இலங்கையில் வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதில் புதிய நடைமுறையொன்றை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் கலந்துரையைாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், வாகன இலக்க தகட்டில் 0, 1, 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும் 3, 4, 5, 6 ஆகிய இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாகன இலக்க தகட்டில் 6, 7, 8, 9 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்குவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் குறித்த நடைமுறை எப்போது முதல் செயற்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது என்பது தொடர்பில் இதுவரையில் அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே 20 ஆம் திகதியன்று நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் உட்பட்ட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை காரணமாகவே பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டதாக சாணக்கியன் வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
சாணக்கியனுக்கு எச்சரிக்கைஇந்த கருத்தின் மூலம், சாணக்கியன், நடந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்கிறாரா? மரணத்தை ஏற்றுக்கொள்கிறாரா? என்று ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். சாணக்கியனின் கருத்தின்படி, 20வது திருத்தத்துக்கு ஆதரவளித்தமையே வீடுகள் எரியூட்டப்பட்டமைக்கு காரணமாக இருக்குமானால், குமார வெல்கமவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அந்த கருத்து பொருந்தாது என்று ரணில் குறிப்பிட்டார்.
கோட்டாபய வீட்டுக்கு செல்லவேண்டும் என்று முதலில் கூறியவரே குமார வெல்கம என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் ரணில் குறிப்பிட்டார். எனவே அவர் ஏன் தாக்கப்பட்டார் என்று ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.
சாணக்கியனின் கருத்தை திரும்பப்பெற வேண்டும்எனவே அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது சாணக்கியன் தமது கருத்து தொடர்பில் கவலை வெளியிட்டு தமது கருத்தை திரும்பப்பெற வேண்டும். இல்லையேல், குறித்த கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோரவேண்டியிருக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார்.
இந்தநிலையில் குமார வெல்கமவின் மீது தாக்குதல் நடத்திய இடத்தில் உள்ள மக்கள், அவரை தாக்கவில்லை. வெளியில் இருந்து வந்தவர்களே அவரை தாக்கியுள்ளனர்.
எனவே இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, காலிமுகத்திடல் வன்முறை முதல் அன்று இடம்பெற்ற அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தி சுயாதீனமான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொதுநலவாய நாடாளுமன்ற செயலாளரிடம் கோரியிருப்பதாககுறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு யாரை நியமிப்பது என்ற பேச்சு வார்தையிலேயே குறித்த முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்பு, பதவி விலகுவேன் என கோட்டாபய ராஜபக்சவை ரணில் எச்சரித்ததாகவும் அதற்கு தாராளமாக பதவி விலகலாம் என கோட்டாபய கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளது.
குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு வாள்வெட்டாக மாறுவதற்கு மதுபோதையே காரணம் என பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
ஒரு ஆசனத்தை வைத்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதமராகவும் அரச தலைவராகவும் உருவெடுப்பார் என்று நான் அன்று கூறினேன்.
இன்று ரணில் பிரதமராகிவிட்டார். நான் அன்று கூறிய விடயம் அவ்வாறே நடந்து கொண்டு இருக்கின்றது. அதனால் பதற்றமடையாமல் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருங்கள். நான் கூறியது எல்லாம் நடக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன ஆருடம் வெளியிட்டுள்ளார்.
காலியில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தில் வஜிர அபேவர்த்தன இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“ரணில் விக்ரமசிங்க ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமராகவும் அரச தலைவராகவும் உருவாகும் வல்லமை கொண்டவர் என்று நான் முன்னர் கூறினேன். அது இன்று நடந்து கொண்டிருக்கின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் மோதல்களும் தோன்ற ஆரம்பித்துள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கு மாத்திரம் ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்திருந்தது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது சர்வகட்சி அரசாங்கத்தையோ அமைக்க முன்வந்தபோதிலும், அமைக்கப்படும் அரசாங்கத்தில் அவை எதுவும் இல்லை, முன்னர் ஆட்சியில் இருந்த அதே ஆட்சிதான் தற்போதும் உள்ளது.
