ஜேர்மனியில் உணவகத்துறை, விருந்தோம்பல் துறை முதலான துறைகளில் ஏராளமான பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் பணியாற்றிவந்த பணியாளர்கள் பலர், கொரோனா காலகட்டத்தில் தங்கள் வேலைகளை விட்டு விட்டு வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டார்கள்.
அதனால், நாட்டின் விருந்தோம்பல் துறையில் இன்னமும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகவே, அந்த பணியிடங்களை நிரப்ப வெளிநாட்டவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
புலம்பெயர்தல் தடைகளை நீக்க திட்டம்வெளிநாட்டிலிருந்து பணியாளர்கள் ஜேர்மனி வருவதற்கு தடையாக இருக்கும் சில புலம்பெயர்தல் தொடர்பான தடைகளை நீக்க ஜேர்மன் அரசு திட்டமிட்டுவருகிறது.
ஜேர்மனியில் நிலவும் பணியாளர்கள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள, ஆண்டொன்றிற்கு ஜேர்மனிக்கு 400,000 புதிய பணியாளர்கள் தேவைப்படுவதாக பெடரல் தொழிலாளர் துறை அமைச்சகம் கணக்கிட்டுள்ளது. ஆகவே, தகுதியுடையோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
75 வயதான பாபுராவ் பாட்டீலும், 70 வயதான அனுசுயா ஷிண்டேவும் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கோசர்வாட் கிராமத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இருவரும் கடந்த 17 ஆண்டுகளாக கோலாப்பூரில் உள்ள ஜான்கி முதியோர் இல்லத்தில் வசித்து வருகின்றனர்.
புனேவைச் சேர்ந்த அனுசுயா ஷிண்டே முதலில் தனது கணவர் ஸ்ரீரங் ஷிண்டேவுடன் ஜானகி முதியோர் இல்லத்துக்கு வந்திருந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர்.
முதியோர் இல்லத்தில் வாழ்ந்தபோது இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர். ஆனால், நான்கு மாதங்களுக்கு முன்பு அனுசுயாவின் கணவர் இறந்துவிட்டார், அதன் பிறகு அவர் தனிமையில் இருந்தார்.
பாபுராவ் நிலையும் அப்படித்தான். மனைவி இறந்த பிறகு பாபுராவ் வீட்டை விட்டு வெளியேறி முதியோர் இல்லத்துக்கு வந்தார்.
பாபுராவ் பாட்டீல் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஜான்கி முதியோர் இல்லத்தில் நுழைந்தார். முதியோர் இல்லம் வரையிலான அவரது பயணம் மிகவும் கடினமானது.
மனைவி இறந்த பிறகு, குழந்தைகளுடனான பாபுராவின் உறவு முறிந்தது. இதற்கிடையில், கொரோனாவின் கொடூரமும் தொடங்கியது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருக்கு கொஞ்சம் ஆதரவு தேவைப்பட்டதால், சில காலம் அண்ணனுடன் தங்கி, கடைசியில் முதியோர் இல்லத்திற்கு வர வேண்டியதாயிற்று.
நான்கு மாதங்களுக்கு முன்பு கணவன் இறந்த பிறகு, அனுசுயா தனிமையாக உணர்ந்தார், பாபுராவ் பாட்டீலின் நிலையும் அப்படித்தான் இருந்தது.
பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று, ஒரு கல்லூரியில் முதியோர் இல்லம் மூலம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அங்குள்ள சூழலைப் பார்த்த பாபுராவ் பாட்டீல் மீண்டும் திருமணம் செய்துகொள்ள நினைத்தார்.
நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதியோர் இல்லத்துக்கு திரும்பிய பாபுராவ், அனுசுயா ஷிண்டே முன் இளைஞனைப் போல தன் காதலை வெளிப்படுத்தினார்.
காதலைத் தெரிவித்த போது, பாபுராவ் அனுசுயாவுக்கு ரோஜா பூவையும் கொடுத்தார், ஆனால் அந்த நேரத்தில் அனுசுயா அவரது காதலை ஏற்கவில்லை.
