக்கிரசிங்க அதிபராக நாட்டை பொறுப்பெடுத்ததில் இருந்து, இதுவரை 6 மாதங்கள் கடந்த நிலையில், நாடு எவ்வித பொருளாதார முன்னேற்றங்களையும் எட்டவில்லை என்பதோடு, அனைத்து இன மக்களும் உணவுக்காக கஸ்டப்படும் நிலையில் இலங்கை அதிபர் ரணில் அரசியல் இலாபத்தை தேடிக்கொள்ள முயற்சிப்பதாக பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில், 13ம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி அதிகாரப்பரவலாக்களை மேற்கொள்ள இலங்கை அதிபர் நடவடிக்கை எடுப்பாராயின் அது மீண்டும் ஒரு அசாதாரண சூழ்நிலையை வடக்கிற்கும் தெற்கிற்கும் ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் 


நாடு இருக்கும் சூழ்நிலையில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் கோரிக்கைகளை விடுவது ஆரோக்கியமானதாக இருக்காது, அது நாட்டிற்கு செய்யும் பாவம் என அவர் கூறியுள்ளார்.

எனவே, 13ம் திருத்த நடைமுறை தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க விழிப்புடன் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.   


ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பிற்கான அறிவுறுத்தல்களை கல்வி அமைச்சுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

“புதியதோர் கிராமம், புதியதோர் நாடு“ தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் நேற்று முன்தினம் (10) உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இதனை வலியுறுத்தினார்.

முடங்கியிருந்த பொருளாதாரம் இப்போது செயற்படுகிறது. முன்னெப்போதையும் விட, பொருளாதார இயந்திரம் மற்றும் சேவை இயந்திரம் செயற்படும் போது, உங்கள் மீதுள்ள பொறுப்பு மற்றும் உங்களுக்கு வழங்கப்படும் புதிய சவால்களை வெற்றிகொள்வதற்கான தேவை அதிகமாக உள்ளது.

பத்தாயிரத்து நூறு பாடசாலைகள்

இலங்கையில் பத்தாயிரத்து நூறு பாடசாலைகள் உள்ளன. அவற்றில் அரைவாசிக்கும் மேற்பட்ட பாடசாலைகள் 1 ஏக்கர் முதல் 12 ஏக்கர் வரையான காணிகளை கொண்டுள்ளன. அவை குறுகிய கால பயிர்ச்செய்கையில் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது அறிக்கைகளில் எங்கும் குறிப்பிடப்படுவதில்லை.

ஒவ்வொரு அங்குல நிலத்தையும் உற்பத்தித் திறனுக்கு மாற்றுவதில் என்ன குறை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து ஆலோசனை வழங்குவதும் வழிகாட்டுவதும் எமது பொறுப்பு. நாங்கள் புள்ளிவிவரங்களுடன் மட்டும் மட்டுப்பட்டிருக்க முடியாது.

உயர்தரப் பரீட்சை விரைவில் நடக்கவிருக்கிறது. பிரதேச ரீதியாக எந்தவொரு பரீட்சையும் தடைபடாமல் இருக்க மாவட்ட செயலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அது எங்களுக்குரியதல்ல, பரீட்சை ஆணையாளருக்கு உரியது என்று கூறிக்கொண்டிருக்க முடியாது.

பரீட்சை ஆணையாளருடன் தொலைபேசியில் பேசி கலந்துரையாடியாவது அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பரீட்சையை குழப்புவதற்கு எவருக்கும் இடமளிக்க வேண்டாம். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அந்த சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாதம் முதல் அடுத்த மாதம் மூன்றாவது வாரம் வரை பரீட்சைகள் நடக்கின்றன. உங்கள் பிள்ளைகளும் இதில் இருக்கலாம். இந்த பரிட்சையில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் தோற்றுகின்றனர். இதில் ஏதும் தடை ஏற்பட்டால், இன்னும் ஒரு வருடம் பல்கலைக்கழகம் செல்ல முடியாது.