புதிய அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும்" எனக் குறிப்பிட்டார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் நாங்கள் எப்படி எங்கு இருக்கிறோம் என்பது தொடர்பில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவோ அல்லது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவோ தேடிப்பார்க்கவில்லை என்று முன்னாள் அமைச்சர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தென்னிலங்கையில், கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் காரணமாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகிறது.
அவர்கள் இவ்வாறான பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், அரச தலைவரோ முன்னாள் பிரதமரோ, கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவோ நிலைமை என்ன என்பது தொடர்பான தேடி அறியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அசௌகரியத்தில் இருப்பதாகவும் அவர்கள் எதிர்நோக்கியுள்ள நிலைமை பற்றி அறிவிக்கக் கூடிய எந்த பொறுப்புவாய்ந்த நபர்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலரது வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனால், அவர்களில் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருப்பதாக பேசப்படுகிறது. தாம் எப்படி, எங்கு இருக்கின்றோம் என்பது சம்பந்தமான எவரும் தேடிப்பார்க்க நடவடிக்கை எடுக்காது குறித்து பலர் வெறுப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.
textசனிப்பெயர்ச்சி 2022: அசுர பலம் யாருக்கு? எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசியினர்கள்
பொதுவாக சனி பெயர்ச்சி என்றாலே அனைவரும் மிகவும் கவனமாக பார்ப்பார்கள் படிப்பார்கள். சனி பெயர்ச்சியாகும் போது, சிலருக்கு ஏழரைச் சனியாகவும், சிலருக்கு மங்கு சனியாகவும், சிலருக்கு பொங்கு சனியாகவும் இருந்தால், சிலருக்கு மட்டும் தங்கு சனியாக இருப்பார். மற்றும் சிலருக்கு மரணச் சனியாக இருப்பார். இப்படி பல சிறப்புகளைப் பெற்றாலும் சனீஸ்வரரைப் பார்த்து மற்ற கிரகங்களைவிட மக்கள் அதிகம் பயப்படுவது ஏன்? ஏனென்றால் தவறுக்கு நீதிபதியாய் நின்று தண்டிப்பவரும், கண்டிப்பவரும் சனீஸ்வரரே என்பதால் தான் அனைவருக்கும் பயம் ஏற்படுகிறது. சனீஸ்வரர், நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லும் நக்கீரரைப் போல, பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் அவரவர் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலன்களை கொடுப்பவர். அதேப்போன்று, லக்னத்தின் மூன்றாம் இடத்தில் சனீஸ்வரர் இருந்தால், பணவருவாய், பிரபலம், செல்வாக்கு என மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். லக்னத்தில் இருந்து ஆறாம் வீட்டில் சனீஸ்வரர் அமர்ந்திருந்தால் தன யோகம் கிடைக்கும். அதேபோல, சத்ரு ஜெயம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும். மேலும், லக்னத்தில் இருந்து ஆறாம் வீட்டில் சனீஸ்வரர் அமர்ந்திருந்தால் தன யோகம் கிடைக்கும். சத்ரு ஜெயம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும். அதன்படி, மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, சிம்மம், மீனம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சனி அசுபர் எனவே இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு சனீஸ்வரர், 12 ராசிகளில் 1, 2, 4, 5, 7, 8, 9, 10 வீடுகளில் சஞ்சரிக்கும்போது, கோச்சாரத்தில் கெடுபலனைத் தருவார். ஆறுதலான விஷயம் என்னவென்றால், சனி தீமை செய்யும் இடத்தில் இருந்தாலும், பிற நல்ல கிரகங்களின் பார்வையும் சேர்க்கையும் இருந்தால், சனியின் கெடு பலன்களில் இருந்து தப்பிக்கலாம்.
l
ஜேர்மன் குடிமக்கள் எதிர்கொள்ளும் விலை உயர்வுகள் அடுத்த 10 ஆண்டு காலம் வரை நீடிக்கும் என்று ஒரு முன்னணி பொருளாதார நிபுணர் எச்சரித்துள்ளார்.