அவர், நான்கு மாதங்களுக்கு முன்புதான் கணவரை இழந்தார். அவர் அந்தச் சோகத்திலிருந்து இன்னும் வெளிவரவில்லை, அதனால், பாபுராவிடம் சிறிது அவகாசம் கேட்டார்.
இதற்கிடையில், பாபுராவ் பாட்டீலுக்கும் அனுசுயா ஷிண்டேவுக்கும் இடையே ஏதோ நடப்பதாக முதியோர் இல்லத்தை நடத்தி வந்த பாபாசாகேப் பூஜாரி சந்தேகப்பட்டார்.
அப்போது பூஜாரி அனுசுயா ஷிண்டே பாபுராவ் பாட்டீலை திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா என்று கேட்டார்.
இதையடுத்து முதியோர் இல்லத்தில் இருவருக்குள்ளும் விவாதம் தீவிரமடைந்தது. அனுசுயா ஷிண்டே, பூஜாரியிடம் திருமணம் செய்து கொண்டால், சமூகம் என்ன சொல்லும், நிறுவனத்தில் அதன் தாக்கம் என்ன? என்று கேட்டார்.
இந்த அச்சம் காரணமாக அனுசுயா ஷிண்டே அப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை.
பாபாசாகேப் பூஜாரி
கடைசியில் பூஜாரி, இதில் தலையிட்டுத் திருமணம் செய்து வைத்தார். கடைசியில் பாபுராவ் காதலின் முன் அனுசுயா ஷிண்டேவின் தயக்கம் தோற்று சம்மதம் தெரிவித்துள்ளார்.
முதியோர் இல்லம் மூலம் இருவரும் புது ஜோடி போல் முறைப்படியும் சட்டப்படியும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகும் இந்தத் தம்பதியினர் முதியோர் இல்லத்தில்தான் வசித்து வருகின்றனர். இருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதையும் முதியோர் இல்லங்களில் கழிப்பதாகக் கூறுகிறார்கள்.
"திருமணம் என்பது வெறும் உடல் இன்பமோ குழந்தைப் பேறோ அல்ல. ஒருவரையொருவர் ஆதரிப்பது. அதனால்தான் முதியோர் இல்லத்தில் வாழ்ந்தாலும் இந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம்" என்கிறார் பாபுராவ்.
அவர், "எங்களுக்கு இப்போது மிச்சமிருக்கும் வாழ்வில், சுக துக்கங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாக முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இலங்கை இறுதி கட்ட போரில் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள், ராணுவத்தினர் வசம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்ற வகையில் வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை சசிதரன் (எழிலன்) மற்றும் உருத்திமூர்த்தி (கொலம்பஸ்) ஆகியோர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்களை அவர்களது மனைவிகள் தாக்கல் செய்திருந்த நிலையில், அதற்கான தீர்ப்பே நேற்று வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி மௌனிக்கப்பட்ட உள்நாட்டு போரின் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ராணுவத்திடம் சரணடைந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றமை குறித்து நீதிமன்றம் திருப்தியடைந்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.இரட்ணவேல் தெரிவித்தார்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ராணுவத்திடம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
குறித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களை எதிர்வரும் 22ம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் அல்லது அவ்வாறு இயலாது போனால் அதற்கான காரணத்தை தெளிவூட்ட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, குறித்த மனுக்கள் மீதான கட்டளை இலங்கை ராணுவத்திற்கு எதிராக காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
தமது உறவினர்களை இழந்து, பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இதுவொரு பாரிய வெற்றி என சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.இரட்ணவேல் குறிப்பிடுகின்றார்.