அந்தக் குற்றத்தில் நீங்களும் பங்காளியாகாதீர்கள். பிரச்சினை இருந்தால் எங்களிடம் தெரிவியுங்கள். இந்தப் பரீட்சை எங்கள் பிள்ளைகளுக்கு ஏற்கனவே தாமதமாகியே நடக்கிறது. அவர்களின் கோரிக்கைக்கு அமையவே தாமதமானது.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு


ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பிற்கான அறிவுறுத்தல்களை எமது அரசாங்கம் கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளது. சுமக்க முடியாத சுமையாக இருந்தாலும் பல வருடங்களுக்குப் பின்னர் நாம் அதைக் கொடுத்தோம். கல்விச் சேவையின் அடிப்படைக் கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றவில்லை என்று எவராலும் கூற முடியாது.

மேலும், அரச பணியில் ஓய்வு பெறுவதால் வெற்றிடமாகும் பணியிடங்களை நிரப்பி, தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஊழியர்கள் உள்ளனர். கடந்த காலங்களில் 56000 பேரை அரச சேவைக்கு சேர்த்துள்ளோம்.

அப்போது நான் பொது நிர்வாக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்தேன். இருபத்து நான்காயிரம் பேர் ஆசிரியர் சேவைக்கும், அபிவிருத்திப் பணிகள் மற்றும் ஏனைய அரச பணிகளுக்காக ஏனையவர்களும் இணைப்புச்செய்யப்பட்டுள்ளனர்.

மாறிவரும் இந்த காலகட்டம்

மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் இன்னும் உபரியாக உள்ளனர். அவர்களையும் உற்பத்தித்திறன் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். " பெரிய தனியார் தொழிற்சாலைகள் மற்றும் சிறு தொழில்களில் ஆட்கள் உள்ளனர்.

இவர்களை மாவட்ட அலுவலகங்களுக்கு அழைத்து வந்து இந்த மாபெரும் பணிக்கு உதவுமாறு கூறுங்கள். எங்களின் பல்வேறு துறைகளுக்கும் நலன்பேணல் திட்டங்களிலும் அவர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

மாறிவரும் இந்த காலகட்டத்தில் உங்கள் அறிக்கைகளில் எந்த இடைவெளியும் இருக்க முடியாது என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன். " என்றும் பிரதமர் தெரிவித்தார்.

யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் 
German  Tamil Kultur verein e.V.
இசைக் கலை வகுப்புகள் நடைபெறுகின்றன.
சனிக்கிழமைகளில் நேரடியாகவும் , ZOOM மூலமும் நடைபெறுகிறது. 
மாலை 15.30 மணியிலிருந்து 

இடம்.-  Engagementzentrums  Hüsten
                                    Am Hüttengaben  29
                                    59759 Arndberg 
                                                  ( Neheim -Hüsten புகையிரதநிலையத்திற்கு அருகாமையில் )
2022 இல் மாணவர்கள் புதிய வகுப்பில் இணைய விரும்பியவர்கள் தொலைபேசிமூலமாக, நேரடியாக  வந்து இணையலாம். தரமான பட்டதாரி இளம் ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். முன் பதிவுக்கு முந்துங்கள்.

யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம்  தொடர்புகளுக்கு 
                               01737079149 ,017623826260 ,015143564209 
அரியசந்தர்ப்பம் 2023!! தவறவிடாதீர்கள்!!!

யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம். 
(அரசில் பதியப்பட்டது)
German Tamil Kulturverein e.V.
''மனிதத்தை நேசிப்போம்'' , ''We Love Humanity''

யேர்மனியில் நீங்கள் எந்தநகரில் இருந்தாலும்  கீபோட், சங்கீதம் வாய்ப்பாட்டு இலகுவாக கற்கலாம்.

 பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் நேரடியாகவும்,
சூம் ZOOM மூலம் 3வருடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது.
உங்கள் பிள்ளைகளை உங்கள் உறவினர்,நண்பர்கள் பிள்ளைகளை 2023ம் வருடம் இணைக்க யேர்மன் கலாச்சார மன்றம் தயாராக உள்ளது.  யேர்மனி அரசின் அங்கிகரித்த     பரீட்சைச் சான்றிதழ் வழங்கப்படும்
                                     
யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம்  தொடர்புகளுக்கு
   தலைவர். 01737079149, செயலாளர். 015221706612 

தமிழர் கலைகளை ஒன்றுபட்டுக் காப்போம்.

German  Tamil Kultur verein e.V.

வாய்ப்பாட்டு ,கீபோட்(சுரத்தட்டு) ,வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் ஆகிய வகுப்புகள் உங்களுக்காக மன்றத்தால்    ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.