ஜேர்மனி பரவலான பணவீக்கம் காரணமாக மந்தநிலையை எதிர்கொள்வைத்தால், ஜேர்மன் குடிமக்கள் தற்போது எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வுகள் இன்னும் ஒரு தசாப்த காலம் வரை நீடிக்கும் என்று ஜேர்மன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் (DIW) தலைவர் Marcel Fratzscher எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போருக்கு முன்பே, சீன கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது அரசாங்கத்தின் செலவுகள் மற்றும் ஊரடங்கு கொள்கை போன்ற அரசாங்க முடிவுகளின் காரணமாக, பணவீக்கத்தால் ஏற்படும் விலை உயர்வுகள் உலகளவில் ஜேர்மன் பொருளாதாரத்தை பாதித்துள்ளன.
எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யாவை பெரிதும் நம்பியுள்ள ஜேர்மனியின் தற்போதைய பணவீக்க விகிதமானது, பெர்லின் சுவர் வீழ்ச்சி மற்றும் சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஒன்றிணைந்த போது ஏற்பட்ட பணவீக்க விகிதத்தை விட, மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது.
இது குறித்து பேசிய Marcel Fratzscher, இப்போது பணவீக்கத்தை உயர்த்தும் மையப் பிரச்சினை, நாட்டின் பொருளாதார எதிர்காலம் குறித்த பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சம்தான், ஆனால் விலை உயர்வுகள் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகள் தொடர்ந்து உயரும் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், அரசாங்கம் மதிப்பு கூட்டப்பட்ட வரியை (VAT) ஏழு சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும் மற்றும் அதிகரித்து வரும் ஆற்றல் செலவைக் குறைக்க உதவும் வகையில், வேலை செய்பவர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
Fratzscher, பொருளாதார தேக்கநிலையைத் தடுக்க ஊதிய உயர்வுகள் அவசியம் என்று கூறினார், சம்பளம் உயரவில்லை என்றால் "வணிகங்கள் சிக்கலில் மாட்டிவிடும், வேலையின்மை அதிகரிக்கும், பின்னர் நாம் எப்போதும் பலவீனமான வளர்ச்சி மற்றும் அதிக பணவீக்கத்தின் சுழலுக்குச் செல்வோம்" என்று கூறினார்.
அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் மக்கள் நாட்டின் பிரச்சினைகளை மறந்து வருகின்றனர் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கு பின்னரும் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என அந்த அமைப்பின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.
ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கக்கோரி மக்கள் முன்னெடுத்த போராட்டம் விலைவாசி அதிகரிப்புடன் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு போன்ற உண்மையான பிரச்சினைகளை துடைத்தெறிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சதொச விற்பனை நிலையங்களில் ஏற்கனவே பொருட்கள் தீர்ந்துவிட்டது என்றும் அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நிர்வாகத்தினால், பணவீக்கம் அதிகரித்து மக்கள் மேலும் சுமைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை அழிப்பதற்காக, இனப்படுகொலைகளை செய்வதற்காக அந்நிய நாடுகளிடம் கடனை வாங்கி போரை முன்னெடுத்ததால் இலங்கை இன்று கடன்பொறிக்குள் சிக்கியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண இணைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“இந்த நாட்டில் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளே இன்று தெற்கில் ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும் நிலையினை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை இதுவரை காலமும் சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்தாது, அவர்களுக்கு பொய்களை கூறி இதுவரை காலமும் அந்த மக்களை ஏமாற்றினர். ஆனால், இன்று தான் சிங்கள மக்கள் உண்மையினை அறிந்திருக்கின்றார்கள்.
இந்த நாட்டில் தமிழ் மக்கள் தங்களது இருப்புக்காகவும், சுயநிர்ணயத்திற்காகவும் தங்களது உரிமைக்காகவும் தான் போராடினார்கள் என்ற உண்மை சிங்கள மக்களினால் உணரப்பட்டு இன்று ஆட்சியாளர்கள் துரத்தியடிக்கப்படும் நிலை காணப்படுகின்றது” என்றார்.