2009ம் ஆண்டு மௌனிக்கப்பட்ட இலங்கையின் உள்நாட்டு போரின் பின்னர், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பெரும்பாலானோரை, ராணுவத்திடம் ஒப்படைத்ததாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள், பல வருட காலமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், தமது உறவினர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி, வவுனியா மேல் நீதிமன்றத்தில் 2013ம் ஆண்டு இந்த ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சுமார் 9 வருடங்கள் நீடித்த இந்த வழக்கு விசாரணைகளின் தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
''இலங்கை ராணுவத்தினர் இதற்கான காரணத்தினை சொல்லித்தான் ஆக வேண்டும், பொறுப்புக்கூறல் அவர்களை சார்ந்தது. இதுவரை காலமும் ஏதோ காரணத்தினை சொல்லிக்கொண்டிருந்தவர்களிடம் அதற்கான பொறுப்பை இந்த நீதிமன்றம் கேட்கின்றது. அதை சொல்லித்தான் ஆக வேண்டும். நீதிமன்றத்தின் மூலம் எமக்கு கிடைத்த ஒரு வெற்றி மற்றும் நிவாரணமாகவே இதனை கருத வேண்டியுள்ளது" என சட்டத்தரணி எஸ்.இரட்ணவேல் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இனியாவது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மாத்திரமல்லாது, மேலும் பல விடயங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்த சின்னத்துரை சசிதரனின் (எழிலன்) மனைவி அனந்தி சசிதரன் கருத்து தெரிவித்தார்.
கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே, இந்த வழக்கை தொடர்ந்து இன்று வெற்றிக் கண்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
''கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த வழக்கை நாங்கள் தாக்கல் செய்தோம். அதற்குள் நாங்கள் கடும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டோம். இருந்தும் உள்நாட்டு பொறிமுறைக்குள் போயிருக்கின்றோம் என்பதை காட்டுவதற்கும், எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற பக்கத்திலேயே இந்த வழக்கை தாக்கல் செய்தோம். 10 வருடங்கள் கடந்திருக்கின்றது.
இது நம்பிக்கையை தந்திருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் ராணுவத்திடம் நாம் கையளித்திருக்கின்றோம் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ராணுவம் என்ன பதில் சொல்லப் போகின்றது என்று நாங்கள் பார்க்க வேண்டும். ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் நாங்கள் ஐந்து பேர் மாத்திரமே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த வழக்கை தாக்கல் செய்ய முன்வந்திருந்தால், அது இன்று பெரியதொரு வெற்றியாக இருந்திருக்கும்.
ஆனால், அந்த அளவிற்கு யாரும் முன்வரவில்லை. அறம் வெல்ல வேண்டும் என்ற எங்களின் போராட்டம் வென்றிருக்கின்றது." என அனந்தி சசிதரன் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் சுமார் 30 வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டதாக, அவர்களது உறவினர்கள் இன்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்படவில்லை என அரசாங்கம் மற்றும் ராணுவம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த நிலையிலேயே, முதல் தடவையாக ராணுவத்திற்கு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பிருக்கின்றது என்ற அடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
21 வயது தான்வி கண்டேல்வால் தனது அலுவலக கணினியிலிருந்து ஒரு ‘பாப் பப்’ எச்சரிக்கை வந்ததும் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்.
“உங்களின் பணி நேரம் முடிந்துவிட்டது. அலுவலக கணினி 10 நிமிடங்களில் ஷட் டவுன் ஆகிவிடும். தயவு செய்து வீட்டிற்கு செல்லுங்கள்!” என்று அந்த ‘பாப் பப்’ செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சில தினங்களுக்கு முன்புதான் மனித ஆற்றல் துறை பிரிவில் தான்வி அந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருந்தார். அந்த ‘பாப் பப்’ செய்தி தனது புதிய நிறுவன பணியாளர்களால் இன்ஸ்டால் செய்யப்பட்டது என்றும் ஊழியர்கள் சரியான நேரத்தில் பணியை முடிக்க வேண்டும் என்பதற்காக அந்த ஏற்பாடு என்றும் அவர் தெரிந்து கொண்டார்.
அந்த நிறுவனத்தின் பெயர் சாஃப்ட்க்ரிட் 40 ஊழியர்களை கொண்ட அந்த நிறுவனம் ஒரு டெக் ஸ்டார்ட் அப். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அமைந்துள்ளது.
இங்கு ஊழியர்கள் பணி நேரம் முடிவடைய 10 நிமிடங்கள் இருப்பதற்கு முன்னதாக இம்மாதிரியான பாப் பப் மெசேஜ் நோட்டிஃபிகேஷனை பார்ப்பார்கள். அதன்பிறகு 7 மணிக்கு கணினி சரியாக ஷட் டவுன் ஆகிவிடும்.
இது குறித்து பேசிய நிறுவனத்தின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் ஸ்வேதா ஷுக்லா, இந்த எச்சரிக்கை செய்தி, தங்களின் ஊழியர்கள் சரியான முறையில் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிற்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டது என்று தெரிவிக்கிறார்.
“கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் அனைவரும் அதிக நேரம் பணி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கைக்கான நேரம் குறைய தொடங்கியது. என்னால் எனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை”
“இந்த நிறுவனத்தின் பிற நிறுவனர்களும் அதே சூழலை எதிர்கொண்டனர்,” என்கிறார் அவர்.
இதனால் அவர்கள் தங்களின் ஊழியர்களின் கணினியில் எச்சரிக்கை செய்தி ஒன்று பாப் பப் ஆகி பத்து நிமிடத்தில் கணினி ஷட் டவுன் ஆகும் படியான மென்பொருளை கண்டறிய ஊழியர் ஒருவரிடம் கோரினர்.
இந்த மென்பொருள் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பாக அனைத்து ஊழியர்களின் கணினியிலும் பொருத்தப்பட்டது.
“இதை ஒரு வார இறுதி நாளில் செய்ய நாங்கள் முடிவு செய்தோம். முதன்முதலில் பாப் பப் செய்தி தோன்றியவுடன் அனைவரும் இது ஏதோ ஒரு விளையாட்டு என நினைத்தனர். சிலர் கணினிகளை யாரோ ஹேக் செய்துவிட்டனர் என்று நினைத்தனர்” என்கிறார் ஸ்வேதா ஷுக்லா.
5 மணி நேரங்களுக்கு முன்னர் அதேபோல அந்த எச்சரிக்கை செய்தியை மின்னஞ்சல் மூலமாக அனுப்பினால் சுவாரஸ்யமாக இருக்காது என்பதால் பாப் பப் வழியை தேர்ந்தெடுத்ததாகவும் ஸ்வேதா ஷுக்லா தெரிவித்தார்.
தான்விக்கு இது ஒரு புதிய அனுபவம் ஏனென்றால் இதற்கு முன்னதாக பணியாற்றிய நிறுவனத்தில் சரியான நேரத்தில் கிளம்புவது என்பது இயலான காரியம். அங்கு அதிக நேரங்கள் பணி செய்ய கோரப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பாப்-பப் செய்தி குறித்து லிங்கடினில் பகிர்ந்து, இம்மாதிரியான ஒரு நிறுவனத்தில் நீங்கள் பணி செய்யும்போது உங்களுக்கு திங்களுக்கான உத்வேகங்களோ அல்லது வெள்ளிக்கிழமை கேளிக்கைகளோ தேவையில்லை” என்று தெரிவித்திருந்தார். வைரலான இந்த போஸ்ட்டிற்கு 4 லட்சம் லைக்குகளும் 7 ஆயிரம் கமென்டுகளும் கிடைத்தன.
பலர் இந்த நடைமுறை குறித்து பாராட்டியிருந்தாலும், சிலர் இந்த நடைமுறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
“இந்த செயல்முறை குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அதிகமாக ஏற்படுத்துகிறது,” என ஒரு பயன்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கேற்ற நேரத்தில் பணியாளர்கள் பணியை முடித்துகொள்ளும் சுதந்திரம் இதில் கேள்விக்குறி ஆகிறது என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
மற்றொரு புறம் குறிப்பிட்ட நேரத்தில் தனது பணியை முடிக்கவில்லை எனில் என்னாவாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர்கள் மீண்டும் கணினியை ரீஸ்டார்ட் செய்து கொள்ளலாம் என்று அதற்கு பதலளிக்கிறார் ஸ்வேதா ஷுக்லா.
இந்த முயற்சி அவர்களின் ஊழியர்கள் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லலாம் என்ற ஒரு செய்தி மட்டுமே தவிர வேற ஒன்றும் இல்லை என்கிறார் ஷுக்லா.
ஆனால் எங்களின் க்ளைண்ட்கள் சிலருக்கு இந்த முறையில் மகிழ்ச்சி இல்லை. இருப்பினும் நாங்கள் இதை தொடருகிறோம் என்கிறார் அவர்.
நேற்றைய தினம் பெருமளவில் பேசப்பட்ட பழநெடுமாறனின் கருத்து உலக தமிழர் மத்தியிலும் சிறிலங்கா அரசு மத்தியிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா இராணுவம் இடையே 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது.
அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக அறிவித்த இலங்கை அரசு, அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தது.
என்றாலும் கூட பிரபாகரன் உயிரிழக்கவில்லை, அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று பழநெடுமாறன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது கருத்தை சாதாரண விடயமாக கருத முடியாது என, பிரபாகரன் தொடர்பான தகவகல்களை மீண்டும் திரட்ட இந்திய மத்திய உளவுப்பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான தகவல்களை தமிழ்நாட்டின் உளவுத்துறை காவல்துறையினரும் தேட ஆரம்பித்துள்ளனர்.
உளவுப்பிரிவினர் விசாரணைபிரபாகரனின் மரணம் தொடர்பாக திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தற்போது மீள்பரிசீலனை செய்யப்பட்டு வருகிறன.
இது தொடர்பான புலனாய்வு விடயங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த தகவலை வெளியிட்ட நெடுமாறன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அனைவரையும் உளவுப்பிரிவினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
தற்போது நெடுமாறன் மற்றும் அவரது குழு உறுப்பினர்களின் உள்ளிட்டோரின் நடமாட்டம் அனைத்தும் உளவுப்பிரிவால் கண்காணிப்புக்கு உள்வாங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம்எனினும் அவரது கருத்தை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் முற்றாக மறுத்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்கா இராணுவ செய்தி தொடர்பாளர்,''2009ம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. என தெரிவித்திருந்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக தமிழ் நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் பகீர்த் தகவலை வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மத்தியில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் உள்ளார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
தேசியத் தலைவர் உயிருடன் இருக்கின்றார்பிரபாகரன் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டுவிட்டது. நாம் அவருடன் தொடர்பில் தான் உள்ளோம். பிரபாகரனின் அனுமதியின் பேரிலேயே செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது.
பிரபாகரன் உரிய நேரத்தில் வெளிப்படுவார். மேலும் பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளனர். ஆனாலும் பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது.
தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இலங்கையில் ராஜபக்சேக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம்.
இந்தியாவிற்கு எதிரான நாடுகளுக்கு அனுமதியில்லைதமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை.
இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்.
சீனாவின் பிடியில் சிக்கப்போகும் இந்துமா சமுத்திரம்தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமா கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.
இந்த முக்கியமான கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுபட்டு தமிழீழத்தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டுக் கொள்கிறோம்” எனவும் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
13ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் என பௌத்தப்பிக்குகள் தெரிவித்துள்ளதாக யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே
பௌத்தப்பிக்குகள் உட்பட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என அறிவித்தனர்.
பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பௌத்தப் பிக்குகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
'வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா' என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் திகதி கரிநாள் பேரணி இடம்பெறவுள்ளது.
வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகும் இந்த பேரணி மட்டக்களப்பில் 7ஆம் திகதி நிறைவுறும்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைக்காக பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி ஒழுங்கமைக்கப்படவுள்ளது.
பேரணிக்கான ஆதரவு கோரி சிவில் சமூகத்தினர், மாணவர்கள், மதத் தலைவர்கள், பல தரப்பட்டவர்களையும் மாணவர் ஒன்றியத்தினர் மாவட்டம் தோறும் சந்தித்து வருகின்றனர்.
பேரணி ஒழுங்கமைப்பு விபரம்யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலிலிருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி வரையில் முதல் நாள் பேரணி நடைபெறும்.
மறுநாள் 5ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து பேரணி ஆரம்பமாகி மாங்குளம் சந்தியைச் சென்றடையும்.
அதேநேரம் மன்னார் மற்றும் வவுனியாவிலிருந்து புறப்படும் பேரணிகளும் மாங்குளம் சந்தியை வந்தடையவுள்ளன.
சகல பேரணிகளும் ஒன்றிணைந்து அங்கிருந்து புறப்பட்டு முல்லைத்தீவில் இரண்டாம் நாளை நிறைவு செய்யும்.
மூன்றாம் நாள் - பெப்ரவரி 6ஆம் திகதி - முல்லைத்தீவிலிருந்து புறப்படும் பேரணி, தமிழர் தாயகத்தின் சிங்கள ஆக்கிரமிப்பு பிரதேசமான தென்னமரமாவடி ஊடாகச் சென்று திருகோணமலையைச் சென்றடையும்.
நான்காவது இறுதி நாளுமான பெப்ரவரி 7ஆம் திகதி திருகோணமலையிலிருந்து புறப்படும் பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்காவைச் சென்றடைந்து அங்கு நிறைவடையும்.
இதன்போது அம்பாறை மாவட்டத்திலிருந்து புறப்படும் பேரணியும் அங்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.இளவாலையில் ஒரே கிராமத்தை சேர்ந்த இரு தரப்புக்கிடையே நடந்த தனிப்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,
இளைவாலை - பெரியவிளான் பகுதியில் வீதியால் வடை விற்பனை செய்யும் வண்டிலை இளைஞர்கள் சிலர் தள்ளிச் சென்றுள்ளனர். இதன்போது அதே பகுதியை சோ்ந்த மற்றொரு இளைஞர் குழு துவிச்சக்கர வண்டியில் அவ்வீதியால் வந்துள்ளது.
குழு மோதல்இதன்போது இரு தரப்பிற்குமிடையே உருவான வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. சம்பவத்தில் அதே கிராமத்தை சேர்ந்த புஸ்பராசா நிஷாந்தன் வயது29 என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் தனக்கு எதுவுமில்லை எனவும், தான் வைத்தியசாலையிலிருந்து சுயவிருப்பில் வெளியேறுவதாகவும் எழுதிக் கொடுத்துவிட்டு வீடு திரும்பியவர் வீட்டிற்கு சென்றதும் இரத்தமாக வாந்தி எடுத்துள்ளார்.
பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிாிழந்துள்ளார். தலையில் பலமாக தாக்கியதாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கைதுஇந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் 17 வயதான ஒருவரும், 25 வயதான ஒருவரும் இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவா்களில் 17 வயதான நபரே மேற்படி தாக்குதல் மற்றும் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபா் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனா். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இளவாலை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து முன்னெடுக்கும் போராட்டமானது யாழ். அரசடி பாரதியார் சிலையடி பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்கார்களுக்கும், சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். விஜயதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கலந்து கொள்ளும் பொங்கல் நிகழ்வு நல்லூர் சிவன் ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி இடம்பெற்றபோது கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன் படி சந்தேகிக்கப்பட்ட இடத்தினை தோண்டி பார்ப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது.
குறித்த அனுமதிக்கு அமைய சந்தேகிக்கப்பட்ட பகுதியினை தோண்டும் பணி நாளை காலை முன்னெடுக்கப்படவுள்ளது.
விடுதலைப் புலிகளின் முகாம்கொக்குவில் பொற்பதி வீதியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் ஆயுதங்கள் மறைத்து இருப்பதாக தெரிவித்து நீதிமன்ற உத்தரவை பெற்று தோண்டும் பணி நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குர்திஷ் கலாச்சார மையத்தை குறிவைத்து 69 வயதுடைய ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்யததாகவும் தெரிவிக்கப்படுகிறது
சந்தேக நபர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலையடுத்து, அந்த இடத்தில் கூடியிருந்த மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் தமிழ் எம்.பிகளின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டு ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கொட்டகை அமைத்து 2120 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட கொட்டகை முன்பாக இன்று (10) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே தமிழ் எம்.பிகளின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் 'அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தமக்கு நீதி வேண்டும் எனவும், நீதி மறுக்கப்பட்ட நாட்டில் மனிதவுரிமைகள் தினம் எதற்கு' எனவும் கோசம் எழுப்பியதுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு இன்றி அரசாங்கத்துடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லக் கூடாது எனவும், இது அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சி எனவும் தெரிவித்தனர்.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டனியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன்,த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், வினோதரராதலிங்கம், கோவிந்தம் கருணாகரன், ஈபிஆர்எல் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரது உருவம் பொறிக்கப்பட்ட பதாதைக்கு அழுகிய தக்காளிப் பழத்தால் வீசி, மத்தியஸ்தம் இன்றி அரசாங்கத்துடன் தனித்து பேச்சுவார்த்தைக்கு செல்லாதீர்கள், இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றாதீர்கள் எனக் கூறி தக்காளிப் பழங்களை வீசித் தாக்கினர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றதுடன், இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
யேர்மனியில் தமிழர்!!
யேர்மனி தமிழ் கலாச்சார மன்றத்தின் 2022 ஆண்டிறிதி ஒன்றுகூடல் மன்ற மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
யேர்மனி தமிழ் கலாச்சார மன்றத்தின் 2022 ஆண்டிறிதி ஒன்றுகூடல் மன்ற மண்டபத்தில் மிக சிறப்பாக 12.11.2022 மன்றத்தலைவர் ஊடகவித்தகர் திரு.கிருஷ்ணமூர்த்தி தலமையில் நடைபெற்றது.
அகவணக்கத்துடன் ஆரம்பித்த விழா மன்ற மாணவர்கள் ஆதீஷ்,விக்காஷ்,ரகாஷ்,கைசன் இறைவணக்கம் செலுத்தினார்கள் மன்றக்கீதத்தை சங்கீத ஆசிரியர் திருமதி. விஜயகலா கிருபாகரன் அவர்கள் ஒலிப் பேளையில் இசைத்தார். தொடர்ந்து வரவேற்புரையை திருமதி.மாலினி பாலேஸ்வரன் அவர்களும் தலமை உரையை மன்றத்தலைவர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் வழங்கிய பின்னர் மன்ற மாணவர்களின் கலை நிகழ்வுகள், கீபோட் இசைநிகழ்வுகள் நடைபெற்றது. நடனத்தை நடனஆசிரியர் தனுஷா ரமணன் அவர்களின் மானவி ஆயிசா இராசலிங்கம் வழங்கினார். பின்னர் கீபோட் ஆசிரியர் சந்தோஸ், மன்றத்தலைவர் ஆகியோருக்கு மாணவர்கள், பெற்றோர்களால் கொளரவிப்புகள் நடைபெற்றது. நிகழ்வுகளின் பின் அனைவருக்கும் பலவிதமான உணவுகள் தயாரித்து மன்ற அங்கத்தவர்களால் வழங்கப்பட்டது. இறுதியாக திருமதி பரணி காந்தன் அவர்களின் நன்றியுரையுடன் திரு.சிவா அவர்களின் பாடல் நிகழ்வுடன் இனிதே நிறைவாகியது.
விழாவில் பல புதிய மாணவர்கள் கீபோட் கற்றக இணைந்து கொண்டார்கள். மன்றத்தின் 5வது ஆண்டுவிழா 29.4.2023 சனிக்கிழமை நடாத்த தீர்மனம் எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.